வஞ்சம் செய்வாரோடு: நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு
By கவிதைமணி | Published on : 03rd February 2018 01:20 PM | அ+அ அ- |
எண்ணத்தில் நஞ்சை வைத்தே என்றும்
இனிக்க இனிக்க பேசி
உள்ளகத்தே ஒன்றும் வெளியகத்தே ஒன்றும்
கள்ளம் வைத்து வஞ்சம் செய்வாரோடு
எட்டத்தே நிற்றல் இனிமை பயக்கும்!
கிட்டத்தே எட்டிடும் உயரமும்
கிட்டாமல் செய்திடும் வஞ்சம்!
பள்ளத்தில் தேங்கிடும் தண்ணீர் போல
உள்ளத்தே தேங்கிடும் வஞ்சம்!
பள்ள நீர் பாசி பிடித்து மாசாகும்!
உள்ள வஞ்சம் வளர்ந்து மோசமாகும்!
வஞ்சனைகள் செய்வாரோடு பழகப்பழக
வெஞ்சினங்கள் வந்து சேரும்!
பஞ்சணையில் படுத்தாலும் துயில் பிடிக்காது
பசித்து சாப்பிடவே மனமிருக்காது!
பஞ்சத்தில் அடிபட்டாலும் பிழைத்திடலாம்
வஞ்சத்தில் அடிபட்டால் வழியிருக்காது!
நஞ்சினினும் கொடிது வஞ்சம்!
நெஞ்சினில் அடையும் தஞ்சம்!
நஞ்சுக்கு உண்டு முறிவு !
வஞ்சனைக்கு இல்லை உய்வு!
வஞ்சனைக்கு கொடுக்க வேண்டாம் இடம்!
வஞ்சம் செய்வாரோடு பழகாதிருத்தல் திடம்!
தங்கள் வருகைக்கு நன்றி! கவிதை குறித்த உங்கள் கருத்துக்களை பகிர்ந்து செல்லலாமே!