Quantcast
Channel: தளிர்
Viewing all articles
Browse latest Browse all 1537

தினமணி-கவிதைமணி- வஞ்சம் செய்வாரோடு!

$
0
0

வஞ்சம் செய்வாரோடு: நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு

By கவிதைமணி  |   Published on : 03rd February 2018 01:20 PM  |   அ+அ அ-   |  
எண்ணத்தில் நஞ்சை வைத்தே என்றும்
இனிக்க இனிக்க பேசி
உள்ளகத்தே ஒன்றும் வெளியகத்தே ஒன்றும்
கள்ளம் வைத்து வஞ்சம் செய்வாரோடு
எட்டத்தே நிற்றல் இனிமை பயக்கும்!
கிட்டத்தே எட்டிடும் உயரமும்
கிட்டாமல் செய்திடும் வஞ்சம்!

பள்ளத்தில் தேங்கிடும் தண்ணீர் போல
உள்ளத்தே தேங்கிடும் வஞ்சம்!
பள்ள நீர் பாசி பிடித்து மாசாகும்!
உள்ள வஞ்சம் வளர்ந்து மோசமாகும்!
வஞ்சனைகள் செய்வாரோடு பழகப்பழக
வெஞ்சினங்கள் வந்து சேரும்!

பஞ்சணையில் படுத்தாலும் துயில் பிடிக்காது
பசித்து சாப்பிடவே மனமிருக்காது!
பஞ்சத்தில் அடிபட்டாலும் பிழைத்திடலாம்
வஞ்சத்தில் அடிபட்டால் வழியிருக்காது!
நஞ்சினினும் கொடிது வஞ்சம்!
நெஞ்சினில் அடையும் தஞ்சம்!
நஞ்சுக்கு உண்டு முறிவு !

வஞ்சனைக்கு இல்லை உய்வு!
வஞ்சனைக்கு கொடுக்க வேண்டாம் இடம்!
வஞ்சம் செய்வாரோடு பழகாதிருத்தல் திடம்!
தங்கள் வருகைக்கு நன்றி! கவிதை குறித்த உங்கள் கருத்துக்களை பகிர்ந்து செல்லலாமே!

    Viewing all articles
    Browse latest Browse all 1537

    Trending Articles


    ‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


    மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


    கலப்படம் கலப்படம்


    குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


    ஆசீர்வாத மந்திரங்கள்


    மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


    மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


    சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


    ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


    “உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!