கோணலானும் கழுதையும்! பாப்பா மலர்!
கோணங்கிபுரம்என்றநாட்டை‘கோணலான்’ என்றமன்னன்ஆண்டுவந்தான்.அவனுக்குஅசட்டுநம்பிக்கைகள்அதிகம்! காலையில்கோவேறுகழுதையைப்பார்த்தால்நல்லதுஎன்பதற்காகபடுக்கையறையில்ஒருகோவேறுகழுதையைகட்டிவைத்திருந்தான்என்றால்பாருங்கள். இவனதுஅசட்டுநம்பிக்கைகளுக்குஅளவேஇல்லாமல்போனது. நிறையபோலிச்சாமியார்கள்அறிமுகம்ஆகிநாட்டைகெடுத்துவந்தனர். அவர்களின்பேச்சைதட்டமாட்டான்கோணலான்.
அந்தநாட்டின்மந்திரிமன்னனின்கோணல்புத்திக்கேற்பஜால்ராதட்டிபிழைத்துவந்தான். இல்லாவிட்டால்அவனுக்குபிழைப்புஇல்லாமல்போய்விடுமே! சாமியார்கள்கூறினார்கள்என்றுபெரியயாகம்ஒன்றுக்குஏற்பாடுசெய்தமன்னன்யாகத்திற்கானபொருட்களைமக்களிடம்பிடுங்கிஇருந்தான். இந்தசமயத்தில்தான்அவனுக்குபல்வலிவந்தது.
வாயெல்லாம்வீங்கிபேசமுடியாமல்இருந்தமன்னனைகண்டமந்திரி, ”மன்னா! என்னஆயிற்றுஏன்இப்படிமுகத்தைஉம்மென்றுவைத்திருக்கிறீர்கள்?”என்றான். பல்வலியின்உச்சத்தில்கோபத்தில்மன்னன்கத்தினான். “அடேய்முட்டாள்கழுதையே! நானேபல்வலியில்துடிக்கிறேன்! நீஎன்னைஉம்மனாம்மூஞ்சிஎன்கிறாயா? அருகில்நில்லாதேஓடிப்போ! ”என்றான்.
பல பேர் முன்னிலையில் தன்னைகழுதைஎன்றுஅசிங்கப்படுத்திவிட்டானே இந்த அசட்டு மன்னன்.இவனுக்குதக்கதண்டனை கற்பிக்கவேண்டும்என்றுமனதில்கறுவிக்கொண்டான்மந்திரி. உடனே பவ்யமாக “மன்னா! மன்னிக்கவேண்டும்தங்களுக்குபல்வலிஎன்றுதெரியாமல்உளறிவிட்டேன்பல்வலிக்குஅருமருந்துஎன்னிடம்உள்ளது. தாங்கள்விரும்பினால்..” என்றுஇழுத்தான்மந்திரி!
”அடேய்! அடேய்! முட்டாளே! முதலில்உன்வைத்தியத்தைசொல்!
அப்புறம்மன்னிப்புஎல்லாம்!” என்றுஎரிந்துவிழுந்தான்கோணலான், “சரிசரிஉனக்குஇந்தவைத்தியம்எப்படிதெரியும்அதைமுதலில்சொல்!” என்றான்.
“ மன்னாஇந்தசிறுவனுக்குஏதுஅவ்வளவுஅறிவு! எல்லாம்தங்கள்குருநாதர்சித்தானந்தாசுவாமிகள்கூறியதுதான்என்றான்மந்திரி. “ குருநாதர்கூறியதா! அப்படிஎன்னமருந்துஅது? குருநாதரே நீங்கள்இதுவரைகூறவில்லையே?”அருகில்இருந்தசாமியாரைகேட்டான்மன்னன்.
“அ.. அது…!”இழுத்தான்சாமியார். “ மன்னரேஅவருக்குஇருக்கும்வேலையில்இதைஎன்னிடம்கூறியதைமறந்திருப்பார்என்னகுருநாதரேநான் சொல்வது சரிதானே! அன்று என் பல்வலிக்கு அருமருந்தை சொல்லி குணப்படுத்தினீர்களே! அதை மன்னருக்கு சொல்லலாமா?”என்றான்மந்திரி.
“எப்போது சொன்னேன் நினைவில்லையே இருந்துவிட்டு போகட்டும்எப்படியோமன்னரிடம்நல்லபேர்வாங்கினால் போதும் அதற்கு இந்த மந்திரி நல்ல வாய்ப்பை தந்திருக்கிறான் என்று மனதிற்குள் நினைத்துக்கொண்ட சாமியார், மந்திரியாரே! நீங்களே அந்த வைத்தியத்தை சொல்லிவிடுங்கள்! வயதாகி விட்டதால் நினைவு மழுங்கி விடுகிறது நினைவுக்கு வரவில்லை! என்றான் சாமியார்.
என்ன இருந்தாலும் மேன்மக்கள் மேன்மக்களே! தான் கூறிய வைத்தியத்தை கூட மறந்து விடுகின்றனர் பார்த்தீர்களா மன்னரே! நம் குருநாதர் என் பல் வலிக்கு கழுதை வைத்தியம் சொன்னார் அதை இப்போது மறந்து விட்டார்! என்றார் மந்திரி. கழுதை வைத்தியமா? சீக்கிரம் சொல்லுங்கள்! என் பல்வலி உங்களுக்கு விளையாட்டாகிவிட்டது இன்னும் நீட்டி முழக்கி கொண்டு இருக்கிறீர்களே! மாமன்னா! நான்கூறுகிறேன்!
”மாமன்னா! பல்வலிக்குகழுதையின்பால்சிறந்தமருந்து!”
”அப்படியானால் உடனே கழுதைப் பாலை கொண்டுவாருங்கள்!”
அங்கேதான் சிக்கலே இருக்கிறது மன்னா?”
“என்னய்யா சிக்கல் விக்கல் என்று…!”
“கழுதைப்பாலை வலி உள்ளவரே கழுதையின் பின்னங்கால் வழியாகநேரடியாக அதன் மடியில் இருந்து கறந்து அருந்தவேண்டும் என்று குருநாதர் கூறியிருக்கிறார்!”
“அப்படியா சொன்னீர்கள் குருநாதரே!”
குருநாதரால் மறுக்க முடியவில்லை வேறு வழியின்றி தலை ஆட்டினார்.
” வீர தீர பராக்கிரமசாலியான நீங்கள் ஒரு கழுதையின் பின்னால் சென்று மடியில் பால் கறப்பது நன்றாக இருக்காது என்றுதான்….” இழுத்தான் மந்திரி.
”அப்படியானால் என் பல்வலி குணமாவது உனக்கு பிடிக்கவில்லை!...”
”நான் அப்படி கூறுவேனா மன்னா!”
“பின் என்ன என் குருநாதர் சொல்லி எதை மீறி இருக்கிறேன்! உடனே ஒரு பால் கறக்கும் கழுதையை கொண்டுவர ஏற்பாடு செய்யுங்கள்.”
உடனே ஓர் முரட்டு கழுதைக்கு ஏற்பாடு செய்தான் மந்திரி.
கழுதை வந்ததும் சாமியாரைப் பார்த்து,” குருநாதரே! தயை செய்து எனக்கு சொல்லிக் கொடுத்தது போல மாமன்னருக்கும் கழுதைப் பால் கறப்பதை சொல்லி தாருங்கள்! பின்னர் மாமன்னர் பால் கறப்பார் ”என்றான்.
சாமியார் அதிர்ந்து போனார். ”என்னது நான் உனக்கு சொல்லிக் கொடுத்தேனா?”
”வரவர உங்களுக்கு ஞாபகமறதி அதிகமாகிவிட்டது குருநாதரே! உங்கள் மந்திரத்தை கழுதையின் மடிக்காம்பில் ஓதினால்தானே அந்த மந்திரம் பாலில் சென்று அரசரின் பல்வலியைப் போக்கும்.?” கழுதையின் பால் கறந்து மன்னரின் துயர் தீருங்கள் நமட்டு சிரிப்புடன் சொன்னான் மந்திரி.
சாமியார் வேறு வழியின்றி கழுதையின் பின்னங்கால் பக்கமாக சென்று மடியில் கை வைக்க முரட்டு கழுதை எட்டி ஓர் உதை விட்டது. பல் சிதறி விழுந்தது. ”ஆ! என் பல்! பல் போயிற்று!” என்று சாமியார் இரத்த வெள்ளத்தில் கதற
”மன்னா! உங்கள் பல்வலியும் போய்விடும் குருநாதர் உங்களுக்காக பல்லையே இழந்துவிட்டார் நீங்களும் முயற்சியுங்கள்!” என்றான் மந்திரி.
”ஆஹா! ”என்று மன்னன் கழுதையின் பின்னங்கால் பக்கம் குனிய கோபம் கொண்ட கழுதை பலங்கொண்ட மட்டும் எட்டி ஓர் உதை விட்டது. அந்த உதையில் கோணலான் என்ற பெயருக்கேற்ப கோணாலாகி போனது மன்னரின் முகம். “ஆ! ஐயோ! என்று என் பல் பல்! பல் எல்லாம் உடைந்து போயிற்றே!”
”பல் இருந்தால்தானே மன்னா! பல்வலி வரும்! அதனால்தான் பல்லைப் பிடுங்க இப்படியொரு அருமையான வழியை சொன்னார் குருநாதர்.” என்றான் மந்திரி இருவரையும் பழிவாங்கிய திருப்தியில் உள்ளூர நகைத்துக் கொண்டு…
(திருத்திய மீள்பதிவு)
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!