Quantcast
Channel: தளிர்
Viewing all articles
Browse latest Browse all 1537

இந்த வார கவிதை மணியில் என் கவிதை!

$
0
0
இந்த வாரம் திங்களன்று கவிதை மணி இணைய தளத்தில் வெளியான எனது கவிதை. தொடர்ந்து வாய்ப்பு வழங்கும் தினமணி குழுமத்தினருக்கு மனமார்ந்த நன்றிகள்!


என் முதல் கனவு! நத்தம். எஸ்.சுரேஷ்பாபு

By கவிதைமணி  |   Published on : 25th November 2017 03:52 PM  |   அ+அ அ-   |  
ஒவ்வொரு நாளும் ஒர் கனவோடு விடிகிறது!
ஒவ்வொன்றும் புதிது புதிதாய்!
ஒளிப்படமாய் மனதில் ஓடினாலும்
வெளிப்படையாய் சொல்ல மறக்கிறது!
ஆழ்மனதில் புதைந்த நினைவுகள்
கண் மூடி உறங்குகையில்
கனவாக ஓடி மகிழ்விக்கின்றன!
எல்லோருக்கும் ஓர் முதல் கனவிருக்கும்!
எல்லோருக்கும் அது நினைவாவதில்லை!
நடிக்க விரும்புபவனுக்கு ஹீரோ ஆவது
முதல் கனவாயிருக்கும்!
படிக்க விரும்புபவனுக்கு பாடத்தில்
முதலிடம் வருவது முதல் கனவாயிருக்கும்!
தொழிலில் சாதிக்கத் துடிப்பவனுக்கு
தொழிலதிபர் ஆவது பெருங்கனவாயிருக்கும்!
என் முதல் கனவு என்பதெல்லாம்
எழுத்தறிவிக்கும் ஆசான் ஆவது!
வகையாய் வாய்ப்புக்கள் தவறியபோது
வருந்தினேன் கனவு கலைந்து!
 முதல் கனவு  கலையலாம்
 முடிவு வரை தொடரும் கனவுகள்
 என்றாவது ஒருநாள் பலிக்கும் என்ற
 நம்பிக்கை இருக்கும் வரை
 கனவுகள் நினைவாகும் காலம் வரும்வரை
 காத்திருப்போம்! கனவுகளை
 உயிர்த்திருப்போம்!

தங்களின் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள் நன்றி!

Viewing all articles
Browse latest Browse all 1537

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!