தளிர் ஹைக்கூ கவிதைகள்!
வெப்ப மூச்சை
வெளியே விட்டது
மின்விசிறி!
சுட்டது
வெட்டிய மரங்கள்!
வயல்களில் முளைத்தன
வண்ணமிகு வீடுகள்!
நகர வளர்ச்சி!
கட்டிவைத்தார்கள்
மணத்தது
கூந்தலில் பூ!
ஒளிந்து கொண்டது
காற்று
ஓடிப்போனது தூக்கம்!
கூட்டம் கலைத்தது
வெடிச்சத்தம்
பறவைகள்!
முரட்டுத்தழுவல்
தள்ளாடியது கொடி
காற்று!
சாய்ந்து கொண்டதும்
ஒய்வெடுத்தார்கள்
துகில் உரித்ததும்
பசி அடங்கியது
வாழை!
பூத்துக் கொட்டின
பொறுக்க முடியவில்லை!
நட்சத்திரங்கள்!
காவல் இருந்தும்
கவர்ந்தன கண்கள்
இமைகள்!
மிதிபட்டன புற்கள்
உருவானது
பாதை!
பூக்கவில்லை
மணத்தது மண்
மழை!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து உற்சாகப்படுத்துங்கள்! நன்றி!