Quantcast
Channel: தளிர்
Viewing all articles
Browse latest Browse all 1537

தளிர் ஹைக்கூ கவிதைகள்!

$
0
0
தளிர் ஹைக்கூ கவிதைகள்!


வானம் அழுதது
பூமி மகிழ்ந்தது
மழை!

பற்றியதும்
வழுக்கியது
பாசி!

முடியும் வரை பயணம்!
அலுக்கவில்லை!
சருகுகள்!

அடைத்து விற்கிறார்கள்!
நிறையவே இல்லை!
சிப்ஸ்!

அனுமதியின்றி ஆக்ரமிப்பு
வீட்டினுள் புகுந்தது
ஒட்டடை!

தேயத் தேய
பிறந்தது வழி!
பாதை!


மேகப்படையெடுப்பு
சமாதானத் தூது!
வானில் கொக்குகள்!

தேடிக்கொண்டே இருக்கின்றன!
தொலைந்து போகின்றன
எறும்புகள்!

சிறைபட்ட கைதி!
சிக்கியும் தப்பினான்!
ஜன்னல் காட்சி!

துடைத்து எடுத்தாலும்
சேர்ந்து கொண்டே இருக்கிறது!
அழுக்கு!

கருவூன்ற
வெட்டப்பட்டன கன்றுகள்!
வாழை!


ரசிக்கவில்லை
ருசித்தது!
மாக்கோலத்தில் அணில்!

குளிர்ந்ததும்
குளிர்ந்தார்கள் மக்கள்!
மாலைச் சூரியன்

 தவழ்கையில்
 ஈரமானது தரை!
 குழந்தை!


 மலர் மேடை!
  ஜதிபோட்டன!
வண்ணத்துப்பூச்சிகள்!

 ஒளிந்து கொண்ட மரங்கள்!
வெளிச்சம் போட்டன
 மின்மினி!


 கொள்ளை அடித்தாலும்
 திருடனாவதில்லை!
  குழந்தைகள்!

  வீடெல்லாம் அலங்கோலம்
  அழகாய் இருந்தது
   குழந்தை!

 ஒளித்து வைப்பதில்லை!
 வெளிப்படுகிறது பாசம்!
 குழந்தைகள்!


  தெருவோர வெள்ளம்!
  மீண்டது குழந்தை உள்ளம்!
  காகிதக் கப்பல்கள்!

வணக்கம் அன்பர்களே!  பதிவர் கீதா சாம்பசிவம் மற்றும் நண்பர் பரமு சிவசாமி அவர்கள் கேட்டுக்கொண்டதன் பேரில் ஹைக்கூ, சென்ரியு, லிமரிக் பற்றிய விவரங்களுக்கான இணைப்பு கீழே கொடுத்துள்ளேன். நான் இங்குதான் இவரிடம்தான் ஹைக்கூ பயின்றேன். அதனால் அவர் எழுதிய இணைப்பை தந்துள்ளேன். நன்றி! ஹைக்கூ, சென்ரியு, லிமரிக், வடிவம்


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Viewing all articles
Browse latest Browse all 1537

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!