தளிர் சென்ரியு கவிதைகள்!
முடி ஆட்சி ஒழிந்தும்
ஒழியவில்லை குடியாட்சி!
டாஸ்மாக்!
காதைத் திருகியதும்
கதறி அழுதது!
தண்ணீர் குழாய்!
கொஞ்சிப்பேசினாலும்
ரசிக்கவில்லை மனசு!
டிவி தொகுப்பாளினி!
வெளுத்ததெல்லாம் “பால்”
விரக்தியில் கிரிக்கெட் ரசிகர்கள்!
சூதாட்டம்!
செயற்கை புன்னகையில்
சீரழிகின்றது உலகம்!
அன்னிய உணவுகள்!
கூட்டணி அமைக்க
கற்றுத்தந்தன மலர்கள்!
கதம்பம்!
விளைச்சல் மிகுந்ததும்
வீழ்ந்தது விலை!
வேதனையில் விவசாயி!
மறைத்து வைத்தாலும்
கேட்டுவாங்கப்படுகிறது கேடு!
குட்கா.
மணி அடித்து சோறு
போட்டார்கள்!
சிறையில் கடவுள்!
அடுக்குமாடிக்குள்
அடங்கிப்போயின
கிராமத்து வீடுகள்!
காய்ந்த வயல்களில்
பூத்தன கொடிகள்!
வீட்டுமனை விற்பனை!
நெரிசலில் சிக்கி
உயிரை இழந்தது
நிமிடங்கள்!
விடியும் வரை ஆட்டம்!
விடிகாலையில் தூக்கம்!
விதி ஆனது நகரம்!
நகரம் ஆனது நரகம்!
நகர மறுத்தது நீர்!
மழை!
அஸ்திவாரமில்லாத வீடுகள்!
இடிந்துவிழுந்தன!
ஏரியில் வீடுகள்!
பேசிகள் பெருகியது
அருகியது பறவை!
சிட்டுக்குருவி!
எல்லா ஊரையும்
இணைத்து வைத்தது
பேருந்துநிலையம்!
தட்டுப்பாடில்லை
சில்லறைக்கு!
பிச்சைக்காரன்!
வரம் கேட்டு வருபவனிடம்
காணிக்கை கேட்கிறார் கடவுள்!
உண்டியல்!
இழுத்தாலும் விட்டாலும்
ஈர்த்துக் கொள்கிறது மரணம்!
சிகரெட்!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்! நன்றி!