Quantcast
Channel: தளிர்
Viewing all 1537 articles
Browse latest View live

கோபம் நம் எதிரி! பாப்பா மலர்

$
0
0

கோபம் நம் எதிரி!

ரமேஷ் பள்ளிக்கு கிளம்பிக்கொண்டிருந்தான். அவன் பத்தாவது படித்துக் கொண்டிருக்கும்சிறுவன். திடீரென அவன் ‘அம்மா.. என்று கத்தினான், ‘என்ன ரமேஷ் எதுக்கு இப்படி கத்தறே?’ என்றவாறே சமையல் கட்டிலிருந்து ஹாலுக்குள் நுழைந்தாள் அவனது அம்மா கோமதி.
  ‘அம்மா என் ஷூவை துடைச்சு பாலிஷ் போடச் சொன்னா நீ போடவேயில்லையா?’ ‘ஒரே அழுக்கா இருக்கு இதை எப்படி ஸ்கூலுக்கு போட்டுட்டு போறது?’ என்று கத்தியபடி அதைத் தூக்கி தாயிடம் எறிந்தவன் வேறு ஷூவை போட்டுக்கொண்டு பள்ளிக்கு கிளம்பினான். அவனது செயலைக்கண்டு விக்கித்து நின்றாள் கோமதி..
   ரமேஷுக்கு சிறுவயதில் இருந்தே முன்கோபம் அதிகம் அவனை எப்படியாவது திருத்தி விடவேண்டும் என்று அவனது பெற்றோர் முயற்சித்தனர். ஊகும் அவன் திருந்துவதாக தெரியவில்லை.
  அன்று மாலை வீட்டிற்கு வந்த ரமேஷ் சாப்பிடவே இல்லை. அவனுக்கு பிடிக்காத கத்தரிக்காய் சாம்பார் வைத்தது தான் காரணம். சாப்பாட்டுத் தட்டை தூக்கி வீசி எறிந்து உடைத்துவிட்டு தனது அறைக்குள் சென்று படுத்துக் கொண்டான்.
   ரமேஷின் தந்தைக்கு மகனின் செயல் பிடிக்க வில்லை எனினும் அவர் ஆத்திரப்படவில்லை. ரமேஷிற்கு நேர் எதிரானவர் அவர். எப்பொழுதும் அமைதியையும் நிதானத்தையும் கடைபிடிப்பவர் அவர்.எனவே அவர் ரமேஷை விட்டுப்பிடிக்க நினைத்தார்.
  அன்று மாலை, பள்ளியிலிருந்து வீட்டுக்கு வந்த ரமேஷ், தீடிரென  ‘ச்சே என்ன நோட் இது பேப்பர் எல்லாம் இங்க் ஊறுது என்று எழுதிக் கொண்டிருந்த நோட்டை தூக்கி எறிந்தான். சற்றுநேரம் கழித்து மீண்டும் வேறு பேனாவால் எழுதிப் பார்த்தவன் மீண்டும் பேப்பரில் இங்க் ஊறவே ‘ச்சே இதெல்லாம் ஒரு நோட்டுனு விக்கறான் பாரு!’என்று கோபமாக எடுத்துச் சென்று எரியும் அடுப்பில் தூக்கிப் போட்டான். அவனது கோபத்தினைப் போல நோட்டும் கொழுந்து விட்டு எரிந்தது.
   அது நடந்து ஒரு வாரம் கழித்து ரமேஷ் தனது புத்தகப்பையை கொட்டி தேடொ தேடு என்று எதையோ தேடிக்கொண்டிருந்தான். ‘என்ன ரமேஷ் எதை தேடற? என்று அவனது தந்தை கேட்டார். ‘என்னோட ஹால் டிக்கெட்ட என்னோட புக்குல வைச்சிருந்தேன் இப்ப காணல!’ அழாத குறையாக கூறினான் ரமேஷ். ‘ரமேஷ் அதை என்கிட்ட காமிச்சிட்டு உன்னோட ஹிஸ்டரி நோட்டுல வச்சயே!’ என்றார் அவனது தந்தை. உடனே ரமேஷ் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்துவிட்டான். “ ரமேஷ் என்னப்பா ஆச்சு ஏன் இப்படி அழறே? தந்தை கேட்டார்.
    ‘ அப்பா அந்த ஹிஸ்டரி நோட்டைத்தான் பேப்பர் சரியில்லைன்னு அன்னிக்கு அடுப்பில தூக்கி எறிஞ்சிட்டேன் ஹால் டிக்கெட்டு நோட்டோட சேர்ந்து எறிஞ்சு போயிருக்கும் நான் பரிட்சை எழுத முடியாது என்று தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தான் ரமேஷ்.
   ரமேஷ் இதெல்லாம் எதனால? எல்லாம் உன் கோபத்தினால! கோபம் தான் நம்மோட முதல் எதிரி அதை தெரிஞ்சிக்கோ கோபத்தினால உன்னோட எதிர்காலமே பாழாயிடுச்சு பார்த்தியா! எதிலேயும் நிதானம் வேண்டும் பொறுமை வேண்டும் எதுக்கெடுத்தாலும் கோபப் படறத இனியாவது நீ விட்டுடணும் என்றார் அவனது தந்தை.
   அப்பா நான் திருந்திட்டேன் இனி எதுக்குமே கோபப்பட மாட்டேன் ஆனா என்னால இப்ப பரிட்சை எழுத முடியாம போயிடுச்சே என்று விக்கினான் ரமேஷ். “இந்தா உன்னோட ஹால் டிக்கெட்! நீ கோபத்த விடறதா சொன்னதுக்கு என்னோட பரிசு!’
  ‘அப்பா இது எப்படி உங்க கிட்ட ?’
  ‘அன்னிக்கு நீகோபபட்டு நோட்ட தூக்கி எறிஞ்சப்ப நோட்டுல இருந்து கீழே விழுந்துச்சு கோபத்துல நீஅதை கவனிக்கல நான் கவனிச்சு எடுத்து வச்சேன். அது இன்னிக்கு உன்னை திருத்த உதவிச்சு என்றார் அவனது அப்பா கண்களை சிமிட்டியபடி!’
  அப்பா நான் இனி கோப படவே மாட்டேன்! எனக்கு நல்லா புத்தி வந்தது என்று தந்தையை கட்டிக்கொண்டான் ரமேஷ்.                                         (மீள்பதிவு)                                                               தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

உங்களின் தமிழ் அறிவு எப்படி பகுதி 9

$
0
0

உங்களின் தமிழ் அறிவு எப்படி பகுதி 9


வணக்கம் வாசகர்களே! ஞாயிறு தோறும் நாம் நம் தமிழ் அறிவை சற்று விரிவாக்கிக் கொண்டு வருகிறோம். சென்ற வாரத்தில் ல ழ ள வேறுபாடு பற்றி அறிந்து கொண்டோம். இந்த வாரத்தில்
ணகர வேறுபாடு பற்றி அறிந்து கொள்ள இருக்கிறோம். அதற்கு முன் சுவையான ஒரு இலக்கியம் ஒளவைப் பாட்டி பாடியது பற்றி பார்க்க இருக்கிறோம்.

   ஒரு முறை  பாண்டியன் வீட்டுத் திருமண விருந்தில் ஏகப்பட்ட கூட்டம். பந்திக்கு முந்திக் கொண்டு பாய்ந்து சென்றவர்கள் ஒரு பாட்டியைக் கீழே தள்ளிவிட்டனர். அவர்தான் தமிழ் மூதாட்டி ஒளவைப்பாட்டி.
   ஓர் ஓரத்தில் சென்று  அமர்ந்தார் ஒளவை. அப்போது அந்த பக்கமாக  வந்தார் பாண்டிய மன்னன்.ஒளவையிடம் “அம்மையே உண்டீர்களா? விருந்து சுவையாக இருந்ததா? என்று அன்புடன் விசாரித்தான்.
   எரிச்சலாக இருந்த ஔவையார் அதை அடக்கிக் கொண்டு “உண்டேன், உண்டேன் உண்டேண்... ஆனால்  சோறு மட்டும் உண்ணவில்லை! என்று அமைதியாக உரைத்தார். விழித்தான் வேந்தன். விளக்கிச் சொல்லுமாறு வேண்டினான். ஔவையார் சொன்னார்.
  “கூட்டத்திலே நெருக்குண்டேன்;கீழே தள்ளுண்டேன்; பசி மிகுதியால் வயிறு சுருக்குண்டேன்... சோறு மட்டும் உண்ணவில்லை!
  என்று பொருள் வரும்படி ஓர் பாட்டை பாடினார். அது இதோ!
  “ வண்டமிழைத் தேர்ந்த வழுதி கலியாணத்து
   உண்ட பெருக்கம் உரைக்கக் கேள்  - அண்டி
   நெருக்குண்டேன்: தள்ளுண்டேன்: நீள் பசியினாலே
   சுருக்குண்டேன்..  சோறு கண்டிலேன்!”

பாட்டைக் கேட்ட பாண்டிய மன்னன் மிகவும் வருந்தி தவறுக்கு மன்னிப்பு கேட்டு தன் கையாலேயே ஔவைக்கு விருந்தளித்து அவரை கௌரவித்தானாம்.
இப்படிப்பட்ட மாந்தர்கள் வாழ்ந்த காலம் அது.

இப்போது சில ணகர னகர சொற்களின் பொருள் வேறுபாடுகளை காண்போம்.
1.   மணம் - வாசனை
மனம் -  உள்ளம்

2.   வண்மை  - ஈகை
வன்மை - உறுதி

3.   தண்மை  - குளிர்ச்சி
தன்மை  - இயல்பு

4.   பணி   - தொழில்
பனி   - குளிர்

5.   ஊண் -  சோறு
ஊன்  -மாமிசம்.

6.   அண்ணம் -  உதடு
அன்னம்-  பறவை

7.   கண்ணன் -  கிருஷ்ணன்
கன்னன்  - திருடன்

8.   கண்ணி-    வலை, கயிறு
கன்னி  - இளம்பெண்

9.   ஆணி -   ஆதாரம், இரும்பு ஆணி
ஆனி  -  தமிழ் மாதம்.

10.கணி-    கணக்கிடல், கணிதம்
கனி   -  பழம்

11.மணை  -  இருக்கை, ஆசனம்
மனை  -  வீட்டுமனை

12.மண்-   நிலம்
மன்   பெருமை

என்ன வாசகர்களே தமிழ் சொற்கள் சிலவற்றை அறிந்து கொண்டோம். அடுத்த பகுதியில் இன்னும் சில சொற்களை அறிந்து கொள்வோம். உங்களின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பின்னூட்டத்தில் அறிவியுங்கள் அது இந்த தொடரை மேலும் மெருகூட்ட உதவும். நன்றி!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள் நன்றி!

சுட்ட பழம்! சுவையான பழம்!

$
0
0

பிறர்மனம்புண்படாமல்பேசுவதுஒருகலை.

நண்பரின்வீட்டிற்குஒருவர்சென்றபோதுஅவருக்குஒருதட்டில்ஜிலேபிவைத்தார்நண்பரின்மனைவி.ஜிலேபியைஇரண்டாகவிண்டபோதுஅதில்நூல்போல்வந்தது.சிரமப்பட்டுஅதைசாப்பிட்டுவிட்டார்.நண்பர்கேட்டார்.''ஜிலேபிஎப்படிஇருந்தது?''இவர்சொன்னார்,'மிகநன்றாகஇருந்தது.நான்தான்இரண்டுநாள்தாமதமாகவந்துவிட்டேன்.'

நண்பர்மனைவியிடம்வாழைப்பழம்கொண்டுவந்துகொடுக்கச்சொல்லஅவரும்தட்டில்கொண்டுவந்துவைத்தார்.அதுசற்றுக்காயாகஇருந்தது.இதையும்சிரமப்பட்டுசாப்பிட்டார்வந்தவர்.நண்பர்கேட்டார்,''வாழைப்பழம்நன்றாகஇருந்ததா?''வந்தவர்சொன்னார்,'நன்றாகஇருந்தது.நான்தான்இரண்டுநாள்முன்னால்வந்துவிட்டேன்.'


''சத்துகுறைந்துபோச்சுன்னுடாக்டர்கிட்டபோனீங்களே,என்னஆச்சு?''

'இப்போஎன்சொத்துகுறைந்துபோச்சு.'


நாராயணாசாமிக்குதிருமணமானபுதிது.

எப்பொழுதுகோவிலுக்குச்சென்றாலும்அங்கிருக்கும்பிச்சைக்காரர்ஒருவருக்குகாசுபோடுவதுநாராயணசாமியின்வழக்கம்.

அன்றும்அப்படித்தான். இவர்ஒருபிச்சைக்காரனுக்குகாசுபோட, அவன்கேட்டான்.

"ஏன்சாமி, முன்னாள் 15 ரூபாய்பிச்சைபோட்டுக்கொண்டிருந்தீர்கள். அதன்பின் 10 ரூபாய்பிச்சைபோட்டீர்கள். இன்றுவெறும் 5 ரூபாய்போடுகிறீர்களே?அதுஏன்?"


நாராயணசாமிசொன்னார்

"திருமணமாகும்முன்என்விருப்பத்திற்குச்செலவுசெய்தேன்.அப்போது 15 ரூபாய்போட்டேன். திருமணம்ஆனவுடன்செலவுஅதிகம்ஆனது 10 ரூபாய்போட்டேன். நேற்றுஎனக்குஒருகுழந்தைபிறந்தது. குடும்பம்நடத்தப்பணம்வேண்டும்இல்லையா? அதனால்தான் 5 ரூபாய்போடுகிறேன்."

அதற்குஅந்தபிச்சைக்காரன்சொன்னான்,

"
ஏன்சாமி.. அப்படின்னாஎன்காசைவைத்துத்தான்நீங்கள்குடும்பம்நடத்துகிறீர்களா?...உங்களுக்குவெட்கமாகஇல்லையா?"


ஒருபையன்பக்கத்திலஇருந்தகடைக்குபோய்,

5 ரூபாய்க்குகடலைமிட்டாய்கேட்டான். 

கடைக்காரர்அலமாரியின்மிகஉயரத்தில்இருந்தமிட்டாய்பாட்டிலைமிகசிரமப்பட்டுஅலமாரிமீதுஏறிஎடுத்து, அவனுக்குமிட்டாயினைகொடுத்துவிட்டுமீண்டும்உரியஇடத்தில்வைத்துவிட்டார்.

10 நிமிடம்கழித்துமீண்டும்அதேபையன், மீண்டும் 5 ரூபாய்க்குகடலைமிட்டாய்.

கடைக்காரர்அதேசிரமத்துடன்கொடுத்துவிட்டுபாட்டிலவைத்துவிட்டார்.

மீண்டும் 5 நிமிடத்தில்அவன், மறுபடியும் 5 ரூபாய்க்கு. கடைக்காறருக்குமுடியல........
எடுத்துக்கொடுத்துவிட்டு.. பையன்திரும்பவருவான்வந்தாகொடுக்கலேசுஎன்றுமிட்டாய்பாட்டிலைகீழேவைதுக்கொண்டார்.

அவர்எதிர்பார்த்தபடிபையன்ஐந்துநிமிசத்தில்ஆஜர். கடைக்காரர், பையனிடம், என்ன 5 ரூபாக்குகடலைமிட்டாயா? என்றார். பையன்இல்லைஎன்றுதலையாட்டினான்.
அப்பாடாகடலைமிட்டாய்மேட்டர்ஓவர், எனறநிம்மதியுடன், மிட்டாய்பாட்டிலைகஸ்டப்பட்டுஏறிவைத்துவிட்டு, பையனிடம்திரும்பி, என்னவேணும்என்றார், அவன்சொன்னான், 10 ரூபாய்க்குகடலைமிட்டாய்..

கடைக்காரர்பாடு

நேத்துபீச்லநாமபேசிக்கிட்டுஇருந்ததைஎங்கம்மா
பார்த்துட்டாங்க, நல்லவேளை, தாடிவச்சிருந்ததால
நீங்கதப்பிச்சீங்க..."

"அப்படியா,என்னசொன்னாங்க!?"


"நல்லநாளும்பொழுதுமாசீக்கிரம்வீட்டுக்குவராம,

ராப்பிச்சைக்காரனோடுஉனக்குஎன்னபேச்சுனு
திட்டினாங்க...!"

இரண்டுதந்தைமார்கள்தங்களுக்கள்பேசிக்கொண்டார்கள்.

ஒருவர்:என்மகன்கடிதம்எழுதினால்கடிதத்தைப்படிக்கஎப்போதும்அகராதியைத்தேடித்போகவேண்டியிருக்கிறது.

மற்றவர்:உங்கள்மகனாவதுபரவாயில்லை.என்மகன்கடிதம்எழுதினால்நான்வங்கியைஅல்லவாதேடிப்போகவேண்டியிருக்கிறது!

ஒருதடவைஒருத்தர் ,கலைவாணர்கிட்டேவந்து...

ஐயா... என்குழந்தைசெத்துப்போச்சு! ன்னுசொல்லிஅழுதார். உடனேஇவருஅவருக்குநூறுரூபாய்பணம்கொடுத்துஇந்தாங்க... அடக்கம்செய்யுங்க!ன்னுசொல்லிஅனுப்பிவைச்சார்.

ஒருவருசம்கழிச்சுமறுபடியும்அதே
 ஆள்வந்தார். இவறுமறந்திருப்பார்ங்கறநினைப்பிலேஅண்ணே...
என்குழந்தைஇறந்துபோச்சண்ணே! ன்னார்இவருமறுபடியும்நூறுரூபாய்கொடுத்துஆறுதல்சொல்லிஅனுப்பினார்.

ஏழெட்டுமாசம்கழிச்சுமறுபடியும்அதேஆள்வந்தார். அவருவாயைத்திறக்கறதுக்கமுன்னாடியேஇவருநூறுரூபாயைஅவருகையிலவெச்சுபோனரெண்டுதடவைதான்குழந்தைசெத்துப்போச்சுஇந்தத்தடவையாவதுசாகாமக்காப்பாத்திடுங்க! ன்னார். அதுக்கப்பறம்அந்தஆள்வர்றதேஇல்லையாம்
.                               நன்றி: ரிலாக்ஸ் ப்ளிஸ் முகநூல் பக்கம்.                                              தங்கள் வருகைக்கை நன்றி பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்!

தளிர் ஹைக்கூ கவிதைகள்!

$
0
0

தளிர் ஹைக்கூ கவிதைகள்!

குளத்தில்
கோலம் போட்டது
மழைத்துளி

முகத்தைத் திருப்பிக் கொண்டது
முழுநிலவு
அமாவாசை!


காசைக் கொடுத்து
சிறையில் தள்ளுகிறார்கள்
நர்சரி பிள்ளைகள்!
 
வீட்டுக்குள்
வீடு கட்டியது
குளவி!

அஸ்திவாரமில்லை
அந்தரத்தில் தொங்கியது அழகான வீடு
தூக்கணாங்குருவி கூடு!

வயல் வெளியில்
வானூர்திகளின் சாகசம்!
தும்பிகள்!

சிதறிய முத்துக்கள்!
சிறைபடவில்லை!
மழை!

பறித்ததும் வாடின
கடல் பூக்கள்
மீன்கள்!

வாடகை வீட்டில்
குடியேறியது நாகம்!
புற்று!

அடித்ததும் அழுது
சிரித்தது
தேங்காய்!

சத்தமிட்டே
நல்லபெயர் வாங்குகிறது
பல்லி!

முத்தமிட்டதில்
ஈரமானது பூமி!
மழை!

கான்கிரிட் வயல்களில்
காணாமல் போனது
பசுமை!

அணிவகுப்பில் கலவரம்
கலைந்தன
எறும்புகள்!

தங்கள்வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

அம்மான்னா சும்மா இல்லேடா! கதம்ப சோறு!

$
0
0

அம்மான்னா சும்மா இல்லேடா!

நேற்று காவிரி தந்த கலைச்செல்வியின் 65வது பிறந்த நாள். இன்று நட்சத்திரப்படி பிறந்த நாள். நேற்றுதான் அம்மாவின் விஸ்வரூபத்தை அறிந்து கொள்ள முடிந்தது. அம்மாவின் பிறந்த நாள் தினம் தோறும் இருக்கக் கூடாதா என்ற அளவிற்கு பேராசையும் எழுந்தது. அதில் தவறொன்றும் இருப்பதாகவும் நான் கருதவில்லை! ஆமாங்க! தீபாவளி, பொங்கல், வருசபிறப்பு அன்னிக்கு கூட ஒருமணி நேரமாவது கரண்ட் கட் பண்ணாங்க! ஆனா நேத்து காலையில ஆறுமணியில இருந்து ராத்திரி பத்து மணி வரை கரண்ட் கட்டே ஆகலைங்க! அம்மாவின் பிறந்தநாளுக்கு இந்த மாதிரி ஒரு பரிசை நிச்சயம் யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டாங்க! ஆனா என்ன பிரயோசனம்? நேத்து டீவிக்களிலே மொக்கை படங்களா போட்டு அறுத்து எடுத்துட்டாங்க! அதுவும் ஜெயா மூவிலே கூட அம்மா படம் போடாம டாக்டரு விஜய் படம் மதுர போட்டு கொலை பண்ணிட்டாங்க! அந்த படம் கொஞ்ச நேரம் பார்த்த பாதிப்புல பாதி இரவு தூங்காம ஒரே அஜீரண கோளாறா போயிருச்சுங்க!   இப்படியே தினம் பிறந்த நாள் கொண்டாடி கரண்ட விடுவாங்கன்னு எதிர்பார்த்தா இன்னிக்கு காலங்கார்த்தாலேயே மீண்டும் கட் ஆயிருச்சு மின்சாரம்!

தொடரும் ஆசிட் வீச்சுக்கள்!

   வினோதினி இறந்து சில தினங்களே ஆன நிலையில் மீண்டும் ஒரு மரணம். ஆசிட்வீச்சினால் பாதிக்கப்பட்டு வித்யா இறந்த செய்தி நெஞ்சில் வலியை ஏற்படுத்தியது. வினோதினி தாக்கப்படும் போதே பதிவு செய்ய நினைத்தும் சோம்பேறித்தனத்தால் ஏதும் பதிவிடாமல் விட்டுவிட்டேன். இந்த இண்டர்நெட் யுகத்தில் காதலின் பரிமாணம் மிகவும் மாறிவருகிறது. காதல் மென்மையானது. அதில் முரட்டுத்தனம் கூட மென்மையாகத்தான் இருக்கும். பழைய பாலச்சந்தர், பாரதி ராஜா படக் காதல் போல அல்லாமல் இப்போதைய ரவுடியை காதலிக்கும் காதல் படங்கள்  காதலில் வன்முறையைக் கலந்துவிட்டன. ஒரு பெண் பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டால் தற்கொலை செய்து கொண்ட காலம் போய் அவளை கொலை செய்வது ஆசிட் வீசுவது என்று வன்முறை அளவுக்கு மீறிவிட்டது. இது காதலே அல்ல! வெறிபிடித்த செயல்! இதை காதல் என்று கொச்சைப்படுத்தாமல் இது போன்ற கொலை வெறியர்களுக்கு கண்டிப்பாக கடுமையான தண்டனைகள் பெற்றுத்தர வேண்டும். பெண் முதல்வராக இருக்கும் தமிழகத்தில் பெண்கள் மீது தொடரும் இந்த தாக்குதல்கள் பற்றி அவர் முதல்வர் ஏதும் இது வரை பதில் சொல்லவில்லை! அவரின் பார்வைக்காவது இந்த செய்தி போனதா தெரியவில்லை! விரைவில் நடவடிக்கை பாயும் என்று எதிர்பார்ப்போம்!

நூறு நாள் திட்டமும் சோம்பேறிகளும்!
   தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் என்ற பெயரில் முழுச்சோம்பேறிகளை உருவாக்கி வருகிறது மத்திய அரசு! இப்போது இந்த திட்டம் 150 நாள்களாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதனால் யாதொரு பயனும் ஏற்படவில்லை! வயல் வேலைக்கு ஆள் கிடைக்காமல் இயந்திரநடவு என்ற முன்னேற்றத்தை மட்டுமே இந்த திட்டம் கொண்டு வந்துள்ளது. இதில் பயனாளிகள் அனைவருமே பெரும்பாலும் பெண்கள். காலை ஒன்பது மணிக்கு பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு ஒரு மண்வெட்டி  சட்டியுடன் வந்து  ஏரி குளம் தூர் வாருகிறேன் பேர்வழி என்று வந்து பேருக்கு ஒரு மணி நேரம் மண் வெட்டி எடுத்து வேலை செய்கிறார்கள். பின்னர் மர நிழலில் அமர்ந்து ஊர்க் கதை பேசி மூன்று மணிக்கு வீட்டுக்கு செல்கிறார்கள். இதற்கு கூலி இப்போது வங்கிகள் மூலம் வழங்கப் படுவதால் வழக்கமான வங்கி பணிகளும் பாதிக்கப்படுகின்றன. எழுத்தறிவில்லாத இந்த கூலித்தொழிலாளர்களை வங்கி அதிகாரிகள் அலைகழிப்பது அதைவிட கொடுமை. இதை முறைப்படுத்தி  ஒழுங்க படுத்தினால் திட்டம் பயனுள்ளதாய் மாறும். ஆனால் ஓட்டு என்னும் இயந்திரம் அதை அறுவடை செய்ய விடாது போல தோன்றுகிறது.

நம்பிக்கை நட்சத்திரம்: 
  காரைக்கால் பள்ளி மாணவன் ஒருவன் சூரிய ஒளி மருந்து தெளிப்பான் ஒன்றை கண்டுபிடித்து அசத்தியுள்ளான். மாணவர்களிடையே அறிவியல் விழிப்புணர்ச்சியும் ஆர்வமும் அதிகரிப்பது நல்ல செயல். மாணவன்முகேஷ்நாராயணன்கூறியதாவது:இந்தபுதியவகைஸ்பிரேயரில்சோலர்பேனல், டி.சி., மோட்டார், டேங்க், நாசில், பேட்டரி, சுவிட்ச்போர்டு, மொபைல்போன்சார்ஜர், புல்வெட்டி, மின்சாரபல்புகளுடன்ஒருங்கிணைந்துஉருவாக்கப்பட்டுள்ளது. இவைஅனைத்தும்முற்றிலும்சூரியஒளியில்இயங்கும்.விவசாயிகளுக்குதலைகவசம்போல்செயல்படும்சூரியஒளிதகட்டில்இருந்துகிடைக்கும்மின்சாரம்உற்பத்தியாகிபேட்ரியில்சேமிக்கப்படும்.டி.சி.,மோட்டார், மருந்துசேமிப்புகலனில்இருந்து, மருந்துமிகவும்எளிதாகபயிர்கள்மேல்தெளிக்கும். இதனைமற்றவகைஸ்பிரேயர்கள்போல்வேகமாகஇயக்கவேண்டியஅவசியம்இல்லை. வேகத்தைமாற்றியமைத்துகொள்ளலாம். தேவையற்றசப்தமும்வராது. இதில்உள்ளலெட்விளக்குகளைவீடுகளுக்குமின்விளக்காகவும்பயன்படுத்திக்கொள்ளலாம். 3 கிலோஎடைகொண்டசூரியஒளிமருந்துதெளிப்பான்உருவாக்க 5 ஆயிரம்ரூபாய்மட்டுமேதேவைப்பட்டது' என்றார்.
வாழ்த்துக்கள் முகேஷ்.

சபாஷ் தோனி!

  கடந்த இரண்டு மூன்று தொடர்களாக சறுக்கிவந்த இந்திய கேப்டன் தோனி  சென்னை டெஸ்டில் விஸ்வரூபம் எடுத்துவிட்டார். இன்றைய நாளிதழ்கள் ஆகா! ஓகோ என்று புகழ்ந்து கொண்டு இருக்கின்றன. இதே நாளிதழ்கள்தான் இங்கிலாந்துக்கு எதிராக தோற்றபோது கடுமையாக விமரிசித்தன.  விளையாட்டை விளையாட்டாக பார்க்காமல் அதை உணர்ச்சிப்பூர்வமாக அணுகுவது நம் நாட்டில்தான். உதாரணமாக பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்துவிட்டால் நாலைந்து பேர் தற்கொலை செய்து கொண்டிருப்பார்கள். கிரிக்கெட் மட்டும் விளையாட்டு அல்ல! எத்தனையோ நல்ல விளையாட்டுக்கள் கிரிக்கெட் மோகத்தால் மறைந்து வருகின்றன. ஒலிம்பிக்கில் நமக்கு சில பதக்கங்களை பெற்றுத்தந்த மல்யுத்தம் கூட அடுத்த ஒலிம்பிக்கிற்கு பிறகு ஒலிம்பிக்கில் இருந்து நீக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் எந்த எதிர்ப்பும் கிளம்பியதாக தெரியவில்லை! ஆனால் கிரிக்கெட்டில் தோற்றுவிட்டால் மட்டும் தேசத்தையே இழந்துவிட்டது போல அப்படி கொந்தளித்து போகின்றனர் மக்கள்.  பார்மை மீட்ட தோனி இந்த இன்னிங்சில் இரட்டைசதம் அடித்து சச்சின் சாதனையும் முறியடித்து தன் மீதான விமர்சனங்களை முறியடித்து விட்டார். அஸ்வினும் சிறப்பாக பந்துவீசி சாதித்துள்ளார்.  வெல்டன் தோனி!
                                                                        டாக்டர் பில்!
கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டிருந்த நாராயணசாமி ஒரு மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்தார்.
அவர் குணமடைந்ததும், மருத்துவர் சிகிச்சைக்கான பில்லைக் கொடுத்தார்.
பில் தொகை மிக அதிகமாக இருப்பதாக நாராயணசாமி சொன்னார்.

மருத்துவர் சொன்னார்,

"
நான் சிகிச்சைக்காக 15 முறை உன் வீட்டிற்கு வந்துள்ளேன்.ஊசி போட்டிருக்கிறேன்.மாத்திரைகள் கொடுத்திருக்கிறேன்அதை எல்லாம் கணக்கு பார்த்தான்நான் குறைவாகவே கேட்கிறேன்"
அதற்கு நாராயணசாமி சொன்னார்,

"
நான் உடல் நலமில்லாதிருந்தபோது என்னைப் பார்க்க வந்த பத்துப் பேருக்கு என் நோயைப் பரப்பி அவர்கள் தற்போது உங்களிடம் சிகிச்சை எடுத்து வருகிறார்களேஅதையும் கொஞ்சம் கணக்கில் எடுத்துக் கொள்ளுங்கள் டாக்டர்."
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

வேலூர் விஜயம்! 4

$
0
0

வேலூர் விஜயம்! 4


வேலூர் சென்று வந்த கதை என்ற பெயரில் என் மாமாவின் பழைய நினைவுகளை மொக்கைப் போட்டுக் கொண்டு இருக்கிறேன்! வாசகர்கள் பொறுத்தருள்க.
      யூத் சர்வீஸீசில்  திண்டிவனம் அருகே ஒரு கிராமத்தில் வேலை செய்து வந்த மாமாவிற்கு ஆட்சி மாறியதும் காட்சி மாறியது. யூத் சர்வீஸில் இருப்பவர்கள் அனைவரும் திமுக காரர்கள் என்று வேலையை விட்டு நீக்கி விட்டிருக்கிறார்கள். அடுத்த பி.டி.ஒ என்ற கனவில் இருந்தவர்கள் ஒரே நாளில் வேலையை இழந்து தவித்து இருக்கிறார்கள். அன்றும் பலர் இதனால் தற்கொலை வரை சென்று இருக்கின்றனர்.
   ஆனாலும் மாமா மனம் தளரவில்லை! மீண்டும் கிராமத்திற்கு விவசாய வேலைக்கு வந்துவிட்டார். இதனிடையே வேலைஇழந்தவர்கள் வழக்குத் தொடுக்க ஒரு தேர்வு வைத்து தகுதியானவர்களை வேலைக்கு எடுத்துக் கொள்வதாக அரசு அறிவித்தது. தேர்வு எழுதினார் மாமா. தேர்வுமுடிவுகள் வந்தன. மாமா தேர்ச்சி பெற்று விட்டார். என்ன இன்னும் ஒரு மூன்று மதிப்பெண்கள் கூடுதலாக பெற்று இருந்தால் நேரடியாக செகரட்டரியேட் பணியிடம் கிடைத்திருக்கும். சரி கஷ்டப்பட்டதற்கு ஏதோ கவர்மெண்ட் வேலை கிடைத்து விட்டது என  மகிழ்ந்தபோது அவருக்கு பணியிடம் தொலை தூரத்தில் வழங்கப்பட்டது.
   அவரது அண்ணா வேலூரில் தாசில்தார் அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டு இருந்தார். அவர் ஒரு வார்த்தை சொன்னால் வேலூரிலேயே பணியிடம் கிடைக்கும். ஆனால் அவர் சிபாரிசு செய்ய மறுத்துவிட்டாராம். கவர்மெண்ட் வேலை எங்கிருந்தால் என்ன? நான் ஜாய்ன் பண்ணிக் கொள்கிறேன் என்று இவரும் பிடிவாதம் பிடித்தாராம்.
   இறுதியில் வேலூரிலேயே வேறொருவர் சிபாரிசின் படி இவருக்கு போஸ்டிங் வழங்கப்பட்டது. தாசில்தார் அலுவலகத்தில் வேலை. வருவாய்த்துறை அலுவலர் பணியிடம் வழங்கப்பட்டது. வேலூர் சத்தியவிஜயநகரத்தில் ஆர் ஐ ஆக பணியாற்றியுள்ளார்.
    மிகவும் நேர்மையாகவும் கண்டிப்பானவராகவும் இருந்துள்ளார். இவரிடம் பெரிய அதிகாரிகளுக்கே ஒரு மரியாதை உண்டாம். அப்போது பாலாற்று படுகையில் ஆழ்துளை கிணறு அமைக்க அரசிடம் அனுமதி வாங்க வேண்டுமாம். விவசாயிகள் பலர் ஆழ்துளை கிணறு அமைக்க தாசில்தார் அலுவலகம் வருவார்களாம். இவர்களிடம் பணம் கறக்க எளிதில் அனுமதி கொடுக்க மாட்டார்களாம் அதிகாரிகள்.
   ஓர் ஏழை விவசாயி பலமுறை அலுவலகத்திற்கு படையெடுத்து இறுதியில் இவரிடம் வந்தாராம். சார்! இத்தனை வருசமா எனக்கு அனுமதி கொடுக்காம இருக்காங்க! நீங்கதான் பாத்து செய்யணும். ஏதாவது பணம் வேணுமின்னாலும் தந்து விடுகிறேன் என்று கூறியுள்ளார். இவருக்கு கோபம் வந்து விட்டதாம். எல்லா ரெகார்டும் ஒழுங்கா சப்மிட் பண்ணிட்டீங்கன்னா நான் இன்ஸ்பெக்ஷன் பண்ணி  தாசில்தாருக்கு அனுப்பி விடறேன் எனக்கு எந்த பணமும் வேணாம் என்று கறாராக கூறியவர். அவரது கோரிக்கையை பரிசீலித்து தாசில்தாருக்கு  அனுப்பி விட்டாராம்.
   அங்கு வெகு சுலபத்தில் பர்மிசன் கிடைத்து அவர் போர் போட்டுவிட்டாராம். உங்களால்தான் நான் போர் போட முடிந்தது என்று நூறு ரூபாயை எடுத்து கொடுக்க வந்தாராம். இவர் மறுத்து என் வேலையைத்தான் நான் செஞ்சேன். இந்த மாதிரி பணம் கொடுக்கிற வேலை எல்லாம் என்கிட்ட வச்சிக்காதே என்று மறுத்து அனுப்பினாராம். அந்த விவசாயி அப்போது சென்று விட்டாலும் பின்னர் வயலில் விளையும் காய்கறிகள் போன்றவற்றை இவரது வீட்டுக்கே கொண்டுவந்து கொடுத்து இதையாவது மறுக்காம வாங்கிக்கணும் என்று  கட்டாயப்படுத்தி கொடுத்துச் சென்றுள்ளார். அந்த பகுதியில் இருந்து வேலூருக்கு இவர் மாற்றலான போது பெரும்பாலான விவசாயிகள்  இவரை கண்ணீர் மல்க வழியனுப்பினார்களாம்.
     இப்படி கஷ்டப்பட்டு வருவாய்த்துறையில் சேரும்போதே வயது முதிர்ந்து விட்டது. கல்யாணம் ஆகிவிட்டது. மாமனார் வருவாய்த்துறை கையை நீட்டிட போறே! புள்ளக்குட்டிங்க எதிர்காலம் பாழாயிரும்! என்று அடிக்கடி எச்சரிப்பாராம்!  
    இவர் இப்படி இறுதியில் ஓய்வு பெறும் வரையில் அதிகாரிகள் பாராட்டும் படி பணி செய்து வந்தாலும் இப்போது அவருக்கு ஒரு வருத்தம் இருக்கத்தான் செய்கிறது. இவருக்கு பின் பணியில் சேர்ந்தவர்கள் எல்லாம் இவரை முந்தி தாசில்தார் அளவுக்கு  புரமோசன் பெற்றுவிட்டு சென்றுவிட இவர் டெபுடி தாசில்தாராக ஓய்வு பெற்று இருக்கிறார்.
  காரணம் இட ஒதுக்கீடு! திறமையானவர்களை பின்னுக்கு தள்ளும் இந்த இடஒதுக்கீடு குறித்து இவர் வருத்தப்பட்டு பேசினார். இவருக்கு ஜீனியர் ஆன ஒரு அதிகாரி எதுவென்றாலும் இவரை கேட்டு செய்பவர் கூட இவரை முந்தி தாசில்தார் ஆகிவிட்டாராம். என்ன சார்! நீங்க? உங்களுக்கு புரமோசன் கிடைக்கலியே? என்று அவர் வருத்தப்பட்டாராம்.
   இது உண்மைதானே! பிற்படுத்தப்பட்டோர்களுக்கு உதவி  முன்னேற்றுவது அவசியம் தான்! அதே சமயம் இட ஒதுக்கீடு என்று பிரித்து திறமையானவர்களை பின்னுக்கு தள்ளுவது என்ன நியாயம்? ஒரு துணைக் கலெக்டராக மாறி இருக்க வேண்டியவர் இட ஒதுக்கீட்டினால் துணை தாசில்தாராக ஓய்வு பெறவேண்டிய கட்டாயம்.
   இருந்தாலும் அவரது விடாமுயற்சியால் இன்று அவரது மகன்கள் நல்ல வேலையில் உள்ளனர். இந்த இட ஒதுக்கீடு காரணமாகவே அவரது மூத்த மகன் கவர்மெண்ட் வேலை வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம். இன்று பெங்களூரில் ஐடி கம்பெனியில் வேலை செய்கிறார் அவர். இன்னொரு மகன் துபாயில் கப்பல் கம்பெனியில் வேலை செய்கிறார்.
  எப்படியோ கஷ்டப்பட்டு மகன்களை நல்ல நிலைக்கு கொண்டுவந்துவிட்டேன்! இனி கல்யாணம் முடித்துவிட்டால் சந்தோஷப்படுவேன் என்று தன் கதையை முடித்தார் மாமா.

சீக்கிரம் நல்லது நடக்கட்டும்!


தங்கள்வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

புகைப்பட ஹைக்கூ 16

$
0
0

புகைப்பட ஹைக்கூ 16

பூவோடு பூவாக
பூத்து நிற்கிறது
வண்ணத்துப்பூச்சி!

மயங்கியது
மலர் மட்டுமல்ல
மனசும்தான்!

தேன் சிந்தியதும்
தலைகவிழ்ந்தது
பூ

மலருக்கு
மஞ்சள் பூசியது
வண்ணத்துப்பூச்சி!

பூவில் பூத்தது
உயிருள்ள பூ
வண்ணத்துப்பூச்சி!

இயற்கை அழகில்
மூழ்கியது மலர்
வண்ணத்துப்பூச்சி!

திருடு போனது
மகரந்தம் மட்டுமல்ல
மனசும்!

வண்ணம் சிதறினாலும்
எண்ணம் சிதறவில்லை
வண்ணத்துப்பூச்சி!

பூக்களின் சிரிப்பில்
பூத்தது
வண்ணத்துபூச்சி!

சிறகில்
சித்திரம் படைத்தது
வண்ணத்துப்பூச்சி!

மலர்க்கணையில்
மயங்கியது
வண்ணத்துப்பூச்சி!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


பனிக்காலம் நன்று!

$
0
0
பனிக்காலம் நன்று!

மார்கழி மாதத்தில் அதாவது டிசம்பர் மாதத்தில் தான் தமிழகத்தில் குளிர் வாட்டி எடுக்கும். மூடு பனி போர்த்திக் கொண்டு சாலைகள் தெரியாது. வாகனங்கள் முகப்புவிளக்கு ஒளிரவிட்டுச் செல்லும். அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து மாசி மாத நிறைவில் சிவராத்திரியுடன் பனிக்காலம் நிறைவு பெறும்.
  பெரியவர்கள் சிவராத்திரியோடு குளிர் “சிவசிவா”ன்னு போயிடும் என்று சொல்லக் கேட்டுள்ளேன். அதே மாதிரி நிலை சிலவருடங்கள் முன் வரை இருந்தது. ஆனால் இப்போதெல்லாம் வானிலை மாறி வருகிறது.  மார்கழி மாதத்தில் பனி அவ்வளவாக தெரியவில்லை! மார்கழி மாத இறுதியில் கொஞ்சம் கடுமையான பனி இருந்தது. பின்னர் பனி விலகி வெயில் கொளுத்த ஆரம்பித்தது.
    மாசி மாதம் தொடங்கியவுடன் வெயில் கோடை வெயில் போல கொளுத்த ஆரம்பித்தது. ஆனால் திடீரென இரண்டு மூன்று நாட்களாக அதிகாலையில் கடும் பனி பொழிந்து வருகிறது. எதிரே வருவது தெரியாத அளவிற்கு பனிப்புகை மண்டியுள்ளது. மனிதன் மாற மாற காலநிலையும் மாறி வருவது வேதனைக்குரியது. இயற்கை வளங்களை சுரண்ட சுரண்ட இயற்கை நம்மை கடுமையாக தண்டித்து வருகிறது. மழை சரிவர பெய்யவில்லை! வெயிலின் அதிக தாக்கம், கடும்பனி  போன்றவை மனிதர்களிடையே புதிய நோய்களையும் பரப்பும்.
   ஆனால் இயற்கையை மதிக்காமல் முடிந்த வரை சுரண்டிக் கொண்டிருக்கிறோம். ஒரு காலத்தில் எங்கள் ஊர் பக்கம் சாலைகளில் இரண்டு புறமும் மரங்கள் அணிவகுத்து நிற்கும். புளியமரங்கள் நான்கு நபர்கள் கை கோர்த்து நின்றால் கூட கட்டிப்பிடிக்க முடியாத பருமன் உடையவை. அவையெல்லாம் நான்கு வழிச் சாலை ஆறு வழிச் சாலை என வெட்டி சாய்க்கப்பட்டு தூங்கு மூஞ்சி மரக் கன்றுகள் நடப்பட்டன. இப்போது அவையும் வெட்டப்பட்டு சாலை விரிவாக்கம் செய்யப்படுகிறது. ஏகப்பட்ட வாகனங்கள் புகை கக்கி செல்கின்றன.  சித்திரை மாதங்களில் இந்த புளிய மர மகசூல் ஏலம் விடப்படும். சுற்று வட்டார மக்கள் மூட்டை மூட்டையாக புளியம்பழங்கள் வாங்கி செல்வார்கள். குறைந்தவிலையில் கிடைக்கும். இன்றோ மரங்களையும் இழந்து அதன் பயன்களையும் இழந்து வெறும் சாலைகளை மட்டுமே பெற்று இருக்கிறோம். வளர்ச்சி தேவைதான்! ஆனால் இது போன்ற வளர்ச்சி தேவையா? கிராம விளைநிலங்கள் வீட்டுமனைகளாகிவிட்டன. மூன்று போகம் விளைந்த நிலங்கள் இன்று கான்கிரிட் காடுகள் ஆகிவிட்டன. ஏரிகுளங்களை தூர் வாராமல் ஆற்று மணலை கண்டபடி அள்ளியதன் விளைவு நிலத்தடி நீர் மட்டம் குறைந்து நன்னீர் உவர் நீராகி கிராமங்களில் கூட குடிதண்ணீரை விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை! இப்படிப்பட்ட நிலையை ஏற்படுத்திக் கொண்டது யார்? நாம்தான்! இதுவரை சுரண்டியதற்கே இந்த நிலை! இன்னும் சுரண்டிக் கொண்டிருந்தால் என்ன ஆகும்? உலக அழிவுதான்! அழிக்க போவது மனித இனம்தான். ராட்சதர்கள் என்று ஒரு இனம் புராணங்களில் உண்டு. அவர்கள் கூட தன்னை தானே அழித்துக் கொள்ள மாட்டார்கள். எதிரியைத்தான் அழிப்பார்கள்! ஆனால் மனிதன் தன்னைத்தானே அழித்துக் கொள்கிறான்!  அப்படி என்றால் மனிதனுக்கு மனிதனே முதல் எதிரி ஆகிறான்!  இனியாவது விழித்து திருந்தட்டும்.
  இப்போது ஒரு இலக்கியச்சுவையை பார்ப்போம்!  பனிக்காலம் பற்றி பேசினோம் அல்லவா? அதைப் பற்றிய சுவை மிகுந்த  நிகழ்ச்சி இது.
     மார்கழிமாத குளிர் காலம், விடியல்காலை நேரம். கம்பளிப் போர்வையை சுற்றிக் கொண்டு திண்ணையில் அமர்ந்திருந்தார் ஒரு புலவர். அந்த சமயம் இன்னுமொரு புலவர் அந்தப் பக்கம் சால்வையைப் போர்த்திக் கொண்டு வந்தார்.
வந்த புலவரை பார்த்து முதல் புலவர், “பனிக்காலம் கொடிது” என்றார்.
 இரண்டாமவரோ அதை மறுப்பது போல தலையசைத்து, “ பனிக்காலம் நன்று”  என்றார்.

முதல் புலவர் சற்று யோசித்தார், பின்னர் சிரித்தபடி, ஆமாம்! ஆமாம்! “பனிக்காலம் நன்று” என்று  இரண்டாமவரை ஆமோதித்தார்.
  இருவர் பேச்சையும் கவனித்துக் கொண்டிருந்த வழிப்போக்கர் ஒருவர் குறுக்கிட்டு “ என்ன ஓய் புலவரே! முதலில் பனிக்காலம் கொடிது என்றீர்கள் இவர் சொன்னார் என்பதற்காக இப்போது பனிக்காலம் நன்று என்று கட்சி மாறி விட்டீர்களே? என்று முதல் புலவரை பிடித்து உலுக்கினார்.
    “நானும் கட்சி மாறவில்லை! இவரும் நான் சொன்னதை மறுக்கவில்லை! என்று சிரித்தார் முதல் புலவர்.
  “ என்ன குழப்புகிறீர்கள்?” என்றார் வழிப்போக்கர்.
முதல் புலவர் சொன்னார், நான் பனிக்காலம் கொடிது என்று மட்டும் தான் சொன்னேன். இவர் அதை மறுக்கவில்லை. அது எத்தனை கொடிது என்றுதான் சொன்னார். பனிக்காலம் நன்று. பதம் பிரித்து பாருங்கள். பனிக்கு ஆலம் நன்று. ஆலம் என்றால் விஷம். அதாவது பனியைவிட விஷம் நன்று. அப்படியென்றால் விஷத்தை காட்டிலும் கொடியது பனி. இப்போது புரிகிறதா? என்றார்.
    புலவர்களின் சொல்விளையாட்டை புரிந்து கொண்டு வியந்தார் வழிப்போக்கர்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


சுஜாதா நினைவு நாள்! அஞ்சலி!

$
0
0
                                        இன்று போல இருக்கிறது சுஜாதா மறைந்து! அது 2008ம் ஆண்டு பிப்ரவரி மாதம் என்று நினைக்கிறேன். இதே பிப்ரவரி மாதத்தில் முதல் முறையாக நண்பருடன்  திருமீயச்சூர் செல்ல வேனில் அமர்ந்திருக்கிறேன்!  நேரம் இரவு 7.30 இருக்கும். தங்கையிடம் இருந்து அழைப்பு வருகிறது. அண்ணா! சுஜாதா செத்துட்டாராம்!   என்னது? அதிர்ச்சியில் கேட்க! அண்ணா எழுத்தாளர் சுஜாதா செத்து விட்டாராம்!  ஒரு நிமிடம் உறைந்து போனேன்.  பின்னர் அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்தேன். திருமீயச்சூர் லலிதாம்பிகை தரிசனத்தின் போதும் அவருக்காக வேண்டினேன்.
   எழுத்தாளர் சுஜாதா எனக்கு அறிமுகமானது என்னுடைய பதிமூன்று வயதில் இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனந்தவிகடனில் என் இனிய இயந்திரா தொடராக வந்தபோது அதில் வரும் நாய்க்குட்டி பாத்திரம் பிடித்து படிக்க ஆரம்பித்தேன். மற்றவை புரியாது. அதில் இறுதியில் நாய் இறக்கும் போது அழுகையாக வரும்.  அப்புறம் நான் வளர்கையில் அவரது பல நாவல்களை படித்து வியந்து இருக்கிறென். கற்றதும் பெற்றதும் அவர் விகடனில் எழுதியபோது மிகவும் விரும்பி வாசிப்பேன். என்னுடைய ஆதர்ச எழுத்தாளராகி விட்டார் அவர்.  கிரிக்கெட் போட்டியைக் கொண்டு அவர் எழுதிய நிலா நிழல்! என்ற நாவல் எனக்கு மிகவும் பேவரைட் ஆக இருந்தது. கணேஷ் வசந்த் பாத்திரங்களை கொண்டு அவர் எழுதிய நாவல்களை மறக்க முடியாது. அவருடைய எல்லா நாவல்களையும் படிக்காவிட்டாலும் அவரது ஸ்ரீரங்கத்து தேவதைகள் படைப்பினை தொலைக்காட்சியில் பார்த்து வியந்து இருக்கிறேன். கிரிக்கெட் மேட்ச் பிக்சிங் வைத்து ஒரு சிறுகதை எழுதியிருப்பார் என்னால் மறக்க முடியாத கதை அது. 
   பன்முக திறமை கொண்ட மாபெரும் எழுத்தாளர் எளிமையாக வாழ்ந்து மறைந்தாலும் நமது உள்ளங்களில் கொள்ளைக் கொண்டுள்ளார். அவரது நினைவு தினத்தில்  சிலவற்றை பகிர்ந்து கொண்டு அவரை நினைவு கூர்வதில் பெருமை அடைகிறேன்! வாழ்க அவரது புகழ்!



இன்று - பிப்.27 : சுஜாதா நினைவு தினம். இதையொட்டிய சிறப்புப் பகிர்வு...

சுஜாதா என்றால் சுவாரஸ்யம். அழகியலையும் அறிவியலையும் குழைத்த பேனா. கன்னி மொழி, கணினி மொழி இரண்டுக்கும் அடையாளமான சுஜாதாவின் பெர்சனல் பக்கங்கள்...

* ஸ்ரீரங்கத்தைப் பூர்வீகமாகக்கொண்ட ரங்கராஜன் (சுஜாதா) பிறந்தது சென்னையில். தமிழ் இலக்கிய உலகில் பிரகாசமாக இருந்த சுஜாதா பிறந்தது 1935 மே 3.

* நாவல்கள், சிறுகதைகள், நாடகங்கள், தொகை நூல்கள் என 200-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதிஇருக்கிறார் சுஜாதா. புத்தகங்கள் எல்லாமே பல பதிப்புகள் கண்டவை. இன்னமும் விற்பனைப் புரட்சி செய்பவை. ஒரே ஒரு கவிதைத் தொகுப்பு 'நைலான் ரதங்கள்'!

* முதல் சிறுகதை 1958-ல் 'சிவாஜி' பத்திரிகையில் வெளிவந்தது. அந்தப் பிரதி அவர் கைவசம் இல்லை. 'கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கு எனது ராஜ்ஜியத்தில் பாதியும், எனது மகளையும் திருமணம் செய்துவைக்கிறேன்' என நகைச்சுவையாக எழுதினார். அடுத்த சிறுகதை 'இடது ஓரத்தில்' 1967-ல் வெளிவந்தது. முதல் நாவல் நைலான் கயிறு!

* பண்டிதர்களின் சுமையை நீக்கி புறநானூறு, திருக்குறள், சிலப்பதிகாரம், ஆழ்வார் பாசுரங்களோடு உரை எழுதினார் சுஜாதா. பெருத்த வரவேற்பைப் பெற்றன இந்த உரைகள்!

* இரண்டு நாய்க் குட்டிகளைச் செல்லமாக வளர்த் தார். பெயர் மிமி, கிவி. அமெரிக்கா செல்லும்போது அந்த நாய்க் குட்டிகளை பாலுமகேந்திராவின் வீட்டில் விட்டுச் சென்ற அனுபவம்கூட உண்டு. வயதாகி, அந்த நாய்கள் இறந்த பிறகு மீண்டும் வளர்ப்புப் பிராணிகள் வளர்ப்பதைத் தவிர்த்துவிட்டார்!

* முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமும் சுஜாதாவும், திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியிலும் சென்னை எம்.ஐ.டி. பொறியியல் கல்லூரியிலும் ஏழு வருடங்கள் ஒன்றாகப் படித்தவர்கள். இருவரும் பல சிகரங்கள் தொட்ட பிறகும் அந்த நட்பு உறுதியாக இருந்தது!

* 20 திரைப்படங்களுக்கு மேல் பணியாற்றி இருக்கிறார். கமல், மணிரத்னம், ஷங்கர் படங்களில் பணியாற்றும்போது, மிகவும் திறமையாக வெளிப்படுவார்!

* சுஜாதா இறுதியாக திரைக்கதை எழுதிய படம் ஷங்கரின் 'எந்திரன்'. கமலுக்காக எுதியது. பிறகு ரஜினி என முடிவானதும், திருத்தங்கள் செய்து முழுவதுமாக எழுதிக் கொடுத்துவிட்டார்!

* ஒரே சமயத்தில் தமிழகத்தில் ஏழு பத்திரிகைகளில் தொடர்கதைகள் எழுதிக்கொண்டு இருந்தார் சுஜாதா. எப்படிச் சாத்தியம் எனக் கேட்டதற்கு, ஒரு வாரத்துக்கு 28 பக்கங்கள் எழுத முடியாதா எனத் திருப்பிக் கேட்டு அதைச் சுலபமாக்கிவிடுவார்!

* தேர்தலில் பயன்படும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சுஜாதாவின் முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்று. இதற்காக, பிரசித்தி பெற்ற 'வாஸ்விக்' விருது பெற்றார். பின்னாளில் அதன் மீது எவ்வ ளவோ குறைகள் எழுந்தாலும், அவை எதுவும் நிரூபணமாகவில்லை என்பதுதான் உண்மை!

* சுஜாதாவின் கம்ப்யூட்டர், லேப்டாப் இரண்டையும் திறந்தால் உடனே தெரிவது ஸ்ரீரங்கம் ரெங்கநாதரின் கோபுர தரிசனம். எந்தக் காரணத்தை முன்னிட்டும், அதை மாற்றவே இல்லை!

* சுஜாதாவின் கணேஷ், வஸந்த் கதாபாத்திரங் கள் தமிழகக் குடும்பங்கள் மத்தியில் ரொம்பவே பிரபலம். வாசகர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கணேஷ், வஸந்த் என்று பெயர் சூட்டி மகிழ்ந்த காலங்கள் உண்டு. கணேஷ், வஸந்த் கதையில் வஸந்த் இறக்கும் தருவாயில் இருப்பதாக ஒருமுறை எழுதிவிட, அவர் என்ன பிளட் குரூப் என விசாரித்து சுஜாதாவுக்குத் தந்திகள் பறந்தன!

* கணையாழி இலக்கிய இதழில் 35 வருடங்கள் கடைசிப் பக்கம் என்று பத்தியைத் தொடர்ந்து எழுதினார். ஓர் எழுத்தாளர் இத்தனை வருடங்கள் தொடர்ந்து பத்தி எழுதியது சாதனை!

* ஒரு காலத்தில் விடாது புகைப்பார். பிறகு, ஹார்ட் அட்டாக்கில் பாதிக்கப்பட்டதும் திடீரென புகைப்பழக்கத்தை நிறுத்திவிட்டார். அதை முன்வைத்து விகடனில் எழுதிய கட்டுரை பிரசித்தி பெற்றது!

* உலகின் முக்கியமான எழுத்தாளர்களின் ஒரு புத்தகத்தையாவது படித்துவிட வேண்டும் என அடிக்கடி சொல்வார். அதைக் கிட்டத்தட்ட செய்துகாட்ட சிரத்தையோடுமுயற்சி செய்தவர்!

* புனைகதை எழுத்தாளராக இருந்தும் நூற்றுக்கணக்கான புதுக் கவிஞர்களை அறிமுகப்படுத்திக்கொண்டே இருந்தார். சுஜாதாவின் அறிமுகக் கண் பட்டவர்கள் இன்று உச்சத்தில் இருப்பது ஆச்சர்யமானது!

* ஹாலில் ஒரு புத்தகம், பெட்ரூமில் வேறு ஒரு புத்தகம், பாத்ரூமில் இன்னொரு புத்தகம், க்யூவில் நிற்கும்போது ஒரு புத்தகம் என மாறி மாறிப் படிக்கிற வழக்கமுடையவர் சுஜாதா!

* 1993-ல் மைய அரசின் அறிவியல் தொழில்நுட்ப விருதான என்.சி.டி.சி. விருது, ஊடகங்களில் அறிவியல் சிந்தனையைப் பரப்பியதற்காக சுஜாதாவுக்கு அளிக்கப்பட்டது!

* சுஜாதா எழுதின நாடகங்கள் பலவற்றை பூர்ணம் விஸ்வநாதன்தான் மேடையேற்றினார். அவர் எழுதிய நாடகங்களின் தொகுப்பு 900 பக்கங்களில் வெளிவந்திருக்கிறது. 'கடவுள் வந்திருந்தார்' நாடகம் பரபரப்பு பெற்றது!

* இறப்பதற்கு நாலு மாதங்களுக்கு முன்பே மூத்த மகனைக் கூப்பிட்டு, 'அம்மாவைப் பார்த்துக்கோ' என்று சொன்னார். அதன் அர்த்தம் யாரும் புரிந்துகொள்ளாத தருணம் அது!

* அப்பா இறக்கிற வரை மீசை வைத்திருந்தார் சுஜாதா. அவர் இறந்தபோது, மீசையை எடுத்தவர் மீண்டும் வைத்துக்கொள்ளவில்லை!

* பெண் குழந்தை இல்லையே என்ற வருத்தம் சுஜாதாவுக்கு இருந்ததாகச் சொல்வார்கள். ஆனால், அப்படி எந்த வருத்தமும் அவருக்கு இருந்தது இல்லை என மனைவி சுஜாதா குறிப்பிடுகிறார்!

* பங்களா வீடு, பென்ஸ் கார் என எதற்கும் ஆசைப்பட்டதில்லை சுஜாதா. தன் மூத்த மகன் திருமணம் செய்துகொள்ளவில்லை என்பது தான் சுஜாதாவின் வருத்தமாக இருந்தது!

* கணிப்பொறியியல், இலக்கியம், நாட்டார்வழக்காறு, தமிழ் செவ்விலக்கியங்கள், நாடகம், சினிமா, துப்பறியும் கதைகள், விஞ்ஞானக் கதைகள், சிறுகதைகள், குறுநாவல்கள், இசை என்று சுஜாதா தொடாத துறைகளே இல்லை!

* சுஜாதாவின் பிரபலமான மெக்ஸிகோ சலவைக்காரி ஜோக்கைக் கடைசி வரைக்கும் அவர் வாசகர்களுக்குச் சொல்லவே இல்லை. ஆனால், மிக நெருங்கிய நண்பர்கள் அத்தனை பேருக்கும் அந்த ஜோக்கைச் சொல்லி வாய்விட்டுச் சிரிப்பார் சுஜாதா. செம கி ஜோக் அது!

- நா.கதிர்வேலன்
(ஆனந்த விகடன் 19-05-2010)                                                                                                                        நன்றி: சுஜாதா ஃபேன்ஸ் முகநூல் குழுமம்.

ஓல்டு ஜோக்ஸ் 8

$
0
0

ஓல்டு ஜோக்ஸ் 8

ஒரு பட்டுப்புடவை செலக்ட் பண்ண பத்துகடை ஏறி இறங்கறீயே,ஞாயமா?

ஒரு பெண்டாட்டியை செலக்ட் பண்ண நீங்க மட்டும் முப்பது வீடு ஏறி இறங்கினேன்னு பீத்திக்கலை!
                              வெ. சீதாராமன்.


என்ன சார்! நீங்க கூட பொம்பளை மாதிரி சீரியல் பார்த்து அழுவுறீங்க!
 நல்லாப்பாருங்க! இது சீரியல் இல்லை! என் கல்யாண சி.டி ஓடுது!
                                    எஸ். எஸ். பூங்கதிர்.

உங்க கடை இட்லி மல்லிப் பூ மாதிரி இருக்கு!
 அவ்ளோ  மெத்துன்னு இருக்கா?
சைஸை சொன்னேன்!.. கொஞ்சம் பெரிசா போட்டுத் தொலைங்க!
                                   கே. அனந்தன்.

அன்பே நீ ஸ்டார் மாதிரி இருக்கே!
அது இருக்கட்டும்! என் வயித்துல “ஸ்டார் ப்ளஸ் வளருதே அதுக்கு ஒரு வழிச் சொல்லுங்க!
                                          க. கலைவாணன்.

அடடா! என் வீட்டுக்காரர் கிட்ட உனக்கும் ஒரு புடவை எடுத்து வரச்சொல்ல மறந்துட்டேன்!
  கவலையை விடுங்கம்மா! அதெல்லாம் அவர் கரெக்டா செஞ்சிடுவாரு!
                                 கமுதி எஸ். சேதுராமன்.

கடவுள் உனக்கு காட்சி தந்து இந்த செடியைக் கொடுத்துட்டு போனாரா.. ஏன்?
 நான் தா வரம் தா வரம்னு கேட்டதை அவர் தப்பா புரிஞ்சிகிட்டாருன்னு நினைக்கிறேன்!
                          சாயம் வெ.ராஜாராமன்.

நமது மன்னர் ஏன் சோகமாக காட்சி தருகிறார்?
 பி.ஏ படித்து பாஸ் ஆகிவிட்ட பின்னரும் அவரை எல்லோரும் பன்னிரண்டாவது குலோத்துங்க சோழன் என்றே அழைக்கிறார்களாம்!
                                   க. கலைவாணன்

புலவரே போருக்கு போய்விட்டு வந்த மன்னரைப் பார்த்து வண்டலா, கரிசலா, சரளையா என்று நீங்கள் கேட்க களி என்று சொல்லிவிட்டு போகிறாரே அதற்கு என்ன அர்த்தம்?
  மன்னர் போரில் தோற்று கவ்விய மண் எந்த வகை என்று நான் கேட்டேன், மண்ணை கவ்விய மன்னரும் களிமண் என்று கூறினார்.
                                              க. கலைவாணன்.

தேரோட்டி இல்லாமலே குதிரைகளை சரியான பாதையில் ஓடப் பழகியிருக்கிறேன் தளபதியாரே!
  வடக்குப்பக்கம் போர்முரசு சத்தம் கேட்டதும் இவை தெற்கு பக்கம் பாய்ந்தோடும் போதே புரிந்து கொண்டேன் மன்னா!
                                             இளவை ஜோகா.
உங்க நாய் ஏன் என்னை அமைதியா பார்க்குது?
குரைக்கிற நாய் கடிக்காதுனு அது காது பட சொல்லிட்டேன்!
                                   அம்பை தேவா.


கடைக்காரன் நல்லா ஏமாத்திட்டான்! தரைச்சக்கரம் சுத்தமாட்டேங்குது!

முதல்லே கண்ணாடியை மாட்டுங்க! அது கொசுவர்த்தி சுருளு!

                                      தஞ்சை தாமு.

தீபாவளிக்கு நீங்களே பலகாரம் செய்யப்போறதா உங்க ஹஸ்பெண்ட் கிட்ட சொன்னீங்களா?
ஆமா டாக்டர்  அதனாலே  என்ன?
அதிர்ச்சியான செய்தி எதுவும் அவர்கிட்டே சொல்லக்கூடாதுன்னு சொல்லியிருக்கேனா இல்லையா?
                                  எஸ்.எஸ் பூங்கதிர்.

மாப்பிள்ளைக்கு காது கேட்காதுங்கற விஷயம் தலைதீபாவளி அன்னிக்குத்தான் தெரிஞ்சது!
    எப்படி..?
இந்த வருஷம் தீபாவளிக்கு ஏன் யாருமே பட்டாசு வெடிக்கலைன்னு கேட்டாரு!
                                   வி. சாரதி டேச்சு.

புலவரே! இவ்வளவு புகழ்ச்சிக்கு நான் தகுதியானவன் இல்லை!

கொடுக்க காசு இல்லைங்கறதை நாசூக்கா சொல்றீங்களா மன்னா!

                                 வசந்தி வள்ளுவன்.

இது ரயில்வே வேலைக்கான தேர்வுதானே சார்?
 சரிதாம்ப்பா.. அதுக்காக இப்பவே ஒரு மணி நேரம் தாமதமா வர்ற உன்னை பரிட்சை எழுத அனுமதிக்க முடியாது!
                                       வசந்தி வள்ளுவன்.

மாப்ளே! நீங்க பிஸினஸ் பண்ற இடம் ஏக்கரா கணக்குல இருக்குன்னு மேரேஜுக்கு முன்னே சொன்னீங்களே!
   மாமா! இப்ப மட்டும் என்ன? பீச் ல சுண்டல் விக்கறேன்! பீச் ஏகப்பட்ட ஏக்கரா இருக்குமே!
                         சென்னிமலை சி.பி. ராதாகிருஷ்ணன்.

கைக்கடிகாரத்தை திருப்பி பார்த்து மணி சொல்றதுக்கு முந்நூறு ரூபா ஆகுமா?
  ஆமா! சேட்டுக் கடையில முந்நூறு ரூபாவுக்கு அடகுல இருக்கு, திருப்பினாத்தானே பார்க்கமுடியும்?
                                 இலவை ஜோகா.


எங்க மாதர் சங்க தயிர் கடையும் போட்டியில் எனக்குப் படு தோல்வி!

பட்டர் லக் நெக்ஸ்ட் டைம்!

                              உ.ராஜாஜி.

என்ன டாக்டர் ஆபரேஷனை பண்ணிட்டு இன்னும் தையல் போடாம போறீங்க?

 அடப்பாவி! இன்னும் நீ  உயிரோடத்தான் இருக்கியா?
                       அறந்தாங்கி. ஷக்தி ஷரவணன்.

நன்றி: ஆனந்தவிகடன் தீபாவளி மலர் 2005


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

மதுவிற்கு எதிராக ஓர் அறப்போர்! காந்தியவாதி சசிபெருமாள்!

$
0
0

காந்தியவாதி சசிபெருமாளை உங்களுக்குத்தெரியுமா? அவர் நடத்தி வரும் மதுவிற்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டம் பற்றி அறிவீர்களா?
   நிறைய பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை! எனக்கே இன்று முகநூலில் கார்டூனிஸ்ட் பாலாவின் பக்கத்தை பார்த்தபோது சசிபெருமாளையும் அவர் நடத்தி வரும் போராட்டத்தை பற்றியும் தெரியும். தமிழகத்தில் ஒரு காலத்தில் மதுவிலக்கு அமலில் இருந்து அரசு மாய்ந்து மாய்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சியவர்களை பிடித்து சிறையில் தள்ளியது.
  மது குடிக்க பெர்மிட் என்று ஒன்று கொடுத்து அதை வைத்திருப்பவர்கள்தான் குடிக்கலாம் என்று ஒரு சட்டம் இருந்தது. அந்த பெர்மிட்டை பெற பிரபலங்கள் கூட மிகவும் மெனக்கெட வேண்டியிருந்தது என்று பெரியவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன்.  அப்படிப்பட்ட தமிழகத்தில் இன்று மது ஆறாக  பெருக்கெடுத்து ஓடுகிறது. தண்ணீர் ஓட வேண்டிய ஆறுகளும் குளங்களும் வற்றி வரண்டு கிடக்க மது ஆறு மட்டும் வெள்ளப்பெருக்கில் இருக்கிறது.
   சின்னஞ்சிறு குழந்தைகள் கூட டாஸ்மாக்கில் சரக்கடித்துவிட்டு அலம்பல் பண்ணும் அதிசயக் காட்சிகளை காண்கிறோம். பல இடங்களில் பள்ளி மாணவர்கள் சரக்கடித்துவிட்டு பள்ளிக்கு வருகிறார்கள். நாளிதழ்களில் இதை புகைப்படமாக காணும் போது வேதனைதான் மிஞ்சுகிறது. குறிப்பிட்ட பண்டிகை நாட்களில் இவ்வளவு வியாபாரம் செய்து விட வேண்டும் என்று டார்கெட் நிர்ணயித்து டாஸ்மாக் ஊழியர்களை கெடுபிடி செய்கிறது அரசு.
   அவர்களும் நிர்ணயித்த அளவை விட அதிகம் விற்பனை செய்து சாதனை செய்கிறார்கள். ஆனால் இந்த சாதனையின் பின்னால் ஒளிந்திருக்கும் வேதனையை அரசோ அதிகாரிகளோ அறிந்ததாக தெரியவில்லை! குடியை அரசே ஊக்குவிப்பது மிகவும் கேவலமான விஷயம் அன்றோ! எத்தனை கூலித்தொழிலாளர்கள் தான் சம்பாதித்த காசை டாஸ்மாக்கில் கப்பம் செலுத்தி விட்டு வீட்டுக்கு வெறுங்கையோடு செல்கிறார்கள் தெரியுமா? எத்தனை தாய்மார்கள், பெண்கள் குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள்? இதையெல்லாம் கொஞ்சம் கூட உணராமல் மேலும் மேலும் குடியை ஊக்குவித்து வரும் தேசத்தில் காந்தியவாதியான சசிபெருமாளையும் அவர் நடத்தும் போராட்டத்தையும் அரசு ஒரு பொருட்டாக கருதாதுதான்.
  இதோ கார்டூனிஸ்ட் பாலா பகிர்ந்ததை பகிர்ந்து கொள்கிறேன்! இதைப்படித்து ஒரு சில குடிமகன்களாவது திருந்தினால் சரி!
    காந்தியவாதிபெரியவர்சசிபெருமாள்கடந்தஜனவரி 30 தேதிபூரணமதுவிலக்கைவலியுறுத்திமெரீனாகாந்திசிலையின்கீழ்உண்ணாவிரதம்இருந்தார். உடனேபொதுமக்களுக்குஇடையூறுவிளைவித்ததாகக்கூறிகைதுசெய்யப்பட்டார். ( கவர்மெண்டேசாராயவியாபாரம்செய்வதுபொதுமக்களுக்குஇடையூறுஇல்லையாம்.. ) சிறையிலும்உண்ணாவிரதத்தைதொடரவேமருத்துவமனையில்சேர்க்கப்பட்டார்.

இப்போதுவிடுவிக்கப்பட்டிருக்கும்நிலையில் 29 வதுநாளாகதொடர்ந்துமதுவிலக்கைவலியுறுத்திசசிபெருமாள்உண்ணாவிரதம்இருந்துவருகிறார். அவரதுஉடல்நிலைமோசமடைந்துவருகிறது.

அவரதுகோரிக்கைக்குவலுசேர்க்கநம்ஆதரவுஅவசியம். அதேசமயம்இப்போதுஇந்தியாவில்ஆட்சிசெய்பவர்கள்வெள்ளையர்கள்அல்ல.. ஜனநாயகமன்னர்கள். வெள்ளையர்களிடம்உண்ணாவிரத்திற்குஇருந்தமரியாதைஇந்தகளவாணிகளிடம்துளியும்கிடையாது..

செத்தாசெத்துட்டுப்போ.. அப்பாடா.. தொல்லைவிட்டதுஎன்றுதான்இந்தயோக்கியர்கள்நினைப்பார்கள்என்பதைகாந்தியவாதிகள்புரிந்துகொள்ளவேண்டும். அதனால்அரசின்சாராயவியாபாரத்திற்குஎதிரானமக்கள்போராட்டத்தைவேறுவடிவில்தொடருவோம்

   காந்தியவாதி சசி பெருமாளின் போராட்டத்திற்கு தோள் கொடுப்போம்! மது அரக்கனின் பிடியில் இருந்து தமிழகத்தை விடுவிப்போம்!

தங்கள்வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!



சங்கடங்கள் நீக்கும் மஹா சங்கட ஹர சதுர்த்தி விரதம்!

$
0
0

சங்கடங்கள் நீக்கும் மஹா சங்கட ஹர சதுர்த்தி விரதம்!

ஓம் தத்புருஷாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி
தன்னோ தந்தி ப்ரச்சோதயாத்!

ஏகதந்தம் மஹாகாயம் தப்த காஞ்சன ஸன்னிபம்
லம்போதரம் விசாலாக்ஷம் வந்தேஹம் கணநாயகம்!

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் வேனி நுடங்காது பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கையான் பாதம்
தப்பாமல் சார்வார் தமக்கு.

மாசிமாதம் தேய்பிறை  (கிருஷ்ணபட்சம்)சதுர்த்தி தினம் மஹா சங்கட ஹர சதுர்த்தியாக அனுசரிக்கப்படுகிறது.முழுமுதல் கடவுள் வேழமுகனாம் விநாயகக் கடவுளுக்கு மிகவும் உகந்த விரதம் சங்கட ஹர சதுர்த்தி விரதம். இது மாதம் தோறும் தேய்பிறை (கிருஷ்ணபட்சம்) சதுர்த்தி அன்று அனுஷ்டிக்கப்படுகிறது. வருடத்தில் இரண்டு முறை ஆவணி மற்றும் மாசி மாத தேய்பிறை சதுர்த்தி தினம் மஹா சங்கட ஹர சதுர்த்தியாக விசேஷமாக அனுஷ்டிக்க படுகிறது.
  விக்கினங்கள் தீர்க்கும் கடவுள் விநாயகர். அவரைக் குறித்து விரதம் இருந்து வழிபட்டு உபவாசத்துடன் நாள் முழுவதும் இருந்து அன்றைய தினம் இரவு சந்திரனை தரிசித்து வணங்கி பின்னர் உணவு அருந்த வேண்டும்.
  இந்த விரதம் மாசி மாத சங்கட ஹர சதுர்த்தியில் துவங்கி அடுத்த வருடம் மாசி மாதம் சங்கட சதுர்த்தி வரை தொடர்ந்து ஒரு வருடங்கள் அனுஷ்டிக்க வேண்டும். இவ்வாறு விரதம் அனுஷ்டிப்பதால் காரியசித்தி, விக்கினங்கள் அகலுதல், திருமணவரம், புத்திரபாக்கியம், நினைத்த காரியம் நிறைவேறுதல், ஆகியன கைகூடும்.
       விரத தினத்தன்று காலையில் நீராடி அருகில் உள்ள விநாயகர் ஆலயத்திற்கு சென்று வழிபட்டு உபவாசத்தை துவங்க வேண்டும் அன்று முழுவதும் ஆகாரம் அருந்த கூடாது. பின்னர் மாலையில் அருகில் உள்ள விநாயகர் ஆலயத்தில் நடைபெறும் சங்கடஹர சதுர்த்தி பூஜையில் கலந்துகொண்டு பின்னர் வீடு வந்து சந்திரன் உதயமானதும் வணங்கி விட்டு வீட்டு பூஜையறையில் விநாயகப் பெருமானுக்கு மலர் அர்ப்பணம் செய்து விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
  பின்னர் முழு உணவு அருந்தாமல் சிறிதளவு சிற்றுண்டி அல்லது பால் சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். விரத தினத்தில் காபி, டீ, பாக்குபோடுதல் போன்றவை கூடாது. விநாயகர் தோத்திரங்களை மனமுருக பாடி விநாயகரை நெஞ்சில் நிறுத்தி விரதம் மேற்கொள்ளவேண்டும்.
  ஆலயங்களுக்கு செல்ல முடியாதவர்கள் தம் வீட்டு பூஜையறையில் உள்ள விநாயகரை வழிபட்டு விரதம் தொடங்கி முடிக்கலாம். இவ்வாறு மாசி மாத சதுர்த்தியில் தொடங்கி அடுத்த மாசி மாத சதுர்த்தி வரை இந்த விரதம் மேற்கொள்ளவேண்டும்.
   முன்னொரு சமயம் பக்தர்களால் நிவேதிக்கப்பட்ட கொழுக்கட்டைகளை தன் வயிற்றில் நிரப்பிக் கொண்டு விநாயகர் தம் மூஞ்சூறு வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது விநாயகரின் பாரம் தாங்க முடியாமல் மூஞ்சூறு தடுமாறிக் கொண்டு இருந்தது. அது மிகவும் நெடுந்தொலைவு பயணித்து இருந்தமையால் களைப்பும் அடைந்து இருந்தது.
   அச்சமயம் நாகப்பாம்பு ஒன்று அவ்வழியே குறுக்கிட்டது. அதைக்கண்டு மூஞ்சூறு பயந்து நடுங்கி தாறுமாறாக ஓடத்துவங்கியது. விநாயகரையும் கீழே தள்ளிவிட்டது. இந்த அமளியில் விநாயகரின் தொந்தி வெடித்து கொழுக்கட்டைகள் சிதறின. ஆவேசமடைந்த விநாயகர் நாகப்பாம்பினை பிடித்து தன் வயிற்றினை சுற்றி கட்டிக் கொண்டார்.
   இந்த காட்சிகளை கண்டு ஆகாயத்தில் சந்திரன் பரிகசித்து சிரித்தான். வெகுண்ட விநாயகர் தன் தந்தம் ஒன்றை ஒடித்து சந்திரனை நோக்கி எறிந்தார். அவ்வளவுதான் சந்திரன் ஒளி மங்கி போனான். உலகம் இருண்டது. தேவர்கள் விநாயகரை சரண் புகுந்து சந்திரனை மன்னித்து அருளும் படி கூறினார்கள். விநாயகரும் சாந்தமடைந்து  பதினைந்து நாட்கள் ஒளி மங்கி போகவும் பதினைந்து நாட்கள் ஒளி அதிகரிக்கவும் அருளினார். தன்னுடைய சதுர்த்தி தினத்தில் சந்திரனை வழிபடுவோருக்கு நன்மைகள் கிடைக்கவும் அருள் செய்தார். இதன் அடிப்படையிலேயே சதுர்த்தி தினத்தன்று சந்திர தரிசனம் செய்யும் வழக்கம் உண்டாயிற்று.
   விநாயகப் பெருமானை வழிபடுவோரை சனி பிடிப்பதில்லை! விக்கினங்கள் அகலும்! வேதனைகள் மறையும்!
   சங்கட ஹர சதுர்த்தி நாளில் அருகில் உள்ள விநாயகர் ஆலயத்திற்கு சென்று விநாயகரை வழிபட்டு அருள் பெறுவோமாக!

தங்கள்வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

புகைப்பட ஹைக்கூ 17

$
0
0

நெருப்பு குவியலில்
நீந்தின வாத்துக்கள்
மாலை சூரியன்!

வென்னீரானது
தண்ணீர்
மாலைச்சூரியன்!

சூரியன் மூழ்கியதும்
சிவந்தது
குளம்!

வெட்கச் சிவப்பல்ல!
வெம்மைச் சிவப்பு!
மாலைச்சூரியன்!

அணைத்ததும்
குளிர்ந்தது
சூரியன்!

நீரில் கலந்தது
நெருப்பு!
மாலைச்சூரியன்!

குளித்த சூரியனை
பிடித்தன
பறவைகள்!

சிதறிய ஒளியை
சேர்த்துக் கொண்டது
நீர்!

கலந்ததும்
தணிந்தது
சூடு!                                                                                                                                        
 திலகம் வைத்துக் கொண்டது
ஏரி!
மாலைச்சூரியன்
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

விறகு வெட்டியும் ராஜாவும்! பாப்பா மலர்!

$
0
0

விறகு வெட்டியும் ராஜாவும்!  பாப்பா மலர்!

(செவிவழிக்கதை)

ஒரு ராஜா தன்னோட மந்திரியை கூப்பிட்டு “நீ அரண்மனையை பார்த்துக்க. நான் போய் நாட்டை சுத்தி பார்த்துட்டு வர்றேன்”னுட்டு குதிரை மேல ஏறிப் போனாரு.அவரு போன பாதையில யானை பிடிக்கிறவங்க யானையை பிடிக்க பெரிய குழியை வெட்டி அதுக்கு மேல இலை தழையைப் போட்டு பரப்பியிருந்தாங்க! இது நம்ம ராஜாவுக்குத் தெரியாது. கம்பீரமா குதிரை மேல பவனி வந்த ராசா அந்த குழியைக் கவனிக்காம “தொபுக்” கடிர்னு அந்த குழியில விழுந்தாரு.
     “அய்யோ என்னை யாராவது காப்பாத்துங்களேன்! தூக்கி விடுங்களேன்! ன்னு கத்தினாரு ராஜா. யாரும் கண்டுக்கவே இல்லை! அது அடர்ந்த காடாச்சே!  யாரும் உதவிக்கு வரலை. அப்போ அந்த பக்கமா ஒரு விறகு வெட்டி  மரம் வெட்டிப் போக வந்துகிட்டு இருந்தாரு. அவர் காதுல ராஜா போட்ட கூப்பாடு  விழுந்துச்சு.  யாரோ என்னமோ கிட்ட போனா மகாராஜா குழிக்குள்ள கிடக்காரு!
      அய்யா! விறகு வெட்டியே! என்னை குழிக்குள்ள இருந்து தூக்கி காப்பாத்து! என் சொத்துல பாதியை தரேன்! என்று சொன்னாரு ராஜா. ராஜா சொன்ன வாக்கை தவற மாட்டாருன்னு விறகு வெட்டியும் சரி ராஜா காப்பாத்தறேன்னுட்டு களத்துல இறங்கினாரு.
  அவரு கையில் ஒரு கயிறு இருந்துச்சு கயித்தோட முனையை ஒரு மரத்துல இறுக்கமா கட்டி மறுமுனையை பிடிச்சு குழிக்குள்ள இறங்கினாரு. ராஜாவை பத்திரமா தூக்கி வெளியே விட்டாரு. அந்த குழிக்குள்ள ஒரு பாம்பும் விழுந்து தவிச்சிகிட்டு இருந்துச்சு! அது வேற ராஜாவை பயமுறுத்திகிட்டு இருந்துச்சு! ஆனா அது பாவம் வெளியேற முடியாம தவிச்சிகிட்டு இருந்துச்சு. விறகு வெட்டி அந்த பாம்பையும் பயப்படாம பிடிச்சி வெளியே விட்டாரு. அப்புறமா ராஜாவோட  குதிரை அதையும் அந்த பள்ளத்திலே இருந்து சிரமப்பட்டு தூக்கி விட்டாரு. போதாக் குறைக்கு ஒரு குரங்கும் குழிக்குள்ள கிடந்துச்சு! அதையும் வெளியே எடுத்து விட்டு விறகு வெட்டி மேல வந்தாரு. ரொம்ப களைச்சு போய் அவரு மேல ஏறி வந்தா ஒரு நன்றி கூட சொல்லாம மகாராஜா குதிரை மேல ஏறி பறந்து போயிட்டாரு.
   விறகு வெட்டிக்கு ஒரே ஏமாற்றமா போயிருச்சு! நம்ம வேலையை விட்டு மெனக்கெட்டு காப்பாத்தினதுக்கு ஒரு நன்றி கூட சொல்லாம போயிட்டாரே! இவரு எப்படி பாதி சொத்தை தரப் போறாரு! நல்ல ராசாதான்! நம்ம விதி அவ்வளவுதான்னு சலிச்சிகிட்டு விறகு வெட்டி விறகை வெட்ட கிளம்பிட்டாரு.
   விறகு வெட்டி வழக்கத்துக்கு மாறா ரொம்ப தாமதமா வீட்டுக்கு வந்ததும் வீட்டுக்காரம்மா கேட்டாங்க! ஏங்க இன்னிக்கு ரொம்ப லேட்டு? ரொம்ப களைப்பா வேற இருக்கீங்க? என்ன நடந்துச்சு!
விறகு வெட்டியும் ராஜா குழிக்குள்ள மாட்டிகிட்டதையும் காப்பாத்தி விட்டதையும் சொல்லி பாதி சொத்து தரேன்னு சொன்னாரு! ஆனா நன்றி கூட சொல்லாமா கிளம்பிட்டாரு அதுக்கப்புறம் விறகுவெட்டிகிட்டு வர்றதுக்கு தாமதமாயிடுச்சுன்னு சொல்லிட்டு சாப்பிட்டு தூங்கிட்டாரு.
   மறுநாள் வழக்கம் போல விறகு வெட்டி காட்டுக்கு போய் விறகு வெட்ட  கிளம்பினாரு. காட்டுக்குள்ள போனா இவரு மரம் வெட்டற எடத்துல விறகுங்க வெட்டி போட்டு குவியலா இருக்கவே ஆச்சர்யப்பட்டு யாரு வெட்டி போட்டிருப்பாங்கன்னு அண்ணாந்து பார்த்தா இவரு காப்பாத்துன குரங்குதான் கிளைகளை ஒடிச்சு போட்டுகிட்டு இருந்துச்சாம்! அடடா ஒரு குரங்குக்கு இருக்கற நன்றி உணர்ச்சி கூட ராஜாவுக்கு இல்லாம போச்சேன்னு விறகு வெட்டி கண் கலங்கி நின்னாராம்.
  அப்போ இவரு காப்பாத்துன பாம்பு அங்க வந்து நாகரத்தின கல்லை கக்கிச்சாம்! இது உனக்குத்தான் நீ எடுத்து வித்து பிழைச்சிக்கன்னு சொல்லுச்சாம். விறகு வெட்டி ரொம்பவும் மகிழ்ந்து விறகையும் நாகரத்தினக் கல்லையும் எடுத்துகிட்டு வீட்டுக்கு சீக்கிரமாவே வந்தாரு. மனைவிகிட்ட நடந்ததை சொல்லி சந்தோஷப்பட்டாராம். அப்புறம் நாகரத்தின கல்லை சந்தைக்கு கொண்டு போய் நல்ல விலைக்கு வித்துட்டு வீடு வாசல்னு  கட்டி வசதியா ஆயிட்டாரு.
  இது பக்கத்து வீட்டுக்காரனுக்கு பொறுக்கலை! ஒரு சாதாரண விறகு வெட்டி இப்படி வசதியா மாறிட்டானேன்னு வயித்தெரிச்சல் பட்டு ராஜாகிட்ட போய் விறகு வெட்டி பத்தி புகார் சொன்னானாம்.
ராஜாவும் விறகு வெட்டியை அரச சபைக்கு கூப்பிட்டு விசாரிச்சாராம்! “ஏம்பா விறகு வெட்டி! நீ எப்படி ஒரே நாள்ல பணக்காரனா மாறிட்டே! யாருகிட்ட கொள்ளை அடிச்சேன்னு ராஜா கேட்கவும். விறகு வெட்டிக்கு கோபம் வந்துச்சாம்.
   ஆனா பதட்டம் அடையாம தைரியத்தோட தன் நியாயத்தை சொன்னாராம். ராஜா! உங்களை குழியில் இருந்து தூக்கிவிட்டா பாதி சொத்து தரேன்னு சொன்னீங்க! ஆனா தூக்கிவிட்டதும் ஒரு நன்றி கூட சொல்லாம கிளம்பிட்டீங்க! அதே குழியில் இருந்த குரங்கையும் பாம்பையும் தூக்கிவிட்டேன். குரங்கு சுள்ளி ஒடைச்சு போட்டது. பாம்பு எனக்கு நாகரத்தின கல்லை கொடுத்துச்சு. நீங்க என்னன்னா சொன்ன வார்த்தையை மறந்ததும் இல்லாம என்னோட பக்கத்து வீட்டுக்காரன் பொறாமையினாலே சொன்ன கதையை நம்பி என்னை இங்க கொண்டு வந்து விசாரிக்கறீங்க! நீங்க பெரிய ராஜாவா இருக்கலாம்! ஆனா உங்கள விட இந்த விலங்குகளுக்கு பாசமும் அதிகம் நன்றியும் அதிகம்!அப்படின்னு சொன்னாரு விறகு வெட்டி.
  ராஜாவுக்கு பளீர்னு அறைஞ்சாப்போல இருந்தது. தன் தவறை உணர்ந்தார். விறகு வெட்டியே என்னை மன்னித்து விடு! அப்படின்னு சொல்லி பக்கத்து வீட்டு காரனை கண்டித்து விட்டு விறகு வெட்டிக்கு தன் சொத்தில் பாதியை தந்து வழியனுப்பி வைச்சாரு.
   விறகு வெட்டியும் அந்த பொருட்களை பெற்றுக் கொண்டு சந்தோஷமாக வாழ்ந்தான்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளும் பவர்ஸ்டார்!

$
0
0

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளும் பவர்ஸ்டார்!

பவர் ஸ்டாரை தெரியாதவர்கள் இருக்க முடியாது. ஒரு காலத்தில் தானே சொந்தமாக படம் தயாரித்து நடித்து மக்களை மகிழ்ச்சி?!! படித்துக் கொண்டிருந்தார். ஆனால் மக்கள்தான் இவரை திரும்பிப்பார்க்க காணோம். நீயா நானா கோபிநாத் கூட இவரை நிகழ்ச்சிக்கு அழைத்து கலாய்த்து கல்லா கட்டினார். அதே சமயம் இப்படி கலாய்த்திருக்க கூடாது என்ற கல்லடியும் பட்டுக் கொண்டார். உண்மையில் அந்த நிகழ்ச்சி பவர் ஸ்டாரின் மீது ஒரு அனுதாபத்தையே ஏற்படுத்தியது.
   சொந்தப்படம் எடுத்து வெற்றிபெற முடியாமல் இதற்கிடையில் பல்வேறு மோசடி வழக்குகள் என்று கோர்ட் படியேறிக் கொண்டிருந்த பவர் ஸ்டாருக்கு  கொடுக்கிற தெய்வம் கூரையை பிய்த்துக் கொண்டு கொடுக்கிறது இப்போது. வாய்ப்பில்லாமல் இருந்த இவரை சந்தானம் தனது கண்ணா லட்டு தின்ன ஆசையாவில் மூன்று பேரில் ஒரு ஹீரோவாக ஆக்கினார்.
    ஹீரோவாகத்தான் நடிப்பேன்! என்று அடம் பிடிக்காமல் கிடைக்கிற வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்ட பவர் ஸ்டார் காட்டில் இப்போது மழை! கண்ணா லட்டு தின்ன ஆசையாவில் சந்தானம் பவரை ஏகத்தும் கலாய்த்தும் அவரின் நடிப்பு?!  ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப் போக இப்போது படாதிபதிகள் ஸ்டாரை நோக்கி படையெடுத்த வண்ணம் இருக்கின்றனர்.
    ஷெட்யூல் போட்டுக்கொண்டு ஒருநாளைக்கு மூன்று லட்சம் முதல் ஐந்து லட்சம் வரை கூலி வாங்கிக் கொண்டு நடித்து தள்ளுகிறார் பவர் ஸ்டார். தமிழ் சினிமாவில் வடிவேலு இல்லாத குறையை இப்போது கலைந்து வருகிறார் பவர். இதற்கிடையே லஷ்மிராயுடன்  ஒரு தகறாறு வேறு என மிகவும் பிசியான நடிகர் ஆகிவிட்டார்.
  போதாத குறைக்கு கட்டுமான நிறுவனம் ஒன்றின் விளம்பர படத்தில் நமிதாவுடன் ஜோடி போட்டு நடித்து அந்த நிறுவன பொருட்களை வாங்க ஆலோசனை சொல்லி வருகிறார்.
  ஆடம்பரம்! பாடிகார்டுகள் புடை சூழ பப்ளிசிட்டி பண்ணி வந்த பவர் ஸ்டார் இப்போது நிலைமைக்கு ஏற்ப காற்றுள்ள போதே தூற்றிக் கொண்டு காசு பார்த்து வருகிறார்! பிழைக்கத்தெரிந்த ஆளுதான்!

வாழு வாழ விடு! அஜித்தின் புதிய ஸ்லோகன்!

தல அஜித்  அடுத்து விஜயா புரொடக்சன் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் 5 தம்பிகளுக்கு அண்ணனாக நடிக்க இருக்கிறார் அஜித். இந்த படத்தில் அவருக்கு அண்ணனாக நடிக்க நடிகர் தேர்வு நடந்து வருகிறது.
   இதுவரைவிதார்த், பாலாசுஹைல், முனீஸ்ஆகியோர்தேர்வாகிஉள்ளனர். இதில்முனீஸ்சமீபத்தில்அஜீத்தைசந்தித்துதனதுநன்றியைதெரிவித்தார்.

இதுகுறித்துமுனீஸ்கூறியதாவது: நான்அவரைசந்தித்துநன்றிகூறவிரும்பினேன். "இதற்காகநேரத்தைவீணடிக்கவேண்டாம், படப்பிடிப்பில்சந்திப்போம்" என்றுசொன்னார். நான்தான்விடாப்பிடியாகஅவரைசந்திக்கநேரம்கேட்டுப்போனேன். என்னைதேர்வுசெய்ததேஅவர்தான்என்பதுஅன்றுதான்எனக்குத்தெரியும். நான்அவருக்குநன்றிசொன்னதும். அவர்எனக்குசிலஅறிவுரைகளைகூறினார். அதைஎன்இதயத்தில்எழுதிவைத்திருக்கிறேன். அவர்சொன்னதுஇதுதான்.

"கடுமையாகஉழைக்கவேண்டும், நாணயமாகவரிகட்டவேண்டும், மூத்தவர்களைமதித்துநடக்கவேண்டும். மூத்தவர்களுடன்நிறையநேரம்செலவிடவேண்டும். வருமானத்தின்ஒருபகுதியைஇயலாதவர்களுக்கும், இல்லாதவர்களுக்கும்கொடுக்கவேண்டும். அடுத்தவர்வாழ்வில்உன்கருத்தைதிணிக்ககூடாது. உன்வாழ்வில்அடுத்தவர்கருத்தைதிணிக்கஅனுமதிக்ககூடாது. நீயாருடன்பழகவேண்டும், பணிசெய்யவேண்டும்என்பதைபணம்தீர்மானிக்ககூடாது, உன்மனம்தீர்மானிக்கவேண்டும். வாழுவாழவிடு. இதுஎன்அறிவுரைஅல்லஅனுபவம்" இப்படிச்சொல்லிகைகொடுத்துவிடைகொடுத்துஅனுப்பினார்.

  அஜீத்யாரைசந்தித்தாலும், விடைகொடுத்துஅனுப்பும்போது "வாழுங்கள், வாழவிடுங்கள்" என்றுகடைசியாகசொல்லித்தான்அனுப்புகிறாராம். ஆட்டோகிராப்போடும்போதும் "வாழுவாழவிடு" என்றுஎழுதியேகையெழுத்துப்போடுகிறார்.
   தல எப்போதும் வித்தியாசமான ஆளுதான் இல்லையா?

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து உற்சாகப்படுத்துங்கள்! நன்றி!

திருவருள் தரும் திருமீயச்சூர் லலிதாம்பிகை!

$
0
0

திருவருள் தரும் திருமீயச்சூர் லலிதாம்பிகை!

10வது ஆண்டு ஏகதின லட்சார்ச்சணை திருப்பாவாடை நிவேதன வைபவம்!
        மாசிமாதம்21ம் தேதி  5-3-2013  செவ்வாய்க்கிழமை
        ஆக்கம்:   கடலூர் எஸ் கைலாச சிவாச்சர்யர், விழுப்புரம்

கும்பகோணம் மாயவரம் சாலையில் பேரளத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திருமீயச்சூர்.
    லலிதாம்பிகை இங்கு கோயில் கொண்டருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறாள். லலிதா சகஸ்ரநாமம் ஹயக்கீரிவ பெருமானால் குறுமுனியார் பதினென் சித்தர்களில் முதன்மையான அகஸ்தியருக்கு உபதேசிக்கப்பட்ட தலம்.
       “அகஸ்திய மகரிஷியே! இந்த மகாமந்த்ர ரூபமான ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமாவளியை உமக்கு நானாக கூறவில்லை! என் உள்ளத்தில் நிறைந்திருக்கும் அம்பிகையின் பிரேரணையால் உபதேசித்தேன்” என்று ஸ்ரீ மஹா சரஸ்வதியின் ஞானகுருவாகிய ஸ்ரீ ஹயக்கீரிவர் எடுத்தியம்பிய புண்ணியத் தலம்.
   அம்பிகை ஒன்பது விதமாக காட்சி தந்ததால் “ஸ்ரீ லலிதா நவரத்ன மாலை” ஸ்தோத்தரம் அகஸ்தியரால் தோற்றுவிக்கப்பட்ட நவரத்ன ஸ்தலம்.
   திருமீயச்சூர் திருத்தலம் மாடக்கோயில், மணிக் கோயில் ஞாழற்கோயில் வரிசையில் “இளங்கோயில்” என்னும் தனிச்சிறப்பு உடையது. ஸ்ரீபுர தர்பார் மண்டப அமைப்பில் ஸ்ரீ லலிதாம்பிகையின் சந்நிதி அபூர்வ அமைப்பு உள்ள ஒரே ஸ்தலம். அம்பிகையின் அங்க தேவதைகளான வசினீ- வாக்தேவதைகள் திருவாய் மலர்ந்தருளிய “ரஹஸ்ய நாம ஸஹஸ்ரம்” எனும் ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமத்தை ஸ்ரீ ஹயக்கீரிவ பெருமான் அகத்திய முனிவருக்கு உபதேசித்த தலம்.
  ஸ்ரீசக்ரத்தின் 44வது ஸ்தானமாகிய பிந்துவில் பேரொளிப் பிழம்பாய் ஸ்ரீ லலிதா பரமேஸ்வரி வீற்றிருக்கின்றாள். இந்த 4ம் 4ம் சேர்ந்தால் 8 அஷ்டமும் அம்பிகைக்கு பிரியமானது. க்ருஷ்ண பட்ச அஷ்டமி திதிக்கு ஸ்ரீ மஹாலஷ்மி அதி தேவதையாவாள். நவமி திதிக்கு மஹா சரஸ்வதி அதி தேவதையாவாள்.
    “மாத்ரு தேவோ பவ” அன்பு அருள், அரவணைப்பு, ஆதரவு, பந்தம், பாசம், பிரிவு, பணிவு, தயவு, தாட்சண்யம் எனும் தாய்மைக்குரிய குணநலம் நிறையப் பெற்றவள் திருமீயச்சூர் ஸ்ரீ லலிதாம்பிகை.
   அம்பிகை - அம்பாள் -  அம்மன் என்றாலே அன்னை என்றுதான் பொருள். தகுந்த நேரத்தில் உடலுக்கு அன்னமூட்டி பலமளிப்பவள். அருளும் பொருளும் சம்பாதிக்க உரிய காலத்தில் உணர்வூட்டி ஆதரவளிப்பவள். காரணம் எதுவும் இல்லாமல் கருணை காட்டுபவள். கன்றைவிட்டு பிரியாமல் பின் தொடர்ந்து செல்லும் கோமாதா போல “வாத்ஸல்யத்துடன்” பக்தர்களை தொடர்ந்து ரட்சிப்பவள் ஸ்ரீ லலிதாம்பிகை.
“ஸ்தோத்திர ப்ரியாயை நமஹ:” இந்த விஞ்ஞான மயமான கலிகாலத்தில் எக்கணமும் காத்து ரட்சிக்கும் அம்பிகையை மனமார போற்றி துதிக்க ஒரு பிடிப்பு வேண்டும்! மனம் லயிக்க வேண்டும்! அதற்காகவே “ஸ்ரீபுரமாகிய திருமீயச்சூரில்” தெற்கு நோக்கி சாந்த ஸ்வரூபியாக பஞ்சாசன பீடத்தில், ஸ்ரீ மேருவின் மீது அழகிய திருமேனி கொண்டு ஸர்வ அலங்காரத்துடன் எழில் ததும்பும் மலர்ந்த முகத்துடன் கண்ணையும் கருத்தையும் விட்டு நீங்காத கோலம் கொண்டு அமர்ந்த நிலையிலும் கால்களில் கொலுசு அணிந்து கொண்டு அவரவர் மன நிலைக்கு ஏற்ப திருக்காட்சி தந்தருள்கிறாள். ஒரு முறை கண் குளிரப் பார்த்தாலே நம்மை அறியாமல் ஸ்தோத்திரங்கள் நாவிலிருந்து வெளிவரும்.
   திருமீயச்சூர் திருத்தலத்தினை தரிசிப்பதும் ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமத்தை அர்ச்சிப்பதும் அல்பமான தவத்தின் பலன் அல்ல! இமயமலை போல குவிந்த தவத்தின் பயனே ஆகும். ஸ்ரீ லலிதா ஸஹஸ்ர நாமம் ஜபம் - பாராயணம் -அர்ச்சணை செய்யும் உபாசகர்கள் திருமீயச்சூர் சந்நிதிக்கு வந்து சமர்ப்பணம் செய்தால்தான் ஸர்வ பூர்த்தி காரி ஆகும் என்பது நியதி.
     திருமீயச்சூர் திருத்தலத்தின் பரம்பரை அறங்காவலர் வேளாக்குறிச்சி ஆதீன குரு மகா சன்னிதானம் ஸ்ரீ-ல-ஸ்ரீ சத்யஞானமகாதேவ தேசிக பரமாச்சர்ய சுவாமிகளின் திருவுளப்பாங்கின் அருளாணையின் வண்ணம் 10வது ஆண்டு ஏகதின லெட்சார்ச்சனை அபிஷேக ஆராதனை வைபவம் நிகழும் நந்தன வருஷம் மாசி மாதம் 21ந்தேதி 5-3-2013 செவ்வாய்க்கிழமை அஷ்டமி-நவமி திதியும் கேட்டை நட்சத்திரமும் சித்த அமிர்த யோகமும் கூடிய அஷ்டகா தினத்தன்று காலை 8.மணி முதல் இரவு 8 மணி வரை சிறப்பாக நடைபெற உள்ளது.
  அன்று மாலை அம்மனுக்கு அபிஷேக அலங்காரத்துடன் திருப்பாவாடை எனும் 50கிலோ சர்க்கரை பொங்கல் 50 கிலோ புளியோதரை,50 கிலோ தயிரன்னம், மற்றும் பழங்கள் பலகாரவகைகளுடன் படையல் நடைபெறும் அதுசமயம் அம்மனை நெய்க் குளத்தில் தரிசிப்பது காணவேண்டிய ஒன்று.
  லட்சார்ச்சனை தினத்தன்று அம்பாளுக்கு தங்க கவசம் சார்த்தப்படும். ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம புத்தகம் ஸ்ரீலஸ்ரீ குருமகாசன்னிதானத்தால் வெளியிடப்படும்.
  இப்பெரும் விழாவை தமிழகம் எங்கிலும் உள்ள ஆதிசைவ சிவாச்சார்யார்கள், மற்றும் அன்னையின் உபாசகர்கள், ஆன்மிக அன்பர்கள், பக்த கோடிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.
   நாடு நலம் பெறவும் நல்ல மழை பொழியவும், நாட்டு மக்கள் மகிழ்வுடன் வாழவும் ஸ்ரீ லலிதா உபாசனை ஒன்றே எளிய தலைச்சிறந்த மார்கமாகும். இப்பெரும் விழாவில் ஆன்மிக பெருமக்கள் கலந்து கொண்டு அன்னையின் அருள் பெற வேண்டுகிறோம்!

தொடர்புக்கு: கடலூர் எஸ். கைலாச சிவாச்சார்யர் ,விழுப்புரம். செல்: 9443189253
             டி.வி ரவிச்சந்திர சிவாச்சார்யர் நாராயணவரம் செல் 9440180621

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 9

$
0
0

உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 9

அன்பான வாசக பெருமக்களே! கடந்த சில வாரங்களாக தமிழின்பெருமைகளையும் நல்ல தமிழ் சொற்களையும் அறிந்து வருகிறோம். சென்றவாரத்தில் ணகர னகர  வேறுபாடுகளை கண்டோம்.அத்துடன் தமிழ் இலக்கியத்தையும் சுவைத்தோம். இன்றைய பகுதியில் நாம் காண இருப்பது பண்டைத் தமிழர்கள் வகுத்த நில வேறுபாடுகளையும்  கால வேறுபாடுகளையும் பற்றி அறிய இருக்கிறோம்.
  பண்டைத் தமிழர்கள் நிலங்களை ஐவகையாக பிரித்தனர். இதை நாம் பத்தாம் வகுப்பில் படித்து இருப்போம் அப்போது பாடமாக படித்தமையால் மறந்திருப்போம் இப்போது வாழ்க்கையாக படிக்கையில் மறக்க மாட்டோம் என்று நினைக்கிறேன். இப்போது ஐவகை நிலங்களை பார்ப்போம்.
  1.குறிஞ்சி- மலையும் மலைசார்ந்த இடமும்
 2. முல்லை - காடும் காடு சார்ந்த இடமும்
3.மருதம் - வயலும் வயல் சார்ந்த இடமும்
4.நெய்தல்- கடலும் கடல் சார்ந்த இடமும்
5.பாலை  வெப்பம் மிகுந்த சுரமும் சுரம் சார்ந்த இடமும்

ஐவகை நிலங்களை பார்த்தோம் கால நிலையையும் ஆறுவகையாக பிரித்தனர்.
1.கார்காலம் - ஆவணி,புரட்டாசி
2 கூதிர்காலம்- ஐப்பசி, கார்த்திகை
3. முன்பனிகாலம்- மார்கழி, தை
4.பின்பனிக்காலம்- மாசி, பங்குனி
5.இளவெனில்காலம்- சித்திரை,வைகாசி
6.முதுவெனில்காலம்- ஆனி, ஆடி
இவை பெரும்பொழுதுகள் என்று அழைக்கப்பட்டன. ஒவ்வொரு பெரும்பொழுதும் இரண்டு மாத கால அளவை கொண்டது.
இதேபோல ஒரு நாளை ஆறுவகையாக பிரித்தனர்
1.மாலை – கதிரவன் மறைந்த பிறகு இரவுப்பொழுதின் முதல் பகுதி
2.யாமம்- நள்ளிரவு, இரவுப்பொழுதின் நடுப்பகுதி
3.வைகறை- கதிரவன் தோன்றுவதற்கு முன் இரவுப் பொழுதின் இறுதிப்பகுதி
4.காலை- கதிரவன் தோன்றியதற்கு பிறகு பின் பகற்பொழுதின் முதற்பகுதி விடியற்காலம்
5.நண்பகல் – பகல்பொழுதின் நடுப்பகுதி
6. ஏற்பாடு- பகற்பொழுதின் இறுதிப் பகுதி, கதிரவன் மறைகின்ற காலம்.
இவ்வாறு தமிழர்கள் காலத்தையும் நிலத்தையும் பொழுதையும் அழகுத் தமிழில் அழைத்து பகுத்து வந்தனர். இவை இன்று வெறும் தேர்வுகளில் மட்டும் இடம்பெறுவதாக அமைந்து விட்டது காலத்தின் மாற்றம் என்று எண்ணாமல் இவைகளை பயன்படுத்த துவங்குவோம்.
இனிக்கும் இலக்கியத்தில் இன்று ராமச்சந்திர கவிராயர் இயற்றிய பாடலை பார்ப்போம்!
 வஞ்சகர்பால் நடந்தலைந்த காலில் புண்ணும்
வாசல்தோறும் முட்டுண்ட தலையில் புண்ணும்
செஞ்சொல்லை நினைந்துருகும் நெஞ்சில்புண்ணும்
தீருமென்றே சங்கரன்பால் சேர்ந்தேன் அப்பா!
கொஞ்சமல்ல பிரம்படியின் புண்ணும் வேடன்
கொடுங்காலால் உதைத்த புண்ணும் கோபமாகக்
பஞ்சவரில் ஒருவன் வில்லால் அடித்த புண்ணும்
பார் என்றே காட்டி நின்றான் பரமன் தானே!

புலவர் ஒருவருக்கு ஏற்பட்ட ஏமாற்றத்தை இப்படி பாடுகிறார் கவிஞர். பாடலின் தரம் அறிந்து ஆதரிக்காத வஞ்சக மனம் கொண்டோரின் வீடுகளுக்கு நடந்து நடந்து அவரின் கால்களில் புண் உண்டானது. அவர்களது வீட்டு வாசலில் நுழையும் போது பசி மயக்கத்தால் அடிக்கடி முட்டிக் கொண்டதால் தலையிலும் புண் ஏற்பட்டது.
   சிறந்த தமிழ் பாடல்களை சுவைப்போர் இல்லையே என்று வருந்தியதால் மனமும் புண் ஆனது. தன்னுடைய குறையை தீர்க்க வேண்டும் என்று சிவபெருமானிடம் முறையிட சென்றாலோ  சிவனோ, பாண்டியனின் பிரம்படி பட்ட புண்ணையும் கண்ணப்பனின் கால் பட்டதால் தோன்றிய புண்ணையும் அர்ச்சுனன் வில்லால் உண்டான புண்ணையும் இதோ பார் என்று புலவரிடம் காட்டினாராம்.
  தாம்தான் அடிபட்டோம் என்றால் சிவனும் இப்படியா அடிபட்டு நிற்கிறாரே என்று நகைச்சுவையாக மேற்கண்ட பாடலை பாடி முடித்தார் புலவர்.
  வறுமை நிலையிலும் என்னமாய் இருக்கிறது இலக்கிய சுவை! இதுதான் தமிழ் சுவை!

மீண்டும் அடுத்த பகுதியில் சந்திப்போம்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டம் மூலம் தெரிவித்து உற்சாகப்படுத்துங்கள்! நன்றி!

“குலமகள்”

$
0
0

  “குலமகள்”

“அன்பரே! தாங்கள் கட்டாயம் இந்த போரில் கலந்துகொண்டுதான் ஆக வேண்டுமா?” என்று கணவனின் மார்பில் சாய்ந்துகொண்டு கயல்விழி கேட்ட போது மீனைஒத்த அவள் விழிகளில் ஒரு மருட்சி தெரிந்தது. அவள் நிலவை ஒத்த அவள் முகத்தில் மேகம் மறைத்தார் போல ஒளி மங்கி கிடந்தது.
    “ என்ன இது கயல்விழி?தமிழரின் வீர மரபில் உதித்து வந்த உன் போன்ற குலமகளின் வாயில் இந்த வார்த்தைகள் வரலாமா?” “முறம் கொண்டு பகைவரை விரட்டியடித்த மூத்த தமிழ்க்குடிமகள்கள் வழி வந்த வீரப்பெண்மணி என்றல்லவா உன்னை நினைத்துக் கொண்டிருந்தேன்! வெட்கம்! நீ இப்படி பேசியிருக்க கூடாது!” என்று குரலில் சீற்றம் காட்டினான் அவளது கணவன் மகேந்திரன்.
    “ அதில்லை அன்பே! தங்களை பிரிந்திருக்க வேண்டுமே! என்று எண்ணி அவசரத்தில் பிரிவுத்துயரத்தில் ஏற்பட்ட வார்த்தைகள் அது!” குரல் உடைந்து சொன்னாள் கயல்விழி!
     “பிரிவு! தமிழ் வீர மரபில் சகஜம்தானே! மறவர் குடியில் போர்களும் வீர மரணங்களும் சகஜம்! வெற்றியும் வீர மரணங்களும் வீரர்கள் வாழ்வில் ஒன்று கலந்தது. இதை நீ அறியாயோ பெண்ணே?”
  “ஐயோ! தங்கள் வாயால் அப்படி சொல்லாதீர்கள்! மரணம் என்ற சொல்லை கேட்டாலே மனம் பதைக்கிறது.என்னுடைய உள் மனது ஏதோ ஒன்றை சொல்லி துன்புறுத்திக் கொண்டு இருக்கிறது! போரில் தங்களுக்கு ஏதாவது ஒன்று என்றால் என்னால் தாங்க இயலாது.” எனவேதான்..
   “எனவேதான் போக வேண்டாம் என்று புலம்புகிறாயா? சீச்சி என்ன இது கயல்விழி! இப்படி அழுது புலம்பும் சாதாரண பெண்ணாக நீ இருக்கிறாய்? நான் இதை விரும்பேன்!” குழந்தையாக இருந்தாலும் அது இறந்தோ அல்லது சதைப் பிண்டமாக பிறந்தால் தழும்பில்லாமல் புதைக்க கூடாது என்று அதை இரண்டாக பிளந்து புதைக்கும் வீரத்தமிழர் மரபில் வந்தவள் நீ ! அப்படிப்பட்ட மரபில் உதித்த நீ கலங்கக் கூடாது!”
     “தெரியவில்லை அன்பே! இன்று என் மனம் ஏதோ அபாயம் என்று எச்சரிக்கிறது! உங்களை போகவேண்டாம் என்று சொல்லசொல்லி என் உள்ளம் குமுறுகிறது. ஆமாம்! நம் அரசருக்கு அப்படி என்ன போரின் மீது ஆசை!”
    “அரசர்களின் கொள்கையே நாடுகளை வென்று வெற்றியை நிலை நாட்டி சக்ராதிபதியாக கொலொச்சுவதுதானே! நமது அரசர் குலோத்துங்கரும் தம் மூதாதையரின் வழியில் கலிங்கத்தின் மீது படையெடுக்க உள்ளார். இது அவர் புகழை கட்டாயம் பரவச்செய்யும். இந்தப் போரை புலவர் செயங்கொண்டார் களத்தில் நின்றே பாட உள்ளார். அந்த செய்யுள்கள் காலத்தால் அழியாது நமது அரசரின் வெற்றி பரணியை எல்லா உலகிலும் பரவச் செய்யும் அல்லவா? அந்த புகழ் பரவச்செய்யும் பணியில் ராமருக்கு அணில் உதவியது போல நானும் குலோத்துங்க மன்னருக்கு சிறு உதவியைச் செய்ய போகிறேன்! அதை நீ தடை செய்து விடாதே! தைரியமுடன் வழி அனுப்பு!”
   “ அன்பரே! ஒரு சிறு வேண்டுகோள்!”
  “என்ன?”
   “ அன்றில் என்று ஒரு நீர்ப்பறவை. நீரில் தன் துணையுடன் செல்லும்போது இடையே ஒரு மலர் குறுக்கிட்டாலும் அந்த கணப்பொழுது பிரிவைக் கூட தாங்கிக் கொள்ள முடியாமல் உயிரை விட்டுவிடும். அதே நிலைமையில்தான் நானும் உள்ளேன்! தங்களைப் பிரிந்து என்னால்..”
  “ உன்னால் இருக்க முடியாது என்று சொல்லுகிறாய்! அதற்கு நான் என்ன செய்ய முடியும்! வீரனுக்கு அழகு போரில் ஈடுபடுவதுதானே!” வீட்டில் முடங்கி  கோழையாக இருக்க என்னால் முடியாது கயல்விழி!”
    “ அன்பரே! நான் தங்களை போருக்கு போகவேண்டாம் என்று கூறவில்லை! நானும் போர்க்களத்திற்கு தங்களுடன் வருகிறேன் என்று சொல்லுகிறேன்!”
   “ என்ன இது! பெண்களையும் குழந்தைகளையும் போர்க்களத்திற்கு அனுப்புவது நம் மரபு இல்லையே!” இது எப்படி சாத்தியம்?
   “கவலைப் படாதீர்கள்! நான் ஒரு உபாயம் வைத்திருக்கிறேன்! நான் நன்றாக ரதம் செலுத்துவேன் என்று உங்களுக்கு தெரியும் அல்லவா? நான் ஆண் வேடம் தரித்து தங்களின் ரத சாரதியாக வந்து விடுகிறேன்!”
   “ நல்ல யோசனைதான்! உன் திறமையும் அரசரின் போரில் பங்குபெறட்டும்!” உனக்கும் வீரப்போரை கண்டுகளிக்க ஒரு சந்தர்ப்பம் அமையும்.
   
மகாராஜா குலோத்துங்கன் அவை
      குலோத்துங்க மன்னன் மந்திரி பிரதானிகள் சூழ அஷ்ட திக் கஜங்களுடன் ஆலோசனை செய்து கொண்டு இருந்தான்.
   “அமைச்சரே! சூழ்நிலை நமக்கு சாதகமாக இருக்கிறதா?”
“ நிச்சயம் சாதகமாகவே உள்ளது. இதுதான் கலிங்கத்தின் மீது படையெடுக்க சிறந்த தருணம்! இந்த போர் வரலாற்றில் எழுதப்படும்! தங்கள் வெற்றிச் சரித்திரம் காலத்தையும் வெல்லப் போகிறது மன்னா!”
   “படைத்தளபதியாரே! நமது படைகள் தயார் நிலையில் உள்ளனவா? வீரர்களிடையே ஒற்றுமை நிலவுகிறதா?”
   “அனைவரும் தயாராக உள்ளனர் மன்னா! காலாட்படைகள் நாற்பதாயிரம்! குதிரைப்படைகள் பத்தாயிரம் யானைகள் ஆறாயிரம், ரதங்கள் நான்காயிரம் என நம் படைகள் அணிவகுத்து தயாராக உள்ளது மன்னா!”
     இப்போது மன்னரின் பார்வை அரசவைப் புலவர் செயங்கொண்டாரின் மீது படிந்தது. “என்ன புலவரே! உம்மை தயார் செய்து கொள்ளும்! வெற்றி பரணி பாட இந்த குலோத்துங்கன் போரில் ஆயிரம் யானைகளை கொன்று சரித்திரம் படைக்கப் போகிறேன்!”
   “ தங்களின் வீரத்தை புகழ என் எழுத்தாணி தயாராக உள்ளது மன்னா! போர்க்களத்தில் நானும் நேரடியாக கண்டு கவிபாட தயாராக உள்ளேன்! உங்களின் புகழ் இந்த செயங்கொண்டானால் திக்கெட்டும் பரவப் போகிறது. பரணி பாட நான் இப்போதே தயார் மன்னா!”
     “ நன்று புலவரே! நன்று!”
வரலாற்று சிறப்புமிக்க அந்த யுத்தம் வெகு சீக்கிரமே துவங்கி விட்டது. அப்போரில் கலந்து கொண்டவர்கள் எழுப்பிய சத்தம் ஆர்பரிக்கும் கடலலைகளையும் மிஞ்சிவிட்டது. பரி என்னும் குதிரைகளின் குளம்பொலியும் யானைகளின் பிளிறல்களையும் எட்டுத்திக்கிலும் எதிரொலிக்கச்செய்தது.
  நாணிலிருந்து புறப்படும் அம்புகளின் ஒலி வெடியொலியோ என்னும் அளவிற்கு விண்ணை பிளந்துகொண்டு வருவது போல கேட்டது. அந்தப் போரில் அடிபட்டோரின் அலறல் ஒலி  காதுகளை செவிடாக்கும் வண்ணம் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தது.
  பெரிய புலிகள் புலிகளோடு மோதுவது போல வீரர்கள் வீரர்களோடு மோதிக் கொண்டனர். அவர்களின் கர்ஜனைகள் காத தூரம் ஒலித்தது. சிங்கங்கள் இரண்டும் மோதிக் கொண்டால் எப்படி இருக்குமோ அப்படி குலோத்துங்க மன்னனும் கலிங்க அரசன் அனந்த வர்மனும் மோதிக் கொண்டார்கள்.அந்த போர்க் களம் எங்கும் குறுதியாறு ஓடிக் கொண்டிருந்தது.  இறந்த உடல்களும் அடிபட்டு கிடப்போரும் மலை போல குவிந்து கிடந்தார்கள்.
   இக்காட்சிகளை மகேந்திரனுக்கு ரதசாரதியாக இருந்த கயல்விழி பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் கணவன் வீரப் போர் புரிய அவள் உறுதுணையாக இருந்தாள். அந்த களத்தில் அவள் மிகவும் திறமையாக ரதம் செலுத்திக் கொண்டு இருந்தாள். அதே சமயம் அவள் பேதை உள்ளம் பதைபதைத்தது. அலறித் துடித்தது.
   விருந்தினரும் வறியவரும் உண்பதைக் கண்டு முகமலரும் சான்றோர் போல கழுகுகள் தம் உடலை திண்ணும் போது வீரர்களின் முகம் மலர்ந்து கிடந்தது. இவ்வாறு அவள் எண்ண ஓட்டம் செல்லும் சமயம்தான் அது நடந்தது.
   வீரப்போர் புரிந்ததில் சற்று களைத்த மகேந்திரன் சுதாரிக்கும் முன் எதிரின் கூர்மையான அம்பு ஒன்று மகேந்திரனின் மார்பை துளைத்தது. அவன் அலறிச் சாயும் முன்
  அன்பரே! அய்யோ! நான் நினைத்தது போல விபரீதம் நடந்துவிட்டதே! என்று அலறியவாறே ரதத்தில் இருந்து குதித்து கணவனை பூமியில் விழாத வாறு தாங்கினாள் அந்த உத்தமி.
   “ அன்பரே! என்றும் தாங்கள் என்னவர்! தங்களை யாரும் தொட அனுமதிக்கமாட்டேன்! அந்த பூமாதேவியான தரைமகளைக் கூட தங்களை தொட இந்த குலமகள் விரும்ப மாட்டாள்! என்று கணவனைத் தாங்கிய கயல்விழி மேலும் சொன்னாள். அன்பரே! தங்களை பிரிந்து ஒரு நொடியும் இருக்கமுடியாது என்னால்! வானுலகிலும் நானே தங்கள் மனைவி! அங்கு நானே உங்களை வரவேற்பேன்!” என்று கணவன் உயிர் பிரியும் முன் உயிர்நீத்தாள் கயல்விழி!
    தரைமகள்தன் கொழுநன் தன் உடலந் தன்னைத்
தாங்காமற் றன்னுடலாற் றாங்கி விண்ணாட்டு
அரமகளிர் அவ்வுயிரைப் புணரா முன்னம்
ஆவியொக்க விடுவாளைக் காண்மின்! காண்மின்!
                                         கலிங்கத்துப் பரணி.

டிஸ்கி: சரித்திரக் கதை எழுதும் அளவிற்கு நான் பெரியோன் இல்லை! கதையின் இறுதியில் வரும் கலிங்கத்து பரணி பாடலை படிக்கையில் சுவையாக இருந்தது. அந்த பாடல் இக்கதையை எழுத தூண்டியது. ஓரளவு சுவையாக எழுதியிருந்தால் உங்களின் பாராட்டுக்களை தாராளமாக வழங்குங்கள்! பிழைகள் இருப்பின் சுட்டிக் காட்டுக. பொறுத்தருள்க!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

மாமனாரின் அன்புப் பரிசு! முகநூலில் ரசித்தவை!

$
0
0
 ரொம்ப ஓவரா வளைஞ்சிடுச்சோ?

சைக்கிள்போட்டிஒன்றுஅறிவிக்கப்பட்டுஇருந்தது. ஒரேஒருகால்உடையஒருவரும்தன்பெயரைபோட்டியில்பதிவுசெய்தார். 

அருகில்இருந்தவர்கள் ''வெகுதூரம்சைக்கிளில்செல்லவேண்டும். அப்போதுகால்களைத்துப்போகுமேபரவாயில்லையா?'' என்றனர். 

அதற்குஅவர் ''உங்களுக்குசைக்கிள்ஓட்டும்போதுஇரண்டுகால்களும்வலிக்கும். ஆனால், எனக்குஒருகால்தான்வலிக்கும்'' என்றார்புன்சிரிப்புடன்.

#
தன்பலவீனங்களையும்பலமாகமாற்றத்தெரிந்தவனேவெற்றியாளன்.

ஒருஜெர்மானியர் ,ஒருபாகிஸ்தானியர்,ஒருஇந்தியர்மூவர்குடித்தகுற்றத்துக்காகக்கைதுசெய்யப்பட்டனர்.

அவர்களுக்குமுப்பதுகசையடிஅளிக்கஉத்தரவிடப்பட்டது. ஆனால்அதற்குமுன்அவர்கள்வேண்டுவதுஒன்றுசெய்யப்படும்எனச்சொல்லப்பட்டது.

ஜெர்மானியன்தன்முதுகில்ஒருதலையணைகட்டச்சொல்லிக்கேட்டான்.பத்துஅடியில்தலையணைகிழிந்துஅவன்பலமானகாயத்துக்குஆளானான்.
பாகிஸ்தானிதன்முதுகில்இருதலையணைகட்டச்சொன்னான்;

பதினைந்துஅடியில்தலையணைபிய்ந்துஅவன்முதுகுபிளந்தது.

மூன்றாவதுஇந்தியன்.,

ஷேக்சொன்னார்எனக்குஇந்தியர்களைப்பிடிக்கும். எனவேநீஇரண்டுவேண்டியவைகேட்கலாம்

இந்தியன்கேட்டான்எனக்கு 30க்குப்பதில் 50 கசையடிவேண்டும்

ஷேக்அவன்தைரியத்தைஎண்ணிவியந்தார்..”அடுத்தது”…

இந்தப்பாகிஸ்தான்காரரைஎன்முதுகில்கட்டுங்கள்!”

இதுஎப்புடிஇருக்கு?!

ஒருபணக்காரமாமியாருக்கு 3 மருமகன்கள். அதில்கடைசிமருமகன்நம்மநாராயணாசாமி.

அவளுக்குதன்மருமகனெல்லாம்தன்மேலஎவ்வளவுஅன்பாஇருக்காங்கன்னுதெரிஞ்சிக்கஆசையாஇருந்தது.

ஒருநாள்மூத்தமருமகனைஅழைச்சுக்கிட்டுபடகுப்பிரயாணம்போனாள். நடுவழியிலேதண்ணிக்குள்ளேதற்செயலாவிழுந்ததுபோலவிழ, மருமகன்பாய்ஞ்சுகாப்பாத்திட்டாரு.

மறுநாள்அவர்வீட்டுவாசல்லேஒருபுத்தம்புதுமாருதிகார்நின்னுட்டுருந்தது.

அதன்கண்ணாடியில்ஒருஅட்டைஒட்டப்பட்டிருந்தது.

"
மாமியாரின்அன்புப்பரிசு.."

ரெண்டாவதுமருமகனுக்கும்இந்தசோதனைநடந்தது.

அவரும்ஒருமாருதிகார்வென்றார்.

"
மாமியாரின்அன்புப்பரிசாக.."

மூன்றாவதுநம்மநாராயணாசாமிக்கும்இந்தசோதனைநடந்தது.

அவர்கடைசிவரைகாப்பாத்தவேஇல்ல.. 

மாமியார்கடைசியாபரிதாபமா "'லுக்கு" விட்டப்பநாராயணாசாமிசொன்னார்,

"
போய்த்தொலை..எனக்குகார்வேணாம்.. சாவுறவரைக்கும்சைக்கிள்லபோயிக்கிறேன்..பொண்ணாவளர்த்துவச்சிருக்க..?" 

மாமியார்செத்துட்டுது..

மறுநாள், நாராயணாசாமியின்வீட்டுவாசலில்ஒருபளபளக்கும்வெளிநாட்டுகார்நின்னுச்சு..

"
மாமனாரின்அன்புப்பரிசு" என்றஅட்டையோடு...!                              

நன்றி: ரிலாக்ஸ் ப்ளிஸ் முகநூல் குழுமம்
டிஸ்கி: இன்னும் சற்று நேரத்தில் திருமீயச்சூர் லலிதாம்பிகை ஆலயத்திற்கு தரிசனத்திற்கு செல்வதால் நாளை பதிவுலகம் பக்கம் வர இயலாது. புதன் அன்று சந்திப்போம்! உங்களை இம்சிக்க ஷெட்யூல் பதிவு உண்டு. நண்பர்களின் பதிவுகளை புதனன்று வாசித்து கருத்திடுகிறேன்! நன்றி!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து உற்சாகப்படுத்துங்கள்! நன்றி!


புகைப்பட ஹைக்கூ 18

$
0
0

புகைப்பட ஹைக்கூ 18

பச்சை சேலையில்
வெள்ளை ரோஜாக்கள்
நாரைகள்!

வெள்ளை படைகள் புகுந்தும்
விரட்டவில்லை வயல்!
நாரைகள்!

சொட்டுநீலம் போடாமலே
ஜொலித்தன
நாரைகள்!

அரசியல் கூட்டமல்ல
ஆகாரத்தேடுதல்
நாரைகள்!

குடும்பச்சுற்றுலா
கொண்டாடி மகிழ்ந்தன
நாரைகள்

வெள்ளையர்கள்
கொள்ளையடித்தனர் மனதை
நாரைகள்!

விருந்தினர் வருகை!
களித்தது நிலம்!
நாரைகள்!

நிலத்தில் பூத்தன
வெண் தாமரைகள்!
நாரைகள்!

 பச்சைவயலுக்கு
இச்சைப்பட்டன
நாரைகள்!

சுற்றத்துடன்
சுகமான குளியல் போட்டன
நாரைகள்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து உற்சாகப்படுத்துங்கள்! நன்றி!

Viewing all 1537 articles
Browse latest View live