Quantcast
Channel: தளிர்
Viewing all articles
Browse latest Browse all 1537

அம்மா எனை வாழ்த்திடு! அன்னையர் தின கவிதை!

$
0
0
அன்னையர் தின கவிதை!   அம்மா எனை வாழ்த்திடு!

எண் சாண் வயிறினிலே
எட்டிஉதைத்த என்னை
பத்துமாதம் சுமந்தாய்!
நான் உருவாகும் வேளையிலே
உன் உடல்வலிகள் பொறுத்தாய்!
உண்டிட்ட உணவை எல்லாம்
எனக்காக நீ எடுத்தாய் வாந்தி!
ஒருக்களித்துபடுத்து என் சுவாசம் காத்தாய்!
புள்ளைக்கு ஆகாதென
புதுத் துணி நீ தவிர்த்தாய்!

மேடிற்ற வயிறை தடவியே மகிழ்ந்தாய்!
மூடிவைத்த சிப்பிக்குள் முத்தாய் எனை நீ காத்தாய்!
பிரசவ வலி எடுத்து நீ துடித்த வேளையிலும்
பிஞ்சு நான் உதித்ததும் உன் வேதனைகள் மறந்தாய்!
பாலூட்டி சீராட்டி பாசமுடன் வளர்த்தாய்!
பிள்ளைக்கு பிடிக்குமென பிரமாதமாய்
நீ சமைப்பாய்! அன்றைக்கு பிடிவாதமாய்
நண்பண்வீட்டில் சாப்பிட  உன் முகம் வாடும்!
தந்தையின் கோபத்திற்கு
தடுப்பணை நீ போட்டாய்!
இன்றைக்கு மட்டுமல்ல என்றைக்கும் நீ
எனை காப்பாய்!

பிள்ளைக்கு தாய்தானே கடவுள்!
உன் பசியை மறைத்து என் பசி
தீர்த்திடுவாய்! என் மனதை நீ
படம் போல படித்திடுவாய்! உன்
ஆசை என்னவென்று நானறியும் முன்னே
என்  தேவை நீ பூர்த்தி செய்தாய்!
உலகத்தில் ஓர் ஆயிரம் உறவிருந்தாலும்
உயிர்தந்த அன்னை  உன் னை நான் மறக்க இயலுமா?
உலகாளும் மன்னருக்கும்  உயர்ந்தவள்
உய்வித்த அன்னை அன்றோ?
அன்னையர் தின நாளில் அடிபணிகிறேன் 
அம்மா எனை வாழ்த்திடுவீரே!

தங்கள் வருகைக்கு நன்றி பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்யலாமே! திரட்டிகளில் வாக்களித்து பிரபலபடுத்தலாமே!

(மீள்பதிவு)

Viewing all articles
Browse latest Browse all 1537

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!