கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 26
- தலைவருக்கு செண்ட்ரல்ல பவர் அதிகம்!
பிரதமர்கிட்டேயா இல்ல அமைச்சர்கள் கிட்டேயா?
நீ வேற நான் சொன்னது செண்ட்ரல் ஜெயில்லன்னு!
- பாரதரத்னா விருதை கோடானுகோடி ரசிகர்களை பெற்றிருக்கும் அனுஷ்காவிற்கு தராமல் மாளவிகாவிற்கு தந்ததை வன்மையாக கண்டிக்கிறோம்..!
தலைவரே! அது மாளவிகா இல்லே மாளவியா!
- தலைவர் எதுக்கு இவ்ளோ பெரிய காந்தத்தை முதுகிலே கட்டிக்கிட்டு திரியறார்!
மக்களை கவர்ந்து இழுக்க முயற்சி பண்றாராம்!
- கல்யாணமான புதுசுல என் வொய்ஃப் வாயைத் திறந்து எதையும் பேசவே மாட்டா?
இப்போ?
வாயைத் திறந்தா மூடவே மாட்டேங்கிறா!
- மன்னா! இளவரசர் தங்கள் மகன் என்பதை நிரூபித்துவிட்டார்!
அடடா! அப்படி மெச்சும்படி என்ன காரியம் செய்தான்?
கோலிவிளையாட்டில் தோற்றுவிட்டு நண்பர்களை ஏமாற்றி ஓடி வந்துவிட்டார்!
- மன்னர் அரசு கஜானாவை திறந்துவிடுங்கள் என்று சொல்கிறாரே மக்கள் மீது அவ்வளவு அக்கறையா?
நீ வேறு காலியாக இருக்கும் கஜானாவை எதற்கு பூட்டிவைக்க வேண்டும் என்றுதான் அப்படி சொல்லுகிறார்!
- மூணு அடிக்கு பயந்த உன் பையன் இப்ப ஆறு அடிக்கு வளர்ந்திட்டானா? என்னடி சொல்றே?
முன்னெல்லாம் மூணு அடி வாங்கவே பயப்படுவான் இப்ப ஆறு அடிவரைக்கும் அசராம தாங்கறான்னு சொல்ல வந்தேன்!
- இவ்ளோ டெஸ்ட் எடுத்தும் ஏதோ ஒண்ணு குறையுதுன்னு சொல்றீங்களே டாக்டர் என்ன அது?
உங்க பில் அமவுண்ட் ரவுண்டா வராம கொஞ்சம் குறையுது அதைத்தான் சொன்னேன்!
- அவர் யாருக்கிட்டேயும் பல்லைக்காட்டிக்கிட்டு நிற்கமாட்டாரு…!
அதுக்காக டெண்ட்டிஸ்ட் கிட்ட கூட பல்லை காட்டமாட்டேன்னு சொன்னா பல்வலி எப்படி குணமாகும்?
- அந்த ஓட்டல் சர்வருக்கு ஆனாலும் இவ்வளவு நக்கல் கூடாது!
ஏன் என்ன ஆச்சு?
வடையில நூல் நூலா வருதுன்னு சொன்னா ஊசிப்போனா நூல் வராம என்னவரும்னு கேக்கறான்!
- பாம்பை மையமா வச்சு ஒரு படம் எடுத்தாரே டைரக்டர் படம் என்ன ஆச்சு?
பெட்டியை விட்டு வெளியே வரவே இல்லை!
- எனக்கு மரியாதை கொடுக்காட்டிக்கூட நான் போட்டு இருக்கிற இந்த காக்கி யூனிபார்முக்காவது மரியாதை கொடுன்னு கபாலிக்கிட்ட சொன்னது தப்பா போச்சு!
என்ன பண்ணான்?
யூனிபார்மை கழட்டி வாங்கிட்டு போயி மாலை மரியாதை பண்ணிக்கிட்டு இருக்கான்!
- காய்கறியெல்லாம் இப்படியா முத்தலும் சொத்தையுமா வாங்கிட்டு வருவீங்க இதைக்கூட ஒழுங்கா வாங்கத் தெரியாதா?
உன்னை செலக்ட் பண்ணி கட்டிக்கிட்டதுல இருந்து என்னோட லட்சணம் தெரியலையா?
- வக்கீல் எதுக்கு சட்டப் புத்தகத்தை தண்ணியிலே ஊற வைக்கிறார்?
சட்டத்தை கரைச்சு குடிக்க போறாராம்!
- தலைவர் மக்களோட மக்களா குடியிருப்பேன்னு சொல்றாரே எதுக்கு?
டாஸ் மாக் வாசல்ல குடியிருக்கிறதைத்தான் அப்படி நாசூக்கா சொல்றாரு!
- புலவரை எதற்கு கட்டிவைத்து சவுக்கால் அடிக்கிறார்கள்?
உலா பாடுகிறேன் என்று ‘பீலா” விட்டுக் கொண்டிருந்தாராம்!
- பதுங்குக் குழிக்குள் பதுங்கியிருந்த மன்னரை மணியடித்து யாரோ காட்டிக்கொடுத்தார்களாமே?
யாரும் காட்டிக்கொடுக்கவில்லை! அவர் இடுப்பில் இருந்த செல்போன் மணியடித்து தான் மாட்டிக் கொண்டார்!
- மாப்பிள்ளை பேங்க் ல வேலை பார்க்கிறார்னு சொல்லி ஏமாத்திட்டாங்களா? எப்படி?
ப்ளட் பேங்க் ல வேலை பார்க்கிறார்!
- தலைவர் உடனே ஒரு கிளினிக் ஆரம்பிக்கனும்னு எதுக்கு சொல்றார்?
அவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்திட்டாங்களே அதான்!
- சின்ன பட்ஜெட்ல படம் எடுக்கணும்னு சொன்னாங்க அதுக்காக இப்படியா?
ஏன் என்ன ஆச்சு?
செல்போன்ல படம் எடுக்கணுமாம்!
21. சிட்டியிலே க்ரைம் ரேட் கூடிப்போச்சுன்னு மீட்டிங் போட்டாங்களே அப்புறம் என்ன முடிவு பண்ணாங்க?
மாமூல் ரேட்டை உயர்த்தி கேட்பதுன்னு ஒருமித்து முடிவு பண்ணி இருக்காங்களாம்!
22. உடல் நிலை சரியில்லாத மன்னரை பார்க்க புலவரை அனுப்பியது தவறாக போய்விட்டது!
ஏன்?
இரங்கற்பா பாடிவிட்டார்!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!