Quantcast
Channel: தளிர்
Viewing all articles
Browse latest Browse all 1537

இன்றைய தினமணி கவிதை மணியில் எனது கவிதை!

$
0
0


இன்றைய தினமணி கவிதை மணி இணையதளக் கவிதைப் பக்கத்தில் வெளியான எனது கவிதை! தொடர்ந்து ஆதரவளித்து என்படைப்புக்களை வெளியிட்டு வரும் தினமணி குழுமத்திற்கு மிக்க நன்றி!

கவிதையை வாசித்து கருத்திட்டு ஊக்கப்படுத்தும் வலையக நட்புக்களுக்கு மனமார்ந்த நன்றி!


மேகத்தில் கரைந்த நிலா:  நத்தம். எஸ்.சுரேஷ்பாபு

By கவிதைமணி  |   Published on : 04th November 2017 05:43 PM  |   அ+அ அ-   |  
கிராமத்து இரவொன்றின் நீள்பொழுதில்
தனியனாய் எனக்கு
நீண்ட துணையாக வருகின்றது நிலா!
அதன் மோனத்தில் வசீகரித்து மூழ்கையில்
வதனத்தில் உதிக்கிறது ஓர் புன்னகை!

நடுவானில் கம்பீரமாய் ஒளிவீச
சுற்றிலும் மின்மினிகளாய் நட்சத்திரங்கள்!
இரவின் கருமையை
இரவின் தனிமையை
அழகாக்கிய நிலவை ரசிக்கையில்
ஆபத்தொன்று சூழ்ந்தது!

கருமேகக் கூட்டமொன்று
உருவாகி நிலவினை விழுங்க வேகமெடுத்தது!
பதறிப்போனேன்! ஆனால் பதறவில்லை நிலா!
மேகம் நெருங்க நெருங்க
ஒளியிழந்தது பூமி! தன் காதலியை காக்க முடியாமல்!
மேகம் சிறிது சிறிதாய் நிலவை விழுங்க
நிமிடங்கள் நீண்டது!

கருமேகத்தினுள் ஓளிவெள்ளம் பாய்ச்சி
கரைந்து மறைந்த நிலா
மெல்ல தலைகாட்டியது!
மேகம் மறைக்க முடியுமோ என் புகழை!

மேகத்தில் கரைந்த நிலா
மேலும் அழகாகி குளிர்ந்தது!
குளிர்ந்த மேகம் பொழிந்த மழையில்
தேங்கிய நீரில்
பூமியில் தவழ்ந்த நிலா
மவுனமாய் புன்னகைத்துக் கொண்டிருந்தது!

Viewing all articles
Browse latest Browse all 1537

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!