Quantcast
Channel: தளிர்
Viewing all 1525 articles
Browse latest View live

திருமுக்கூடலூர் பயண அனுபவங்கள்!

$
0
0
 திருப்பராய்துறை ஆலய முகப்பு கோபுரம்
என் மனைவியின் பிறந்தகம் கரூரை அடுத்துள்ள திருமுக்கூடலூர். அதனால் வருடம் ஒருமுறையோ இருமுறையோ திருமூக்கூடலூர் பயணம் செல்வது வழக்கம் ஆகிவிட்டது. என் மாமனார் ஸ்ரீ கிருஷ்ண சாமி குருக்கள் மாமியார் ஸ்ரீமதி ருக்மணி அம்மாள் இருவருக்கும் வயது 70ஐ கடந்துவிட்டது. மூட்டுவலி, சர்க்கரை இரத்த அழுத்தம் என்ற நோய்கள் வேறு. தள்ளாமை நோய்கள் காரணமாக அவர்கள் எங்கள் ஊர்ப்பக்கம் அடிக்கடி வர முடியாது. என் மனைவிக்கு தாய்ப்பாசம் அதிகம். அதனால் வருடம் ஒருமுறை அல்லது இருமுறை நானே திருமுக்கூடலூருக்கு அழைத்துச் செல்வது உண்டு. சிலசமயம் ஊரில் விட்டுவிட்டு உடனே திரும்பி விடுவேன். என் மனைவி ஒரு பத்து பதினைந்து தினங்கள் அங்கிருந்துவிட்டு திரும்புவார். சிலசமயம் நான் ஒரு இரண்டு மூன்று தினங்கள் வேலைகளை தள்ளிவைத்துவிட்டு உடன் தங்கி மனைவியை அழைத்து வருவதும் உண்டு.

    என் வாழ்க்கையில் இந்த மாதிரியானா தொலைதூர பயணங்கள் என்பது கடந்த 2008ம் ஆண்டுவரை கிடையாது. எங்கள் ஊரைச்சுற்றியுள்ள 50லிருந்து 100கி.மீ தொலைவுவரையே என் பயணங்கள் இருக்கும். முதல் முறையாக என் மனைவியை பெண் பார்க்கத்தான் நான் தென் மாவட்டத்திற்கு பயணப்பட்டேன். அந்த பயண அனுபவமே சுவாரஸ்யமானது. அதை பிறிதொருமுறை எழுதுகிறேன்.

    
முதல் முறை பயணிக்கும்போதே காவிரி டெல்டா பகுதியான கரூர் என் மனதை மிகவும் கவர்ந்து விட்டது. அதுவும் கரூரை கடந்து என் மாமனார் ஊரான திருமுக்கூடலூர் எனக்கு மிகவும் பிடித்தும் போனது. அந்த ஊரின் சாலையோர வயல்களும் தென்னந்தோப்புக்களும் கரும்பு வாழைத்தோட்டங்களும் ஜீவ நதியான காவிரியும் என் மனதை கொள்ளை  கொண்டதில் ஆச்சர்யம் இல்லை! எங்கள் பகுதியும் கிராமம் என்றாலும் காவிரி போன்ற ஆறுகள் கிடையாது. இந்த ஊரில் இன்னொரு குறிப்பிடத்தக்க வசதி ஒரு மணிக்கொரு பேருந்து வசதி. இந்த வசதி நகரம் அருகில் இருந்தும் எங்கள் கிராமத்தில் கிடையாது.
 கோயில் வெளிப்பிரகாரத்தில் என் மனைவி மகள்களுடன்


    இதனால் நானும் இந்த கிராமம் செல்ல ஆர்வப்படுவது உண்டு. என்ன அதிகநேர மின்வெட்டு தொந்தரவு தரும். டிவி ஒன்றுதான் பொழுது போக்கு. என்றிருக்கும். பக்கத்தில் நெரூர் சதாசிவ பிரம்மேந்திரர் ஆலயம் காவிரி ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் ஓர் அழகான ஆலயம். சில சமயம் அங்கு செல்வதும் உண்டு.

   இந்த முறை கடந்தமாதம் 29ம் தேதி இரவு புறப்பட்டு 30ம் தேதி விடியற்காலையில் கரூர் சென்று அடைந்தோம். அப்போதுதான் கரூர் மாரியம்மன் கோவில் திருவிழா முடிவு பெற்று இருந்தது. ஆங்காங்கே மாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு வருகை தருமாறு ப்ளக்ஸ் போர்டுகளில் வரவேற்பு தந்து கொண்டிருந்தார்கள் முக்கியஸ்தர்கள். அங்கிருந்து திருமுக்கூடலூர் காலை 6.00 மணிக்கு சென்று விட்டோம்.
 நெரூர் சதாசிவ பிரம்மேந்திராள் ஆலய நுழைவு வாயில்

   அன்று முழுவதும் ரெஸ்ட் எடுத்துவிட்டு மறுநாள் அங்கிருந்து திருப்பராய்த் துறை சென்றோம். இங்கு விவேகானந்தர் ஆஸ்ரமம் ஒன்றும் பராய்துறை நாதர் எனும் தாருகா வனேஸ்வரர் கோயிலும் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தை தரிசிக்க வேண்டும் என்பது என்னுடைய ஐந்து ஆண்டுகால ஆவல். கரூர் முதல் முறை செல்லும் போதே பஸ்ஸில் இருந்து இந்த ஆலயத்தை பார்த்தது உண்டு. அப்போதே செல்லவேண்டும் என்று நினைத்து தள்ளிப் போனது. அதை இந்த ஆண்டு பூர்த்தி செய்தேன். கரூரில் இருந்து திருச்சி செல்லும் வழியில் குளித்தலை தாண்டி இருக்கிறது பராய்த்துறை. இதன் அருகில் தான் முக்கொம்பு படகுத்துறையும் இருக்கிறதாம்.

   கரூர் திருச்சி வழியில் சாலையோரம் காவிரிக் கரை வாய்க்கால்கள் எப்போதும் தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கும். இந்த ஐந்து ஆண்டுகளில் இவை வறண்டு போனதை இந்தமுறைதான் கண்டேன். அதே போல் இந்த சாலையை ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக அகலப்படுத்தி வருகிறார்கள் இன்னும் முழுதும் முற்று பெறவில்லை என்பது வருத்தமாக உள்ளது. அரசு பேருந்துகளை விட தனியார் பேருந்துகளை மக்கள் அதிகம் நம்புகிறார்கள். இதில் வீடியோ ஆடியோ வசதியுடன் சினிமா படங்கள் போட்டுக்கொண்டு ஒரு இரண்டு மணி நேரத்தில் திருச்சிக்கு கொண்டுவந்து சேர்க்கிறார்கள் கட்டணம் 35ரூபாய். கரூரில் இருந்து புறப்படும் அனைத்து பேருந்துகளுமே நிரம்பி வழிகின்றன. நிறைய பேர் திருச்சி குளித்தலை போன்ற நகரங்களில் பணி செய்கின்றனர் போலும். சீட் கிடைப்பது குதிரைக் கொம்பாக உள்ளது.

  
 கோயிலின் தலவிருடசம் பராய் மரம்

 ஒருவழியாக வெள்ளியன்று திருப்பராய்த்துறை நாதரை மதியம் 12 மணி அளவில் தரிசித்தோம். இந்த ஆலய குருக்கள் நடந்து கொண்ட முறை கொஞ்சம் வருத்தம் அளித்தது. நானும் ஒரு குருக்கள் என்ற முறையில் எனக்கு மிகவும் ஆதங்கமாக இருந்தது. ஆலயத்திற்குபுதிதாக வருபவர்களுக்கு தல வரலாறு சுருக்கமாக கூறி மந்திரங்கள் ஓதி பிரசாதங்கள் அளித்து வழி அனுப்புவோம் நாங்கள். ஆனால் இந்த குருக்கள் எங்களை கண்டுகொள்ளவே இல்லை. இத்தனைக்கும் அந்த சமயத்தில் ஆலயத்தில் வேறு யாரும் இல்லை. அவர் பாட்டிற்கு கோபுர வாசல் படியில் அமர்ந்து இருந்தார். நாங்கள் அழைத்த பிறகு வந்தார். ஆலயத்தில் போதுமான வெளிச்சம் இல்லை! கருவரையில் சிறிய விளக்கொன்று மட்டும் ஒளிவிட்டுக் கொண்டிருந்தது.  கொடுத்த பூஜைப் பொருள்களை வாங்கிக் கொண்டு ஒரு ஆரத்தி மட்டும் செய்தார். 


   நாங்களாகவே கோயிலை சுற்றிப் பார்த்துவிட்டு வெளியே வந்தோம். அங்குசில புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம். ஆலய வெளிப் பிரகாரத்தில் விவேகானந்தா மடத்தின் ஆரம்ப பள்ளி ஒன்றும் உயர்நிலை பள்ளி ஒன்றும் இயங்குகின்றன போலும். புதிதாக கட்டிடங்களும் கட்டிக் கொண்டிருந்தார்கள். ஆசிரியர்கள் பத்தாம் வகுப்பு ரிசல்ட் பற்றி சுவாரஸ்யமாக உரையாடிக் கொண்டு இருந்தார்கள். இந்த கோயில் முகப்பு கோபுரத்தில் ஐந்து விமான தரிசனம் இங்கு காணவும் என்று ஒரு அறிவிப்பு இருந்தது. அங்கிருந்து பார்க்கையில் ஒன்றூம் தெரியவில்லை! யாரையும் கேட்கலாம் என்றால் ஒருவரும் இல்லை. அதனால் அங்கிருந்து கிளம்பினோம். அங்கு உணவகம் எதுவும் இல்லை. அதனால் குளித்தலை வந்தோம். மணி 1.30 ஆகிவிட்டது. அங்கு  சங்கர் கபே என்ற உணவகத்தில் உணவருந்தினோம்.

  இங்கே எல்லாம் டிபன் என்றால் தட்டில் கொடுப்பார்கள். அங்கு தலை வாழை இலையில் கொடுத்தார்கள். டிபன் தான் சாப்பிட போகிறோம் சாப்பாடு இல்லை என்ற போதும் இது டிபன் இலைதான். சாப்பாட்டு இலை இன்னும் பெரிசாக இருக்கும் என்று கூறி ஆச்சர்யப்படுத்தினர். விலையும் மலிவாக இருந்தது ஒரு பரோட்டா பத்து ரூபாய். சப்பாத்தியும் பத்து ரூபாய் தான். மற்றவையும் சென்னை விலைக்கு குறைவுதான். சுவை சுமார் ரகம்.  அங்கிருந்து கிளம்பி குளித்தலை கடம்ப வன நாதர் ஆலயம் சென்றோம். ஏறக்குறைய குளித்தலை பஸ் நிறுத்தத்தில் இருந்து
 வெளிப்பிரகார கணபதி
அரைகிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது ஆலயம். ஆனால் கதவடைத்து இருந்தார்கள் நாங்கள் சென்ற சமயம்.

   அங்கிருந்தவர்கள் வெளிப்பிரகாரம் சிறு வாசல் வழியாக சென்று பார்க்கலாம் என்று சொன்னார்கள். அருகில் சென்று கேட்டபோது அனுமதிக்க மறுத்துவிட்டார்கள். மாலை 5 மணிக்கு திறப்பார்கள் என்று சொன்னார்கள் அப்போது மணி இரண்டுதான் ஆகியிருந்தது. அதனால் கோபுரதரிசனம் கண்டுவிட்டு திரும்பினோம். குளித்தலை பஸ் நிறுத்தம் வந்து அங்கிருந்து கரூர் வரும் போது 4 மணி ஆகிவிட்டது.
 கோயில் பிரகாரத்தில் இயங்கிவரும் ஆரம்ப பள்ளி

    கரூரில் சில பொருள்கள் பர்சேஸ் செய்துவிட்டு வீடு திரும்ப 9 மணி ஆகிவிட்டது. இத்தனைக்கும் 5.30க்கெல்லாம் பர்ச்சேஸ் முடிந்து விட்டது. என் மனைவி சொன்னபடியால் அங்கிருந்த சர்ச் வாசல் முன் பஸ்ஸிக்கு காத்திருந்தோம். அரை மணி நேரம் ஓடியது தவிர ஒரு பஸ்ஸிம் அங்கு நிற்க வில்லை. அதற்கப்புறம் நாங்கள் ரொம்ப நேரமாய் நிற்பதை பார்த்து அருகில் இருந்த டீக்கடைக்காரர் வந்து விசாரித்தார். நாங்கள் விவரத்தை சொல்லவும் அடடா! இங்கு பஸ் நிற்காது. அடுத்த திருப்பத்தில் நிற்கும் என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே எங்கள் ஊர் பஸ் வந்துவிட்டது. அதன் பின் ஓடியும் பிடிக்க முடியவில்லை. பின்னர் அங்கிருந்து பேருந்து நிறுத்தம் சென்று பஸ் இல்லாமல் 7 மணிக்கு பஸ் பிடித்து ஊர் செல்லும் போது 9 மணி ஆகிவிட்டது. பஸ்ஸில் கூட்டம் நிரம்பி வழிந்தது. என் மனைவிக்கு மட்டும் இடம் கிடைத்தது. பாதி தூரம் செல்கையில் குழந்தை அழ ஆரம்பித்துவிட்டது. அதன் அழுகை நிறுத்த எவ்வளவு முயற்சித்தும் பலனில்லை. பஸ்ஸில் ஆளாளுக்கு ஆலோசனை சொல்ல எனக்கு எரிச்சல் வேறு. கட்டுப்படுத்திக் கொண்டு பதில் சொல்லிக் கொண்டு இருந்தேன். எப்படியோ கூட்டம் சற்று குறைந்ததும் அழுகையும் குறைந்து அப்புறம் நின்றது. ஒரு வழியாய் வீடு சென்று சாப்பிட்டு உறங்கினேன். காலெல்லாம் ஒரே வலி நடந்தது பஸ்ஸில் நின்றது என்று ஒரே அலுப்பு.  எப்படியோ உறங்கிப் போனேன்.
 வெளியே நுழைகையில் எதிர்படும் விநாயகர் மாவு காப்பில் உள்ளார்
 கோயில் பிரகாரத்தில் நான்

  விடியற்காலை திடிரென இட்லி வேகும் வாசனை மூக்கை துளைத்தது. என்னங்க எழுந்திருங்க! ஐந்து மணிக்கு நாமக்கல் போக கார் வந்திரும்  ரஜினி பட ராதிகா போல என் அதிகாலை தூக்கத்தை கலைத்தால் என் மனைவி.

       ரொம்ப நீண்டு போகிறது என்று நினைக்கிறேன்! மீதி அடுத்த பதிவில் பார்ப்போம்!


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!






திருமுக்கூடலூர் பயண அனுபவங்கள்!2

$
0
0
திருமுக்கூடலூர் பயண அனுபவங்கள்!2


முதல் நாள் திருப்பராய்த்துறை சென்று வந்த அலைச்சலில் அசதியாக உறங்கிய என்னை விடியலில் எழுப்பினாள் என் மனைவி. என்னங்க! 5 மணிக்கெல்லாம் கார் வருதாம். எந்திரிச்சு ரெடியாகுங்க! நாமக்கல் போகலாம் என்றாள். முன்பே நான் மனைவியிடம் சொல்லியிருந்ததுதான் மைத்துனனிடம் சொல்லி ஒரு டாக்ஸி ஏற்பாடு செய்து கொண்டால் வசதியாக இருக்கும் குழந்தைகளை அழைத்து சென்று வர என்று சொல்லியிருந்தேன்.  எனவே உடனே எந்திரகதியாக எழுந்து குளித்து ரெடி ஆனேன்.

     என் பெரிய மகள் வேத ஜனனி எழுந்திருப்பதாய் இல்லை! அப்படி இப்படி அவளை தாஜா செய்து எழுப்பவும் கார் வரவும் சரியாக இருந்தது. உடனே அவளை பிரஷ் பண்ண வைத்து காரில் ஏற்றிக் கொண்டோம். மைத்துனன் உதவிக்கு வழிகாட்டுதலாக வர அவருடைய அண்ணன் மகளும் வந்தார். அது ஒரு மாருதி ஆம்னி வேன். சரியாக 5.45க்கு கிளம்பி விட்டோம். அங்கிருந்து ஒரு குறுக்குச் சாலை வழியாக வெகு விரைவில் 7.30 மணிக்கெல்லாம் நாமக்கல் அடைந்து விட்டோம்.


      முதலில் மலைமீது உள்ள சுதர்சனரை தரிசிக்க சென்றோம். 9.30க்குத்தான் நடை திறப்போம் என்று சொல்லிவிட அங்கிருந்து கிளம்பி நரசிம்மரை தரிசித்தோம். அருமையான தரிசனம். பின்னர் தாயாரை தரிசித்து ஆஞ்சநேயரை தரிசிக்க இறங்கினோம். இந்த நரசிம்மர் ஒரு குடைவரை சிற்பமாக மிகவும் சிறப்பாக காட்சி அளித்தார். நரசிம்மரை தவிர இன்னும் சில அவதார சிற்பங்கள் அந்த குடைவரை ஆலயத்தில் சிறப்பாக இருந்தன.
பட்டாச்சாரியாரும் சிறப்பாக விளக்கி பூஜை செய்வித்தார். அவர் சொன்னது இப்போது நினைவில் இல்லை. ஆனாலும் எல்லோரும் பார்க்க வேண்டிய ஒரு அற்புத ஆலயம் இந்த நரசிம்மர் ஆலயம். இந்த ஆலயம் சிறப்பாகவும் அழகாகவும் பராமரிக்கப் படுகிறது.


    நரசிம்மர் இருந்த மலைக்கு கீழே அவரைப் பார்த்தபடி வானளாவ உயர்ந்து நின்றார் அஞ்சனை மைந்தன் ஸ்ரீ ஆஞ்சநேயர். நரசிம்மர் ஆலயத்தை விட இங்கு கூட்டம் கொஞ்சம் அதிகம். வெளியே தும்பிக்கை ஆழ்வாரை தரிசித்து பின்னர் வெற்றிலை மாலைகள் துளசி மாலைகள் வாங்கிக் கொண்டு ஆஞ்சநேயரை தரிசிக்க கியுவில் நின்றோம். ஓங்கி உயர்ந்து நிற்பதால் கியுவில் நகரும்போதே நிம்மதியாக
தரிசனம் செய்ய முடிகிறது. அருகில் நெருங்கும் போது நமது பூஜைப் பொருள்களை வாங்கி சார்த்துகிறார்கள். ஆனால் ஒரு இரண்டுநிமிடம் நிற்பதற்கு கூட விடவில்லை. துரத்தி அடிக்கிறார்கள்.  இருந்தாலும் நாமக்கல் ஆஞ்சநேயர் பார்க்கவேண்டும் என்ற என் ஆவல் பூர்த்தியானது.  இங்கு இன்னொரு குறை வண்டி பார்க்கிங் செய்ய போதுமான இட வசதி இல்லை என்பது. தாறுமாறாக தெருக்களில் கார்கள் நிறுத்தி வைக்கப்படுகிறது. வெளியே வர கொஞ்சம் நேரம் எடுக்கிறது.


      அங்கிருந்து புறப்பட்டு கொடுமுடி வந்தடைந்தோம். அப்போது பத்து மணி இருக்கும். கொடுமுடியில் காவிரியில் நீர் இல்லை. இது அந்த பக்கத்தில் பெரிய பரிகாரஸ்தலம் போல் உள்ளது. வண்டியை விட்டு இறங்கும் போதே புரோக்கர்கள் போல இந்த பரிகாரமா அந்த பரிகாரமா? நான் செய்து வைக்கிறேன் என்று மடக்குகிறார்கள். அவர்கள் கையில் சிக்காமல் தப்பித்தால் காசு தப்பிக்கும். பிரம்மா விஷ்ணு சிவன் மூவரும் எழுந்தருளும் ஆலயம் இது.மிகப்பெரிய ஆலயம் புணரமைப்பு பணிகள் நடந்து கொண்டு இருந்தது. இந்த மூவரை தவிர ஆஞ்ச நேயர்,
சனிபகவான் சன்னதிகளும் உண்டு. அம்மாவின் அன்னதான திட்டம் இந்த கோயிலில் செயல்படுத்த படுகிறது. நாங்கள் சென்றபோது சமையல் நடந்து கொண்டிருந்தது.இதை தவிர குரங்குகள் தொல்லை அதிகமாக இருந்தது. நிறைய சன்னதிகள் அதற்கேற்ற அர்ச்சகர்கள் இல்லை. இருப்பவர்களும் சரியாக இல்லை.


      வன்னி மரத்தடியில் பிரம்மா வீற்றிருந்தார். நாங்கள் இங்கு பூஜை எதுவும் செய்ய வில்லை! அர்ச்சனை செய்யுங்கள் அது பண்ணுங்கள் இது பண்ணுங்கள் என்றவர்களை விலக்கி பிரம்மாவை தரிசனம் செய்து ஆஞ்சநேயரை தரிசிக்க சென்றோம். அங்கு பட்டர் இல்லை. அப்படியே ஆதிநாராயணப் பெருமாள் , தாயார், மற்றும்  மகுடேஸ்வரரைதரிசித்து சனிபகவானை தரிசிக்க சென்றோம். அங்கு நிறைய கூட்டம். கோயிலிலேயே எள் முடிச்சும் விளக்கும் தருகிறார்கள். இதை வெளியில் இருந்து கொண்டுவரக்கூடாதாம். ஒரு விளக்கும் எள் முடிச்சும் ஆறு ரூபாய் தேவைப்படுபவர்கள் வாங்கி தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள். ஒரு சிறு அறையில் அடைந்து கிடக்கிறார் சனிபகவான். பக்தர்கள் படைக்கும் வஸ்திரங்கள் தேங்காய் பழங்கள் அவரை சுற்றி இரைந்து கிடக்க அர்ச்சகர் பிஸியாக இருந்தார். சனிபகவான் தரிசனம் முடித்து. பிரகாரம் வலம் வந்து அங்கேயே ஒரு இடத்தில் அமர்ந்து எடுத்து சென்ற இட்லிகளை உண்டு முடித்து  வெளியே வந்தோம். இப்போது பிச்சைக்காரர்கள் தொல்லை. ஒருவருக்கு போட்டால் பலர் தொடர்ந்து வருகிறார்கள். அவர்களிடம் இருந்து மீண்டு வந்தால் யானை ஒன்று நின்றிருந்தது. சில்லரை கொடுத்து ஆசிர்வாதம் கேட்டாள் என் மகள்.சில்லரையெல்லாம் கொடுக்காதீங்க பத்துரூபா கொடுங்க ஆசிர்வாதம் வைக்கும் என்றார் பாகன் பத்து ரூபாய் கொடுக்க யானை வாங்கி பாகனிடம் தந்து ஆசிர்வாதம் வைத்தது.


    பின்னர் அங்கு ஒரு ஓட்டலில்  காபி சாப்பிட்டு விட்டு காரில் ஏறி அமர்ந்தோம். இன்னும் சில இடங்கள் குறிப்பாக திருச்செங்கோடு ஐயர் மலை போன்ற இடங்கள் சுற்றி பார்க்க ஆசை இருந்தாலும் குழந்தைகள் களைப்பாக இருந்ததாலும் மைத்துனனுக்கு வேறு வேலை இருந்ததாலும் அங்கிருந்து புறப்பட்டு விட்டோம்.


    காலையில்  எழுந்தது கலைப்பாக இருக்க உறக்கம் சொக்கி வந்தது. ஒரு தூக்கம் போட்டு முழிக்க கார் கரூர் வந்து விட்டிருந்தது. அங்கு மைத்துனன் இறங்கி விட நாங்கள் திருமுக்கூடல் வந்து இறங்கி கொண்டோம். மணி மதியம் ஒன்று ஆகி இருந்தது. மதிய உணவு அருந்தி ஒரு குட்டி தூக்கம் போட்டபின் திருமுக்கூடலூரில் உள்ள அகத்தீஸ்வரர் ஆலயம் பார்க்க  மாலையில் சென்றோம்.


    திருமுக்கூடலூர் அகத்தீஸ்வரர் ஆலயம் அமராவதி ஆற்றங்கரையில் அமைந்து உள்ளது.சுமார் 100 வருடங்கள் முன் ஆற்று வெள்ளத்தில் மண் மேடிட்டு இந்த ஆலயம் மண்ணில் புதைந்து விட்டதாம். 1936ம் ஆண்டில் மண் தோண்டி ஆலயத்தை வெளியில் எடுத்துள்ளார்கள். சோழர்கள் நாயக்க மன்னர்கள் இந்த ஆலயத்தை கட்டியும் பராமரித்தும் வந்துள்ளார்கள் என்பதுஇங்குள்ள கல்வெட்டுகள் மூலம் தெரிகிறது.


   மிக அழகான ஆலயம் பழமை வாய்ந்த ஆலயம் பராமரிப்பு இன்றி இப்போது சிதிலமாகி கிடக்கிறது. இதற்கு மானியங்கள் இருக்கின்றனவாம். அவை பயிரிடப்படுகிறதா குத்தகை ஒழுங்காக செலுத்தப்படுகிறதா என்றால் இல்லை என்றே சொல்லலாம். ஆன்மீக அன்பர்கள் சிலர்கள் முயற்சியால் ஒருகால பூஜை மட்டும் நடைபெற்று வருகிறது. சிறப்பானதொரு ஆலயம் இதைப் பற்றி நண்பர் கோவை ஜீவா ஒரு முறை எழுதி உள்ளார். இங்கு ஒரு சித்தரின் சமாதியும் இருப்பதாக சொல்கிறார்கள். வெளியே வீரப்பத்திரர் சிலைக்கு அன்று அஷ்டமி அபிஷேகம் நடைபெற்றுக் கொண்டு இருந்தது. ஆலயத்தை சுற்றிப் பார்த்துவிட்டு இருட்டிப் போனமையால் விரைவில் வீட்டிற்கு திரும்பி விட்டோம். இந்த ஆலயத்தை பற்றி விரிவாக வேறொரு பதிவு எழுத எண்ணம்.



    அடுத்த இரண்டு பொழுதுகள் வெட்டியாக கழிந்தது. என் மனைவி பிறந்தவீட்டில் அளவளாவ ஆசைப்பட்டமையால் வேறு எங்கும் செல்லவில்லை. மனைவியின் அக்காக்கள் அண்ணன்கள் அங்கு வந்து எங்களை பார்த்து சென்றார்கள். திங்களன்று மாலையில் புறப்பட்டு கரூர் வந்து சென்னைக்கு டிக்கெட் கேட்டால் நான்கு வண்டிகளும் நிறைந்து விட்டதாக கூறினார்கள். அதனால் திருச்சிக்கு பயணப்பட்டு அங்கிருந்து சென்னை வந்து ஊர் வந்து சேர்ந்தோம். வரும்போது சற்று அலைச்சலாக இருந்தாலும் பயணக் கட்டணம் குறைந்தது.

  திருச்சியில் சென்னைக்கு  கூவி கூவி அழைத்து பஸ்ஸில் ஏற்றுபவர்கள் சென்னை வந்ததும் கோயம்பேடு மாநகர பேருந்து நிறுத்தத்திலேயே வலுக்கட்டாயமாக இறக்கி விட்டார்கள். நான் பேருந்து நிறுத்தம் உள்ளே இறங்க வேண்டும் என்று மறுத்தபோது சிடுசிடுப்பாய் மறுத்தார்கள். விதியே என்று அங்கேயே இறங்கி லக்கேஜ் குழந்தைகளை தூக்கிக் கொண்டு நிறுத்தம் உள்ளே வர வேண்டியதாகிப் போனது. அந்த அதிகாலையில் பேருந்து நிறுத்தம் உள்ளே பயணிகள் குறுக்கும் நெடுக்குமாக படுத்து கிடக்க எங்கள் ஊர் பஸ் நிற்கும் நடை மேடைக்கு நடந்து வர மிக சிரமப்பட்டுவிட்டோம்.

    டாய்லெட்களும் முன்பு போல் சுத்தமாக பராமரிக்கப்படவில்லை! என்ன ஒன்று அதிகவிலைக்கு விற்பவர்கள் இப்போது எம். ஆர். பி விலைக்கே பொருட்களை விற்றார்கள் இது ஒன்றுதான் எனகு அதிசயமாக இருந்தது.

    நான்கு நாள் திருமுக்கூடலூர் பயணம் இனிதே நிறைந்தது.                                         டிஸ்கி: நாமக்கல், கொடுமுடியில் புகைப்படம் எடுக்க முடியவில்லை! படங்கள் கூகூள் இமேஜஸில் தேடியதில் கிடைத்தவை.


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

ப்ளீஸ்! இதெல்லாம் செய்யாதீங்க!

$
0
0
இதெல்லாம் செய்யக் கூடாதாம்!




அவசர யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்! எது நல்லது எது தீயது என்று ஆராயாமல் நம் சித்தம் போனபடி ஒரு வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். ஆனால் இந்து தர்ம சாஸ்திரம் என்னும் நூல்  சிலவற்றை செய்யக் கூடாது சிலவற்றை செய்யலாம் என அறிவுரைகள் வழங்குகிறது. இதை ஒரு பழைய புத்தகத்தில் படித்தேன். அதிலிருந்து சில குறிப்புகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்!

  இதெல்லாம் செய்ய வேண்டும்:

  ஜோதிடர், குரு, நோயாளி, கர்ப்பிணி, மருத்துவர், சன்னியாசி முதலியவர்களுக்கு அவர்களுடைய ஆபத்துக் காலத்தில் கண்டிப்பாக உதவ வேண்டும்.


சகோதரன் அல்லது சகோதரி தாழ்ந்த நிலையில் இருந்தால் அவர்களுக்கு உதவ வேண்டும்.


அண்ணியை தினசரி வணங்க வேண்டும்.


சாப்பிடும் போது முதலில் இனிப்பு, உவர்ப்பு,புளிப்பு,, கசப்பு பதார்த்தங்களை வரிசையாக சாப்பிட்டு பின் நீர் அருந்த வேண்டும்.


வீட்டுக்குள் நுழையும் போது தலைவாசல் வழியாகத்தான் நுழைய வேண்டும்.


பசு மாட்டை கோமாதாவாக எண்ணி அம்மாட்டிற்கு புல் தவிடு, தண்ணீர், புண்ணாக்கு, அகத்திக் கீரை கொடுத்து வழிபட வேண்டும்.

எதிர்பாரா விதத்திலோ, தவறு என்று தெரியாமலோ பெண்கள் கற்பை இழந்துவிட்டால் புண்ணிய நதியில் 18 முறை மூழ்கி குளித்தால் தோஷம் நீங்கும்.


பசு, தேர், நெய்க்குடம், அரசமரம், வில்வம், அரசுடன் சேர்ந்த வேம்பு இவைகள் எதிரில் குறுக்கிட்டால் வலதுபுறம் சுற்றிச் செல்ல வேண்டும்.

இதெல்லாம் செய்யக் கூடாது!


கன்றுக் குட்டியின் கயிறைத் தாண்டக் கூடாது.


மழை பெய்யும் போது ஓடக்கூடாது.


தண்ணீரில் தன் உருவத்தை பார்க்க கூடாது.


நெருப்பை வாயால் ஊதக்கூடாது.


கிழக்கு மேற்கு முகமாக உட்கார்ந்து  மலஜலம் கழிக்கக் கூடாது.


சாப்பிடும் போது தவிர மற்ற நேரத்தில் இடக்கையால் தண்ணீர் அருந்த கூடாது.


இருட்டில் சாப்பிடக் கூடாது.


குரு ஜோதிடர், வைத்தியர், சகோதரி, ஆலயம் இங்கெல்லாம் செல்லும் போது வெறும் கையுடன் செல்லக் கூடாது.


இரு கைகளாலும் தலைக்கு எண்ணெய் தேய்க்க கூடாது. வலது உள்ளங்கையில் எண்ணெய் ஊற்றி தலையில் தேய்க்க வேண்டும்.


தலைவாசலுக்கு நேரே கட்டில் போட்டோ தரையிலோ படுக்க கூடாது.


வான வில்லை பிறருக்கு காட்டக் கூடாது.


மயிர், சாம்பல் எலும்பு, மண்டையோடு, பஞ்சு, உமி,ஓட்டாஞ்சில்லி இவற்றின் மீது நிற்க கூடாது.


பேசும் போது துரும்பைக் கிள்ளிப் போடக்கூடாது.


ஈரக்காலுடன் படுக்க கூடாது.


வடக்கிலும் கோணத்திசைகளிலும் தலைவைத்துப் படுக்கக் கூடாது.


நடக்கும் போது முடியை உலர்த்தக் கூடாது.


ஒரு காலால் இன்னொரு காலைத் தேய்த்துக் கழுவக் கூடாது.


தீயுள்ள பொருட்களை தரை மேல் போட்டு காலால் தேய்க்கக் கூடாது.


அங்க ஹீனர்கள், ஆறுவிரல் உள்ளவர்கள் கல்வியில்லாதவர்கள், முதியோர், வறுமையில் உள்ளவர்கள் இவர்களது குறையை குத்திக் காட்டிப் பேசக்கூடாது.


பிறர் தரித்த உடைகள், செருப்பு, மாலை, படுக்கை இவற்றை நாம் உபயோகிக்க கூடாது.


பிணப் புகை, இளவெயில், தீபநிழல் இவை நம் மீது படக்கூடாது.


பசுமாட்டை காலால் எட்டி உதைக்கக் கூடாது.


தூங்குபவரை உற்றுப் பார்ப்பதும் திடீரென எழுப்புவதும் கூடாது.


பகலில் உறங்குவது உடலுறவு கொள்வது கூடாது.


அண்ணன் –தம்பி, அக்காள்-தங்கை, ஆசிரியர்-மாணவர்,கணவர்-மனைவி, குழந்தை-தாய், பசு-கன்று இவர்களுக்கு இடையில் செல்லக் கூடாது.


கோவணமின்றி வீட்டின் நிலைப்படியை தாண்டக் கூடாது.


நம்மை ஒருவர் கேட்காத வரையிலும் நாம் அவருக்கு ஆலோசனை சொல்லக் கூடாது.



இப்படி செல்கின்றன அறிவுரைகள்! இதெல்லாம் இந்த காலத்தில் பின்பற்ற முடியுமா? என்பதை தவிர்த்து நல்ல ஆலோசனைகளை பின்பற்ற முயற்சிக்கலாம் இல்லையா?



நன்றி: வாரமலர் அந்துமணி



தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!



மனித ரத்தம் குடிக்கும் அதிசய பெண்மணி!

$
0
0
வாஷிங்டன்: பழங்கள், காய்கறிகளைஜூஸ்போட்டுஆவலுடன்குடிப்பவர்களைபார்த்திருப்போம். ஆனால்அமெரிக்காவைச்சேர்ந்தஒருபெண் 30 ஆண்டுகளுக்கும்மேலாகதினசரி 2 லிட்டர்மனிதரத்தத்தைஜூஸ்போலகுடிக்கிறார். அதிர்ச்சியளிக்கும்இந்தசம்பவம்அமெரிக்காவின்பென்சில்வேனியாமாகாணத்தில்தான்நடைபெற்றுவருகிறது. ரத்தம்குடிக்கும்இந்தப்பெண்ணுக்குதிருமணமாகிஇரண்டுகுழந்தைகளும்இருக்கின்றனவாம். ரத்தப்பிரியையானஅந்தப்பெண்ணின்பெயர்ஜூலியாகேப்லஸ் (45). இவரதுகணவர்டொனால்டுலாசரோவிச். அமெரிக்காவின்பென்சில்வேனியாமாநிலத்தில்வசித்துவரும்இவர்களுக்கு 2000ம்ஆண்டுதிருமணம்நடந்தது. இவர்களுக்குஅரில் (24) என்றமகளும், அலெக்ஸ்என்றமகனும்உள்ளார். 

 இளம்வயதில்ஜூலியாகாதலித்தபோதுதன்காதலனுக்குமுத்தம்கொடுத்திருக்கிறார். அப்போதுஎதிர்பாராதவிதமாகஅவரதுஉதட்டைகடித்துவிட்டார். காதலன்உதட்டில்இருந்துவந்தரத்தத்தைஅவர்உறிஞ்சிகுடித்துள்ளார். ரத்தத்தின்சுவைஅவருக்குமிகவும்பிடித்துவிட்டது.


 காதலனின்ரத்தம்குடித்துருசித்தஅவர்தொடர்ந்துரத்தம்குடிக்கஆரம்பித்தார். கடந்த 30 ஆண்டுகளாகஜூலியாரத்தம்குடித்துவருகிறார். தினமும் 2 லிட்டர்ரத்தம்வரைஅவர்ருசித்துவிடுகிறாராம்.


 ஜூலியாவுக்குரத்தம்கொடுக்கஏராளமானகொடையாளர்கள்தயாராகஉள்ளனர். ரத்தம்கொடுக்கவிரும்பும்நபர்களின்உடம்பில்ஏதாவதுஒருபகுதியில்கத்தியால்கீறிஅதில்வெளிவரும்ரத்தத்தைஊசிஉறிஞ்சிகுடித்துவிடுகிறார்.


 ஜூலியாவின்கணவர், பிள்ளைகள்எவ்வளவோமுயன்றும்கூடஅவரதுரத்தம்குடிக்கும்பழக்கத்தைநிறுத்தமுடியவில்லை. ரத்ததானம்செய்பவர்கள்கிடைக்காதநேரத்தில்ரத்தவங்கிக்குசென்றுபணம்கொடுத்துரத்தம்வாங்கிகுடிக்கிறார்.


 ‘மனிதரத்தத்தில்ஏராளமானசத்துக்கள்இருப்பதுஎனக்குதெரியும். தினமும்ரத்தம்குடிப்பதால்நான்மிகவும்வலிமையாக, ஆரோக்கியமாகஉள்ளேன். இதனால்நோய்தாக்குதலுக்குஉட்படாமல்அழகாகஇருக்கிறேன்' என்கிறார்ஜூலியா. ஒவ்வொருவருக்குஒவ்வொருருசிபிடிச்சிருக்குபோல.


 நன்றி: தட்ஸ் தமிழ்

தந்திரக்கார மனைவி! பாப்பா மலர்.

$
0
0
தந்திரக்கார மனைவி! பாப்பா மலர்.



ஓர் ஊரில் ஒரு விவசாயி வசித்து வந்தான். வயலில் வேலை செய்து விட்டு வீட்டுக்கு வந்த அவன் உண்டு முடித்து நிலவொளியில் மனைவியிடம் பேசிக் கொண்டு இருந்தான். அப்போது அவர்களுக்கும் ஓர் சர்ச்சை எழுந்தது.அவர்களில் திறமை மிக்கவர் கணவனா மனைவியா என்பது தான் அது.

   அந்த சர்ச்சை முற்றி பெண்கள்தான் தந்திரத்தில் வல்லவர்கள், அவர்கள் நினைத்தால் ஆயிரம் தந்திரங்கள் செய்து ஆண்களை வெற்றிக் கொள்ள முடியும் என்றாள் மனைவி.அத்துடன் இல்லாமல் ஆண்கள் எளிதாக ஏமாந்துவிடுவார்கள். உங்கள் நல்ல காலம் இன்னும் உங்களை நான்  தந்திரம் ஏதும் செய்து இதுவரை ஏமாற்றவில்லை என்றாள் அவனது மனைவி.

   இதைக்கேட்ட கணவன் மிகுந்த கோபம் கொண்டான். உங்களுக்கு சமைப்பதை தவிர வேறு என்ன தெரியும்? உங்கள் தந்திரங்களை கண்டு ஏமாற நான் ஒன்றும் முட்டாள் இல்லை. நீ வேண்டுமானால் ஆயிரம் தந்திரங்கள் செய்து என்னை ஏமாற்றிக் காட்டு பார்க்கலாம். அப்போது நான் ஒத்துக்கொள்வேன் பெண்கள் புத்திசாலிகள் என்று சவால் விடுத்தான் கணவன்.

   அன்றைய பொழுது விடியும் நேரத்தில் கணவன் எழுந்திருக்கும் முன் எழுந்த அவனது மனைவி கணவன் அறியாமலேயே கடைக்குச் சென்று ஒரு பெரிய மீனை வாங்கி கணவன் அன்று உழப்போகும் வயலில் புதைத்து வைத்து விட்டு வீட்டிற்கு திரும்பி ஒன்றும் அறியாதவள் போல படுத்துக் கொண்டாள்.

    பொழுது விடிந்ததும் விழித்த கணவன் காலைக் கடன்களை முடித்து வயலுக்கு சென்றான். ஏர் பூட்டி உழுதான். அப்போது அவனது மனைவி புதைத்து வைத்த மீன் கலப்பையில் சிக்கி வெளியே வந்தது. நிலத்தில் பெரிய மீன் கிடைத்தது அவனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. ஆகா! எவ்வளவு பெரிய மீன்! இதை இன்று சுவையாக ஆக்கி உண்டு மகிழலாம் என்று அவன் மனம் மகிழ்ச்சியில் திளைத்ததே தவிர நிலத்தில் மீன் எப்படி கிடைக்கும் என்று புத்தி செயல்படவில்லை. அந்த மீனை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தான்.

   மனைவியை அழைத்து நான் நிலத்தில் உழும்போது பெரிய மீன் கிடைத்தது. இதை சமைத்து வை! மதியம் உண்ணலாம் என்று சொல்லிவிட்டு மீண்டும் வயலுக்குச் சென்று விட்டான். மதிய நேரம் வந்தது.ஆகா! இன்று மீன்குழம்பு மனைவி சமைத்திருப்பாள்! ஒரு வெட்டு வெட்டலாம் என்று ஆவலோடு வந்தான் உழவன்.

  முகம் கால் கழுவி சாப்பிட உட்கார்ந்தான். உழவனின் மனைவி வழக்கம் போல பழைய சோறும் ஊறுகாயும் வைத்த போது உழவன் கடுப்பானான். ஏய்! நான் கொண்டுவந்த மீனை சமைக்க வில்லையா? என்று கத்தினான்.

   மீனா? ஏது? எப்போது கொண்டுவந்தீர்கள் என்று அப்பாவியாய் கேட்டாள் மனைவி.

  காலையில் நிலத்தை உழுதபோது பெரிய மீன் கிடைத்ததே! அதை சமைக்கச்சொல்லி உன்னிடம் கொடுத்தேனே? அதை சமைக்காமல் ஏமாற்றுகிறாயா? என்றான் உழவன்.

  நீங்கள் மீன் எதையும் கொண்டுவரவில்லை! திடீரென்று மீன் குழம்பு கேட்டால் நான் எங்கே போவேன்? என்று பதில் சொன்னாள் மனைவி.

  தன் மனைவி பொய் சொல்லி ஏமாற்றுகிறாள் அல்லது அவள் மட்டும் மீனை சமைத்து சாப்பிட்டு விட்டாள் என்று உழவனுக்கு கோபம் மனைவியை போட்டு உதைத்தான். உழவனின் மனைவி கத்திக் கொண்டே வெளியே வந்து ஐயோ! இந்த அநியாயத்தை கேட்பார் இல்லையா?  என்று கூச்சல் போட்டு அழவும் கும்பல் கூடிவிட்டது.

    அப்போது கூட்டத்தில் ஒருவர் என்ன நடந்தது எதற்கு உன் மனைவியை போட்டு அடிக்கிறாய்? என்று கேட்டார்.

   நான் இன்று காலையில் நிலத்தை உழுத போது மீன் ஒன்று கிடைத்தது. அதை சமைத்து வைக்க சொன்னேன். அதை சமைத்து இவளே சாப்பிட்டுவிட்டு எனக்கு வெறும் பழைய சோறு போடுகிறாள் என்று சொன்னான் உழவன்.

   ஏய் மடையா! நிலத்தை உழும்போது மீன் கிடைக்குமா? இப்படி முட்டாள் தனமாக பேசாதே! உன் மனைவியிடம் அன்பாக நடந்துகொள் என்று அறிவுரை கூறினார் அந்த பெரியவர். வந்த எல்லோரும் சென்று விட்டனர். அப்போது அவன் மனைவி சட்டிக்குள் இருந்து ஒரு மீன் துண்டை எடுத்து சாப்பிடத் தொடங்கினாள்.

  இதைப்பார்த்த உழவனுக்கு ஆத்திரம்! எல்லோரும் என்னை முட்டாள் என்றார்களே! இவளை கையும் களவுமாக பிடித்துகொடுக்கிறேன் பார்! என்று வெளியே வந்து என்னை நம்ப மறுத்தீர்களே! இப்போது வாருங்கள் வீட்டில் என் மனைவி மீன் குழம்பு சாப்பிட்டுக் கொண்டிருக்கிறாள். எனக்கு தராமல் அவளே திண்ணவே ஏமாற்றுகிறாள் என்றான்.

  எல்லோரும் அவன் வீட்டிற்குள் நுழைந்தார்கள். இதற்குள் அவனது மனைவி சட்டியை எங்கோ மறைத்து வைத்து விட்டு. அழுது கொண்டே வெளியே வந்து இவர் என்னை அடித்து என் உடம்பெல்லாம் புண்ணாகிவிட்டது. இவர் மீனே கொண்டுவரவில்லை. இல்லாத மீனை எப்படி சமைப்பது நான் சொல்வதை நம்புங்கள் இவர் இப்படி என்னை கொடுமைப் படுத்தினால் சாவதை தவிர வேறு வழியில்லை! என்று அழுதாள்.

  கணவனோ, ஐயா மக்களே! இவள் பெரிய கைகாரியாக இருக்கிறாள் , நான் நிலத்திலிருந்து மீன் பிடித்து வந்தது உண்மை! அதை இவள் சமைத்து உண்டதும் உண்மை என் பேச்சை நம்புங்கள்! என்றான்.

   வந்திருந்த எல்லோரும் உழவனை ஒரு மாதிரியாக பார்த்தார்கள்! இவனுக்கு பைத்தியம் தான் பிடித்து இருக்கிறது! இல்லை பேய் பிடித்து இருக்க வேண்டும். நிலத்தில் மீன் பிடித்ததாக உளறுவதோடு இல்லாமல் மனைவியை அடித்து நம்மையும் ஏமாற்றுகிறானே!  இவனை பிடித்த பேயை விரட்ட வேண்டும் என்று வேப்பிலையை கையில் எடுத்துக் கொண்டு விளாசினார்கள்.


  ஐயோ! அடிக்காதீங்க! நான் சொல்றது நிஜம்!  நிலத்தில் தான் பெரிய மீனை பிடித்தேன்! என்றான் உழவன்.

   விடாதீர்கள் இவன் பைத்தியம் தெளியும் வரை அல்லது பேய் ஓடும் வரை விடக்கூடாது என்று ஆளாளுக்கு வேப்பிலையிலும் துடைப்பத்திலும் உழவனை அடிக்க ஆரம்பித்தார்கள். அடேய்! என்னை நம்ப மறுக்கிறீர்களே! அநியாயமாக அடிக்கிறீர்களே! என்று அலறியபடி ஓடத்துவங்கினான் உழவன்.

  பேய்தான் ஓடுகிறது! இந்த ஊர் எல்லை வரை சென்று விரட்டி விட்டு வருவோம் என்று அவனை துரத்தினர் மக்கள். என்னை விடுங்கள்! என்னை விடுங்கள்! இல்லை நான் மீன் பிடிக்க வில்லை! என் மனைவியை அடிக்க மாட்டேன் என்று கையெடுத்து வணங்கினான் உழவன்.

  இப்போதுதான் பேய் வழிக்கு வந்திருக்கிறது! ஆனாலும் இப்படியே விடக்கூடாது வேப்ப மரத்தில் இன்று முழுவதும் கட்டி வைப்போம்.  நாளை விடுவிப்போம் என்று அவனை கட்டி வைத்தார்கள்.

   மறுநாள் உழவன் தளர்ந்து இருந்தான். அவனை விடுவித்ததும் வீட்டிற்கு வந்தான். வலி தாங்க முடியாமல் ஐயோ! அம்மா! என்று முனகியபடியே இருந்த அவனை பார்த்து அவன் மனைவி சொன்னாள். ஒரே தந்திரம் தான் செய்தேன்! இதையே உங்களால் தாங்க முடியவில்லை! நான் ஆயிரம் தந்திரங்கள் செய்தால் நீங்கள் என்ன ஆவீர்களோ? இப்போதாவது ஒத்துக் கொள்ளுங்கள் பெண்கள் தந்திர சாலிகள் என்று  என்றாள்.

    சமைத்து வைத்த மீன் குழம்பையும் சோறையும் கணவனுக்கு போடவும் செய்தாள். கணவனும் தன் தோல்வியை ஒப்புக் கொண்டான். உண்மையிலேயே நீ ரொம்ப கெட்டிக் காரிதான்!  என்ற கணவன் ஆசையோடு குழம்பு சோறை உண்டு முடித்தான்.

 (செவிவழிக் கதை).

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!



உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 18

$
0
0
உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 18



தமிழார்வம் காரணமாக தொடங்கப்பட்ட இந்த பகுதி இவ்வளவு பகுதிகள் கடக்கும் என்று நினைத்துக் கூட பார்க்க வில்லை! கணிசமான பார்வையாளர்கள் இந்த பகுதியை படித்து வருவது மகிழ்ச்சி! முதலில் மேம்போக்காக எழுதப் பட்ட இந்த பகுதி தற்போது இலக்கண இலக்கியங்களையும் எழுதிவருகிறது. கடந்த சில வாரங்களாக சில இலக்கணப் பகுதிகளை படித்தோம். இன்று கொஞ்சம் இலேசாக இலக்கணம் தவிர்த்து சிலவற்றை பார்க்க போகிறோம்.

    தமிழில் வகைப் படுத்துதல் என்பது சிறப்பு! பொதுவாகவே மனிதர்கள் எனில் நல்லவன் கெட்டவன் என வகைப்படுத்தலாம். சினிமா என்றால் கிராமியக்கதை, க்ரைம்கதை, காதல்கதை, நகைச்சுவைகதை என வகைப்படுத்தலாம். இலக்கியம் என்றால் நாவல்கள், மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள், சங்க காலப் பாடல்கள் என வகைப்படுத்தலாம் அல்லவா?

  அதே போல தமிழின் தொன்மையான வகைப்படுத்தல் சிலவற்றை இப்போது காண்போம்.

வள்ளல்கள் என்றால் கடையேழு வள்ளல்களை நினைவு படுத்துவோம் அல்லவா? இதைப்பற்றி பிலாசபி பிரபாகரன் எழுதி இருந்தார் என்று ஞாபகம். கடையெழு வள்ளல்கள் தவிர்த்து தலை இடையெழு வள்ளல்களும் இருந்துள்ளார்கள் அவர்களை அறிந்து கொள்வோம்.


முதல் ஏழூ வள்ளல்கள் அல்லது தலைஎழுவள்ளல்கள்: குமணன், சகரன், சகாரன்,செம்பியன், துந்துமாரி, நளன், நிருதி.

இடையேழு வள்ளல்கள்: அக்குரன், அந்திமான், கன்னன், சந்தன், சந்திமான், சிசுபாலன், வக்கிரன்.

கடையேழு வள்ளல்கள்:  பாரி,ஆய், காரி, நள்ளி, அதியமான், பேகன், ஓரி.


அகத்தினைகள் 7 : கைக்கிளை, குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, பெருந்திணை,

அரசசின்னம்10: படை, கொடி, குடை, முரசு, புரவி, களிறு, தேர், தார், மாலை, செங்கோல்.

அளவுவகை 4: எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல்

அழகுவகை 8: அம்மை, வனப்பு,தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன் இழை.

அறுமுறைவாழ்த்து6: முனிவர், பார்ப்பனர், ஆனிரை, மழை, முடியுடைவேந்தர், உலகு

ஆறுவகை சக்ரவர்த்திகள்6: அரிச்சந்திரன், நளன், முசுகுந்தன், புரூரவன், சகரன், கார்த்தவீரியன்.

இசைவகை 3 மந்தரம், மத்திமம், தாரம்.

இசைவகை6 குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி.

மேலுலகம் ஏழு: பூலோகம்,புவலோகம், சுவலோகம், சனலோகம், தபோலோகம், மகாலோகம், சத்தியலோகம்.

கீழுலகம் ஏழு: அதலம், விதலம்,சுதலம், தராதலம், மகாதலம், இரசாதலம், பாதாளம்.

எட்டுமலைகள்: இமயம் மந்தரம், கயிலை, விந்தம், நிடதம், ஏமகூடம், நீலம், கந்தாமதனம்.

ஐங்கூந்தல்; கொண்டை, குழல், பனிச்சை, முடி, சுருள்.

ஐங்குரவர்: அரசன், ஆசிரியன்,தாய், தந்தை, தமையன்.

ஐங்காயம்: கடுகு ஓமம், வெந்தயம், உள்ளி, பெருங்காயம்.

ஐஞ்சிறு காப்பியம்: நீலகேசி, சூளாமணி, யசோதரகாவியம், உதயணகுமார காவியம், நாககுமாரகாவியம்.

ஐம்பொறி: மெய், வாய், கண், மூக்கு, செவி.

கவி வகை4 ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம்.

கூலவகை8 : நெல், புல், வரகு, தினை, சாமை, இறுங்கு, தோரை, மூங்கில் நெல்.

கொடுந்தமிழ்நாடு: பொங்கநாடு, ஒளிநாடு,தென்பாண்டிநாடு, குட்டநாடு, குடநாடு, பன்றிநாடு, கற்காநாடு, சீதநாடு, பூழிநாடு, மலையமாநாடு, அருவாநாடு, அருவாவடதலைநாடு.

இப்படி பலபொருள்களையும் வகைப்படுத்தி உள்ளனர் தமிழ் மக்கள் இன்னும் சிலவற்றை அடுத்தடுத்த பகுதிகளில் காண்போம்.

 இனி இலக்கிய சுவை


பள்ளு என்பது சிற்றிலக்கிய வகைகளுல் ஒன்று பள்ளு என்றால் பள்ளமான நன்செய் நிலங்களையும் அங்கு செய்யப்படும் உழவினையும் குறிக்கும். ஆகவே பள்ளு உழவர் இலக்கியம்.

  திருநெல்வேலிக்கு சிறிது வடகிழக்கில் தன்பொருநை, சிற்றாறு, கோதண்டராம ஆறு ஆகிய மூன்று ஆறுகளும் கலக்குமிடத்திற்கு பெயர் முக்கூடல். அங்கு உறையும் இறைவனான அழகர் மீது பாடப்பட்டது முக்கூடல் பள்ளு. அதில் தென்கரை நாட்டுவளம் குறித்து பாடப்பட்டதை கீழே காண்கிறோம்.


    காயக் கண்டது சூரிய காந்தி:

      கலங்கக் கண்டது வெண்தயிர்க் கண்டம்.

  மாயக்கண்டது நாழிகை வாரம்;

     மறுகக் கண்டது வான்சுழி வெள்ளம்.


    சாயக்கண்டது காய்க்குலைச் செந்நெல்;

       தனிப்பக் கண்டது தாபதர் உள்ளம்.

  தேயக் கண்டது உரைத்திடும் சந்தனம்:

      சீவல மங்கைத் தென்கரை நாடே.


பொருள்:  வெயில் காயும்; வயிறுகாயாது. தயிர் கலங்கும்; மக்கள் மனங்கலங்க மாட்டார். நாழிகையும் வாரமும்  மாயும்; மக்கள் பசியால் மாயார். மறுகி ஓடுவது வெள்ளம்: மக்கள் மறுகி வாடார். தலைசாய்ந்து நிற்பது செந்நெல்; மக்கள் தலைகுனிய மாட்டார். தாபதராகிய முனிவர் தனித்திருப்பர்; கணவன் மனைவியர் தனித்திருக்க மாட்டார்கள். உரைக்க உரைக்க சந்தனம் தேயும். ஆனால் இச்செய்யுளில் பொருள் தேயாது.

    என்ன அழகான பாடல்! இத்தகைய அருமையான வளம் மிக்க நாடாய் நம் தமிழ் நாடு சிறப்புற்று விளங்கியதை இந்த பாடல்களில் அறிந்து கொள்கிறோம். மகிழ்ச்சி அடைகிறோம். மற்றுமொரு சந்தர்ப்பத்தில் மேலும் அறிவோம்.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!



அஜித்தின் புதிய படம் விநாயகம் பிரதர்ஸ்!

$
0
0
அஜித்தின் புதிய படம் விநாயகம் பிரதர்ஸ்!



தமிழ் சினிமாவின் வசூல் நாயகர்களில் ஒருவர் அஜித். நிறைய புதுமுக இயக்குனர்களை வளர்த்து தானும் வளர்ந்தவர். நிறையபேருக்கு உதவிகள் செய்திருப்பவர். மனதில் பட்டதை தைரியமாக கூறுபவர். இப்படி பல ப்ளஸ் இருந்தாலும் இப்போது ஒரு மைனஸ் அவரை பாதித்துக் கொண்டு இருக்கிறது.

   அவரது 53வது படத்தை இயக்கிய விஷ்ணு வர்த்தன் ஒரு வருட காலமாக படத்திற்கு பெயர் வைக்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார். டீசர் வெளியிட்ட போது கூட படத்தில் பெயர் வெளியிடவில்லை. முதலில் இந்த படத்திற்கு வலை என்று பெயரிடப்பட்டதாக சொன்னார்கள். ஆனால் அதை அஜித்தும் விஷ்ணு வர்த்தனும் மறுத்தார்கள். புதியபடத்திற்கு பெயர் விரைவில் வைக்கப்படும் என்று சொன்னார்கள்.

  சுமார் ஒருவருட காலமாக அஜித்தின் படத்தை எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்கள் அவரது படத்தின் பெயர் கூட தெரிவிக்காமல் இருப்பதால் கொதித்துப் போயுள்ளார்கள். எங்களிடம் சொல்லுங்கள் நாங்களே பெயர் வைக்கிறோம் என்ற அளவில் இப்போது ரசிகர்கள் கொந்தளிப்புடன் உள்ள போதும் இன்னும் பெயர் வைக்காமல் திண்டாடி வருகிறார் விஷ்ணுவர்த்தன்.

    . இந்தநிலையில், அஜீத்தின் 54வதுபடத்தைஇயக்கும்சிறுத்தைப்படஇயக்குனர்சிவா, அப்படத்தின்தலைப்புசுராங்கனிஎன்றுமுதலில்வைத்திருந்தவர்இப்போதுவிநாயகம்பிரதர்ஸ்என்றுபெயர்வைத்துவிட்டாராம். இப்படத்தில்அஜீத்மற்றும்அவரதுதம்பியாகவிதார்த்உள்படசிலநடிர்களும்நடிக்கிறார்கள். படத்தில்அஜீத்தின்கேரக்டரின்பெயர்விநாயகம்என்பதால், விநாயகம்பிரதர்ஸ்என்றபெயரைஅவர்வைத்திருப்பதாகவும்கூறப்படுகிறது.இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்று ரசிகர்கள் இதை நம்ப மறுக்கிறார்கள். இப்படிதான் போன படத்தின் பெயர் வலை என்று தகவல் வந்தது. அப்புறம் பெயர் வைக்கவில்லை என்று சொல்லிவிட்டார்கள். அஜித்தே வந்து அதிகாரப் பூர்வமாக அறிவித்தாலன்றி நாங்கள் நம்பத்தயாரில்லை என்கிறார்கள் ரசிக கண்மணிகள்.

    பல வெற்றிப்படங்கள் கொடுத்த நடிகரின் படத்திற்கு தலைப்பு அதுவும் தலக்கே தலைப்பு கிடைக்கல என்பது மைனஸ் பாயிண்ட்தானே!  விரைவில் இதை ப்ளஸ் பாயிண்ட் ஆக்குவார் தல என்று எதிர்ப்பார்ப்போம்!


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!



உள்ளேவும் வெளியேவும்! தமிழக அமைச்சரவை திடீர் மாற்றம்!

$
0
0
 தமிழக அமைச்சரவையில் இன்று அமைச்சர்கள் 2 பேரை முதல்வர் ஜெ., நீக்கினார். புதிதாக 2 பேரை நியமித்துள்ளார். ஏற்கனவே இது வரை ஆட்சி பொறுப்பேற்றது முதல் 8 முறை முதல்வர் ஜெ., தனது அமைச்சரவை சகாக்களை மாற்றி வந்துள்ளார். தற்போது 9 வது முறையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இன்று முதல்வர் ஜெ., தனது அரசில் அமைச்சர்களாக இருந்த செல்லப்பாண்டியன், முகம்மது ஜான் ஆகியோரை நீக்கி உள்ளார். இவர்களுக்கு பதில் எஸ்.பி., சண்முகநாதன், அப்துல்ரகீம் ஆகியோர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவருக்கும் முறையே சுற்றுலா மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் செந்தூர்பாண்டியன், பச்சைமால், ஆனந்தன் ஆகியோர்களின் துறை மாற்றப்பட்டுள்ளது. இவர்களுக்கு முறையே இந்து சமய அறநிலைய துறை, வனத்துறை ,தொழிலாளர் நலத்துறை வழங்கப்பட்டுள்ளது.

வாரிய தலைவர்கள் நியமனம்: இன்று பல்வேறு துறைக்கான வாரிய தலைவர்களையும் முதல்வர் ஜெ., நியமித்துள்ளார். இதன்படி முனியசாமி ( சேமிப்பு கிடங்கு கழகம் ), வி.என்.ரவி (ஜவுளி கழகம் ), பிரபாகர் ( சிறுதொழில் மேம்பாடு ), அருண்மொழித்தேவன் ( சுற்றுலா மேம்பாடு), செந்தில்நாதன் ( பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாடு ) , ரவிச்சந்திரன் ( வேளாண்கழகம்), வெங்கடேஸ்வரன் ( தொழில் துறை) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
டிஸ்கி: அதிரடிக்கு பெயர் போன ஜெ இப்படி அடிக்கடி அமைச்சர்களை மாற்றிக் கொண்டிருந்தால் ஆட்சிக்கால இறுதியில் அனைவரும் முன்னால் மந்திரிகளாகத்தான் இருப்பார்கள் போல! என்ன  ஒருவராய் சம்பாதிக்காமல் அனைவரும்  சம்பாதிக்க வழி செய்கிறார்.                                                                             தகவல் உதவி: தினமலர்

புகைப்பட ஹைக்கூ 33

$
0
0
புகைப்பட ஹைக்கூ 32



  கரை போட்டது

  கடற்கரைக்கு

  மக்கள் வெள்ளம்!


  மக்கள் வெள்ளத்தில்

  மறைந்து போனது

  கடல்!


  உப்பென்றாலும்

  உவகைதான்!

  கடல்!


  பேரலைகளை

  பெயர்த்தது

  மக்கள் பேரலை!


   மாசில்லா காற்று

   காசில்லா காற்று

   தந்தது கடற்கரை!


   மக்கள் கூட்டம் கண்டு

   மயங்கி வந்தது

   கடல்!


   கறுத்தாலும்

   ஈர்த்தது

   கடல்!


  அள்ளிச் சென்று

  தள்ளிவிட்டது

  கடலலை!


  ஓயாத அலைகள்!

  ஓய்வின்றி ரசித்தனர்

  மக்கள்!


   கால் தொட்ட அலைகள்

   கரைந்தது

  மனசு!


  பொழுது கரைகையில்

  அதிகரித்தது கூட்டம்

  மெரினா!


  தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!



ராஜ்யசபா தேர்தலும் அம்மாவின் கணக்கும்!

$
0
0
ராஜ்ய சபா தேர்தலை ஓட்டி தமிழக அரசியல் களை கட்டியுள்ளது. இந்த முறை ஆறு எம்பிக்கள் தமிழகத்தில் இருந்து தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற சூழலில் அதிக எம். எல். ஏக்களை உடைய அதிமுகவிற்கே அதிக வாய்ப்பாக நான்கு எம். பிக்கள் கிடைக்க வாய்ப்பு இருந்தது.

    ஐந்தாவது நபர் கூட்டணிக் கட்சிக்கு தோழமை அடிப்படையில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளருக்கு அதிமுக ஆதரவளிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையில் தா. பாண்டியன் களத்தில் குதித்தார். சாதரணமாகவே ஆட்சியில் கூட்டணியில் இருப்பவருக்கு துதிபாடும் இனத்தை சேர்ந்தவரான தா. பா. அம்மா எப்படியும் தம்மை எம். பி ஆக்கி விடுவார் என்று எம்பி எம்பி குதித்து கொண்டிருந்தார்.

     ஆறாவது இடத்திற்கு திமுக மற்றும் தேமுதிக இடையே போட்டி இருந்தது. தேமுதிக முதல் முறையாக ராஜ்யசபாவில் இடம்பிடித்து சுதிஷை அங்கே அலங்கரிக்க முடிவு செய்து திமுகவுடன் பேரம் நடத்தியது. தன் பிள்ளைகள் நலனில் அதிக அக்கறை கொண்ட மு.க. வோ இப்பொது பழம் கனிக்கே! அடுத்தமுறை கனிந்தால் பார்க்கலாம் என்ற ரீதியில் பேச தேமுதிக சுதாரித்துக் கொண்டது. அது தனித்து நின்றாலும் பிரயோசனம் இல்லை! திமுகவுக்கு ஆதரவு அளித்தால் ஊழலுக்கு துணை போன கனிமொழியை ஆதரித்ததாக சச்சரவு வரும் என்று இருதலைக் கொள்ளி எறும்பாக தவித்து வருகிறது தன்னுடைய எம். எல் ஏக்களில் ஏழு பேரை அதிமுகவிற்கு தாரை வார்த்த அது இன்னும் எத்தனை பேர் காலை வாருவார்கள் என்று தெரியாமல் உள்ளது.

   ஒரு எம்பிக்கு 34 எம்பிக்கள் ஆதரவு தேவை என்ற நிலையில் அதிமுக எளிதாக நான்கு எம்பிக்களை வென்றுவிடும். ஐந்தாவது நபருக்கே அடுத்தவர்கள் ஆதரவு தேவை என்ற நிலையில் அந்த இடத்தை கூட்டணிக்கு விட்டுக் கொடுக்காமல் போட்டியிட வேட்பாளர் அறிவித்து கூட்டணியினரின் காலை வாரினார் ஜெ.

     தன்னிடம் உள்ள 151 உறுப்பினர்கள் தவிர்த்து மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் தேமுதிக எம்.எல்.ஏக்களை இழுத்து ஐந்தாவது நபரை வெற்றி பெற வைக்கலாம் என்பது ஜெயின் கனவாக இருந்தது. ஆனால் தேமுதிகவில் இருந்து போதிய எம்.எல்.ஏக்களை இழுக்க முடியவில்லை. மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட்டும் அதிமுக ஆதரவு நிலையில் இருந்து விலகி இந்திய கம்யூனீஸ்ட் கட்சியை ஆதரிப்பதாக அறிவித்தது. இரண்டு கம்யூனிஸ்ட்களும் இணைந்து கொண்டதால் அனாவசியமாக ஒரு நட்பு கட்சியை பகைத்துக் கொண்ட நிலையே அதிமுகவிற்கு ஏற்பட்டது.
 


   இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் ராஜா நேற்று முதல்வரை சந்தித்து பேசிவிட்டு மனுதாக்கல் செய்தார். இதையடுத்து திடீரென ஜெ ஓர் அதிரடி அறிவிப்பு செய்தார். இந்தியகம்யூனிஸ்ட்டிற்கு ஆதரவு தருவதாகவும் ஒரு வேட்பாளரை வாபஸ் பெற்றுக் கொள்வதாகவும் அறிவித்து மற்ற கட்சிகளுக்கு கலக்கம் தந்துள்ளார். இதில் பாவம் பாதிக்கப்பட்டது தங்கமுத்துதான். மூன்று முறை லோக்சபாவிற்கு போட்டியிட்டு தோற்ற அவருக்கு ராஜ்யசபா சீட் கிடைத்தும் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய்விட்டது. ஆனால் இதெல்லாம் அம்மாவின் கட்சியில் சர்வ சகஜம். அம்மாவின் இந்த விளையாடல் இப்போது கலக்கத்தை தந்திருப்பது திமுகவிற்கு மட்டுமே தேமுதிகவும் வேட்பாளரை அறிவித்துவிட்டதால் கனிமொழிக்கு இப்போது காங்கிரஸின் ஆதரவு கட்டாயம் தேவை. ஆனால் காங்கிரஸ் ஆதரவை தேமுதிக முன் கூட்டியே கேட்டுவிட்டது. இதனால் இப்போது திமுகவா தேமுதிகவா என்ற சிக்கலில் காங்கிரஸ் உள்ளது.

      தேமுதிக போட்டியிடாவிட்டால் திமுகவின் கனிமொழி எளிதாக எம். பி ஆகிவிடுவார். இப்போது தேமுதிக களத்தில் இருப்பதால் அந்த கட்சி மற்ற கட்சிகளின் உதவியை நாட வேண்டியுள்ளது.  .

  தேமுதிகவின் இளங்கோவன் களத்தில் உள்ளார். அவருக்கு நேரடிப்போட்டியாக கனிமொழி உள்ளார். இந்த மோதலில் கனிமொழிக்கு ஆதரவு தந்து தேமுதிக விலகவும் வாய்ப்பு உள்ளது. அப்படி இல்லாதபட்சத்தில் தேமுதிக மொத்த எம்.எல்.ஏக்களில் ஏழுபேர் அதிமுக ஆதரவு ஆறுபேர் சஸ்பெண்ட் ஆகியுள்ளதால் 13 பேர் ஓட்டளிக்க வாய்ப்பு இல்லை! 34 பேர் ஆதரவு தேவை என்ற நிலையில் வெறும் 16 பேர் போட்டியிடுவது திமுகவிற்கு பின்னடைவை தரும். 151 எம்.எல்.ஏக்களை உடைய அதிமுக 4 இடங்களில் வென்றுவிடும் அதிமுக ஆதரவுடம் இந்தியகம்யூனிஸ்ட் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது.

   திமுகவிற்கு 23 உறுப்பினர்கள் உள்ளனர் இன்னும் 11 பேரின் ஆதரவு தேவை என்ற நிலையில்  கம்யுனிஸ்ட் கட்சிக்கு ஆதரவு தந்து அந்த  உறுப்பினர்களின் ஆதரவை திமுக பக்கம் செல்லாதவாறு தடுத்து உள்ளார் ஜெ. அதே சமயம் தேமுதிகவின் வாய்ப்பையும் பறித்து உள்ளார். மார்க்சிஸ்ட் தேமுதிகவிற்கு ஆதரவு அளிக்க முன்வந்ததாக தகவல்கள் கசிந்தன. ஜெவின் இந்த முடிவு அதை நிறுத்திவைக்கும்.

   தேமுதிக தன் ராஜ்ய சபா கனவை ஒத்திவைக்கவேண்டிய சூழலுக்கு இதனால் தள்ளப்பட்டுள்ளது.  திமுகவும் காங்கிரஸ் மற்றும் உதிரிக் கட்சிகளின் ஆதரவை நாட வேண்டியுள்ளது. ஆனால் எளிதாக ஐந்து இடங்களை கைப்பற்றப் போகிறது அதிமுக கூட்டணி. மீண்டும் திமுக காங்கிரஸ் பால் சென்றால் அதன் செல்வாக்கும் குறையும் இப்படி இரட்டை அடி கொடுத்து உள்ளார் ஜெயலலிதா. ஒரு காலத்தில் பலமான கட்சியாக பல மந்திரிகளுடன் வலம் வந்த திமுக இன்று ஒரு ராஜ்யசபா சீட்டிற்கு கையேந்த வேண்டிய சூழல் காலத்தின் கோலமே!  தன் முதல் தந்திரம் பலிக்கா விட்டாலும் இந்திய கம்யூனிஸ்டிற்கு ஆதரவு தந்து தேமுதிகவின் வாய்ப்பை கெடுத்து ஒரு போட்டியை உருவாக்கிவிட்டார் ஜெ. இந்த தந்திரம் பலிக்குமா?பொறுத்திருந்து பார்ப்போம்!


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!.

அமானுஷ்ய அனுபவங்கள்!

$
0
0
அமானுஷ்ய அனுபவங்கள்!



எனக்கு நேர்ந்த சில அமானுஷ்ய அனுபவங்களைப் பற்றிய பகிர்வுதான் இது. மற்றவர்களுக்கு இதில் எல்லாம் நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ அதைப்பற்றி எனக்கு கவலை இல்லை. இதைப் பற்றி விவாதிக்கவும் நான் தயார் இல்லை. இவை என் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் இது போன்ற நிறைய சம்பவங்கள் என் சுற்றுப்புறத்தில் உறவினர்களிடத்தில் நடந்து உள்ளன. அவற்றை கண்டும் இருக்கிறேன். அதில் என்னை பாதித்த எனக்கு நேர்ந்த சில சம்பவங்களை மட்டுமே பகிரப் போகிறேன்.

      சிறு வயது முதலே பேய், பிசாசு பூதம் போன்றவற்றின் மீது ஒரு பயமும் அச்சுறுத்தலும் இருந்துதான் வந்துள்ளது எனக்கு. அதே போல் பேய்க் கதைகள் படங்கள் பார்த்தால் சீக்கிரம் தூக்கம் வராது. தூக்கத்தில் அலறுவேன். சுற்றுப் புறத்திலும் பேய் பிசாசு கதைகள் நிறைய உளவும். இதையெல்லாம் சிறிது கோர்த்துதான் இரண்டு பேய்க்கதை தொடர்கள் எழுதினேன். இரண்டாவது தொடர் ஆரம்பத்தில் சிறப்பாக தொடங்கி இறுதியில் சொதப்பி விட்டேன் என்று நினைக்கிறேன். என் அப்பாவும் ஒரு தேவதா உபாசகர். அவர்மீது எங்கள் குலதெய்வமும் வந்து பேசும். இதனால் எல்லாம் எனக்கும் இந்த பேய் பிசாசு மேட்டருக்கும் ஒருவித ஒட்டுறவு ஏற்பட்டுவிட்டது.

     அப்போது எனக்கு ஒரு ஏழு அல்லது எட்டு வயது இருக்கும் அப்போது நான் என் தாத்தாவீட்டில் ஆசானபூதூரில் வசித்து வந்தேன். அந்த வீட்டில் மின்விளக்கு கிடையாது. இரவுப் பொழுதில் சிம்னி விளக்கும் காடாவிளக்கும் எரியும். அங்கு தங்கி படிக்கும் சமயத்தில் ஒரு சமயம் நள்ளிரவில் யாரோ ஓட்டின் மேல் நடப்பது போல தட தடவென சத்தம் கேட்டது. மாமாவும் தாத்தாவும் விழித்துக் கொண்டார்கள் யாராவது திருடனாக இருக்குமோ ஓட்டை பிரித்து இறங்க முயற்சிக்கிறானோ என்று பார்த்தால் கொஞ்ச நேரம் அமைதியாக இருந்தது. அனைவரும் படுக்க திரும்பவும் அதே சத்தம்.

    மாமாவும் தாத்தாவும் தடிகளை எடுத்துக் கொண்டு மெல்ல கதவைத்திறந்து கொண்டு வெளியே வந்து டார்ச்ச் அடித்து பார்த்தார்கள் யாரும் தென்படவில்லை! என் மாமா சத்தம் கொடுத்து பார்த்தார். நிசப்தம் தான் பதிலாக இருந்தது. மீண்டும் நாங்கள் கதவை மூடிக் கொண்டு படுத்த போது மீண்டும் யாரோ ஓட்டில் நடப்பது போல சத்தம் வெளியே வந்து பார்த்தால் யாரும் இல்லை. இப்படீ அன்றைய இரவு தூக்கம் எங்களுக்கு கெட்டுப் போனதுதான் மிச்சம். பின்னர் அது குட்டிச்சாத்தான் ஏவல்! பயமுறுத்த செய்துள்ளார்கள் என்று குறி பார்த்து அறிந்து கொண்டு நிவர்த்தி செய்து கொண்டனர் தாத்தாவும் மாமாவும்.

     இதற்கடுத்த அனுபவம் நானே நேராக பேயைப் பார்த்த அனுபவம்! அப்போது நான் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்தேன். வீட்டுத்திண்ணையில் கட்டில் போட்டு உறங்குவது என் வழக்கம். மற்றவர்கள் உள்ளே படுத்திருக்க நான் மட்டும் வெளியில் படுத்திருப்பேன். வெளியே வெளிச்சம் ஏதும் கிடையாது. ஒரு டார்ச் லைட் மட்டும் வைத்திருப்பேன்.  அன்றும் வழக்கம் போல படுத்து உறங்கி விட்டேன். திடீரென விழிப்பு வந்தது. திண்ணையோரமாக ஒரு நித்திய மல்லி பந்தல் இருக்கும் அந்த பந்தல் ஓரமாக வெள்ளையாக ஓர் உருவம் தென்பட்டது. ஒரு வேளை என் அப்பாதான் இயற்கை உபாதையை கழிக்க வந்துள்ளார் போல என்று நினைத்து அப்பா! என்று அழைத்தேன். மறுவினாடி எனக்கே பேச்சே வரவில்லை! உடல் சிலிர்த்து போய் விட்டது. அது என் அப்பா இல்லை!

    அந்த வெள்ளை உருவம் திரும்பியது முகமெல்லாம் கறுப்பாக வெள்ளையாக நீண்ட பற்கள் ஹிஹி! என அது சிரித்த போது நான் சுதாரித்து ஓர் அலறல் போட்டேன்! என் அலறல் கேட்டு உள்ளே படுத்து இருந்தவர்கள் விழித்து வெளி லைட் போட்டார்கள்! என்னடா! என்று கேட்டுக் கொண்டே கதவைத் திறந்தார்கள். வெளிச்சம் பட்டதும் அந்த உருவம் மறைந்து போய் விட்டது. இதற்குள் எனக்கு வியர்த்துப் போய் விட்டது. ஒருவாறு நடந்ததை கூறினேன். என் அப்பா ஒரு துளி விபூதியை நெற்றியில் பூசி விட்டார். உள்ளே வந்து படுத்துக் கிறியா என்றார். இல்லப்பா! நான் இங்கேயே படுத்துகிறேன் நீங்க தூங்குங்க என்று படுத்து உறங்கி விட்டேன்.

          மறுநாள் அப்பா பூஜையில் அமர்ந்து தியானம் செய்த போது என் கண்ணில் தென்பட்டது அந்த சமயத்தில் இறந்து போன ஒருவர் என்று தெரிந்தது. இதே போல இன்னுமொரு சம்பவமும் நடைபெற்றது. அப்போது பிளஸ் டூ முடித்த சமயம் தெரு வாசலில் கட்டில் போட்டு படுத்திருந்தேன். ஜில் என்று காற்று வீசிக் கொண்டு இருந்தது. அருகில் அடுத்த தெருவில் ஒரு வீட்டில் கல்யாணம். அங்கு ரேடியோ பாடிக் கொண்டு இருந்தது. இளையராஜாவின் இதமான பாடல்கள். அதைக் கேட்டபடியே அப்படியே தூங்கிப் போனேன். ஒரு பக்கமாக கைவைத்து ஒருக்களித்து படுத்து இருந்தேன்.


      தீடிரென ஏதோ சுழற்காற்று வீசுவது போல ஒரு பிரமை! திரும்ப முயன்றால் முடியவில்லை! யாரோ மேலே ஏறிப் படுத்திருப்பது போல ஒரு உணர்வு. அந்த காற்று ஓ என இரைச்சலாக எழுந்து என் காதில் விழுந்தது. யாரோ என் காதில் வாய் வைத்து ஊதுவது போல தோன்றியது. கை கால்களை அசைக்க முடியவில்லை! வாய் பேச முடியவில்லை! ஒரு வித அமானுஷ்யமான அந்த சம்பவம் ஒரு ஐந்து நிமிடம் அதற்குள் நான் எங்கள் குல தெய்வங்களையும் இஷ்ட தெய்வங்களையும் மனதில் ப்ரார்த்திக்க அந்த காற்று நின்றது. என்னால் திரும்ப முடிந்தது. எழுந்தால் துளிக் கூட காற்று வீசவில்லை! ரேடியோ சப்தம் ஓய்ந்து இருந்தது. என் உடல் போர்வை எல்லாம் வியர்த்து சில்லின்றிருந்தது யாரையும் காணவும் இல்லை!

     தெய்வத்தை வேண்டிக்கொண்டு படுத்து விட்டேன். இது போல பல முறை காற்று சேஷ்டைகள் என் மீது விழுந்துள்ளது. சில சமயம் கண்ணுக்கு காட்சியாகவும் தெரியும். இது நடந்தது1997ம் ஆண்டு என்று நினைவு. எங்கள் ஊருக்கு அருகில் உள்ள ஓர் ஊரில் ஒரு கும்பாபிஷேகம். அதை செய்விப்பவர் என் தந்தை. உதவிக்கு நான், என்னுடைய சித்தப்பா அனைவரும் சென்று இருந்தோம். கும்பாபிஷேகத்திற்கு முதல் நாள் இரவு. பூஜைகள் நடந்துகொண்டிருக்கும் போதே மிக பலமான மழை சுமார் இரண்டு மணி நேரம் கொட்டியது. மின்சாரம் நின்று போனது. அப்புறம் எப்படியோ பூஜைகளை முடித்தோம் இரவு 11மணி அங்கேயே ஆகிவிட்டது. ஊரில் ஒரு திருமணம் விடியற்காலையில் நடத்திவைக்க வேண்டும். அதை நடத்தி வைக்க சித்தப்பாவோடு புறப்பட்டு வீட்டுக்கு வந்தோம். சைக்கிள் இருந்தாலும் உருட்டிக் கொண்டு நடந்து வந்தோம். மழை பெய்து சாலையெங்கும் தண்ணீர் நிறைந்து இருக்க பவுர்ணமி நிலா வெளிச்சம் மட்டும் இருந்தது. அங்கிருந்து வீடு வரும் போது மணி பன்னிரண்டை தாண்டி விட்டது.

       எங்கள் ஊரிலும் மின்சாரம் இல்லை! தட்டுத்தடுமாறி கதவை திறந்து கொண்டு உள்ளே சென்று ஒரு விளக்கை ஏற்றி வைத்துவிட்டு படுத்தோம். சித்தப்பா களைப்பில் உடனே உறங்கிவிட்டார். குறட்டை சத்தம் வந்தது. ஆனால் எனக்கு உறக்கம் பிடிக்க வில்லை. அப்படியே படுத்து இருக்கும் போது வாசலில் ஓர் சத்தம் ஈரத்துணியோடு நடந்து வந்தால் ஒரு மாதிரி சரக் சரக் என சத்தம் வருமே அந்த மாதிரி ஒரு சத்தம். அதோடு சலங்கை ஒலி! இரண்டும் சேர்ந்து ஒலிக்க நான் காதைத் தீட்டிக் கொண்டேன். இருக்க இருக்க அந்த சத்தம் அதிகமானது. ஒரு இரண்டு நிமிடம் கழிந்ததும் அந்த சத்தத்துடன் உடுக்கை ஒலியும் சேர்ந்து கொண்டது.


    என் நெஞ்சு படக் படக் என அடித்துக் கொண்டது. மின்சாரம் இல்லாததால் கதவைத்திறந்து வெளியே வர அச்சமாக இருந்தது. சித்தப்பாவை எழுப்பலாம் என்றால் அசந்து தூங்கிக் கொண்டிருந்தார்.விடியற்காலையில் எழுந்திருக்க வேண்டும் அவர். அவரது தூக்கம் கெட்டுவிடும். என்ன நடந்தாலும் நடக்கட்டும்! கதவைத் திறக்க வேண்டாம் என்று முடிவு செய்து கொண்டு அப்படியே படுத்து இருந்தேன். சுமார் அரை மணி நேரம் அந்த உடுக்கை ஒலியும் சதங்கை சப்தமும் கேட்டு கொண்டிருந்து பின்னர் படிப்படியாக தேய்ந்து அடங்கிப் போனது.

     நானும் அப்படியே உறங்கிப் போனேன். மறுநாள் வழக்கம் போல எழுந்து பணிகளை முடித்தேன். எங்கள் வீட்டு வாசலில்தான் சிவன் கோவிலும் இருக்கிறது. எங்களுடையது தெற்கு நோக்கிய வீடு. சிவன் கோயில் கிழக்கு நோக்கி இருக்கும். அருகருகே இருப்பதால் சிவன் கோயில் வாசலில் கேட்ட சத்தம் அது என்று யூகித்தேன். அப்புறம் பூஜையில் உட்கார்ந்து என் அப்பா சொன்னது இது. இந்த கோவிலில் ஒரு முனீஸ்வரன் வந்து வழிபட்டு போயுள்ளது. பவுர்ணமி, பிரதோஷம் போன்ற சமயங்களில் அது ஈசனை வழிபட்டு செல்லும். அது வழிபட்டதுதான் உனக்கு காதில் ஒலித்துள்ளது என்றார். அடடா! முனீஸ்வரனை தரிசனம் செய்யாமல் விட்டுவிட்டோமே என்று நினைத்துக் கொண்டேன் நான்.

    இன்னும் நிறைய இருக்கிறது! மற்றுமொரு சந்தர்ப்பத்தில் பகிர்கிறேன்! நன்றி!


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!




தோஷமும் சந்தோஷமும்! படிச்சதில் பிடிச்சவை!

$
0
0
கலைவாணர்என்.எஸ்.கிருஷ்ணன்ஒருநாடகத்தில்வித்வான்வேடத்தில்தோன்றினார். 

வித்வானுடையமனைவியாகவந்தநடிகைஅவரைக்கொஞ்சம்திண்டாடவிடவேண்டும்என்றுஎண்ணி,""ஏன்னா, நீங்களும்பலராஜாக்கள்கிட்டேசன்மானம், சால்வையெல்லாம்வாங்கிண்டுவந்துட்டேள். பெரியவித்துவான்னுபேரும்வந்துடுத்து.

ரொம்பநாளாஎனக்குஒருசந்தேகம்.

"
தோஷம்" என்கிறவார்த்தைக்கும், "சந்தோஷம்" என்கிறவார்த்தைக்கும்என்னவித்தியாசம்? சொல்லுங்கோ! பார்க்கலாம்!'' என்றாள்.

ஒருநிமிஷம்யோசித்தார்என்.எஸ்.கே. ""அடியே, நீகேட்டஇந்தக்கேள்விக்குவியாக்கியானம்இல்லாமல்வித்தியாசத்தைச்சொல்லமுடியாது. 

கவனமாய்க்கேள்! 

உன்னைநானாகக்கிணற்றிலேபிடிச்சுத்தள்ளினால்அது "தோஷம்"! 

நீயாகவிழுந்துவிட்டாலோஎனக்கு "சந்தோஷம்"! சரிதானா?'' என்றார். 

கொட்டகையில்எழுந்தசிரிப்பொலிஅடங்கவெகுநேரமாயிற்று.


ஓரிடத்தில்ஒருஇந்தியர், ரஷ்யர், அமெரிக்கர்மூவரும்கூடி, இறைவனைபிரார்த்தித்தனர். கடவுள்தோன்றினார்.

ரஷ்யர், “ரஷ்யாஎப்போதுமுன்னேறும்?’ என்றுகேட்டார்.
இன்னும் 50 ஆண்டுஆகும்என்றார்கடவுள். “அதைப்
பார்க்கநான்இருக்கமாட்டேனேஎன்றுகூறிஅழுதார்,
ரஷ்யர்.

அடுத்து, அமெரிக்கரும்அவ்வாறேகேட்க, கடவுள்,
இன்னும் 50 ஆண்டுஆகும்என்றார்.
அமெரிக்கர்அழுதுகொண்டே, “அவ்வளவுகாலம்வாழ்ந்துநான்
அதைப்பார்க்கமுடியாதே!’ என்றார்.

கடைசியாகஇந்தியர், “எங்கள்இந்தியாஎப்போதுமுன்னேறும்?’
என்றுகேட்டதுதான்தாமதம்,
கடவுள்அழுதுகொண்டே,
ம்ம்...ம்ம்ம்....“அதைப்பார்க்கநான்இருக்கமாட்டேனே…’ என்றார்.
                                                  ஒருகாலேஜ்லபசங்கபொண்ணுங்கஹாஸ்டலுக்குள்ளஅடிக்கடிபோறாங்கன்னுநிறையகம்ப்ளைன்ட்.

அதுக்குஸ்ட்ரிக்ட்டாநடவடிக்கைஎடுக்கமுடிவுபண்ணிஅதைசொல்லபிரின்ஸிபால்ஒருகிளாஸ்க்குள்ளபோனாரு.

மாணவர்கள்எல்லாரும்அமைதியாயிட்டாங்க,"
நீங்கலேடீஸ்ஹாஸ்டலுக்குள்ளஅடிக்கடிபோறதாகம்ப்ளைன்ட்வந்திருக்குஇனியாராவதுஅப்படிநுழையறதுகண்டுபிடிக்கப்பட்டா
500
ரூபாஃபைன்" அப்டின்னுட்டுநிறுத்தினார்.

பசங்களுக்குள்ளபரபரன்னுசத்தம்,

"
இரண்டாவதுதடவபோறதுதெரிஞ்சா 1000 ரூபாஅபராதம்"
லேசாபசங்களுக்குள்ளமுணுமுணுப்புவந்தது

ரியாக்ஷன்லதிருப்தியானபிரின்ஸிபால்திரும்பகடுமையானகுரல்லசொன்னார் "அதையும்மீறிதிரும்பமாட்டினா 2000 ரூபாகட்டணும்"

இந்தமுறைசத்தமில்லாமல்ஒரே... அமைதி, பின்னாலஇருந்துஒருபையன்மட்டும்கேட்டான்,

"
ஸீஸன்பாஸ்எவ்வளவுஸார்?"

நன்றி: ரிலாக்ஸ் ப்ளிஸ் முகநூல் பக்கம்.                                                        தங்களின் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

கேதார்நாத் சீர்க்குலைவிற்கு மனிதனே காரணம்:விஞ்ஞானிகள் பகீர் தகவல்

$
0
0
வட இந்தியாவில் குறிப்பாக ஜார்க்கண்டின் இமயலையை ஒட்டிய இந்துக்களின் புனித யாத்திரை இயற்கை ஏற்படுத்தி உள்ள சீர்குலைவுக்கும், த வெள்ள பேரழிவிற்கு காரணம் இயற்கை மட்டுமல்ல மனிதர்களாகிய நாமும் தான் விஞ்ஞானிகள் அதி்ரச்சி தகவல் வெளியிட்டுள்ளனர். . 
இயற்கை பேரழிவு
உத்தர்காண்ட் மாநிலத்தில் யாத்திரைக்குப் போன சுமார் 60 ஆயிரம் பேர் கேதர்நாத்துக்கும் ருத்பிரயாக்குக்கும் நடுவில் சிக்கிக் கொண்டிருப்பதாக செயற்கைக் கோள் படங்கள் தெரிவிக்கின்றன. அதே செயற்கைக் கோள் புகைப்படங்கள் சில ஒப்பீடுகளையும் நமக்கு அம்பலப்படுத்துகின்றன. 1980களில் கேதார்நாத் கோயில் அருகே சில கட்டிட்டங்கள் மட்டும்தான் இருந்தன. இப்போது இமயமலையின் உச்சியான கேதர்நாத்தையே ஒரு நகரமாக உருவாக்கி உள்ளனர். இது தொடர்பாக இஸ்ரோ அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகி உள்ளது. அவர் கூறியிருப்பதாவது : 
பனி மலைஉருகியது
கேதர்நாத் கோயிலை ஒட்டி ஓடுகிற மந்தாகினி ஆற்றின் போக்கை கடந்த பல ஆண்டுகளாக திசை திருப்பிவிட்டதன் விளைவுதான் இந்தப் பேரழிவு; கோயிலின் பின்புறம் இருக்கும் கேதர் டோம் எனப்படும் பனிச்சிகரம் உடைந்து கோயிலில் இருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சர்பால் ஏரியில் மூழ்கி உள்ளது; அந்த பனிச்சிகரம் உருகி பனிச்சுனாமியாக உருவெடுத்து சர்பால் ஏரியையும் அதை ஒட்டிய மந்தாகினி ஆற்றிலும் பேரலைகளை உருவாக்கியதாலேயே இந்த கடும் வெள்ளப் பெக்கு ஏற்பட்டுள்ளது; இமயமலையில் ஓடுகிற மந்தாகினி ஆறு, அலக்நந்தா, பகீரதி போன்றவைகள் அனைத்தும் இணைந்துதான் கங்கையாக, யமுனையாக சமவெளிக்கு ஓடி வருகிறது. இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
மீண்டும் புனித யாத்திரை எப்போது
தற்போது ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் கேதார்நாத் கோயிலைத் தவிர சுற்றி உள்ள அனைத்து பகுதிகளை வாரி எடுத்து சுத்தம் செய்தாள் இயற்கை அன்னை. இந்த பேரழிவு காரணமாக இன்னும் ஓராண்டுக்கு கேதார்நாத்திற்கு யாத்ரீகர்கள் யாரும் வர வேண்டாம் என உத்தர்கண்ட் முதல்வர் விஜய் பகுகுனா உத்தரவிட்டுள்ளார். இதனால் இந்துக்களின் புனிதப் பயணம் மீண்டும் எப்போது துவங்குமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. 
நீர்மின்திட்டத்திற்காக ஆறுகள் ஆக்கிரமிப்பு
கங்கை, யமுனையின் துணையாறுகளின் போக்கை மாற்றி அங்கு 70 நீர் மின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்காக 20 கி.மீ., தூரத்திற்கு 2 சுரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளது. நதிகளின் திசைகள் மாற்றப்பட்டுள்ளதால் அதனை சுற்றி உள்ள நிலப்பகுதிகளும நீரில் மூழ்கி வருகின்றன. அதுமட்டுமின்றி சமீப காலமாக இமயமலைக்கு யாத்திரை செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும் இயற்கை சீர்குலைக்கப்பட்டுள்ளது. இயற்கையை அழிக்கும் மனித இனத்தை இயற்கை அழிக்க துவங்க உள்ளது என்றால் அது மிகையாகாது.

நன்றி: தினமலர்

அமானுஷ்ய அனுபவங்கள்! பகுதி 2

$
0
0
அமானுஷ்ய அனுபவங்கள்!




அமானுஷ்யங்கள் அனுபவிப்பவருக்குத்தான் புரியும்! என்னுடைய வாழ்க்கையில் இந்த அமானுஷ்யங்கள் நிறையவே நடந்து எனக்கு நல்லதும் நடந்து இருக்கிறது. எங்கள் வீட்டிற்கு அருகே திருவாலீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. விழித்தெழுந்தாலே ஆலய தரிசனம்தான். இந்த ஆலயம் ஒரு இருபது ஆண்டுகளுக்கு முன் புதர் மண்டி உள்ளே நுழைய முடியாதபடி இருக்கும். கார்த்திகை மாதத்தில் ஐயப்பமாலை போட்டுக் கொள்பவர்கள் இங்கு வந்து வழிபடுவார்கள். அப்போது மட்டும் ஆலயத்தை சுத்தம் செய்வார்கள். அவர்களின் ஒண்றரை மாத வழிபாட்டுக்கு பின்னர் மீண்டும் கோயிலில் புதர் மண்டிவிடும்.

     என் அப்பாதான் கோயில் குருக்கள். பிரதோஷ வழிபாடு எதுவும் கிடையாது. எங்களுக்கு வருமானமும் கிடையாது என்ற சூழல்.இரவுப் பொழுதில் கோயிலில் நுழையவே பயமாய் இருக்கும். ஆனாலும் பூஜையை விடாமல் செய்தோம். பக்தர்கள் வருகிறார்களோ இல்லையோ காலையில் பூஜையும் தீபமும் ஏற்றி வழிபடுவோம். அந்த சமயத்தில் நான் ப்ளஸ்டூ முடித்து இருந்தேன். காலை மாலை இருவேளையும் கோயில் பூஜை செய்ய ஆரம்பித்தேன். இப்படி ஒரு மாதம் கடந்திருக்கும். ஒரு நாள் இரவில் நான் என் அறையில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தேன். திடீரென விழிப்பு வந்தது. முழித்தேன். அறைவாசலில் யாரோ நிற்பது போலத்தோன்றியது. அரைகுறை தூக்கத்தில் இருந்த நான் என் அப்பாதான் போல என்று நினைத்துக் கொண்டு அப்பா! என்று குரல் கொடுத்தேன். பதில் இல்லை! மீண்டும் குரல் கொடுக்க அந்த உருவம் மறைந்துவிட்டது. பார்த்தால் அப்பா ஹாலில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார். எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை.

       மறுநாள் என் அப்பாவிடம் விசயத்தை கூறினேன். இரவில் வந்தது யார்? அது உண்மையா இல்லை என் பிரமையா என்றேன். அப்பா பூஜையில் அமரும் போது பார்த்து கூறுவதாய் சொன்னார். பின்னர் கூறினார் அது நம் சுவாமிதான். நீ தினமும் பக்தியுடன் பூஜை செய்வதால் உனக்கு காட்சி தந்துள்ளார் என்று. என் உடல் சிலிர்த்தது. முன்பை விட சிரத்தையுடன் பூஜை செய்தேன். மீண்டும் காட்சி கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் இதுவரை கிடைக்கவில்லை! எதிர்பார்த்து செய்தால் எதுவும் கிடைக்காது என்று உணர்ந்து கொண்டேன். இன்றும் விடாமல் வாலீஸ்வரரை பூஜித்து வருகிறேன்.

      இதே ஆலயத்தில் வற்றாத கிணறு ஒன்று உண்டு. இப்போது எங்கள் ஊரில் தண்ணீர் பஞ்சம் இல்லை. 24 மணி நேரமும் பஞ்சாயத்து குழாயில் தண்ணீர் வருகிறது. ஆனால் இருபது வருடங்கள் முன்னோக்கி சென்றோம் என்றால் சென்னைக்கு குடிநீர் வழங்கி கொண்டிருந்த முக்கிய நீர் ஆதார கிராமமான எங்கள்  கிராமத்தில் அடிக்கடி தண்ணீர் பிரச்சனை விரித்தாடும். பஞ்சாயத்து குழாயில் நீர் வராது. விவசாய பம்புக்களில் நீர் பிடித்து செல்வார்கள். சில சமயம் மின்வெட்டு பிரச்சனையில் விவசாய பம்புகள் இயங்காத போது வாலீஸ்வரர் கோயிலுக்குத்தான் நீர் பிடிக்க வருவார்கள் மக்கள். இங்குள்ள கிணறு வற்றாத கிணறு. இரைக்க இரைக்க நீர் சுரந்து கொண்டிருக்கும், எங்கள் வீட்டினர் இந்த நீரைத்தான் அப்போது குடிக்கவும் ஏனைய உபயோகத்திற்கும் பயன்படுத்திக் கொண்டு இருந்தோம்.

       
அப்படி ஒருநாள் குழாயில் நீர் வராத சமயம். நாங்கள் ஊரில் இல்லாத சமயம் இரு பெண்மணிகள் கோயிலுக்கு நீர் பிடித்து செல்ல வந்திருக்கிறார்கள் மாலைப்பொழுது மங்கிக் கொண்டிருந்த வேளையில் வந்த போது.கோயிலினுள் நுழைந்திருக்கிறார்கள். கிணற்றில் நீர் இருந்தாலும் அள்ள வாளியும் கயிறும் இல்லை. சுற்றும் முற்றும் பார்த்து இருக்கிறார்கள். கோயில் மண்டபத்தில் யாரோ அமர்ந்து இருப்பது போல் தெரியவே என் அப்பாதான் என்று நினைத்து சாமி! கொஞ்சம் பக்கெட்டும் கயிறும் தாங்கலேன்! என்று விளித்துள்ளனர். அந்த உருவம் திரும்பி பார்த்ததும் இவர்கள் மிரண்டு போய் விட்டனர். முகம் நிறைய விபூதி அணிந்து இருந்த அந்த உருவம் மறைந்துவிட்டிருக்கிறது. விட்டால் போதும் என்று அலறிஅடித்து சென்றுவிட்டனர்.


     இத்தகைய கோயிலில்தான் என்னுடைய டியுசன் வகுப்புகள் நடந்தன. படித்துவிட்டு வேலையில்லாமல் இருந்த நான் டியுசன் எடுக்க ஆரம்பித்து கோயில் மண்டபத்தில் வைத்து டியுசன் எடுத்தேன். நிறைய மாணவர்கள் சேர்ந்தனர். இந்த சமயத்தில் ஒரு எஸ். டி. டி பூத்தும் பஞ்செட்டியில் ஆரம்பித்தேன். ஆனால் எஸ்.டி.டி பூத்தை விட டியுசன் தொழில் எனக்கு பிடித்து இருந்தது. ஒருநாள் எஸ்டிடி பூத்திற்கு  அப்பாவை அனுப்பிவிட்டு நான் டியுசன் எடுத்துக் கொண்டிருந்தேன். மாலை நேரம் மணி ஆறைக் கடந்த சமயம்.


    பள்ளிவிட்டதும் டியுசனுக்கு 5 மணிக்கெல்லாம் மாணவர்கள் வந்துவிட வேண்டும். வராதவர்களுக்கு பனிஷ்மெண்ட் உண்டு. அன்று நிறைய பேர் லேட்டாக வந்தார்கள். எனக்கு கோபம். பள்ளியில் கிரவுண்டை சுற்றவிடுவார்கள். நாம் என்ன செய்யலாம் என்று யோசித்தேன். சரி இந்த கோயிலை ஒரு பதினோரு முறை சுற்றி வாருங்கள் என்று உத்திரவிட்டேன். என்னுடைய தண்டனைகள் இப்படித்தான் இருக்கும். தோப்புகரணம் போடச்செய்தல், தவளை ஓட்டம், ஓட்டப்பயிற்சி இப்படி! இது உடலுக்கும் ஒருவகை உடல் பயிற்சியாக அமையும் அன்றோ!  பொழுது இருட்டிய வேளையில் சுற்றிவர ஆரம்பித்தார்கள் மாணவர்கள். அதில் ஆறாம் வகுப்பு மாணவன் ஒருவன் சுற்றி வருகையில் அழுது கொண்டே வந்தான். ஏண்டா! அழறே! என்று கேட்டேன். சார்! பயம்மா இருக்கு சார்! கோயில் பின்னாலே மரத்து மேல என்னமோ இருக்குது சார் ! என்னையோ உத்துப் பாக்குது! பயம்மா இருக்குது என்றான். என்னடா உளற்ரே! என்றேன். இல்ல சார்! நிஜமாத்தான் சார்! எனக்கு பயம்மா இருக்குது சார்! என்று அவன் திக்கி திணறி சொல்லி முடித்தான்.

   வாடா! போய் பார்க்கலாம்!

   இல்ல சார்! நான் வரலை! அதான் நான் கூட இருக்கேன் இல்ல! வா! அவனைக் கட்டாயப் படுத்தி அழைத்து சென்றேன்.

  எங்கடா இங்க யாரும் இல்லையே! நீ எதை எங்க பார்த்தே! என்றேன். இங்கதான் சார் இந்த மரத்து மேலதான் சார்! ரெண்டு கண்ணு என்னையே உத்து பார்த்தது என்றான் ஒரு மரத்தை காட்டி! அங்கு யாரும் இல்லை! டார்ச் அடித்து பார்த்தேன் எதுவும் தென்படவில்லை! சரி போங்கடா! என்று அவர்களை அனுப்பி விட்டேன். அனைவரும் பயந்து போய் இருந்தனர். சுவாமி விபூதி அணிவித்து சீக்கிரமாகவே வீட்டிற்கு அனுப்பி விட்டேன். இரவு அப்பா வந்ததும் நடந்ததை சொன்னேன். சரி பார்ப்போம் என்றார்.

     அடுத்த நாள் பூஜையில் பார்த்த போது அந்த பையன் பார்த்தது உண்மைதான் என்று தெரிந்தது. அந்த பையன் பார்த்த உருவம் எங்களோடு பழகி விளையாடி திடீரென இறந்து போன எங்கள் நண்பன் ஒருவன். அவனது ஆவி விளையாடிய பழகிய இடத்திற்கு வந்திருக்கிறது. பசங்களுடன் கூட ஓடியாடி இருக்கிறது. களைப்பில் மரத்தில் அமர்ந்து இருக்கிறது. அதுதான் அவன் கண்களில் தென்பட்டு இருக்கிறது.  இதில் ஒரு நம்பிக்கை அடிபட்டு போனது ஆவிகள் கோயிலுக்குள் செல்லாது என்பது நம்பிக்கை. அந்த நம்பிக்கை இந்த விசயத்தில் பொய்த்து போனது. தீய ஆவிகள் வேண்டுமானால் இப்படி கோயிலுக்கு வர முடியாமல் இருக்கலாம். மற்றவை இப்படி சுற்றி வரும் என்று என் அப்பா சொன்னார்.

      இந்த கோயிலிலேயே இன்னும் சில அனுபவங்கள் நிகழ்ந்தன! அதை பிறகு பார்க்கலாம்! நன்றி!



லாராவுக்கு பிடித்த கங்குலியும்! இஷாந்துக்கு பிடித்த தோனியும்!

$
0
0

""கங்குலிதான்எனக்குபிடித்தஇந்தியகேப்டன்,'' என, பிரையன்லாராதெரிவித்தார்.


வெஸ்ட்இண்டீஸ்அணியின்"பேட்டிங்ஜீனியஸ்' பிரையன்லாரா, 44. கடந்த 2007ல்ஓய்வுபெற்றார். நேற்றுமும்பையில்நடந்ததனியார்நிகழ்ச்சிஒன்றில்பங்கேற்றலாராகூறியது: இந்தியகேப்டன்களில்சவுரவ்கங்குலிதான்எனக்குபிடித்தவீரர். ஆஸ்திரேலியாவுக்குஎதிராக, அதன்சொந்தமண்ணில்நடந்தபோட்டியில், இவரது"கேப்டன்ஷிப்' பிரம்மிப்பாகஇருந்தது. இவர்மீதுபெரியமரியாதைவைத்துள்ளேன்.

கடந்த 1983ல்நடந்தஇந்தியாவுக்குஎதிரானஉலககோப்பைபைனலில், வெஸ்ட்இண்டீஸ்அணிஎளிதாகவெற்றிபெற்றுகோப்பைவென்றுவிடும்எனநினைத்துபோட்டியைபார்க்காமல்விளையாடசென்றுவிட்டேன். ஆனால்வீடுதிரும்பியதும்இந்தியஅணிவெற்றிபெற்றதைஅறிந்துஆச்சரியம்அடைந்தேன். இத்தொடரில்இந்தியஅணிகோப்பைவெல்லகேப்டன்கபில்தேவின்பங்களிப்புமுக்கியபங்குவகித்தது.

இந்திய "மாஸ்டர்பேட்ஸ்மேன்' சச்சின், எனதுமிகச்சிறந்தநண்பர். இவர், கிரிக்கெட்டுக்காகசெய்ததை, வேறுஎவராலும்திரும்பசெய்யமுடியாது. கிரிக்கெட்அரங்கில்இவரதுபங்களிப்பைஅளவிடமுடியாது.

தற்போதையஇந்தியகேப்டன்தோனிக்குஎதிராகவிளையாடியதுகிடையாது. எனவேஇவரைபற்றி, பிரிமியர்கிரிக்கெட்தொடரில்சென்னைஅணிக்காகவிளையாடியவெஸ்ட்இண்டீஸ்வீரர்டுவைன்பிராவோவிடம்கேட்டுத்தெரிந்துகொண்டேன். "சகவீரர்களின்ஆலோசனைமற்றும்கருத்துகளைகேட்பதுதோனியின்மிகப்பெரியபலம்" என்றார்.

இளம்வயதில், எனதுசகோதரர்தென்னைமட்டையில் "பேட்' செய்துகொடுத்தார். குடும்பத்தினரும், என்னைகிரிக்கெட்வீரராகவரவிரும்பினர். இதற்காகஎனதுதந்தைக்குநன்றி. பள்ளிப்பருவத்தில்நான்எங்குகிரிக்கெட்விளையாடசென்றாலும், என்னுடன்வந்துபோட்டியைகாண்பார். ஆனால்முதன்முதலில்வெஸ்ட்இண்டீசுக்காகவிளையாடியபோது, அவர்உயிரோடுஇல்லை. நான்விளையாடியசர்வதேசபோட்டிகளைகாணாவிட்டாலும், சிறந்தவெஸ்ட்இண்டீஸ்வீரராகமாற, எனதுதந்தைமுக்கியகாரணமாகஇருந்தார்.

இவ்வாறுலாராகூறினார்.


""அனைத்துபோட்டிகளிலும்சிறப்பாகபந்துவீசநான்ஒன்றும்கடவுள்இல்லை. வேகப்பந்துவீச்சுபிரிவுக்குநான்தான்தலைவன்எனசொல்லமாட்டேன்,'' என, இஷாந்த்சர்மாதெரிவித்தார்.

இந்தியஅணியின்புயல்வேகப்பந்துவீச்சாளர்இஷாந்த்சர்மா. தற்போதுஇங்கிலாந்தில்நடக்கும்சாம்பியன்ஸ்டிராபிதொடரில்அசத்துகிறார். இலங்கைக்குஎதிரானஅரையிறுதியில் 3 விக்கெட்வீழ்த்தியஇவர், அணியைபைனலுக்குஅழைத்துச்சென்றார். நாளைநடக்கும்இங்கிலாந்துக்குஎதிரானபைனலில்இவரதுஅபாரசெயல்பாடுதொடரும்பட்சத்தில்இந்தியஅணி, முதல்முறையாககோப்பைகைப்பற்றலாம்.

இஷாந்த்சர்மாகூறியது:


 இலங்கைக்குஎதிரானபோட்டியில்சிறப்பாகபந்துவீசியதுமகிழ்ச்சிஅளிக்கிறது. அன்றையதினம்சரியானஇடத்தில்துல்லியமாகபந்துவீசினேன். இதேபோலஅனைத்துபோட்டிகளிலும்விக்கெட்வீழ்த்த, நான்ஒன்றும்கடவுள்இல்லை. விக்கெட்கைப்பற்றசகவீரர்கள், பவுலிங்பயிற்சியாளர்உதவினர்

அணியின்வேகப்பந்துவீச்சுபிரிவுக்குநான்தான்தலைவன்எனசொல்லமாட்டேன். நான், புவனேஷ்குமார், உமேஷ்யாதவ்ஆகியோர்இணைந்துசெயல்படுகிறோம். இதுஒருகூட்டுமுயற்சிதான்

தோனியின்ஆதரவு:

அணியில்மூன்றுவேகப்பந்துவீச்சாளர்கள்இருப்பதால், ஒவ்வொருவரும்தனிப்பட்டதிட்டமிடலுடன்களம்காண்கிறோம். ஒருவருக்கொருவர்உதவிபுரிகிறோம். இதுஒருஅணிக்குதேவையானது. பிரிமியர்கிரிக்கெட்தொடரில்விளையாடியஅனுபவமும்கைகொடுக்கிறது

கேப்டன்தோனிஎப்போதும்எனக்குஆதரவுஅளிப்பார். இவரைப்போலகேப்டன்கிடைத்ததுமகிழ்ச்சிஅளிக்கிறது. தற்போதுபவுலிங், பீல்டிங்கில்நல்லதிறமையுடன்உள்ளோம். பைனலில்இங்கிலாந்தைவெல்லஎந்தஒருசிறப்புதிட்டமும்இல்லை. தற்போதைய "பார்ம்' தொடர்ந்தால், எந்தவொருஅணியையும்வீழ்த்துவோம்.

இவ்வாறுஇஷாந்த்சர்மாகூறினார்.


 நன்றி: தினமலர்.

உங்களின் தமிழ் அறிவு எப்படி?! பகுதி 19

$
0
0
உங்களின் தமிழ் அறிவு எப்படி?! பகுதி 19


தமிழின் சுவையை கடந்த பதினெட்டு பகுதிகளாக பல்வேறு விதங்களில் அனுபவித்து வருகிறோம். இப்போது புழக்கத்தில் உள்ள சில ஊர்ப்பெயர்கள் கடவுள் பெயர்கள் தமிழ்மொழி போல இருந்தாலும் வடமொழிக் கலப்பில் இருக்கும். அப்படி சிலவற்றின் வடமொழிப்பெயரையும் அதற்குண்டான தூயதமிழ் பெயரையும் இந்த பகுதியில் பார்க்க இருக்கிறோம்.



  வடமொழி                                தமிழ் மொழி

1.ஸ்ரீரங்கம்                              திருவரங்கம்.

2.சிதம்பரம்                           திருச்சிற்றம்பலம்.

3.வேதாரண்யம்-                        திருமறைக்காடு.

4.விருத்தாசலம்                         திருமுதுகுன்றம், பழமலை

5.ஸ்ரீகாளஹஸ்தி                        காளகூடம்.

6.மீனாட்சி                            அங்கயற்கண்ணி

7.தர்மசம்வர்த்தினி-                     அறம்வளர்த்த நாயகி

8.ரௌத்திர துர்க்கை-                    எரிசினக் கொற்றவை.

9.பஞ்சநதீஸ்வரர்                         ஐயாறப்பர்.

10விருத்தகிரிஸ்வரர்                      பழமலை நாதர்

11. அஞ்சனாட்சி-                        மைவிழியம்மை

12.  நடராஜன்                         ஆடலரசன்.

13  வேதபுரிஸ்வரர்.                    திருமறை நாதர்.

14  மாத்ருபூதம்                        தாயுமானவர்

15   வண்மீகநாதர்                     புற்றிடம்கொண்டான்.


 இப்படி தமிழ் சொற்கள்  கடவுளருக்கும் ஊரிற்கும் உண்டு. காலப்போக்கில் அவை மறுவின.


   சில மரபு சொற்களை கீழே பார்ப்போம். இவை மரபாக தொன்று தொட்டி வழங்கி வருதலால் இப்பெயரை அடைந்தன.

    பலாப் பிஞ்சு-  பலாமூசு

    வாழைப்பிஞ்சு- வாழைக்கச்சல்

    முருங்கைப்பிஞ்சு-  முருங்கைசாடு

    அவரைப்பிஞ்சு-  அவரைப்பொட்டு

     மாம்பிஞ்சு        மாவடு

     இளம்தேங்காய்-    வழுக்கை

     முற்றிய தேங்காய்-      நெற்று.


இனி இலக்கிய சுவைக்கு போவோமா?

     தத்தித்தாதூதுதிதாதூதித்தத்துதி
துத்தித்துதைதிதுதைதத்தாதாதுதி
தித்தித்ததித்தித்ததாதெதுதித்தித்த
தெத்தாதோதித்தித்ததாது?

   இது என்ன? தா, தி என்று எழுத்துக்களை கோர்த்து  என்ன விளையாடுகிறீர்கள் என்று தானே நினைக்கிறீர்கள். இது கவி காளமேகத்தின் கவிதை விளையாட்டு. த என்ற எழுத்திலேயே பாடவேண்டும் என்று சவால் விட்டவருக்கு காளமேகம் பாடிய பாடல் இது. இதன் பொருள் என்ன?  பார்ப்போமா?

  பூக்களை மேயும் வண்டினம் குறித்து காளமேகம் இவ்வாறு பாடுகிறார். ஒவ்வொரு பூவாக தத்தி தாவி சென்று பூக்களில் உள்ள தாதுவான மகரந்தத்தை உண்ணும்  வண்டே! ஒரு பூவிலுள்ள தாதுவை உண்ட பின் தாவி அடுத்த பூக்களை நாடுகிறாய்!  நீ உண்ட தித்திப்பான தாதுக்களில் மிகவும் தித்தித்த தாது எது? என்று வண்டை கேள்வி கேட்கிறா காளமேகம்.

    அருமையாக இருக்கிறது அல்லவா?

படித்து தங்களின் கருத்துக்களை பின்னூட்டத்தில் பகிருங்கள்! அடுத்த பகுதியில் இன்னும் சிறப்பான தகவல்களுடன் சந்திப்போம்! நன்றி!

புகைப்பட ஹைக்கூ 34

$
0
0
புகைப்பட ஹைக்கூ



கல் மெத்தையில்

களைத்தவர்கள்

உறக்கம்!

 


உழைக்கும் இந்தியரின்

உறுதிமிக்க

படுக்கை!


ஓடிக் களைத்த ரயிலடியில்

உழைத்து களைத்தவர்கள்

படுக்கை!


கூடாரமானது

தொடர்வண்டி

கூலித்தொழிலாளர்கள்!

இருண்ட இந்தியா

உறங்குகிறது

தொடர்வண்டியடியில்!


தலையணையான

தண்டவாளம்!

தலையெழுத்தை தொலைத்த

தொழிலாளர்கள்!


ரயிலடியில் இடம்பிடித்தது

வறுமையின்

பிடி!


நிகழ்காலத்தை

தொலைத்து எதிர்காலத்தை தேடுகிறார்கள்

கூலித்தொழிலாளர்கள்!


வறட்சி தந்த

வீழ்ச்சி!

ரயிலடியில் தொழிலாளர்கள்!


 கல்லும் முள்ளும்

 கனவுக்கு எல்லை!

 கூலித்தொழிலாளர்கள்!


   புலம் பெயர்ந்தவர்களுக்கு

புகலிடமானது

ரயிலடி!


பொழுதெல்லாம் உழைத்தவர்கள்

பழுதான

ரயிலடியில்!


கற்குவியலில்

களைத்து உறங்குகிறார்கள்

உழைத்தவர்கள்!


கல்லாய் குத்தும் வாழ்க்கை

களைத்து போட்டது

படுக்கை!


 களைத்துப் படுத்தாலும்

 கவலையில் வரவில்லை!

 உறக்கம்!


 தண்டவாளமே தலையணை

 கல்லே மெத்தை!

 களைத்தவர்களை கலைக்கவில்லை உறக்கம்!


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!



புகைப்பட ஹைக்கூ 35

$
0
0
புகைப்பட ஹைக்கூ



  ஏழ்மை பீடித்தாலும்

  வீழவில்லை!

  தாம்பத்யம்!


 சுமையான துணை!

 சுளிக்கவில்லை முகம்!

படிக்கவேண்டும் படிப்பினை!


வலிநிறைந்த வாழ்க்கை!

சலிக்கவில்லை!

வாழ்க்கைத்துணை!


ஜடங்களுக்கு நடுவே

நடமாடும்

மனிதன்!


முடமானது கால்கள்மட்டுமே

திடமானது

வாழ்க்கை!


கைப்பிடித்த மனைவிக்கு

நம்பிக்கை ஊட்டும்

கணவன்!


குடும்பத்தினை சுமந்தவளை

கொஞ்ச நேரம் சுமக்கிறான்

கணவன்!


 கலியுகத்திலும் ஒரு

 கல் ஆகாத

 கணவன்!


  தளர்ச்சி வந்தாலும்

  வளர்ச்சி ஆனது

  தாம்பத்யம்!


  அன்பும் அறனும்

  உடைத்தது

  இல்வாழ்க்கை!


  ஊன்று கோலாய் கணவன்

  வென்று காட்டியது

  தாம்பத்யம்!




  தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

தளிர் கல்விநிலையமும் தளிர் அண்ணா ஆன கதையும்!

$
0
0
தளிர் கல்விநிலையமும் தளிர் அண்ணா ஆன கதையும்!

    சென்ற புதன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் என்னுடைய அமானுஷ்ய அனுபவங்களை பகிர்ந்து கொண்டேன். இன்று நான் பகிரப் போவது தளிர் அண்ணா ஆன கதையை! இந்த தளிர் அண்ணா விஷயம் ஏற்கனவே விவாதத்திற்கு வந்த ஒன்று.  என்னுடைய  நினைவுகளை பகிர்கையில் ஒருசமயம் நான் டியுசன் எடுத்த கதையை கூறுகிறேன் என்றும் சொல்லியிருந்தேன். இன்று என்ன பதிவு? என்று காலையில் யோசிக்கும் போது இதை பதிவிடலாமே என்று தோன்றியது. ஏனெனில் இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பின் மீண்டும் டியுசன் எடுக்கப் போகிறேன். இந்த சமயத்தில் பழைய நினைவுகளை கொஞ்சம் அசை போடலாம் என்று நினைக்கிறேன். பதிவு நீளமானால் இரண்டு மூன்று பகுதிகளாக பிரிந்து வரும். பொறுத்துக் கொள்ளுங்கள்.

        நான் ஏற்கனவே சொல்லியிருந்தபடி நேரு நண்பர்கள் நலச்சங்கம் என்று ஒரு சங்கம் எங்கள் ஊரில் நடத்தி வந்தோம். அதனுடைய பத்தாவது ஆண்டுவிழாவில் கலை நிகழ்ச்சி செய்ய சிறுவர் சிறுமியரை தேடிய போது ஊரில் டியுசன் எடுத்துக் கொண்டிருந்த ஒரு கைம்பெண் உதவினார். அவருடைய டியுசனில் இருந்து சிலரை தேர்வு செய்து கொண்டோம். அவர் ஐந்தாம் வகுப்புவரை மட்டுமே டியுசன் எடுத்துவந்தார். வயது கூட தேவைப்பட்ட சிலரை அணுகிய போது அவர்கள் இளைஞர் மன்ற டியுசனில் படிப்பதாக கூறினார்கள். ஆனால் அனுமதி ஏதும் கேட்க வேண்டாம். நாங்களே கேட்டுக் கொண்டு கலைநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதாக கூறிவிட்டார்கள். கலைநிகழ்ச்சிக்கான பணிகளில் மூழ்கி விட்டதால் இதை பெரியதாக நான் எடுத்துக் கொள்ளவில்லை. பாதி நாள் ரிகர்சல் முடிந்த பின் சிலர் ரிகர்சலுக்கு வரவில்லை. விசயம் என்னவென்றால் அவர்கள் இளைஞர் மன்ற டியுசனில் படித்துக் கொண்டிருந்தார்கள் அங்கு பாடம் எடுத்த ஒருவர் தனிப்பட்ட வெறுப்பினால் மாணவர்களை அனுப்பவில்லை. அதோடு விட்டிருந்தால் பரவாயில்லை. கூத்தாடிகள் என்றும் எங்கள் சங்கத்தையும் கேவலமாக பேசியுள்ளார். அப்போது இள ரத்தமான எனக்கு இது கோபம் தந்தது. அவர்கள் தடையையும் மீறி கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை அவர்கள் படிப்பு கெடாமல் இருக்க வேண்டும் என்ற நோக்கில் நாங்களும் டியுசன் எடுக்கிறேன் என்று அந்த ஆண்டுவிழாவில் தெரிவித்துவிட்டேன்.

        ஆனால் அப்போது யாரும் எங்கள் டியுசனுக்கு வரவில்லை! ஒரு நாலைந்து நபர்கள் வந்தார்கள். அவர்களும் இடையில் நின்றுவிட்டார்கள். நானும் இளைஞர் மன்றத்தினருடன் சமாதானமாகி அவர்கள் டியுசனில் ஒரு ஆசிரியராக சில வகுப்புக்களுக்கு பாடம் நடத்திக் கொண்டு இருந்தேன். இதற்கிடையில் ஐந்தாம் வகுப்பு வரை பாடம் நடத்திக் கொண்டு இருந்த அந்த விதவைப் பெண்மணி உடல் நலக் குறைவால் டியுசன் எடுப்பதை நிறுத்திவிட்டார். அங்கு படித்துக் கொண்டிருந்த மாணவர்களுடைய பெற்றோர்கள் என் தங்கையிடம் நீ படித்துவிட்டு சும்மாத்தானே இருக்கே! இந்த பசங்களுக்கு டியுசன் எடேன் என்று கேட்க என் தங்கையும் ஒத்துக் கொண்டார். இப்படி ஒரு பத்து பேர் என் தங்கையிடம் சேர்ந்தார்கள். ஐந்தாம் வகுப்புவரை மட்டுமே அப்போது எடுத்தோம். தங்கைக்கு உதவியாக நான் சில சமயம் பாடம் எடுப்பேன். இந்த சமயத்தில் இளைஞர் மன்றத்தினரின் டியுசனும் நின்று போனது.

      அங்கு பாடம் நடத்தியவர்கள் வேலை கிடைத்து போய்விட அங்கு படித்தவர்களும் என் தங்கையின்
 இது திருவாலீஸ்வரர் கோயில் பிரகாரம் இங்குதான் டியுசன் வகுப்புக்கள் நடந்தன.
டியுசனுக்கு வந்தார்கள். இப்போது எட்டாம் வகுப்புவரை என டியுசன் உயர்வு பெற்றது. எல்லோருக்கும் கட்டணம் பத்து ரூபாய் மட்டுமே. இப்படி ஒரு இரண்டு மாதம் சென்றதும் சில பத்தாம் வகுப்பு மாணவர்களும் சேர்ந்து கொண்டார்கள் அவர்களுக்கு கட்டணம் இருபது ரூபாய் வசூலித்தோம்.  பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு நானும் எனது நண்பனும் பாடம் எடுப்போம். மொத்தம் மாதம் ஒரு 300 ரூபாய் வசூல் ஆகும் அதில் ஒரு பகுதியை என் நண்பனுக்கு தந்துவிட்டு மீதியை நாங்கள் எடுத்துக் கொள்வோம். அந்த வருட இறுதியில் நண்பனும் நின்று விட்டான். பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்தன. எங்களிடம் ஆறு பத்தாம் வகுப்பு மாணவர்கள் படித்தார்கள் அதில் இருவர் இடையில் நின்றுவிட மீதி நான்கு பேரில்  மூவர் பாஸ். ஒருவர் மட்டும் ஒரு சப்ஜெக்டில் பெயில்.

      பரவாயில்லை எதோ ஜெயித்துவிட்டோம்! என்று எண்ணி  வீதிக்கு சென்றால் அங்கே பெயிலான ஒரு பெண்ணின் அம்மா எதிரில் வந்தார். மாசம் இருபது ரூபா கொடுத்து டியுசன் அனுப்பினேன்! அப்படியும் என் பொண்ணு பெயில் ஆயிருச்சு! என்று சொன்னார் அவர். எனக்கு ஏதோ செவிட்டில் அறைந்த மாதிரி இருந்தது. பள்ளியில் ஏறக்குறைய ஆறு மணி நேரம் படித்து வருகிறார்கள் டியுசனிலோ ஒரு மணி அல்லது ஒன்றரை மணிநேரம் மட்டுமே படிப்பு! பள்ளியை குறை சொல்லாமல் நம்மை குறை சொல்கிறார்களே என்று ஓர் ஆதங்கம். ஆனாலும் காசு வாங்கி கற்றுத்தருகிறோம். பெயிலானால் குறை சொல்லத்தான் செய்வார்கள் என்று மனதை தேற்றிக் கொண்டேன்.

    அடுத்த ஆண்டும் இந்த மூவர் பாஸ் செய்தமையால் கூடுதலான பிள்ளைகள் சேர்ந்தார்கள். அப்போதுதான் டியுசனுக்கு பெயர் சூட்டினேன். டியுசன் நிர்வாகம் என் தங்கையின் கையில் இருந்து என்னிடம் வந்தது. அப்போது இளந்தளிர் என்ற கையெழுத்துப் பத்திரிக்கை நடத்திக் கொண்டிருந்தேன். அத்துடன் இளந்தளிர் என்ற வாடகை நூல் நிலையமும் வைத்திருந்தேன். அதனால் இளந்தளிர் கல்வி நிலையம் என்று பெயர் வைத்தேன். அப்போது கணக்குப் பாடம் நான் சொல்லித்தர மாட்டேன். என்னுடைய நண்பர்கள் சிலர் சொல்லித்தருவார்கள். மற்ற பாடங்களை நானும் எனது தங்கைகளும் கவனித்துக் கொண்டோம். டியுசன் மாணவர்கள் என்னை சார்! என்று அழைக்காமல் அண்ணா என்று விளித்தனர். இதனால் கையெழுத்துப்பத்திரிக்கையில் நான் எழுதும் போது தளிர் அண்ணா என்று புனைப் பெயர் சூட்டிக் கொண்டேன். ஆனால் இந்த வருடமும் எனக்கு தோல்விதான் கிட்டியதும் மொத்த எட்டுபேர் படித்ததில் ஏழு பேர் தோற்றுப் போனார்கள் ஒருவர்தான் ஜெயித்தார். இது எனக்கு முதலிலேயே தெரியும். இவர்கள் பாஸ் செய்ய மாட்டார்கள் என்று அவர்களின் படிப்பு லட்சணத்தை வைத்தே உறுதி செய்தேன். ஆனால் அவர்களை படிக்கும் படி தயார்செய்ய முடியவில்லை. போச்சு! அவ்வளவுதான் இனி யாரும் நம்மிடம் பத்தாம் வகுப்பு சேர மாட்டார்கள் என்று நினைத்தேன்.

     ஆனால் மீண்டும் பத்து பேர் என்னிடம் பத்தாம் வகுப்புக்கு சேர்ந்தார்கள். என்மீது அவர்கள் நம்பிக்கை வைத்தமையால் எனக்கும் ஒரு நம்பிக்கை வந்தது. இந்த சமயத்தில் தான் நான் ஒரு எஸ்.டீ.டி பூத் மற்றும் பெட்டிக்கடையை பஞ்செட்டியில் துவக்கி இருந்தேன். எனக்கு அந்த தொழிலில் அவ்வளவு ஆர்வம் இல்லை. ஆனால் வீட்டினரின் நிர்பந்தத்தினால் அதை துவக்கி இருந்தேன். அதனால் டியுசனை கவனிக்க கொஞ்சம் சிரமமாக இருந்தது. என் தங்கைகள் எனக்கு கை கொடுத்தனர். அவர்கள் திறம்பட கவனித்துக் கொள்ள எங்கே குறை என்று கவனித்து அதை களைய ஆரம்பித்தேன். ஒவ்வொரு மாணவனிடமும் தனிப்பட்ட கவனம் செலுத்தி அவன் எந்த சப்ஜெக்டில் வீக் என்று கண்டறிந்து அதில் தனிப்பட்ட பயிற்சி கொடுக்க ஆரம்பித்தேன். எஸ்.டீ.டீ பூத் கவனித்துக் கொள்ள முதலில் என் தந்தையை அனுப்பினேன். பின்னர் அது சரிவராமையால் ஆள் வைத்துவிட்டு முழு நேரமும் டியுசனில் இறங்கினேன்.

       இந்த சமயத்தில் என் முதல் தங்கையின் திருமணம் வேறு. அதிலும் கவனம் செலுத்தவேண்டிய சூழல். கணக்கு பாடம் கசந்த எனக்கு டியுசன் அதை இனிமையாக்கியது. கைடு வாங்கி கணக்குப் போட்டுப் பார்த்து அதை எளிமையாக்கி மாணவர்களுக்கு கற்றுத்தர ஆரம்பித்தேன். இந்த விசயத்தில் நண்பர் மகேஷ் எனக்கு உறுதுணையாக இருந்தார். என்னைவிட வயதில் இளையவர். ஆனாலும் அப்போதுதான் படிப்பு முடித்திருந்தமையால் கணக்கு குறித்த சந்தேகங்களை அறிந்துகொள்ள அவரை நாடுவேன். அவரும் சளைக்காமல் சொல்லித்தருவார். இப்போது ஒரு பள்ளியில் ஆசிரியராக வேலை செய்யும் திரு சங்கரும் எங்கள் டியுசனில் கணக்கு ஆசிரியராக சிறப்பாக மாணவர்களுக்கு போதித்தார்.

     எது எப்படியோ கடுமையாக உழைத்தோம்! ஆனால் மாணவர்கள் உழைத்தால்தானே! அவர்கள் விளையாட்டாய் இருக்க தேர்வு வந்தது. பத்து மாணவர்களில் இருவர் இடையில் நிற்க  எட்டு பேர் எழுதினார்கள் ஐந்து பேர் பாஸ். இப்போது போல அப்போது இண்டர் நெட் கிடையாது. பேப்பரில் தேர்வு முடிவுகள் வெளியாகும். பொன்னேரி சென்று பேப்பரை வாங்கி தேர்வு முடிவை பார்க்கும் வரை மாணவர்களுக்கு அடித்துக் கொள்கிறதோ இல்லையோ எனக்கு நெஞ்சு திக்திக் என அடித்துக் கொள்ளும். ஐந்து பேர் பாஸ் அப்பாடா! என்று இருந்தது. இன்னும் சாதிக்க வேண்டும் என்ற வெறியும் பிறந்தது!


   அதற்காக என்ன செய்தேன்! என் வீட்டாரின் கடுமையான எதிர்ப்பையும் மீறி எஸ்டீடி பூத்தை மூடிவிட்டேன்! முழுவீச்சில் டியுசனில் குதித்தேன்!  வெற்றி பெற்ற கதையை அடுத்த பகுதிகளில் தொடர்கிறேன்! நன்றி!

"கை"விட்ட காங்கிரஸ்! நட்டாற்றில்தேமுதிக! கரையேர முடியாத கேப்டன்!

$
0
0
     "கை"விட்ட காங்கிரஸ்! நட்டாற்றில்தேமுதிக! கரையேர முடியாத கேப்டன்!



   ராஜ்யசபா சஸ்பென்ஸ் ஒரு வழியாக முடிவுக்கு வந்து விட்டது! எல்லோரும் நினைத்தது போல திமுகவிற்குத்தான் தன்னுடைய ஆதரவு என்று காங்கிரஸ் என்று கூறிவிட்டது. பாமக எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்று சொன்னாலும் கூட்டணி பேரம் படியாததுதான் காரணம் என்று தகவல்கள் கசிகின்றன. கடைசி நேரத்தில் திமுகவை ஆதரிக்க வாய்ப்பு உள்ளது. புதியதமிழகம், மமக போன்ற உதிரிக் கட்சிகள் ஆதரவுடன் ராஜ்யசபாவில் கனிமொழி அமரப் போவது உறுதியாகிவிட்டது.

     இப்போது பாவம் தேமுதிகவின் நிலை! கேப்டன் எதை நம்பி களத்தில் குதித்தார் என்றே தெரியவில்லை! சொந்த கட்சி எம்.எல்.ஏக்கள் ஏழுபேர் அம்மா விசுவாசிகளாக மாறியபின் மார்க்சிஸ்ட்கள் ஆதரவு இல்லை என்றான பின் எப்படி ஜெயிப்போம் என்று நினைத்தார் என்று புரியவில்லை! காங்கிரஸ் ஒருவேளை ஆதரித்து இருந்தாலும் இவரது நிலைமை கவலைக் குறியாகத்தான் இருந்தது. அதனால்தான் என்னமோ சுதிஷை களம் இறக்காமல் இளங்கோவனை இறக்கிவிட்டார்.

       இப்போது காங்கிரஸும் காலை வாரிவிட நட்டாற்றில் நிற்கிறார் கேப்டன். எப்போது எம்.எல்.ஏக்கள் அம்மா பாசம் காட்ட ஆரம்பித்துவிட்டார்களோ அப்போதே உஷாராக இருக்க வேண்டும் கேப்டன். சினிமாவும் அரசியலும் ஒன்று என்று நினைத்துவிட்டாரோ என்னமோ? அவரது பேச்சுக்களில் நிதானம் இல்லை! எம்.எல்.ஏக்கள், கட்சியினரை மதிப்பது இல்லை. சமீபத்தில் ஒரு கும்மிடி பூண்டி அருகே ஓர் இழவு வீட்டில் கூட தொண்டர்கள் மீது எரிந்து விழுந்துள்ளார். இது அரசியல் செய்வதற்கு நல்லது இல்லை.

      கண்கெட்டபிறகு சூரிய நமஸ்காரம் என்பது போல அம்மா கட்சிக்கு போன எம்.எல்.ஏக்களுக்கு இப்போது கடிதம் எழுதியுள்ளார். நமது கட்சிக்கு ஓட்டுப் போடுங்கள் என்று! கட்சி மறந்து சென்றவர்களை இந்த கடிதம் ஒன்றும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை! அவர்கள் அம்மா கட்சிக்குத்தான் எங்கள் ஓட்டு என்று அறிவித்து விட்டனர். இதே கேப்டன் அன்று தனித்து போட்டி என்றார். பின்னர் கடவுளிடம் மட்டுமே கூட்டு என்றார். இறுதியில் திமுகவுடன் பேரம் படியாத நிலையில் யாரை எதிர்த்து அரசியல் செய்தாரோ அவருடனேயே கூட்டணி வைத்தபோதே அவர் மீதான நம்பிக்கை குறைந்துபோய்விட்டது.

     அம்மாவுடன் கூட்டணி வைத்தால் பணிவுதான் முதல் அரிச்சுவடி! இது இவருக்கு சரிபட்டு வரவில்லை! முறித்துக் கொண்டார். நிறைய செலவு பண்ணி சம்பாதிக்க காத்திருந்த எம்.எல்.ஏக்கள் அம்மா பக்கம் சாய்ந்து காசு பார்க்க முடிவு செய்துவிட்டனர். ஆனால் பார்க்க முடியாது என்பது வேறுவிசயம். இந்த எம்.எல்.ஏக்கள் மாற்றுக் கட்சிக்கு சென்றனர் என்றபோதே விஜயகாந்த் அவர்களை எதிர்க்காமல் அரவணைத்து அவர்களின் குறை கேட்டு நடந்திருப்பாரேயானால் கட்சியாவது உடையாமல் இருந்திருக்கும். ஆனால் அவரது எடுத்தேன் கவிழ்த்தேன் தனமான அரசியலால் இன்று கட்சி உடைந்து சிதறிக் கிடக்கிறது.

     இருக்கும் சிலராவது வேறு கட்சிக்கு தாவாமல் இருக்க வேண்டுமானால் அவரது அணுகுமுறை மாறவேண்டியது அவசியம். சும்மா குறை பேசி கைதட்டல் பெறுவதை குறிக்கோளாக கொள்ளாமல் ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும். மக்களோடு மக்களாக கை கோர்த்து மக்கள் பிரச்சனைகளை குறித்து அறிந்து போராடவேண்டும். அதை செய்யாமல் எம்.எல்.ஏக்களின் விசுவாசத்தை அறியவே ராஜ்யசபா தேர்தலில் போட்டி என்றால் என்ன அர்த்தம். ஏற்கனவே ஏழுபேர் போன நிலையில் இருப்பவர்களையும் சந்தேகப்படுவது போல அல்லவா இருக்கிறது பேச்சு. இந்த பேச்சு அவர்களை காயப்படுத்தாதா?

     இன்றைய நிலையில் இருக்கும் 22 எம்.எல்.ஏக்களாவது அவருக்கு விசுவாசமாக இருந்து ஓட்டு போடுவார்களா என்பது சந்தேகம்தான். ஆனால் விசுவாசத்தை அறியத்தான் தேர்தல் என்ற அவரது ஸ்டேட்மெண்ட் அறியாமைத்தனத்தை தான் காட்டுகிறது. இதையே எங்களின் ஒற்றுமையை காட்டவே இந்த தேர்தலில் போட்டியிடுகிறேன்! கருத்து வேற்றுமைகளை மறந்து எங்கள் கட்சி உறுப்பினர்கள் எங்களுக்கே வாக்களிப்பார்கள்! திமுகவிற்கு ஓர் போட்டியாக நாங்கள் இருப்போம். என்று சொல்லியிருந்தார் என்றால் அவர்தான் கேப்டன்.

    ஆனால் தவறான ஸ்டேட்மெண்ட் விடுத்து இருப்பவர்களையும் காயப்படுத்திவிட்டு மற்றகட்சிகளையும் அரவணைக்க முடியாமல் ஒரு ஓட்டைக் கப்பலுக்கு கேப்டனாய் நட்டாற்றில் தவிக்கிறார் கேப்டன். இவர் கரையேறினால் அதிசயம்தான்!

   இன்றைய நிலையில் திமுகவின் பலம் முப்பத்தி இரண்டு  திமுக 23. புதியதமிழகம் 2 மமக 2 காங்கிரஸ் 5 பா.ம.கவும் ஆதரித்தால் 35 ஓட்டுகள் பெற்று கனிமொழி எம்.பி ஆகிவிடுவார். அப்படி ஆதரிக்காவிடினும் தேமுதிகவினைவிட கூடுதல் ஓட்டுகள் இருப்பதால் எம்.பி ஆகிவிடுவார்.

 தேமுதிகவின் பலம் 22. அதிருப்தி எம்.எல்.ஏ ஏழுபேர் வாக்களித்தாலும் 29 பேர்தான் வருகிறது. காங்கிரஸ் ஓட்டு கிடைத்தால் ஏதாவது அதிசயம் நிகழ்ந்திருக்கும்.. இதனால் தேமுதிகவின் தோல்வி உறுதியாகிவிட்டது.

  இப்போது தேமுதிகவை காங்கிரஸ் ஆதரித்தால் பலன் ஒன்றும் கிடையாது. தமிழகத்தில் திமுகவே தேமுதிகவைவிட செல்வாக்கு பெற்ற கட்சி. திமுகவிற்கு தற்போது லோக்சபாவில் 18 உறுப்பினர்கள் உள்ளனர். தேமுதிகவிற்கு ஒன்றும் கிடையாது இதையெல்லாம் யோசித்தே காங்கிரஸ் தேமுதிகவை கை கழுவி நட்டாற்றில் விட்டுவிட்டது. கரையேரமுடியாத கேப்டனாகிவிட்டார் விஜயகாந்த்.



தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Viewing all 1525 articles
Browse latest View live