Quantcast
Channel: தளிர்
Viewing all articles
Browse latest Browse all 1537

தித்திக்கும் தமிழ்! பகுதி 15 மணிநா ஆர்த்த மாண்வினைத் தேரன்!

$
0
0
தித்திக்கும் தமிழ்! பகுதி 15  மணிநா ஆர்த்த மாண்வினைத் தேரன்!

இன்று அவசர யுகம்! பொருளீட்ட கடல் கடந்து பறக்கிறார்கள். விமானங்கள், நவீன சொகுசு கப்பல்கள், பேருந்துகள், தொடர்வண்டிகள் என எத்தனையோ போக்குவரத்துச்சாதனங்கள் மலிந்துவிட்டன. அதே போல தொலைதொடர்பு சாதனங்களும் மிகுந்துவிட்டன. எங்கிருந்தாலும் அலைபேசி மூலம் தொலைக்காட்சி உரையாடல் செய்ய முடிகின்றது. தொழில்நுட்பம் பெருகிய இக்காலத்தில் பிரிவு என்பது ஒரு பெரிய வலியாக இருக்க முடியாது. அருகில் இல்லை என்ற வருத்தம் இருக்கும். நினைவுகள் அழுத்தும் ஆனால் உடனே அலைபேசியில் பேசி நம் மனதிற்கு பிரியமானவரிடம் உரையாடி ஆறுதல் காண முடியும்.

சங்க காலத்தில் அவ்வாறு கிடையாது. தலைவன் தலைவியை பிரிந்து சென்றால் திரும்பி வரும் காலம் வரை எந்த ஒரு செய்தி பரிமாற்றமும் கிடையாது. அப்படியே இருந்தால் தூதஞ்சல் மட்டுமே! தலைவி இப்படி தலைவன் வருகை இன்மையால் வாடியிருக்க அவளுக்கு நல்ல அறிகுறிகள் காட்டி தலைவன் விரைவில் திரும்பிவந்துவிடுவான் என்று நம்பிக்கை ஊட்டுவாள் தோழி. இத்தகைய காட்சிகளை அகநானூற்றில் அழகாக காட்சி படுத்தியுள்ளனர் பழந்தமிழ் புலவர்கள்.
இந்த தலைவனின் அன்பைப் பாருங்கள்! இப்படியொரு காதலனை கணவனாகக் கொண்ட அந்த தலைவி புண்ணியம் செய்தவள் அல்லவா? இதோ பாடல்! குறுங்குடி மருதனார் எத்தனை அழகாக இந்த பாடலை இயற்றியுள்ளார் பாருங்கள்!

  ''முல்லைவைந்நுனைதோன்றஇல்லமொடு
பைங்காற்கொன்றைமென்பிணிஅவிழ
இரும்புதிரித்தன்னமாயிருமருப்பிற்
பரலவல்அடையஇரலைதெறிப்ப
மலர்ந்தஞாலம்புலம்புபுறக்கொடுப்பக்
கருவிவானம்கதழுறைசிதறிக்
கார்செய்தன்றேகவின்பெறுகானம்
குரங்குளைப்பொலிந்தகொய்சுவற்புரவி
நரம்பார்த்தன்னவாங்குவள்பரியப்
பூத்தபொங்கர்த்துணையொடுவதிந்த
தாதுண்பறவைபேதுறல்அஞ்சி
மணிநாஆர்த்தமாண்வினைத்தேரன்
உவக்காண்தோன்றும்குறும்பொறைநாடன்
கறங்கிசைவிழவின்உறந்தைக்குணாது
நெடும்பெருங்குன்றத்தமன்றகாந்தட்
போதவிழ்அலரின்நாறும்
ஆய்தொடிஅரிவைநின்மாணலம்படர்ந்தே."


பணியின் நிமித்தமாக வெளியூர் கிளம்புகின்றான் தலைவன். கிளம்புகையில் தலைவி சோகமாகின்றாள். உங்களை பிரிந்து எப்படி இருப்பேன் என அவள் கேட்கையில் கார்காலத்தின் தொடக்கத்தில் உன்னிடத்தே இருப்பேன்! அதுவரை பொறுத்திரு! என்று சொல்லிச் செல்கின்றான்.

தலைவியோ தலைவன் திரும்பவில்லையே என்று தனது மெல்லிய உடல் மேலும் மெலிய பிரிவாற்றாமையினால் வருந்தினாள். அப்போது தோழி தலைவியைத் தேற்றுகின்றாள்.

இதோ கார்காலம் தோன்றிவிட்டது! நம் தலைவர் இப்பொழுதுவந்துவிடுவார் என்று அவள் தலைவன் வருகையை இவ்வாறு கண் முன்னே நிறுத்துகின்றாள். ஆராய்ந்து எடுக்கப்பட்ட வளையல்களை அணிந்த தலைவியே!

முல்லைக்கொடிகள் நிறைந்திருக்கும் வனத்தில் கொடிகளில் கூர்மையான வாசம் மிகுந்த மொட்டுக்கள் தோன்றுகின்றன. தோன்றா மரம் அரும்புகளுடன் விரிய கொன்றைமரத்தின் இலைகள் பசுமை பூக்க அதன் மொட்டுக்கள் மெல்லிய இதழ்களை விரிக்கின்றன.

இத்தகைய வனத்திலே இரும்பை முறுக்கிவிட்டது போன்ற இருபுறமும் நீள கரிய பெரிய கொம்புள்ள ஆண் மான்கள் பரல் கற்கள் நிறைந்த பள்ளங்களில் தேங்கியுள்ள நீரை அருந்தி மகிழ்ச்சியினால் துள்ளிக் குதிக்கின்றன.

இத்தனை நாட்கள் கோடையில் நீர் இன்றி தவித்த உலகம் தன் வருத்தம் நீக்க மேகக்கூட்டம் மின்னலுடன் தோன்றி தன்னுடைய நீரை சொறிந்தமையால் அழகிய கார்காலம் உதித்தது. முல்லை நிலமான இந்த கானகம் அழகாக விளங்குகின்றது. இந்த காலத்தே திரும்பி வருவேன் என்று நம் தலைவர் உரைத்த கார்காலம் துவங்கிவிட்டது.

வளைந்த தலையாட்டத்தினால் கொய்த  பிடரி மயிரினை உடைய குதிரைகளின் கடிவாளமானது நெகிழ குதிரைகள் விரைவாக ஓடுகின்றது. பூ பூத்த சோலையின் நடுவே தலைவனின் இந்த ரதமானது தலைவியின் பிரிவுத்துயரை போக்க விரைந்து கொண்டிருக்கின்றது. அப்போது கொன்றை மலர்களில் யாழின் நரம்புகள் ஒலித்தாற்போல ஓர் இனிமையான இசையை ஒலித்துக்கொண்டு வண்டுகள் தம் துணையுடன் தேனருந்திக் கொண்டு இருக்கின்றன.

இந்த காட்சியைக் கண்டதும் தலைவனுக்குள்ளே காதல் உணர்வு மேலிட தம் இரதத்தில் உள்ள மணியோசைகள் அந்த வண்டுகளின் காதலைப் பிரித்துவிடுமே என்று வருந்துகின்றான். உடனே தலைவன்  குதிரையின் கழுத்தில் உள்ள மணியின் நாவை இழுத்துக் கட்டுகின்றான். தம்மைப் போல வண்டுகள் பிரிவுத்துயர் அடைய வேண்டாம் என்ற அன்பில் அவன் இதனைச் செய்து முடித்தான்.

இத்தகைய அருள் சுரக்கும் குணமுடைய தலைவன், சிறிய மலைகளை உடைய நாடன், ஆரவாரிக்கும் ஓசையுடைய விழாவினை எடுக்கும் உறையூர்க்கு கிழக்கில் உள்ள நீண்ட பெரிய மலையில் பூத்த காந்தள் மலரைப் போன்ற உன் சிறந்த அழகினை எண்ணி உன் நினைவாக உன் பெண்மை நலம் பேணி தன் வினை முடித்து விரைந்து வருகின்றான் என்கின்றாள் தோழி.

எத்தனை அழகான உவமைகள்! எத்தனை எத்தனைச் செய்திகள் இதில்! உறந்தை என்று விளிக்கப்படுவது உறையூர். குன்றம் என்று குறிக்கப்படுவது சிராப்பள்ளி மலை குணாது என்றால் கிழக்கில் உறையூருக்கு கிழக்கே சிராப்பள்ளி மலையில் பூக்கும் காந்தள் மலரின் நறுமணத்தோடு தலைவியின் பேரின்பம் ஒப்பிடப்படுகின்றது.


இந்தப்பாடலை பன்னிரண்டாம் வகுப்பு படிக்கையில் எனது தமிழாசிரியர் திரு முருகேசன் அவர்கள் விளக்கியது அத்துணை சிறப்பாக இருந்தது. அவர் விளக்கம் இன்று நினைவில் இல்லாத போதும் தலைவன் வண்டுகள் பிரியுமே என்று மணிநாவை கட்டிய காட்சியை விவரித்தமை இன்னும் நினைவில் நிற்கின்றது.  இதை அப்படியே ஓர் சிறுகதையாக எழுதலாம் என்றும் ஓர் ஆசை உள்ளது. அப்படி பதிவிடலாம் என்றுதான் முதலில் நினைத்தேன். இந்தப் பகுதி அப்படி இல்லாமல் பாடல் விளக்கமாக எழுதுவதால் இப்படி பதிவிட்டேன்.

இந்தப்பாடலை எனக்கு எளிதாகத் தேடிக் கொடுத்த ஊமைக்கனவுகள் ஆசான் திரு விஜி அவர்களுக்கும் தேடலை நினைவுகூற வைத்த பாலமகி பக்கங்கள் பேராசிரியை மகேஸ்வரிபாலசந்திரன் அவர்களுக்கும் எனது நன்றிகள்.

மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தில் மீண்டும் ஒரு அழகிய பாடல் விளக்கத்துடன் சந்திப்போம்! நன்றி!




Viewing all articles
Browse latest Browse all 1537

Latest Images

Trending Articles


சாலை விபத்துகளும், அவற்றைத் தடுப்பதற்கான சட்டத் தேவைகளும்..!


Baywatch (2017) Tamil Dubbed Movie HD 720p Watch Online


நீங்கள் வாசித்த கிரைம் நாவல் கதாபாத்திரங்கள் சினிமாவுக்கு வருகிறார்கள்!


சித்தன் அருள் - 1613 - அன்புடன் அகத்தியர் - அம்பாஜி சக்தி பீடம்!


சித்தன் அருள் - 768 - தாமிரபரணி புஷ்கரம், அந்தநாள்>>இந்த வருடம் - கோடகநல்லூர்!


வட மாநிலங்களும் தவிப்பு டெல்லியில் 120 டிகிரி வெயில்: ராஜஸ்தானில்...


சென்ற வார பாக்யா ஜனவரி 20-26 இதழில் என் ஜோக்ஸ்!


புதுக்கோட்டையில் வலைப்பதிவு பயிற்சி


வசியம் செய்வது எப்படி..? வசிய மை,வசிய மருந்து ரகசியங்கள்


சித்தன் அருள் - 1167 - பொதிகை மலையும், திரிகூட மலையும்!



Latest Images