Quantcast
Channel: தளிர்
Viewing all 1537 articles
Browse latest View live

தன்னம்பிக்கை நாயகி!

$
0
0

தன்னம்பிக்கை நாயகி!


பாண்டிச்சேரியில் வசிக்கும் கோதையம்மாளுக்கு வயது 75க்கும் மேல் இருக்கும். பிள்ளைகள் தறுதலைகள் ஆகி சென்றுவிட்டார்கள். தள்ளாத வயதிலும் தன்னம்பிக்கை இழக்கவில்லை இந்த மூதாட்டி. தெருதெருவாக சென்று பிச்சை எடுக்கவோ இல்லை அனாதை ஆஸ்ரமங்களில் சேரவோ இல்லை! தன்னம்பிக்கை கொண்டு தனக்குத்தெரிந்த தொழில் செய்து முதுகு கூன் விழுந்தாலும் வாழ்க்கையில் நிமிர்ந்து நிற்கிறார் இந்த மூதாட்டி. முதலில் அவருக்கு தலை வணங்குவோம்.
   அப்படி என்ன செய்து ஜீவனம் நடத்துகிறார் கோதையம்மாள். அதிகாலையில் வீடு வீடாக சென்று கோலம் போடுகிறார். ஒரு கோலம் போட கூலியாக ஐந்துரூபாய் வசூல் செய்கிறார். இப்படி மொத்தத்தில் மாதம் 1500 ரூபாய் வரை தோராயமாக சம்பாதிக்கிறார். ஒரு வீட்டில் மூன்று வேளை உணவு அளித்து 500 ரூபாய் சம்பளம் தருகிறார்கள். அதில் தனது உணவுக்கான தொகையை திருப்பி தந்து விடுகிறார். வேண்டாம் என்று சொன்னாலும் கேட்பதில்லையாம் இந்த தன்மான தாய்.
    இப்படி சம்பாதித்து பத்தாயிரம் ரூபாய் வரை தனக்கு தெரிந்தவர்களிடம் சேர்த்து வைத்து கொடுத்துள்ளார். இது அவரது இறப்புக்குப் பின் நடக்கும் ஈமச்சடங்குகளுக்கான தொகையாம். இறந்தபின்னும் பிறருக்கு கடன் வைக்க வேண்டாம் என்று இந்த ஏற்பாட்டை செய்துள்ளாராம்.
கை கால்கள் நன்றாக இருக்கும் போதே பிச்சை எடுக்கும் பல மனிதர்கள் முன்னே கோதையம்மாள் உயர்ந்து நிற்கிறார். அவருக்கு ஒரு சல்யூட் வைப்போம். அவரை நடுத்தெருவில் அனாதையாக்கிய பிள்ளைகளுக்கு  ஒரு குட்டு வைப்போம்.
   இந்த நியுஸ் படிக்கும் போதே ஒரு நியுஸும் கூடவே ஞாபகம் வந்தது. விழுப்புரத்தில் ஒரு பிச்சைக்காரர் தெருவோரம் இறந்து கிடந்துள்ளார். வயதானவர். அவரது உடமைகளை சோதித்த போது கத்தை கத்தையாக ரூபாய் நோட்டுக்கள் அதுவும் 1000, 500ரூபாய் தாள்கள் ஒரு லட்சத்திற்கும் மேல் இருந்துள்ளது. செல்போன் ஒன்றும் இருந்துள்ளது. அதில் உள்ள எண்களை கொண்டு இறந்தவர் யார்? அவரது உறவினர்களை கண்டுபிடிக்கும் பணியை போலீஸ் செய்து வருகிறதாம் இது கடந்த வாரம் படித்தது.
   ஒரே உலகில் இரண்டு முரண்பட்ட மனிதர்கள்!
சொந்தக் காலில் நிற்க துணிந்த மனுஷி ஒருவர்! பிச்சை எடுத்த காசை அனுபவிக்காமல் போன மனுஷர் ஒருவர்!
   விந்தையான உலகமடா இது!

நன்றி முகநூல்

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


ராமதாஸுக்கு ஆப்பு வைத்த போட்டோகிராபர் சார்லஸ்!

$
0
0
தற்போது திருச்சி சிறையில் உள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் , ஜாமினில் வெளிவர முடியாத மதுரை சம்பவத்தில் கைது செய்வதற்காக திருச்சி சிறையில் பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அது என்ன மதுரை சம்பவம்.
அப்படி ஒரு சம்பவம் நடந்ததே யாருக்கும் தெரியாமல் மூடி மறைக்கப்பட்டு இருக்கும், உயிரைக் கொடுத்து படம் எடுத்த ஒரு புகைப்படக் கலைஞரால் வெளிச்சத்திற்கு வந்த சம்பவம் அது.
அந்த புகைப்படக்கலைஞரின் பெயர் சார்லஸ்.
மொத்தத்தில் ஐந்து நிமிடத்திற்குள் நடந்து முடிந்த அந்த சம்பவத்தை இப்போது நினைத்தாலும் ஈரக்கொலையை நடுங்கவைக்கிறது என்று சொல்கிறார்.
கடந்த 2004ம் வருடம் நடிகர் ரஜினிகாந்திற்கு எதிராக ராமதாஸ் சில கடுமையான கருத்துக்களை கூறியிருந்தார், அதற்கு ரஜினி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ராமதாஸ்க்கு கறுப்புக் கொடி காட்ட முடிவு செய்தனர்.
மதுரை பார்லிமென்ட் தொகுதிக்கான பிரச்சாரத்திற்கு மதுரை வந்த அவர், தல்லாகுளம் பகுதி ஒட்டலில் இருந்து கிளம்பிவரும் வழியில், நெல்பேட்டை அண்ணாசிலை அருகே கறுப்புக்கொடி காட்டுவது என ரஜினி ரசிகர்கள் முடிவு செய்தனர்.
இதை கேள்விப்பட்ட புகைப்படக் கலைஞர் சார்லஸ் தான் சார்ந்த வாரப்பத்திரிகைக்காக படம் எடுப்பதற்காக அங்கு போய் ரசிகர்களோடு காத்திருந்தார்.
இரவு 8 மணிக்கு ராமதாஸ் வாகனம் வரும்போது ரோட்டை மறித்து கறுப்புக்கொடி காட்டினர்.
அமைதியாக கறுப்புக்கொடி காட்டிவிட்டு அடுத்த சில நிமிடங்களில் அங்கு இருந்து சென்றிருப்பார்கள், ஆனால் அதற்குள் யார் "சிக்னல்' கொடுத்தார்களோ தெரியவில்லை? சபாரி உடையணிந்த ராம்தாஸின் பாதுகாவலர்கள் பாய்ந்து வந்து ரசிகர்களை மிருகத்தனமாக தாக்கினர்.
இதனை வாகனத்திற்குள் உட்கார்ந்தபடி ராமதாஸ் பார்த்துக்கொண்டிருந்தாரே தவிர தடுக்கவில்லை.
எதற்கு இந்த கொலைவெறி தாக்குதல் என்று பதைபதைப்புடன் சார்லஸ் தனது கேமிராவை பட, படவென இயக்க ஆரம்பித்தார்.
கேமிரா பிளாஷின் வெளிச்சம் தங்கள் மீது பட்டதும் ரசிகர்களை விட்டுவிட்டு, போட்டோகிராபர் சார்லஸ் மீது பாய்ந்தது அந்த சபாரி அணிந்தவர்களின் கூட்டம்.
அனைவரது எண்ணமும் கேமிராவை பறித்து உடைத்து நொறுக்குவதிலேயே இருந்தது. இதனை உணர்ந்து கேமிராவை மார்போடு இறுக்கி அணைத்தபடி உட்கார்ந்து கொண்டார். கூட்டத்தில் ஒருவர் கோபம் கொண்டு கையில் வைத்திருந்த நீளமான டார்ச் லைட்டால் தலையை நோக்கி ஒங்கி அடித்தார், சார்லஸ் கையைக் கொண்டு தலையை மறைக்க, அடி கைவிரல்களில் இறங்க வலியும், ரத்தமும் பெருகியது.
மேலும் தட,தடவென சில, பல அடிகள் அடித்த கூட்டம், ஓடிப்போய் ராமதாஸ் வந்த வேனில் ஏறிக்கொள்ள, வேன் அங்கிருந்து கிளம்பியது.
ரத்தம் சொட்ட, சொட்ட அடிபட்ட ரஜினி ரசிகர்களை ஆஸ்பத்திரிக்கு தூக்கிக்கொண்டு சென்றனர். தனியாளாக இருந்த சார்லஸ், பக்கத்தில் இருந்த ஆஸ்பத்திரிக்கு தானாகவே போய் சிகிச்சை எடுத்துக் கொண்டார்.
ராமதாஸ் வேன் முன்பாக ரஜினி ரசிகர்கள் கறுப்பு கொடி காட்டினர் என்று மறுநாள் சாதாரணமாகவே அனைத்து நாளிதழ்களிலும் செய்தி பதிவானது.
இதனால் இன்னும் வேதனை அதிகமடைந்த சார்லஸ் பத்திரிகையாளர்களிடம் நடந்த சம்பவத்தை விவரித்ததுடன் நடந்த சம்பவத்திற்கு சாட்சியான படங்களையும் வெளியிட மறுநாள் தினமலரில் பெரிதாக பிரசுரமானது.
கொந்தளித்துப் போன ரஜினி ரசிகர்கள் ராமதாஸ்க்கு எதிராக தமுக்கம் மைதானத்தில் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டனர். இரண்டாயிரத்திற்கும் அதிகமான பேர் கலந்து கொண்ட இந்த உண்ணாவிரதத்தில் ரஜினிகாந்தின் உதவியாளர் சத்தியநாராயணன் பங்கேற்று அடிபட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
ரசிகர்களை சென்னைக்கு அழைத்து பேசிய நடிகர் ரஜினிகாந்த் சம்பவம் தொடர்பான படங்கள் எடுத்த போட்டோகிராபர் சார்லசைசயும் பார்க்க வேண்டும் என்று கூறியிருக்கிறார், பிறகு அது நடக்காமலே போய்விட்டது.
ரஜினி ரசிகர்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செசய்யப்பட்டது.
ஆனால் ராமதாஸ் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.
வழக்கு விவரங்கள் கோப்பில் கட்டப்பட்டு பரண் மீது தூக்கிபோடப்பட்டது.
2011ம் வருடம் ராமதாஸ் அதிகாரம் குறைந்த போது அவரது இந்த மதுரை சம்பவ வழக்கு பரணில் இருந்து தேடி எடுக்கப்பட்டு விசாரணை கட்டத்தை எட்டியது.
விசாரித்த நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத வாரன்டை ராமதாஸ்க்கு விதித்தது.
ஆனாலும் போலீசார் அவ்வளவு ஆர்வம் காட்டாததால் போலீஸ் நிலைய வாசல்வழியாகவே ராம்தாஸ் போய்வந்து கொண்டிருந்தார்.
அவ்வளவுதான் எல்லாம் நீர்த்து போய்விட்டது என்று நினைத்த நிலையில், தற்போது இந்த மதுரை சம்பவம் தொடர்பாக கைது செய்வதற்கான வாரன்டை மதுரை போலீசார் திருச்சி கோர்ட்டில் கொடுத்துள்ளனர். அதன்படி ராமதாஸ் வெளியில் வந்ததும் இந்த சம்பவம் தொடர்பாக கைது செசய்யப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்படுவது உறுதியாகிவிட்டது.
ஒரு படம் எடுத்து அதற்காக அடிபட்டு, அவமானப்பட்டு, ஒன்பது வருடமாக மனதில் சுமந்து கொண்டிருந்த வலிக்கு இப்போதுதான் மருந்து இட்டது போலிருக்கிறது, இது வேறு எதற்காகவும் அல்ல எனது படத்திற்கு இப்போதாவது உயிர் கிடைத்தது என்பதற்காகவே என்று கூறி முடித்துக்கொண்டார் சார்லஸ்.
முக்கிய குறிப்பு: போட்டோக்களை பார்க்க இந்த  லிங்கை சொடுக்கவும் http://www.dinamalar.com/more_picture_html.asp?Nid=705807                                            நன்றி: தினமலர்

உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 14

$
0
0

உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 14


   கடும் காய்ச்சல் சமயம் பதிவிட்ட பிறகு மூன்று வாரங்களாக இந்த பகுதியை தொடர இயலவில்லை! காரணம் வேலைப் பளு மட்டுமல்ல! நல்ல தமிழினை தேட புது புது தகவல்களை அளிக்க வேண்டும் சிறப்பாக பதிவிட வேண்டும் என்பதுவும் தான்.
   இடைப்பட்ட காலத்தில் என்னை சந்தித்த நமது வலைப்பூ வாசகரும் உறவினருமான திரு மணிகண்டன். என்ன அண்ணா! தமிழ் அறிவு பதிவே காணலையே என்றார். அப்போதுதான் இந்த பதிவின்  முக்கியத்துவம் புரிந்தது. நிறைய பேர் விரும்பும் இப்பதிவை  தொடர்ந்து சிறப்பாக தர வேண்டும் என்ற  எண்ணம் வலுத்தது. அதற்காக நிறைய முயற்சிகள் எடுத்துள்ளேன். இன்றைய பகுதியில் வழு- வழுவமைதி பற்றியும் ஒரு சுவையான இலக்கியமும் காணப்போகிறோம்.
  வழுவும் வழுவமைதியும்.!

 வழு என்றால் பிழை! பிழையாக பேசுதலும் எழுதுதலும் வழுவாகும். வழா நிலை என்பது இலக்கண முறைப்படி அதாவது பிழையின்றி பேசுதலும் எழுதுதலும் ஆகும்.
வழுவிற்கு, இலக்கண முறையின்றி பேசுதலும் எழுதுதலும் வழுவாகும் என்ற இலக்கணம் வகுக்கப்பட்டுள்ளது. இது ஏழுவகைப்படும்.
திணைவழு, பால் வழு, இடவழு, காலவழு, வினா வழு, விடைவழு, மரபு வழு என ஏழு வகை வழுக்கள் உள்ளன.
1.   விஜயதேவி வந்தது. விஜயதேவி என்னும் உயர்திணை வந்தது என்னும் அஃறிணை வினை கொண்டு முடிந்ததால் திணை வழு ஆயிற்று.
2.   கோபாலன் வந்தாள். ஆண்பால் பெயர் பெண்பால் வினை கொண்டு முடிந்ததால் பால்வழு ஆயிற்று.
3.   நீ வந்தான். முன்னிலைப் பெயர் படர்க்கை வினை கொண்டு முடிந்ததால் இடவழு ஆயிற்று.
4.   நேற்று வருவான். நேற்று என்னும் இறந்தகாலப் பெயரோடு வருவான் என எதிர்கால வினை மயங்குவதால் கால வழுவாயிற்று.
5.   ஒருவிரலைக் காட்டி சிறிதோ பெரிதோ என வினவுவது வினா வழு ஆகும். பல விரல்களை காட்டி வினவினால்தானே சிறிது பெரிது பிரிக்க முடியும். எனவே இது வினா வழு.
6.   தூங்கி எழுந்தாயா என்று வினாவிற்கு சாப்பிட்டு படுத்தேன் என்று கூறுவது விடை வழு ஆகும். வினாவிற்கு ஏற்ற விடை கூறாமல் மாற்றி கூறியதால் விடை வழு ஆயிற்று.
7.   குயில் கத்தும் என்பது மரபு வழு ஆகும். குயில் கூவும் என்பதே மரபு. கத்தும் என்று கூறியது மரபு வழு ஆனது.
வழுவமைதி;

  இலக்கண முறையின்றி அமைந்தாலும் ஏதேனும் ஒரு காரணம் கருதி இலக்கணமுடையதாக ஏற்றுக் கொள்வது வழுவமைதி என்று அழைக்கப்படும்.
உவப்பு, உயர்வு, சிறப்பு, சினம், காரணமாக திணை வழு, பால் வழு, வழுவமைதியாகும்.

என் அம்மை வந்தாள் என ஒரு பசுவை அழைப்பது உவப்பின் காரணமான வழுவமைதி.
செல்வன் வந்தார். என மரியாதை நிமித்தமாக உயர்வின் காரணமாக ஆண்பால் பெயர் பலர்பால் பெயர் கொண்டு முடிவதும் பால் வழுவமைதி. இதே போன்று காலவழுவமைதி, இடவழுவமைதி, மரபு வழுவமைதியும் உண்டு.
 கத்தும் குயிலோசை காதில் விழ வேண்டும் என்று பாரதி பாடியது மரபு வழுவமைதி ஆகும்.

இன்னும் பல இலக்கணங்களை பிறிதொரு பதிவில் காணலாம்.
இப்போது இலக்கிய சுவையில் நுழைவோம்.

புறநானூறு பாடல் ஒன்று


பல்சான் றீரே பல்சான் றீரே!
கயன்முள் ளன்ன நரைமுதிர் திரைகவுட்
பயனின் மூப்பிற் பல் சான்றீரே!
கணிச்சிக் கூர்ம்படை கடுந்திற லொருவன்
பிணிக்குங் காலை யிரங்குவீர் மாதோ

நல்லது செய்த லாற்றீராயினும்
அல்லது செய்த லோம்புமி னதுதான்
எல்லாரு முவப்ப தன்றியும்
நல்லாற்றுப் படூஉ நெறியுமா ரதுவே

                            நரிவெரு உத்தலையார்.

பலராகிய சான்றோரே! மீனின் முள்ளைப் போன்று நரை முதிர்ந்த முடிகளையும் சுருக்கம் விழுந்த கன்னங்களையும் உடைய வயது முதிர்ந்த பல் சான்றீரே! மழு போன்ற கூர்மையான ஆயுதம் ஏந்திய வலிமையான எமன் உங்களை பீடிக்க வருகிறான். இப்போதாவது இரங்குங்கள். நல்லது செய்யாவிட்டாலும் கெடுதல் செய்யாதீர்கள். எல்லாரும் புகழும் செயல் இதுவல்ல என்றாலும் நல்ல நெறி இதுவே! கெடுதல் செய்வதை விட்டு விடுவீர்!

இதில் வந்துள்ள உவமைகள் என்னை கவர்ந்தன. உங்களை கவர்ந்தது எது? பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்! நன்றி!


குழந்தைகளுக்கு தனியாக ஒரு நூலகம்

$
0
0

ஒரு இனத்தை அழிக்க வேண்டும் என்றால் முதலில் மொழியை அழிக்க வேண்டும் என்றார் ஹிட்லர். மொழியே சமுதாயத்தின் அடையாளம். மொழியைமேம்படுத்தும் இடம் நூலகம்.

நூலகத்தை அமைப்பது சாதாரணமல்ல. மொழியின் மீதும், சமுதாயத்தின் மீதும் தீராத காதலும், அக்கறையும் கொண்ட மனிதர்களால் தான், நூலகத்தை அமைக்க முடியும். தனி மனிதராய், சமுதாயத்தின் மீது கொண்ட ஆதங்கத்தால், சேதுராமன்,40, மடிப்பாக்கத்தில் "ரீடர்ஸ் கிளப்' என்ற பெயரில் குழந்தைகளுக்காகவே ஒரு நூலகத்தை உருவாக்கியுள்ளார். 
அவரோடு உரையாடியதில் இருந்து..

குழந்தைகளுக்கு என தனியாக ஒரு நூலகம் அமைக்க காரணம்?

நான் கார்ப்பரேட் கம்பெனியில், 60 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்கினேன். நிம்மதியான வாழ்க்கை, கை நிறைய சம்பளம், சொகுசான கார் என, ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தேன்.

சம்பளம்... சம்பளம்... என பந்தய குதிரை போல் ஓடிக்கொண்டே இருந்தேன். ஒருநாள் குழந்தைகள் படிப்பு பற்றி யோசிக்கும் போது தான், அவர்கள் இணையதளம், வீடியோ கேமில் மூழ்கியிருந்தது தெரிந்தது.குழந்தைகளின் கவனத்தை திருப்ப, புத்தக வாசிப்பை முறைப்படுத்தினோம். ஆரம்பத்தில் புத்தகம் படிப்பது போல், நடித்து வீடியோகேம்விளையாடினர்.

தொடர்ந்து கண்காணித்தால், புத்தக வாசிப்பில் மூழ்கினர். அவர்களின் வயதுக்கேற்ப, தேவையான புத்தகங்களை தேர்ந்தெடுத்து படிக்க கொடுத்தோம்.பின், தினசரி இதழ்கள், வரலாற்று புத்தகங்கள் என, வாசிப்பு பழக்கம் அதிகரித்தது. என் குழந்தைகள் போன்ற சமவயது குழந்தைகளோடு பேசியதில், குழந்தைகளின் உலகம் பற்றி அறிந்தோம். குழந்தைகளுக்கான நூலகம் அமைக்க வேண்டும் என, தோன்றியது.

தற்போது, 10 ஆயிரம் புத்தகங்கள் அடங்கிய நூலகத்தை உருவாக்கிஉள்ளேன். குழந்தைகள், மாணவர்கள், பெரியோர் என, அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற புத்தகங்கள் உள்ளன.

உங்கள் நூலகத்தின் சிறப்பு என்ன?

புத்தக வாசிப்பாளர்களுக்காக, www.readersclub.co.in தனி இணைய தளத்தை உருவாக்கியுள்ளோம். எங்கள் இணையதளத்தில் பதிவு செய்து, தேவையான புத்தகத்தை தேர்ந்தெடுத்து, வாசிப்பாளர்களின் முழு முகவரி மற்றும் தொலைபேசி எண்ணை அனுப்பினால் போதும். அடுத்த இரு நாட்களுக்குள், வீடு தேடி புத்தகம் வரும். அதற்காக, தனி கட்டணம் கிடையாது. வாசித்து முடித்ததும், வீடு தேடி வந்து பெற்று கொள்வர். நூலகத்தை தேடி எங்கும் செல்ல வேண்டியதில்லை.

இதற்காக, மாத சந்தா, 100 ரூபாய் வரை வாங்கப்பட்டது. தற்போது, புத்தக வாசிப்பு தினத்தை ஒட்டி, குழந்தைகளுக்கு 60 ரூபாயும், பெரியவர்களுக்கு 75 ரூபாயும் மாத சந்தாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், வாரம் ஒரு புத்த கம் என்றமுறையில், புத்தக வாசிப்பை முறைப்படுத்த உள்ளோம்.

புத்தக வாசிப்பு பற்றிய உங்கள் கருத்து என்ன?

புத்தக வாசிப்பு மூலம், சமுதாயத்தின் பிரச்னைகள், சம்பவங்களை அறிந்து கொள்ள முடியும். படிப்பதை காட்டிலும், படித்ததை நண்பர்கள் வட்டத்தில் பகிர்ந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு குடிமகனும் சமுதாயத்திற்கு செய்ய வேண்டிய, தனி மனித கடமை உள்ளது.அதை அறிந்து, தனிப்பட்ட வாழ்க்கையோடு, சமுதாயத்திற்கும் பயனுள்ள வகையில், ஏதாவது செய்ய வேண்டும். இன்றைய இளைய சமுதாயம், புத்தக வாசிப்பில் பெரிதளவு அக்கறை காட்டுவதில்லை. இது, ஆரோக்கியமான வளர்ச்சி அல்ல.

மேலும், ஒருவர் படித்த புத்தகங்களை மற்றவர்களுக்கு கொடுத்து படிக்க உதவ வேண்டும். உங்களிடம், ஏதாவது படித்து முடித்த புத்தகங்கள் இருந்தால், என் நூலகத்திற்கு கொடுங்கள். உங்கள் புத்தகங்கள், பலருக்கும் பயன்பட இது ஒரு வாய்ப்பாக அமையட்டும்."ரீடர்ஸ் கிளப்' தொடர்புக்கு: 99621 00032/ 93806 55511                                                     நன்றி: தினமலர்

புகைப்பட ஹைக்கூ 27

$
0
0

புகைப்பட ஹைக்கூ 27

  வேடிக்கை பார்த்த சூரியன்
 விடலைகள்
 குளியல்!

ஆற்று நீர் ஏமாற்றியதால்
ஊற்று நீரில்
உற்சாக குளியல்!

அருவி ஆனது
மோட்டார் கருவி 
குளியல்!

 வீணாகும் நீ ரும் 
  உபயோகமானது
  வெட்டவெளி குளியல்!
உடைப்பெடுத்தது
நீர் மட்டுமல்ல
உற்சாகமும் கூட!

வெயிலுக்கு
விடை சொன்னது
குளியல்!

உடைந்த குழாயில்
ஒற்றுமைக்
குளியல்!

உடைந்தாலும்
 ஒற்றுமை வளர்த்தது
குழாய்!

   வயலுக்கு செல்கையில்
 கொஞ்சம் விழலுக்கும்
 குழாயில் குளியல்!

 வாடை அகற்றும்
 கோடைக் குளியல்!

உடைப்பெடுத்ததும்
பொங்கியது
மகிழ்ச்சி!

கேணிகள் மறைவு!
குளித்தனர்
குழாயில் நண்பர்கள்!

தங்கள்வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து உற்சாகப்படுத்துங்கள்! நன்றி!
  


குறையும் நிறையாகும்! படித்ததில் பிடித்தது!

$
0
0

ஒரு கிராமத்தில் ஏழை விவசாயி ஒருவன் வாழ்ந்து வந்தான். அவன் தன் வீட்டுத் தேவைக்காகத் தினமும் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தான்.

தண்ணீர் எடுத்து வர அவன் இரண்டு பானைகளை வைத்திருந்தான். அந்தப் பானைகளை ஒரு நீளமான கழியின் இரண்டு முனைகளிலும் தொங்க விட்டு, கழியைத் தோளில் சுமந்து செல்வான்.

இரண்டு பானைகளில் ஒன்றில் சிறிய ஓட்டை இருந்தது. அதனால் ஒவ்வொரு நாளும் வீட்டிற்கு வரும் பொழுது, குறையுள்ள பானையில் பாதியளவு நீரே இருக்கும்.

குறையில்லாத பானைக்குத் தன் திறன் பற்றி பெருமை. குறையுள்ள பானையைப் பார்த்து எப்பொழுதும் அதன் குறையைக் கிண்டலும் கேலியும் செய்து கொண்டே இருக்கும்.

இப்படியே இரண்டு வருடங்கள் கழிந்து விட்டன. கேலி பொருக்க முடியாத பானை அதன் எஜமானனைப் பார்த்துப் பின் வருமாறு கேட்டது.

"ஐயா! என் குறையை நினைத்து நான் மிகவும் கேவலமாக உணர்கிறேன். உங்களுக்கும் தினமும் என் குறையால், வரும் வழியெல்லாம் தண்ணீர் சிந்தி, உங்கள் வேலைப் பளு மிகவும் அதிகரிக்கிறது. என் குறையை நீங்கள் தயவு கூர்ந்து சரி செய்யுங்களேன்"

அதற்கு விவசாயி, "பானையே! நீ ஒன்று கவனித்தாயா? நாம் வரும் பாதையில், உன் பக்கம் இருக்கும் அழகான பூச்செடிகள் வரிசையைக் கவனித்தாயா? உன்னிடமிருந்து தண்ணீர் சிந்துவது எனக்கு முன்னமே தெரியும். அதனால்தான் வழி நெடுக பூச்செடி விதைகளை விதைத்து வைத்தேன். அவை நீ தினமும் சிந்திய தண்ணீரில் இன்று பெரிதாக வளர்ந்து எனக்கு தினமும் அழகான பூக்களை அளிக்கின்றன. அவற்றை வைத்து நான் வீட்டை அலங்கரிக்கிறேன். மீதமுள்ள பூக்களை விற்றுப் பணம் சம்பாதிக்கிறேன்"

இதைக் கேட்ட பானை கேவலமாக உணர்வதை நிறுத்தி விட்டது. அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப் படாமல் தன் வேலையைக் கருத்துடன் செய்யத் தொடங்கியது

அடுத்தவர் பேச்சைப் பற்றிக் கவலைப் பட்டால், நாம் எந்த வேலையையும் செய்ய முடியாது.!!
நன்றி : முகநூல்

சிரிக்கவைத்த சிரிப்புக்கள்! பகுதி 4

$
0
0

சிரிக்கவைத்த சிரிப்புக்கள்! பகுதி 4

        
                     
1.   பிரஸ் மீட்ல தலைவர் மானத்தை வாங்கிட்டாரா? எப்படி?
குற்றப்பத்திரிக்கையில் இருந்து நிருபர் வந்திருக்காரா?னு கேட்டுட்டார்!
                              பர்வீன் யூனூஸ்
2.   இந்த ஒரு வருடத்தில் அமைச்சராக இருந்து என்ன சாதித்து விட்டாய் என்று கேட்கிறார்கள் எதிர்கட்சிக் காரர்கள். நான் கேட்கிறேன் ஒரு வருடம் அமைச்சராக தொடர்ந்து இருப்பதே பெரிய சாதனை அல்லவா?
                                கே. ஆனந்தன்.
3.   தலைவர் மேடையில நின்னு திடீர்னு வாயைப் பொத்திக்கிறாரே ஏன்?
2016ல் ஆட்சியை பிடிப்போம்னு பேசறப்போ அவராலேயே சிரிப்பை அடக்க முடியலையாம்!
                                               பர்வீன் யூனூஸ்.
4.   நகை கடையில திருடினவன் மாமூல் கொடுத்திட்டானா?
என் தங்கம் என் உரிமைன்னு தெனாவட்டா பேசிட்டுத் திரியறான்!
                              அம்பை தேவா.
5.   இப்ப யாராவது காசு இல்லாம சாப்பிட வந்தா தேவலை.
ஏன் முதலாளி அப்படி சொல்றீங்க?
தொடர் பவர்கட் காரணமா மாவு ஆட்ட ஆள் வேண்டியிருக்கே!
                            இரா. பாஸ்கரன்.
6.   தலைவரே மின் வெட்டு அதிகமா இருக்கே என்ன செய்ய போறீங்க?
இலவச மெழுகுவர்த்தி தரப் போறதா அறிவிச்சிருவோம்!
                                பி. பாலாஜிகணேஷ்.
7.   நடிப்பு வராத நடிகையை ஏன் புக் பண்ணீங்க?
மடிப்புக்காகத்தான்!
                    அ. ரியாஸ்.
8. தலைவர் எல்லாக் கட்சிக்கும் ஒரே பொது வில்லன்னு சொல்றாரே யாரை?
 வேற யாரு மின்சாரத்தைத்தான் அப்படி சொல்றாரு.
                           பி. பாலாஜி கணேஷ்.
8.   எங்க வீட்டுல 24 மணி நேரமும் பவர் கிடையாது.
என்ன அதை சிரிச்சுனே சொல்றே?
வீட்டுல 24 மணி நேரமும் பவர் கிடையாதுன்னு சொன்னது என் கணவருக்கு பவர் கிடையாதுன்றதை!
                               வி. சாரதிடேச்சு.
9.   சென்ற இரண்டு வருடங்களில் இரவில் மின் தடை ஏற்படுத்தி 30 சதவிகிதம் சேமித்துள்ளோம்.
அதனால்தான் குழந்தைகள் பிறப்பு வீதம் 35 சதவிகிதம் கூடியுள்ளது.
                              ஜெயசூர்யா.
10.என் மனைவியை பார்த்தா எனக்கு பயமா இருக்குது! கை கால் எல்லாம் நடுங்குது டாக்டர்!
வெரிகுட் அப்படித்தான் இருக்கணும் யூ ஆர் வெரி நார்மல்!
                                       கி. ரவிகுமார்.
11.எதிரி ரொம்ப பலவீனமானவன்னு எப்படித் தெரிஞ்சது மன்னா?
அவன் என்னை அடிச்சது கொஞ்சம் கூட வலிக்கலையே!
                                      பெ. பாண்டியன்.
12.தலைவர் ரொம்ப மோசம்!
ஏன் அப்படிச் சொல்றே?
தொகுதி பக்கம் ஏன் வர்றதில்லைன்னு கேட்டா அங்க போக வர பஸ் வசதி கிடையாதுங்கிறாரே!
                                 அ. ரியாஸ்.
13. எங்கள் தலைவரை கடத்தல் வழக்கில் கைது செய்துவிடலாம் என்று நினைப்பவர்களுக்கு ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.. அவர் காலத்தைத்தான் வெட்டியாக கடத்துகிறாரே தவிர வேறு எதையும் கடத்தவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
                                         இரா. வசந்தராசன்.
13.பணிப்பெண்கள் இரண்டு பேர் வேலையை விட்டு நின்றுவிட்டார்கள் மன்னா!
14. காரணம்?
ஆதினத்தில் நம்மைவிட அதிக ஊதியம் வழங்குகிறார்களாம்!
                                              அ. ரியாஸ்.
15. தலைவரை எப்படி கண்ட்ரோல் பண்றதுன்னே தெரியலை?
  ஏன் என்ன ஆச்சு?
  டாக்டர் பட்டம் வாங்கின கையோட  மெடிக்கல் ஷாப் ஸ்கேன் செண்டருக்கு எல்லாம் போய் கமிஷன் கேட்கிறார்!
                                  கிணத்துக்கடவு ரவி,

16  தலைவர் என்ன சொல்லி கட்சிக்கு புதுசா ஆள் சேர்க்கிறார்?
 நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி!  
                                கிணத்துகடவு ரவி.
17.அதான் ஷூட்டிங் முழுசா முடிஞ்சிடுச்சே அப்புறம் ஏன் டைரக்டர் பத்தாயிரம் பேர் வேணுங்கிறார்?
   படம் பார்க்கத்தான்!
                                 அ. ரியாஸ்.
18. குறுகிய காலத்தில் நீ செஞ்ச குற்றங்கள் எண்ணிக்கை ரொம்ப அதிகம்..!
   பாராட்டறீங்களா குத்திக் காட்டறீங்களா எசமான்?
                                      என். ஷாகிதா.
19. அபார்ஷன் பண்ண உங்க கணவர் அனுமதிக்கணுமே!
    அவர் வெளிநாடு போய் மூணு வருஷமாகுது எப்படி கேட்க முடியும்?
                               பாலாஜி கணேஷ்.
20.அவரு போலி டாக்டருன்னு எப்படி சொல்றே?
  கால் வலி டாக்டர்னு போய் நின்னா கால்வலி அரைவலின்னு சொல்லிகிட்டு வராதீங்க முழுவலின்னா மட்டும் வாங்கன்னு சொல்றாரே!
                            சோலை சுகுணா.

நன்றி: ஆனந்த விகடன், குமுதம்.

தங்கள்வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!




  


கிருத்திகை திருவிழா நினைவுகள்!

$
0
0

கிருத்திகை திருவிழா நினைவுகள்!


இன்று சித்திரை கிருத்திகை! எங்கள் பகுதியில் ஆண்டார்குப்பம் முருகர் கோயில் சிறுவாபுரி முருகர் கோயில் பெரும்பேடு முருகர் கோயில்களில் விழா விசேஷமாக கொண்டாடப்படுகிறது. மக்கள் இந்த கொளுத்தும் வெயிலிலும் கந்தன் அருளை பெற கால்நடையாகவும் வண்டிகளிலும்  கோயில்களுக்கு சென்றுகொண்டிருந்தனர்.
   இதை கண்ணுற்ற போது பழைய நினைவுகள் வந்தன. ஆண்டார்குப்பம் கோயிலில் எனக்கு அவ்வளவாக பழக்கம் கிடையாது. சிறுவயதில் ஆசானபூதூரில் வளர்ந்தமையால் ஓரளவு வளர்ந்த பிறகு கோயிலுக்கு பூஜைக்கு அனுப்புவார்கள். பெரும்பேடு முருகர் முத்துக்குமாரசாமி பூமியில் இருந்து தோன்றியவர். வள்ளி தேவசேனா இடம் மாறி அமர்ந்த கோலத்தில் ஆஜானுபாகுவாக ஆறரை அடி உயரத்திலிருப்பார். நாங்கள் சிறுவர்களாக இருந்த போது அதாவது 1978-79 களில் தான் சுவாமி பூமியில் இருந்து கிடைத்தார். பின்னர் கூரை கொட்டகையில் வைத்து பூஜித்து பின்னர் ஆலயம் அமைத்தனர். 1980களில் பெரும்பேடு கோயில் மிகவும் பிரபலமாக இருந்தது. பல ஊர்களில் இருந்து மக்கள் குவிவர். என் தாத்தாதான் பிரதான குருக்கள். உதவிக்கு பல ஊர்களிலிருந்து உறவினர்கள் வருவார்கள். என் தந்தையும் வருவார். பரணி அன்று சங்காபிஷேகமும் மறுநாள் கிருத்திகை அபிஷேகமும் இரவு திருக்கல்யாணம் வீதி உலா எல்லாம் நடைபெறும். பிரபல பாடகி எல். ஆர் ஈஸ்வரியின் கச்சேரி, மதுரை சோமுவின் கச்சேரி சுப்பு ஆறுமுகம் குழுவினரின் வில்லுப்பாட்டு என விழா களை கட்டும்.
   கோயில் வேலை புரிபவர்களுக்கு உணவளிப்பதில் என் தாத்தா தயக்கம் கொள்ள மாட்டார். அந்த சிறு கிராமத்தில் தாமோதர ஐயர் ஓட்டல் என்று ஒன்று இருக்கும். அதில் சொல்லிவிட்டு சாப்பிட்டுக் கொள்ளும் படி கூறிவிடுவார். வேலைக்கு வருவோர் இஷ்டம் போல் விரும்பியதை வாங்கி சாப்பிட்டுவிட்டு சென்று விடுவர். கிருத்திகை விழா முடிந்ததும் தாத்தா கணக்கு செட்டில் பண்ணுவார். இவருக்கு சம்பாதித்ததில் எதுவும் மிஞ்சாது. ஆனால் அந்த ஓட்டல் சுவை மிகவும் பிரமாதமாக இருக்கும். அங்கு சாப்பிட்ட இட்லியும் வடைகறியும் இன்னும் என் நாவில் ஊறுகிறது. அதே போல் மந்தார இலையில் மடித்து தரும் மிக்சரின் சுவை அதுவும் கலக்கலாக இருக்கும்.
      கொஞ்சம் வயதான பின் தாத்தா அந்த கோயிலை தனது மைத்துனருக்கு விட்டுக் கொடுத்து விட்டார். கோவிலில் மவுசும் குறைந்து போனது. இப்போது அந்த அளவிற்கு கூட்டம் வருவது இல்லை என்று கேள்விப் பட்டேன். நானும் அந்த கோவிலில் வேலை செய்து இருக்கிறேன். முருகர் ஆலயம் பக்கத்தில் ஜோதீஸ்வரர் ஆலயம் இருக்கும். அங்கு பூஜை செய்வேன். சேவார்த்திகளுக்கு கற்பூர தீபம் காட்டுவேன். பத்து காசு இருபது காசு அதிகம் ஒருரூபாய் என ஒரு கிருத்திகையில் அந்த காலத்தில் நூறு ரூபாய் வரை கிடைக்கும். தாத்தாவிடம் கொடுப்பேன். ரக வாரியாக பிரித்து எண்ணுவார்.

   கோவில் கை மாறிய பின் அந்த கோவிலுக்கு உதவிக்கு செல்வதில்லை! எப்போதாவது தரிசனத்திற்கு மட்டும் செல்வதுண்டு. கோயிலை சுற்றி பெரிய ஏரி ஒன்று இருக்கும். கோவில் முகப்பில் இரு பெரிய அரசமரங்கள் மேடையில் இருக்கும். அதில் ஏராளமான பறவைகள். அதன் கீழே எப்போதும் பறவைகளின் எச்சங்கள் குவிந்து கிடக்கும். கிருத்திகை அன்று ஏராளமான கடைகள் அங்கு குவியும்.
   அப்போது அப்பாவிடம் கேட்டு விசில், பஸ், ஜீப் நாதஸ்வரம் போன்ற பொம்மைகள் ஓவ்வொரு சமயம் வாங்கியது நினைவில் இருக்கிறது. ஒரு கிருத்திகை இரவில் அப்பாவுடன் சைக்கிளில் ஊருக்கு வந்தது நினைவுக்கு வருகிறது. இதெல்லாம் சுகமான நினைவுகள்.
   இப்போது வாகன வசதிகள் பெருகிவிட்டன! மாட்டு வண்டிகளை காணமுடிவதில்லை! ஏராளமான இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் கோயில்களுக்கு செல்கின்றனர். ஆனால் அவர்களுக்கு நாங்கள் அன்று அனுபவித்த சந்தோஷம் கண்டிப்பாக கிடைக்குமா என்பது சந்தேகம்தான். இந்த வருடம் கூட்டம் குறைவாக உள்ளது என்று காலையில் வழியில் பேசிக் கொண்டார்கள். அது உண்மையாகவும் இருக்கலாம். முன்பெல்லாம் ஆண்டார்குப்பம் செல்லும் நடைபயணம் செல்வோர் எங்கள் ஊர் வழியாகத்தான் செல்வார்கள். காலையிலும் மாலையிலும் சாரி சாரியாக இவர்களை காணலாம். இரண்டு வருடங்களாக இதை காண முடிவதில்லை!
  ஆனாலும் நடை பயணம் செல்வோருக்கு தாகம் தீர்க்க வசதியாக தச்சூர் போன்ற இடங்களில் நல்ல உள்ளம் படைத்தவர்கள் தண்ணீர் பந்தல் அமைத்து மோர், கூல்டிரிங்ஸ், தண்ணீர் போன்றவை தந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
   இன்று இரவு ஆண்டார்க் குப்பம் முருகன் தங்க மயில் வாகனத்தில் வீதி உலா வருவார். இரவு கூட்டம் அதிகமாக இருக்கும். நாளை காலை கூட்டம் கலைய துவங்கும். வீதியில் கடை வைத்து வியாபாரம் செய்வோருக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
   இது போன்றோர் பிழைக்கத்தானே அன்று விழாக்கள் கொண்டாடப்பட்டன. இதுதானே நமது பாரம்பரியம். எனவே சோம்பல் படாமல் விழாவை கண்டு களித்து மகிழ்வோம்.
 படம் உதவி: சொல் அடுக்குகள் சொற்றடுக்குகள் வலைப்பூ
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப் படுத்துங்கள்! நன்றி!


புத்திசாலி ஆமை! பாப்பா மலர்!

$
0
0

புத்திசாலி ஆமை


ஒரு ஊர்ல ஒரு குளம் இருந்துச்சு! அந்த குளத்துல நிறைய மீனுங்க சந்தோசமா வாழ்ந்து வந்தது. அந்த மீனுங்களோட ஒரு ஆமையும் அந்த குளத்துல வசிச்சு வந்தது. குளத்துல இருக்கிற மீனை பிடிச்சு தின்ன ஒரு நரி வரும். நரியால எப்படி மீனை பிடிக்க முடியும் அதனாலே தப்பி தவறி குளத்து கரை மேல விழற மீனை நரி பிடிச்சு தின்னும். இத பார்த்த ஆமை நரி மேல பரிதாபப் பட்டு ஒன்றிரண்டு மீன்களை நரிக்கு பிடிச்சு போட்டுச்சு. இதனால நரியும் ஆமையும் ப்ரெண்ட்ஸ் ஆகிட்டாங்க!
   இப்படியே இருக்கும் போது ஒரு ரெண்டு மூணு வருசமா மழையே பெய்யாம ஆறு குளம் எல்லாம் வத்திப் போச்சு. இந்த ஆமை இருந்த குளத்திலேயும் தண்ணி வத்த ஆரம்பிச்சது. அதனால மீனுங்க குறைஞ்சி போயிருச்சு. இனிமே இந்த குளத்துல நாம இருந்தா நம்ம உயிருக்கு ஆபத்துன்னு ஆமைக்கு தோணுச்சு. அப்ப அந்த வழியா ரெண்டு கொக்குங்க வந்துச்சுங்க!
    ஆமை அந்த கொக்குகளை பார்த்து எங்க போறீங்க கொக்குகளா?ன்னு கேட்டுச்சு.
இந்த தண்ணி இல்லா காட்டுல எங்களாலே இருக்க முடியாது. அதான் தண்ணி இருக்கற திசை தேடி பறந்து போறோம்னு கொக்குங்க சொல்லுச்சு. என்னையும் கூட்டிட்டு போறீங்களா?ன்னு ஆமை கேட்டுச்சு.
   உன்னை எப்படி கூட்டிட்டு போக முடியும். உன்னால பறக்க முடியாதே? அப்படின்னு கொக்குங்க சொல்லுச்சு. ஆமை அந்த குளத்து ஓரம் இருந்த ஒரு கழியை கொண்டுவந்து கொக்குங்க கிட்ட கொடுத்து இத நீங்க ரெண்டுபேரும் பிடிச்சு பறந்து போங்க நடுவுல நான் கொம்பை கவ்விக்கிட்டு வந்துடறேன்ன்னு சொல்லுச்சு.
    நல்ல ஐடியாதான்! ஆனா நடுவுல நீ வாயை திறக்க கூடாது! திறந்தா நீ கீழே விழுந்து சாக வேண்டியதுதான்னு சொல்லுச்சு கொக்குங்க! நான் பார்த்துக்கிறேன் நீங்க கிளம்புங்க என்று கழியை ஆமை கவ்விக்க அதை ரெண்டுபக்கமும் பிடிச்சு கிட்டு கொக்கு பறந்து போச்சு. ஆமை காவடி டோய்! என்று சிறுவர்கள் கேலி பண்ண அவர்களை திட்ட வேண்டும் போல் இருந்தாலும் ஆமை வாயைத் திறக்க வில்லை!
      அந்த நேரம் பாத்து அந்த பக்கம் ஆமையோட ப்ரெண்ட் நரி வந்து நின்னுச்சு! அட இந்த ஆமை இந்த குளத்தை விட்டு போயிட்டா நமக்கு மீன் யாரு பிடிச்சு தருவாங்க! தண்ணி வத்தனதும் இந்த ஆமையை பிடிச்சு திண்ணலாமே!ன்னு யோசிச்சுது  அது.உடனே அது ஒரு தந்திரம் பண்ணி பாட ஆரம்பிச்சது.
  ஏ கூறு கெட்ட கொக்குகளா?
 கூத்தாடி கொக்குகளா!
 ஒட்டாம உள்ளாமை
உமக்கெதுக்கு நாட்டாமை?
ஆமையை கீழே போட்டா
அஞ்சு ரூபா தந்திடுவேன்!

   நரி இப்படி பாடினதும் ஆமைக்கு கோவம் வந்துடுச்சு! இந்த நரிக்கு எத்தனை மீன் பிடிச்சு கொடுத்திருக்கோம்! கொஞ்சம் கூட நன்றி இல்லாம அஞ்சு ரூபாய்க்கு என்னை பேரம் பேசுதேன்னு நினைச்சிகிட்டு பதில் பாட வாயை திறந்து நன்றி கெட்ட நரியேன்னு வாயை திறந்துச்சு! அவ்வளவுதான்  தொப்புன்னு கீழே விழுந்துடுச்சு! நல்ல வேளை கொக்குங்க ரொம்ப உயரம் பறக்கலை அந்த இடம் மணல் பாங்கா இருந்ததாலே சின்ன அடியோட தப்பிச்சிகிட்ட ஆமைக்கு நரி மூலம் தொந்தரவு ஆரம்பிச்சது.
   வேகமா வந்த நரி ஆமையை பிடிச்சது! ஆனா ஆமை அதுக்குள்ள தன் உடம்பை முழுசுமா ஓட்டுக்குள்ள மூடிக்கிச்சு! நரியால ஆமையை கடிக்க முடியலை! எப்படி எப்படியோ முயற்சி பண்ணி பார்த்து  ஒண்ணும் பண்ண முடியாம தவிச்சுது நரி!
   ஆமைக்கு சிரிப்பு தாங்கலை!  கெக்கே!ன்னு சிரிக்க  ஏன் உன்னை கடிக்க முடியலைன்னு ஆமைகிட்டேயே கேட்டுது நரி! நான் வெயில்ல உலர்ந்து போயிருக்கேன் அதனால கடி விழாதுன்னு  சொன்னது ஆமை!
   நரிக்கு நல்ல பசி! எப்படியாவது இந்த ஆமையை சாப்பிட்டனும்னு பக்கத்துல இருந்த ஒரு குட்டைக்கு கொண்டுபோய் ஆமையை நனையறா மாதிரி அழுத்தி பிடிச்சது நரி. கொஞ்ச நேரம் கழிச்சி எடுத்து கடிச்சது. இப்பவும் கடிபடலை! அதுக்கு கோவம் வந்துருச்சு! ஏய் ஆமையே ஏமாத்தறியா! தண்ணில நீ நனைஞ்சும் கடிபடலையேன்னு கேட்டுச்சு நரி.
  நீ எங்க என்னை தண்ணில ஊற விட்ட தரையோட அழுத்தி பிடிச்சுகிட்ட நான் எப்படி ஊறுவேன்! என்று கேட்டது நரி!
  நீ ஓடிப்போயிட்டா என்ன பண்றது?ன்னு கேட்டுச்சு நரி!
 இத்தனை நாளு உனக்கு மீனு பிடிச்சு போட்ட நான் ஓடிப்போயிருவேனா? அப்படின்னு கேட்டுச்சு ஆமை!
 அப்ப நீ சேக்காளியா இருந்தே! அப்படின்னு சொல்லிச்சு நரி!
  இப்ப மட்டும் நான் உனக்கு பகையாளியா! ன்னு கேட்டுச்சு ஆமை!
   நரியாலை பதில் பேச முடியலை! ஆமையை தூக்கி  தண்ணியிலே வீசிட்டு நல்லா ஊறீனதுக்கு அப்புறம் வா! நா இங்கயே நிற்கறேன்னு சொல்லுச்சு!
   உன் கிட்ட வந்து உயிரை விட நான் முட்டாளா என்ன? அப்படின்னு கேட்ட ஆமை தண்ணிக்குள்ள மறைஞ்சி போயிருச்சு! ஏமாந்து நின்னது நரி!

(நாடோடிக் கதைகளில் இருந்து)

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 15

$
0
0

உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 15


அன்பான வாசகர்களே! சென்ற பகுதியில் வழுவும், வழுவமைதியும் குறித்து பார்த்தோம்.உங்களின் பாராட்டுதல்கள் எனக்கு ஊக்கம் அளித்தன. இது போன்று தொடருமாறு பதிவுலகத்தின் பூஸ்ட் எனர்ஜி தரும் அன்பர் திரு திண்டுக்கல் தனபாலன் கூறியிருந்தார்.
    விளையாட்டாக இந்த பகுதியை ஆரம்பித்து மேலோட்டமாக சில பகுதிகள் எழுத ஆரம்பித்தபின் இதற்கு வரும் ஆதரவினால் இப்போது கொஞ்சம் இலக்கணம் கொஞ்சம் இலக்கியம் என ஆழமாக சென்று கொண்டிருக்கிறது நமது பகுதி. இன்று நாம் இரட்டைக் கிளவி மற்றும் ஒருபொருட் பன்மொழி பற்றியும் இலக்கிய சுவையும் காண இருக்கிறோம்.
     பத்தாவது படித்த காலத்தில் இந்த இரட்டை கிளவி பற்றி படித்திருப்பீர்கள். இது அனைவருக்கும் சென்றடையும் வகையில் கவியரசு வைரமுத்து ஜீன்ஸ் பட பாடலில் சல சல இரட்டைக் கிளவி என்று பாடல் எழுதியிருப்பார். அதையும் மறந்து போனவர்கள் இப்போது அறிந்து கொள்ளுங்கள்!
    கிளவி என்றால் சொல் இதை முதலில் அறிந்து கொள்வோம். ஏதோ முறுக்கு விற்கும் கிழவி எழுத்துப் பிழை என்று எண்ணிவிட வேண்டாம்.
   இரட்டைக் கிளவி என்பது  பிரிக்க முடியாத இரட்டைச் சொற்களாய் ஒருதலைப்பட்டு நின்று வினைக்கு அடைமொழியாக குறிப்புணர்த்தி வருவது ஆகும். இது இலக்கணம். இது சற்று குழம்பும். இப்போது விளக்கம் பார்ப்போம்.
  இரட்டைக்கிளவி இரட்டை சொல்லாகவே வரும்   (எ.கா) சலசல, மழுமழு
  பிரித்தால் பொருள் தராது   எ.கா பளபள என்ற சொல்லை பிரித்து பள என எழுதினால் பொருள் இல்லை அல்லவா?

இரட்டைக் கிளவிக்கு சில எடுத்துக் காட்டுக்கள்
  நீர் சலசலவென்று ஓடியது.
  மரம் மடமடவென முறிந்தது
  சட்டை பளபளவென்று இருந்தது.
  மழுமழுவென்று சவரம் செய்திருந்தான்.
  வளவளவென்று அரட்டையடித்துக் கொண்டிருந்தார்கள்.

இதெல்லாம் இரட்டைக் கிளவிகள்.

அடுத்து ஒருபொருள் பன்மொழி!

பொருள் சிறப்புக்காக ஒரு பொருளைக் குறிக்கும் பல சொற்கள் வருவது ஒரு பொருள் பன்மொழி.
  (எ.கா) ஓங்கி உயர்ந்த மரம். இதில் உயர்ந்த, ஓங்கி இரண்டும் ஒரே பொருளை தருவன அதாவது உயரமான என்ற பொருளை தருவன. ஆனாலும் மரத்தின் சிறப்பிக்க சேர்ந்து வந்ததால் ஒருபொருட் பன்மொழி ஆயிற்று.



இனி இலக்கிய சுவை!

கவி காளமேகம் இரு பொருள் பட எழுதுவதிலும் சொல் கொடுத்த உடனே எழுதுவதிலும் வல்லவர். திருமலைராயன் மன்னர் இவரை ஆதரித்தார். ஒரு சமயம் அவையில் காளமேகத்தை கேவலப்படுத்தும் நோக்கில் செருப்பு என தொடங்கி விளக்குமாறு என முடியுமாறு ஒரு பாடல் எழுத சொன்னார்களாம் சக புலவர்கள் விடுவாரா காளமேகம்.
   செருப்புக்கு வீரரை சென்று உழக்கும் வேலன்
பொருப்புக்கு நாயகனைப் புல்ல-மருப்புக்குத்
தண்தேன் பொழிந்ததிருத் தாமரைமேல் வீற்றிருக்கும்
வண்டே விளக்குமா றே!

என்ற அழகிய பாடலை பாடி முடித்துவிட்டார்.

செருப்புக்கு  செரு+புக்கு  செரு என்றால் போர்க்களம். புக்கு என்றால் புகுந்து என்றும்
விளக்குமாறு என்பதை விளக்கும்+ ஆறு – விளக்கமாகச் செல்லும் வழி என்றும் அமைத்து பாடி அனைவரையும் மூக்கில் விரல் வைக்க வைத்து விட்டார் காளமேகம்.

பொருள்:  போரில் எதிரிப்படை வீரர்களை துன்பப்படுத்தும் மலைக்குத் தலைவனாகிய வேலேந்திய முருகனை நான் அடைய தாமரையில் இருக்கும் வண்டே நீ வழி காட்டு! என்று ஒரு தலைவனை அடைய தலைவியின் கூற்றாக இந்த பாடலை அமைத்துள்ளார் காளமேகம்.


   அருமையான பாடல் அல்லவா?

மீண்டும் அடுத்த பகுதியில் பார்ப்போம்! உங்களது கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


அம்மா!

$
0
0

அம்மா!


பத்து மாதம் சுமந்தவளே!
பெத்து என்னை வளர்த்தவளே!
உன் சுமையோ ஏராளம் இருக்க
என் சுமையும் ஏற்றவளே!

பாத்து பாத்து வளர்த்தவளே! பாலோடு
பாசத்தையும் சேர்த்து ஊட்டி
நேசத்தை காட்டியவளே!
கால் வயிறு கஞ்சிக்கு கஷ்டப்பட்ட போதும் என்
முழு வயிறு நிறைய ஊட்டியவளே!


தலைவாரி பூச்சூட்டி மகிழ்ந்தவளே!
தாமதமாய் வீடுவரின் தவித்தவளே!
என் தோல்விகளில் தோள் கொடுத்து
உன் மடியில் அணைத்தவளே

ஊர் கண்படும் என்று
ஒரு நாள் தவறாமல்
கண்ணேறு கழித்து  கையில் தாங்கியவளே!
என் சுடு சொற்கள் உன்னை சுட்ட போதும்
உன் வடுவை நீ விட்டதில்லை!
ஒவ்வொரு நாளும் நீ எனக்கு
ஊட்டிவிட்டாய் உணவோடு நல்லுணர்வை!
 உன் வழிகாட்டுதலில் தடம் மாறாமல்
திடமோடு நடைபயின்றேன்!
உன் விரல் பிடித்து நடக்கையில்
ஓர் பாதுகாப்பை தந்தாய்!
உன் விழிப் பார்வையினில்
என் கள்ளம் கலைந்தாய்!
என் சுகத்திற்கென உன் நலம் தவிர்த்தாய்!
என் உயிரினில் கலந்திட்டு
உயர்வினில் நீ மகிழ்ந்தாய்!
அன்னையர் தினத்தில் அம்மா உனை வணங்குகிறேன்!
அன்போடு
உன்னை போற்றுகின்றேன்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

தளிர் ஹைக்கூ கவிதைகள்!

$
0
0

தளிர் ஹைக்கூ கவிதைகள்!

 வெந்தது
 உணவாகவில்லை!
 செங்கல்!

 மறைந்த நிலவு
 பூ தூவின நட்சத்திரங்கள்!
அமாவாசை!
 
சீட்டி அடித்தும்
ரசித்தனர் பெண்கள்!
மரத்தில் குருவி!

பறிக்கப்படாத
பூக்கள்!
முதிர்கன்னி!

நிஜத்தைதொலைத்து
நிழலில்நிம்மதிகாண்கிறாள்
நடிகை!


வெள்ளித்திரையின்
தங்கசரிகைகள்
நடிகைகள்!

விரிசல்
உலர்ந்துபோனது
ஈரம்!

திரைவிரித்ததுவானம்
இருண்டதுபூமி!
அமாவாசை!

மூன்றேமுடிச்சுக்கள்
பிணைக்கிறதுஉள்ளங்களை!
திருமணம்!

அசைந்தாலும் 
நகரவில்லை!
நீரில்நிழல்!

மைபூசியதும்
பொட்டுஇட்டுக்கொண்டதுவானம்!
நிலா!

அழகானபூ
மிதிபட்டது!
மிதியடி!

வானில்பிறந்தாலும்
மண்ணோடுகலக்கிறது
நீர்!

அதட்டிமிரட்டியதும்
அடங்கிபோகிறதுமழை!
இடி!


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்! நன்றி!

வீட்டை நகர்த்தி வைக்கிறார்கள்! கோவையில் அதிசயம்!

$
0
0

 கோவையில், முப்பதுஆண்டுபழமையானகட்டடம், புதியதொழில்நுட்பம்பயன்படுத்தி, அப்படியேபின்நோக்கிநகர்த்தப்பட்டுள்ளது.மேலைநாடுகளில், ஓரிடத்தில்இருக்கும்வீட்டை, எவ்வளவுதூரத்திலும்கொண்டுசென்றுஅமைத்துவிடும்வசதிகள்உள்ளன. ஆனால், நம்நாட்டில்அத்தகையவசதிகளும், சாத்தியக்கூறுகளும்குறைவு. ஆனாலும், வீட்டின்உயரத்தைஅதிகப்படுத்தவோ, சிறிதுதூரம்நகர்த்தவோமுடியும்என்றநிலையை, சமீபத்தியதொழில்நுட்பமாற்றங்கள்ஏற்படுத்தியுள்ளன.ஹரியானாவைசேர்ந்தபொறியாளர்கள், ஜாக்கிமற்றும்சிறியரகரயில்வீல்பயன்படுத்தி, ஒருகட்டடத்தைஉயர்த்தவோ, நகர்த்தவோசெய்துவருகின்றனர். இம்முறை, இந்தியாவின்பலநகரங்களில்பயன்படுத்தப்பட்டுவருகிறது. கோவைமேட்டுப்பாளையம்ரோடு, முருகன்மில்அருகேவசிப்பவர்தங்கவேலு. ரியல்எஸ்டேட்தொழில்செய்துவரும்இவருக்குசொந்தமானவீட்டை, 50 அடிதூரத்துக்குபின்நோக்கிநகர்த்தும்பணி, முடியும்தருவாயில்உள்ளது.
இதுகுறித்து, பணியைமேற்கொண்டுவரும்டி.டி.பி.டி., நிறுவனநிர்வாகஇயக்குனர்சுசில்ஷிசோடியாகூறியதாவது:
முன்னோர்கட்டியவீடுகளில், நவீனஉத்திகளைபயன்படுத்தி, தேவையானமாற்றங்கள்செய்தால், வீட்டின்ஜீவன்மாறாமல்இருக்கும். பழையவீடுகளை, உயர்த்துவது, சிறிதுதூரம்நகர்த்துவதுபோன்றபணிகளும்அத்தகையதுதான். முதல்முறையாகஹரியானாவில்இத்தகையமுயற்சியைமேற்கொண்டோம். அந்தமுயற்சியில்வெற்றிகிடைத்ததைதொடர்ந்து, இந்தியாவின்பலநகரங்களிலும்செய்துவருகிறோம்.தற்போதுகோவையைசேர்ந்ததங்கவேலுவின்பழையவீட்டை, 50 அடிதூரம்பின்னோக்கிநகர்த்தும்பணியை, கடந்தபிப்., மாதம்துவங்கினோம். 400 டன்எடைகொண்ட 2,400 சதுரடிபரப்பிலானவீட்டினை, 300 ரோலர்கள், 300 ஜாக்கிகளைபயன்படுத்தி, நகர்த்தும்பணியில்ஈடுபட்டோம். தற்போது, வீடுநகர்த்தும்பணிமுடியும்தருவாயில்உள்ளது.கட்டடத்தைநகர்த்திட, எலக்ட்ரிக்வயரிங், பிளம்பிங்சிஸ்டத்தில்எவ்விதமாற்றமும்செய்யவில்லை. கதவுகள், ஜன்னல்களைஅப்புறப்படுத்தவில்லை. வீட்டின்பிடிமானத்துக்காக, ஜன்னல்களில்செங்கல்கட்டுகட்டப்பட்டுள்ளது. இதை, பணிமுடிந்தஉடன்இடித்து, மீண்டும்பழையநிலையைஏற்படுத்திவிடுவோம். பணிதுவங்கிய 60 நாட்களில், 15 பணியாளர்களைகொண்டு, 35 அடிவரைநகர்த்தியுள்ளோம். இம்மாதஇறுதியில்வீடுமுழுமையாகபின்னோக்கிநகர்த்தப்பட்டுவிடும். பின், தரைத்தளத்தைமட்டுமேமீண்டும்சரிசெய்யவேண்டும். இந்ததொழில்நுட்பத்தின்மூலம், முன்னோர்கட்டிய, வாழ்ந்தவீடுகளைஅப்படியேபாதுகாக்கமுடியும். இவ்வாறு, கூறினார்.


வீடுநகர்த்தஆகும்செலவுரூ.20 லட்சம்

பின்நோக்கிநகர்த்தப்படும்தங்கவேலுவின்வீடு, தரைத்தளம், முதல்தளம்எனஇருதளங்கள்கொண்டது. மேட்டுப்பாளையம்சாலையில்அமைந்துள்ளஇந்தவீட்டுக்குபின்புறம், அவருக்குசொந்தமானகாலியிடம்நிறையஇருக்கிறது. "வீடு, ரோட்டின்முன்புறமும், காலியிடம்அதற்குபின்புறமும்இருப்பதால்தனக்குபயன்குறைவு' என்றுகருதியதங்கவேலு, புதியதொழில்நுட்பம்பயன்படுத்தி, வீட்டை 50 அடிதூரத்துக்குபின்நோக்கிநகர்த்தவிரும்பினார். அவரதுதிட்டப்படி, பணிமேற்கொண்டபொறியாளர்கள், வீட்டைநகர்த்திவருகின்றனர். இன்னும் 10 நாட்களில், வீடு 50 அடிதூரத்துக்குநகர்த்தப்பட்டுவிடும். அதாவது, வீட்டின்உரிமையாளர்விரும்பியபடியே, பிரதானசாலையோரம்அவருக்குகாலியிடம்கிடைத்துவிடும். அதைஅவர், தான்விரும்பியபடியே, வணிகஉபயோகத்துக்குபயன்படுத்தமுடியும். வீட்டைநகர்த்தும்இந்தபணிக்குமொத்தம்ரூ.20 லட்சம்செலவுபிடிக்கும்என்றுமதிப்பிடப்பட்டுள்ளது
.                                                                                                                                                                                      நன்றி: தினமலர்

தமிழன்னைக்கு சிலை தேவையா?

$
0
0

தமிழன்னைக்கு சிலை தேவையா?


நம்ம தங்கத்தலைவி நூற்று பத்தாவது விதிப்படி தினம் தினம் புதுப் புது அறிவிப்புக்களை வெளியிட்டு மக்களை குஷிப்படுத்தறாங்க?!! அந்த வகையில இன்னிக்கு சதம் அடிச்சிட்டாங்களாம்! பேரவைத்தலைவருக்கு பெருமை பிடிபடலை! எங்க தங்க தலைவி சதமடிச்சிட்டாங்கன்னு ஏதோ ஐ பி எல் டி 20 ல சதம் அடிச்ச மாதிரி பீலிங் பண்ணி புகழ்ந்துகிட்டு இருக்காரு அவரு.
   அது கிடக்கட்டும்! இன்னிக்கு அறிவிப்புல தமிழன்னைக்கு 100 கோடியில மதுரையில சிலை வைக்க போறாங்களாம் அம்மா! ஆமா தெரியாமத்தான் கேக்கறேன்! தமிழ் அன்னைன்னு ஒருத்தர் இருக்காங்களா? இது கடவுள் இருக்கா இல்லையாங்கறா மாதிரி ஒரு கேள்வி? தமிழ் ஒரு மொழி பாரம்பர்யமான மொழி செம்மொழி பல சிறப்புக்களை கொண்டது அவ்வளவுதான். மத்தபடி இதுவும் ஒரு லாங்க்வேஜ் அவ்வளவுதானே! என்னடா இவன் இப்படி பேசறானே கோபிச்சிக்க கூடாது.
   தமிழ் நமது தாய்மொழி! பல இலக்கண இலக்கிய வளங்களை உடையது! ஆனால் தமிழுக்கென்று ஒர் அன்னையும் அதற்கு சிலையும் தேவையா? தமிழ் வளர்ச்சிக்கு இந்த நூறு கோடி ரூபாயை பயன்படுத்தலாமே! தமிழ் நாட்டில் தமிழ் கல்வி கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகிறது. கிராமத்து குழந்தைகள் கூட மம்மி டாடி என ஆங்கில மீடியத்திற்கு தாவிக் கொண்டிருக்கிறது. தமிழ் கலாச்சாரம், தமிழ் மரபுகள் சுத்தமாக மறக்கடிக்கப்படுகின்றன.
     இன்னும் சொல்லப்போனால் பள்ளிகளில் தமிழாசிரியர் பற்றாக்குறையாக இருக்கிறது. தமிழ்வழி கல்வி என்பதே வேப்பங்காயாக கசக்கிறது. தமிழில் படித்தவர்களுக்கு எந்த சலுகையும் முன்னுரிமையும் வழங்கப்படுகிறதா? இல்லை! தமிழை வளர்க்க வேண்டுமானால் கிராமங்கள் தோறும் தமிழ் நூல்கள் கொண்ட நூலகங்கள் அமைக்கலாம். தமிழின் இலக்கண இலக்கியங்களை மின்னூலாக்கலாம்.
   தமிழ்வழி கல்வி பயில்பவர்களை ஊக்குவிக்கலாம்.  இதை எல்லாம் விடுத்து தமிழ் அன்னைக்கு சிலை வைத்தால் காக்கா கக்கா போகத்தான் உபயோகப்படுமே தவிர வேறு ஒன்றுக்கும் பலன் இல்லை. அது நம் வீட்டு காசு என்பதை கழக கண்மணிகள் உணர வேண்டும். முதலமைச்சருக்கு இது போன்ற ஆலோசனைகள் வழங்கும் புத்தி சிகாமணி யார் என்று தெரியவில்லை!

    முதலில் இருட்டில் இருக்கும் தமிழகத்திற்கு ஒளி கொடுங்கள்! அப்புறம் சிலைவைக்கலாம்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

மனதை பாதித்த மரணங்கள்!

$
0
0

மனதை பாதித்த மரணங்கள்!

மரணம்! நமது வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்று. பிறந்த அனைவரும் ஒரு நாள் இறந்தே ஆகவேண்டும். பிறப்பும் இறப்பும் நம் கையில் இல்லை என்ற கருத்துக்கள் ஒவ்வொரு மரணத்தின் போது சொல்லப்பட்டாலும் மரணங்கள் என்னவோ நம் மனதை பாதிக்கவே செய்கின்றன. பத்து தினங்களுக்கு முன் நடந்த விபத்தில் இறந்த நண்பர் ஒருவரின் மரணம் இந்த கட்டுரையை எழுத தூண்டியது. இது அவரது மரண அஞ்சலியாக அப்போதே எழுதி இருக்க வேண்டியது. ஆனால் முடியவில்லை. இன்று அவரது தசாஹம்.(கருமாதி). சென்று வந்த பின் மீண்டும் என் மனதை பாதித்த மரணங்களை அசை போடுகிறேன்.
   சிறு வயதில் மரணங்கள் என்னை அந்த அளவிற்கு பாதிக்கவில்லை. ஐந்தாவது ஆறாவது படிக்கும் சமயம், தலைவர்கள் இறந்தால் ஒருநாள் லீவு என்ற வகையில் ஒருவித சந்தோஷமே நிலவி வந்தது. நான் ஏழாவது படிக்கையில் முதல் முதலில் கூடப்படித்த மாணவி ஒருவள் இறந்தபோது வருத்தமாக இருந்தது. அது பற்றி சரவணன் மீனாட்சி பதிவில் பார்த்தோம்.எம், ஜி. ஆர் இறந்தபோது கூட ஒரு நாள் லீவு என்றுதான் தோன்றியது. அப்படி விளையாட்டாய் சென்று கொண்டிருந்த போது. 1991ல் தமிழகத்தில் பிரசாரத்திற்கு வந்த ராஜிவ்காந்தி ஸ்ரீபெரும்பதூரில் குண்டுவைத்து கொல்லப்பட்ட போது அதிர்ச்சியாக இருந்தது. அப்போது ராஜிவை ஒரு ஹீரோவாக நான் எண்ணியிருந்தேன். வருங்கால இந்தியாவை குறித்த ராஜிவின் திட்டங்கள் தேர்தல் பிரசாரத்தில் கேள்விப்பட்டதில் பிடித்துப் போய் இருந்தது. அவர் தமிழகத்தில் கொல்லப்பட்டார் என்பதை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை. அவர் சாகவில்லை. எப்படியும் பிழைத்து வந்துவிடுவார் என்று கூட நினைத்தேன் அப்போது.
    நான் பிளஸ் டூ முடித்த பின் நடந்த மரணங்களில் முதலில் என் அத்தை பாட்டியினுடையது. முதல் முதலாக என் உறவினர் ஒருவரின் சாவு. தகவல் வந்ததும் என் தாத்தாவிற்கு தகவல் சொல்ல மாநெல்லூருக்கு அனுப்பப் பட்டேன். அங்கிருந்து நேராக வீட்டிற்கு வந்துவிட்டேன். சாவு வீட்டிற்கு செல்லவே இல்லை. அங்கே செல்ல ஒருவித பயம் இருந்தது அப்போது. அதற்கப்புறம் நடந்த காரியங்களை இழுத்து போட்டு செய்தாலும்  சாவு வீட்டிற்கு செல்ல வில்லை. அதே ஆண்டு என்னுடன் கிரிக்கெட் விளையாடும் நண்பன் என்னைவிட வயதில் சிறியவன் டில்லி பாபு மரணித்தான். விரை வீக்கம் என மருத்துவ மனை சென்றவன் அறுவை சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டான். முன் நாள் கூட ஒன்றாக விளையாடிவிட்டு சென்றான். ஒரு போட்டியில் கடைசி கட்டத்தில் ரன் அவுட் ஒன்று. அதை செய்தவன் அவன். எதிரணி வீரன் ஒத்துக் கொள்ளவில்லை. மேட்ச் அப்படியே நின்றது. அது ரன் அவுட் தான். நாம் தான் ஜெயித்தோம். எதிரணிக்கு பந்தயப்பணம் கொடுக்காதே! என்று கூறிச் சென்றவன் பிணமாகி விட்டான். அது மனதை என்னவோ செய்தது.
  அதற்கப்புறம் என் அம்மாவழி தாத்தா, பாட்டி, என் அப்பாவழி தாத்தா பாட்டி என நிறைய மரணங்கள் சந்தித்தாலும் சொந்தத்தில் நடந்த மரணங்களை விட வெளியார்களுடைய மரணங்கள் மனதை என்னவோ செய்தன.


ஒரு மதிய வேளையில் இங்கிலாந்து இளவரசி டயானா விபத்தில் சிக்கி உயிருக்கு போராடுகிறார் என்ற செய்தியும் மாலையில் இறந்து போனார் என்ற செய்தியும் மனதை என்னவோ செய்தன. அவரைப் பற்றி எத்தனையோ சர்ச்சைகள் இருந்தாலும் பிறரை நேசிக்க கூடிய மனிதராக ஆடம்பரம் இல்லாத எளிமையான மனிதராக அவரை ஊடகங்கள் மூலம் அறிந்திருந்தேன். அவர் மரணித்த தினத்தன்று பொன்னேரி சென்று தமிழ் பேப்பர் கேட்டபோது அனைத்து கடைகளிலும் விற்று தீர்ந்து இருந்தது. அதே போல்தான் சில்க் ஸ்மிதாவும். இவர் தற்கொலை செய்து இறந்து போனது எனக்கு ஆச்சர்யம் அளித்தது. ஒரு கவர்ச்சி நடிகையாக இருந்தாலும் அவரை ஊடகம் வாயிலாக அறிந்ததின் தாக்கம் அவரது மரணம் என்னவோ செய்தது. அப்போது நான் எழுதிக் கொண்டிருந்த கையெழுத்துப் பிரதியில் அவருக்கு அஞ்சலி தெரிவித்தபோது சிலர் எதிர்க்கவும் செய்தார்கள்.ஆனால் எனக்கு ஒரு திருப்தி.
    ஹெலிகாப்டர் விபத்தில் இறந்துபோன டி.எம்.சி பாலயோகி, நடிகை சௌந்தர்யா, விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன், பாரதிய ஜனதாவின் பிரமோத் மகாஜன் நம்மவர் படத்திற்கு இசையமைத்த மகேஷ்,எழுத்தாளர் கிருஷ்ணா டாவின்சி, எழுத்தாளர் சுஜாதா, ஆகியோரின் மரணங்கள் கொஞ்சம் பாதிப்பை ஏற்படுத்தத்தான் செய்தன. ஏதோ ஓர் இனம் புரியா  உணர்வு அப்போது
ஆட்டிப்படைத்தது. உடன் கிரிக்கெட் விளையாடிய நண்பன் பாலாஜி என்ற பாலாவின் மரணம் நான் எதிர்பாராத ஒன்று. தலைவலி! தலைவலி என்று அடிக்கடி கூறுவான். அது மூளையில் கட்டி என்று யாருக்கும் தெரியாமல் போனது. பத்தாவது பெயில் ஆன அவன் கம்பெனிக்கு வேலைக்கு சென்றவன் இரவு பிணமாக திரும்பி வந்தான். அதிகாலை மூன்று மணிக்கு கதவைத் தட்டி அழுதபடி நண்பன் வெங்கடேசன் தகவல் சொன்ன போது அப்படியே ஸ்தம்பித்தேன். அவனைப் போல ஒரு நண்பன் இனி கிடைக்க மாட்டான்.இதற்கடுத்து காலையில் பார்த்த என் அம்மாவுடன் பணியாற்றிய சக ஊழியர் போரியப்பன் அடுத்த ஒரு மணி நேரத்தில் அதே இடத்தில் விபத்தில் சிக்கி இறந்த போது ஏற்பட்டது. மனிதகாயம் நிலையற்றது என்று உணர வைத்தது. பஞ்சர் கடை ஒன்றில் அவர் வண்டிக்கு பஞ்சர் போட நான் காற்று பிடித்துக் கொண்டு வீட்டுக்கு திரும்பினேன். பஞ்சர் ஒட்டிக் கொண்டு திரும்பும் சமயம் லாரி மோதி இறந்து போனார் அவர்.
   அதே போலத்தான் கவரைப் பேட்டை பள்ளி உதவி தலைமை ஆசிரியராக இருந்த திரு நாராயண மூர்த்தியின் மரணமும். அந்த பள்ளியில் கொஞ்ச காலம் தற்காலிக ஆசிரியராக  இருந்த போது பழக்கமானார் அவர். மிகவும் ஜாலி டைப். நான் வண்டி வேகமாக ஓட்டுவதாகவும் டிவிஎஸ் எக்செல் இவ்வளவு வேகமாக ஓட்டக் கூடாது என்று அறிவுரை கூறுவார். லேட்டான கூட பரவாயில்லை! நிதானமா வாய்யா! என்பார். ஒரு நாள் அவர் கல்யாணம் ஒன்றுக்கு திரும்பி வரும் போது காரனோடை அருகே விபத்தில் சிக்கி இறந்து போனார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளித்தது. அவரது இறப்புக்கு சென்ற போது வந்திருந்த மாணவர் கூட்டமும் உறவினர் கூட்டமும் அவரது உயர்வினை காட்டியது. அவரது சிறிய பெண் கண்ணீரோடு அழுத காட்சி கண் முன் நின்றது.
    அடுத்த மரணம் என் தங்கையின் பெண் சர்மிதா மரணம். பிறந்து ஆறே மாதத்தில் இதய வால்வு கோளாறால் இறந்து போனாள். பிறந்ததில் இருந்தே சதா அழுது கொண்டே இருந்த குழந்தை. முதலில் காரணம் தெரியவில்லை.ஐந்தாவது மாதத்தில் தான் இதயவால்வு பிரச்சனை என்று அறிந்தார்கள். அதற்கு அறுவை சிகிச்சை செய்தாள் போதும் பயமில்லை என்றனர். திடிரென சளிக் காய்ச்சல் ஏற்பட்டு சுவாசிக்க முடியாமல் சென்னை காமகோடி ஹாஸ்பிடலில் ஒரு மாதம் சிகிச்சை செய்து அங்கு பணம் செலவழிக்க முடியாமல் எழும்பூர் குழந்தைகள் மருத்துவ மனையில் சேர்த்து அங்கு ஆபரேசன் செய்த பின் ஆறு மணி நேரத்தில் உயிரை விட்டது குழந்தை. இதை என்னால் ஜீரணிக்கவே
முடியவில்லை. அந்த குழந்தை மருத்துவ மனையில் இருந்த ஒன்றரை மாதங்களும் எங்களுக்கு நரகமாய் இருந்தது. திடீர் திடீர் என அபாய கட்டத்திற்கு செல்லும் பின்னர் மீளும். இப்படி இருந்து ஒரு நம்பிக்கை கொடுத்து சட்டென இறந்து போனது அந்த குழந்தை. அப்போது என் தங்கையின் அழுகைக்கு என்னால் சமாதானம் செய்ய முடியாமல் போனது.
  இதெல்லாவற்றையும்விட இரண்டு நாள் தூக்கம் வர விடாமல் செய்தது நண்பன் சந்துருவின் மரணம். திருமணம் ஆகி எட்டு வருடங்கள் குழந்தை இல்லாமல் இருந்து மருத்துவ சிகிச்சைக்கு பின் குழந்தை உண்டாகி சீமந்த கல்யாணம் முடிந்த மாலையில் இறந்து போனான் சந்துரு.  கல்கத்தா நெடுஞ்சாலை விரிவாக்கம் இன்னுமொரு உயிரை பலி வாங்கி விட்டது.
    இது என் நண்பனின் கவனக் குறைவால் ஏற்பட்ட மரணம் என்றாலும் இரண்டு நாள் தூக்கம் வரவில்லை சீக்கிரத்தில். சீமந்தம் நடந்த மண்டபத்தில் கணக்கு செட்டில் செய்து விட்டு வெளியே வந்தவன் சாலையை கடக்க முயன்ற போது லாரி எமனாகி விட்டது.
   லாரி அருகில் வருகையில் சாலையை கடந்து விடலாம் என்ற தவறான கணக்கு அவன் கணக்கை முடித்து விட்டது. அவனது மனைவிக்கும், ஒரே பிள்ளையை பறி கொடுத்த அவனது பெற்றோருக்கும் என்ன ஆறுதல் சொல்வது. பிறக்கும் அவனது குழந்தைக்கு தந்தையை பார்க்கும் அதிர்ஷ்டம் இல்லாமல் போயிற்றே! இந்த குழந்தையை எல்லோரும் தூற்றுவார்களே! இவ்வாறு பல சிந்தனைகள் என் மனதை குழப்பியதில் தூக்கம் இழந்தேன்.
   இப்படி மரணங்கள்! நம் மனதை மரணித்து மறக்கடித்துக் கொண்டுதான் இருக்கின்றன. என்ன செய்வது? இதுவும் கடந்து போகும்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


லட்சிய மனிதருக்கு வாழ்த்துக்கள் சொல்வோம்!

$
0
0
பெங்களூரு: சிறுவயதில் பேப்பர் போடும் பையனாக வாழ்க்கையைத்துவக்கி, கடுமையாக உழைத்து, தற்போது கோல்கட்டாவில் உள்ள இந்திய மேலாண்மை கழகத்தில் படிக்கவுள்ள பெங்களூருவைச் சேர்ந்த சிவக்குமார் என்பவரது வாழ்க்கை, மனஉறுதிக்கும், தன்னம்பிக்கைக்கும் மிகப்பெரிய எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

சிவக்குமார். கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் மிகவும் ஏழ்மையான தனது குடும்பத்தை பொருளாதார ரீதியாக உயர்த்த வேண்டும் என்ற எண்ணத்துடன், தனது 5வது வகுப்பு முதல் பேப்பர் போடும் தொழிலை மேற்கொண்டு வரும் தன்னம்பிக்கை மனிதர். தன்னுடைய வாழ்க்கை குறித்து சிவக்குமார் குறிப்பிடுகையில், "நான் எனது 5வது வகுப்பு படிக்கும் போதில் இருந்து பேப்பர் போடும் தொழிலை செய்து வருகிறேன். மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்த எனது குடும்பத்தை பொருளாதார ரீதியாக உயர்த்த எனக்கு ஒரு தொழில் தேவைப்பட்டது. பின்னர் எனது 10ம் வகுப்பு முதல் தனியாக ஏஜென்சி ஒன்றை எடுத்து தற்போது வரை பேப்பர் விநியோகம் செய்து வருகிறேன்" என்று தெரிவித்தார்.

அந்த வருமானத்தில் இன்ஜினியரிங் முடித்துள்ள சிவக்குமார், கேட் தேர்வு எழுதி தற்போது கோல்கட்டாவில் உள்ள இந்திய மேலாண்மை கழகத்தில் கல்வி பயில உள்ளார். "மேற்படிப்பு படிக்க வேண்டும் என்ற எனது வேட்கைக்கு என் தொழில் என்றுமே தடையாக இருந்ததில்லை. ஏனெனில் நான் எனது தொழிலை விரும்புகிறேன். இதன் மூலம் எனது குடும்பத்தை சிறப்பாக கவனித்துக்கொள்வதால், ஒவ்வொரு இரவும் என்னால் நிம்மதியாக தூங்க முடிகிறது" என்கிறார் சிவக்குமார்.

சிவக்குமாரின் தாயார் ஜெயம்மாவுக்கு தனது மகன் குறித்து மிகவும் பெருமிதம். 5ம் வகுப்பிலிருந்து தற்போது வரை அவன் போராடிக்கொண்டிருக்கிறான். இந்தளவு அவன் முன்னேறியது குறித்து எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்கிறார் அந்த தாய்.

சிறுவயதில், வறுமை காரணமாக, குடும்பத்தினரால் படிப்பிற்கு உதவமுடியாத சூழல் வந்த போது, தனது படிப்பிற்கு உதவும்படி ஒருவரை அணுகியுள்ளார் சிவக்குமார். அவருக்கு சிவக்குமாருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்த போதும், சிவக்குமாருக்கு உடனடியாக உதவி செய்யாமல், அவர் கல்வி கற்கும் பள்ளிக்கு வந்து அவரது நடவடிக்கைகள் குறித்து முழுமையாக அறிந்து கொண்ட பின்னர், அந்த ஓராண்டிற்கான படிப்பு செலவு முழுவதையும் ஏற்றுள்ளார்.

எனது எதிர்கால நடவடிக்கை குறித்து சிவக்குமார் கூறுகையில், கோல்கட்டா ஐ.ஐ.எம்.,மில் தனது படிப்பை முடித்த உடன், எஜூகேட் இந்தியா பவுண்டேஷன் என்ற பெயரில் அமைப்பு ஒன்றை நிறுவி, அதன் மூலம் ஏழை எளிய மக்களுக்கு கல்வி அளிப்பதே தனது லட்சியம் என்கிறார் இந்த லட்சிய மனிதர்.                                                                                           நன்றி: தினமலர்

தலைவர் ஜோக்ஸ்!

$
0
0

 ஊழலை ஒழிப்போம்னு கோஷம் போட்டவங்களை பார்த்து தலைவர் என்ன சொல்றார்?
என்னை எவனாலும் ஒழிக்க முடியாதுங்கறார்!
                                   சிக்ஸ்முகம்.

கட்சி எதிர்காலத்துல எப்படி இருக்கும்னு கேட்ட தலைவர் ஏன் அவ்வளவு டென்ஷன் ஆயிட்டாரு?
 எதிர்காலத்துல கட்சி எப்படி இருக்கும்?னு பதில் வந்துச்சாம்!
                                       சி. சாமிநாதன்.

ஏன்யா! நில அபகரிப்புக்கு கூடவா ஸ்கூல், காலேஜ் எல்லாம் லீவ் விடுவாங்க?
தலைவரே அதே பீதியில இருக்காதீங்க.. அது நில அபகரிப்பு இல்லை! நில அதிர்வு!
                                       எம். தஞ்சை தரன்.
ஐபி எல் மேட்சை நம்ம முதல்வரே எடுத்து நடத்துவாங்கன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவே இல்லை!
தலைவரே அது 20-20 இல்லை விஷன்2023!
                                           கி.ரவிக்குமார்.
படிப்படியாக குறைக்கப்பட்டு பின் முற்றிலும் நீக்கப்படும்னு தலைவர் எதை சொல்றார்?
அக்னி நட்சத்திர அனலை!
                                   அ.ரியாஸ்
தலைவர் அரசியல்ல இருந்து விலகிட்டாரே ஏன்?
கண்டிப்பா வாக்கிங் போகனும்னு குடும்ப டாக்டர் சொல்லிட்டாரே!
                                    அம்பைதேவா.
தலைவருக்கு மப்பு அதிகமாயிடுச்சுன்னு நினைக்கிறேன்!
எப்படி சொல்றே?
டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசுக்களிடம் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகத்தீர்வு காணவேண்டும்னு பேசி இருக்காரே!
                                           க.சரவணக்குமார்.
தலைவர் ஏன் விளம்பர போர்டு எழுதறவர் மேல கோபமா இருக்காரு?
அதுவா தலைவரால் கட்சி தோற்றுவிக்கப்பட்டதுன்னு போர்டு எழுதச் சொன்னா தலைவரால் கட்சி தோற்று விக்கப்பட்டதுனு போர்டு எழுதி வெச்சி இருக்காரு!
                                                 ச்சாமு
மன்மோகன் சிங் சுயசரிதை எழுதினா என்ன பேர் வைப்பார் தெரியுமா?
எனக்குத்தெரியாது!
சபாஷ்! கரெக்டா சொல்லிட்டே!
                                 தஞ்சை தாமு.

தலைவருக்கு தற்பெருமை அதிகம்னு எப்படி சொல்றே?
நீங்க முறைகேடா சொத்து சேர்த்தீங்களான்னு வருமானவரித்துறைக்காரங்க கேட்டதுக்கு  இது நானா சேர்த்த சொத்து இல்லே! தானா சேர்ந்த சொத்துனு பதில் சொல்றாரே!
                                           எஸ். கோபாலன்.

இப்ப என்னத்துக்கு பொதுக்குழுவில இருந்து கிளம்பி தலைவர் கண் டெஸ்ட் பண்ணிக்க போறார்?
எலெக்சன்ல கண்டெஸ்ட் பண்ணுங்கன்னு சொன்னதை அந்த லட்சணத்துல புரிஞ்சிகிட்டு இருக்கார்!
                                  பர்வீன் யுனூஸ்
தலைவர் சொன்ன பதிலை கேட்டு ஜட்ஜ் டென்ஷன் ஆயிட்டாரா.. ஏன்?
ஆத்துல ஏன் மணல் அள்ளுனீங்கன்னு கேட்டா போலீஸ் கண்ணுல தூவறதுக்குன்னு சொன்னாராம்!
                         பர்வீன் யூனுஸ்.
முப்பது வருஷத்துக்கு எதிரிங்க தலைவர்கிட்ட நெருங்கவே முடியாது!
அப்புறம்?
அப்புறம் விடுதலை ஆயிருவாரு!
                                 கி. சாமிநாதன்.

எலைட் பார் தலைவரின் சிந்தனையை தூண்டிருச்சா?
உற்சாக மிகுதியில் தமிழகம் முன்னேற்ற போதையில் செல்கிறதுன்னு கூவுறாரே!
                               வி. விஷ்ணுகுமார்.

தலைவருக்கு ஐபிஎல் பித்து புடிச்சிருச்சு!
எப்படி சொல்றே?
அதிரடியாக செயல்படுவதில் தென்னாட்டு கிறிஸ்கெய்லே!எதிரிகளை வீழ்த்துவதில்தமிழ்நாட்டு டேல் ஸ்டெய்னே வருக வருக.. ன்னு பேனர் வைக்க சொல்றாரு!
                          வத்தியிராயிருப்பு தெ.சு. கவுதமன்.
நல்லாட்சி அமையணும்னு வேண்டிக்கிவோம்!
ஏன் தலைவரே.. நம்ம ஆட்சி அமைய கூடாதா?
                               வீ. விஷ்ணு குமார்.

தலைவரை இப்படி புலம்ப வைச்சிட்டாங்களே!
எப்படி?
அரும்பாடுபட்டு கட்சியை வளர்த்தேன்.. எல்லாம் புழலுக்கு இரைத்த நீராய் போச்சேன்னு!
                                  கிணத்துக் கடவு ரவி
திருப்பித்தா! திருப்பித்தா டெபாசிட்டை திருப்பித்தா!
தலைவரே! வெறும் மூணு ஓட்டு வாங்கிட்டு இப்படி கோஷம் போட்டா டெபாசிட்டை திருப்பித்தரமாட்டாங்க.. வாங்க வீட்டுக்கு போகலாம்!
                                       க,சரவணகுமார்.
மண்டை ஒடைஞ்சு ரத்தம் வர்றதுக்கு தலைவர் சொல்ற காரணம் நம்பும் படியா இல்லையே!
 என்ன சொன்னார்?
வெயில் மண்டையை பிளந்துடுச்சுன்னு சொல்றார்!
                              சோலை சுகுணா.
தலைவர் முழு பூசணிக்காயை சோத்துல மறைக்கிறாரே!
என்ன சொன்னார்?
நிழலுக்கு கூட புழல் பக்கம் ஒதுங்கியது இல்லைங்கிறாரே!
                                   வீ.விஷ்ணுகுமார்.
தெருக்கோடியில் இருந்து வந்தவன் நான் கடைக்கோடி தொண்டனாக் இருந்தவன் நான்..
தலைவர் என்ன சொல்ல வர்றார்?
சொத்துக் கணக்கை சூசகமா சொல்றார் போல!

                                 பர்வீன் யூனூஸ்.

நன்றி: ஆனந்த விகடன்.

தங்கள்வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப் படுத்துங்கள்! நன்றி!


ஐபிஎல் அரங்கேற்றம்!

$
0
0

ஆறு வருடங்களாய் ஆடுகிறார்கள்
ஐபிஎல் கிரிக்கெட்டு!
அதை அப்பாவிகள் பார்த்து ரசிக்கிறார்கள்
மெனக்கெட்டு!
கோடிகளில் வீரர்கள் புரள்கிறார்கள்
கோடி மக்கள் அதை ரசிக்கிறார்கள்!

வீதியில் ஆடும் பிள்ளைகள் கூட
விட்டுக் கொடுக்கமாட்டார்கள் தரம்கெட்டு!
விலைக்கு ஆடும் இவர்களோ
விலை போகிறார்கள் மானம் கெட்டு!

ஹாக்கி நமது தேசிய விளையாட்டு
அதற்கோ இல்லை மார்க்கெட்டு!
அயல் நாட்டினன் ஓடினான் விளையாட்டினை
விட்டுவிட்டு! அதை பிடித்துக் கொண்டோம்
தறிகெட்டு!

ஏலத்தில் விடுகிறார்கள் வீரர்களை!
அவர்கள் சோரம் போனதில் தப்பிலை!
விலை போகும் வீரர்கள்  கொடுக்கிறார்கள்
விலையை! வீணில் அதற்கேன் ஆர்ப்பாட்டம்!
ஐபிஎல் ஒர் சூதாட்டம்!
அதில் அடிக்கடி நடக்குது
அரங்கேற்றம்!
நாடகம் காணும் நமக்கெல்லாம்
கிடைக்குது ஏமாற்றம்!
பிசிசிஐ பண்ணுது ஓர் அரசியல்
அதில் ஊழல்புகுவதில் வியப்பிலை!
விளையாட்டு எப்போது வியாபாரம் ஆயிற்றொ
அப்பொழுதே அது இழந்தது
விக்கெட்டு!
வீரர்களுக்கு தேவை ஊக்கம் இங்கே
கொட்டப்படுவதொ பணத்தின் தாக்கம்!
இந்தியாவில் எப்போதும் கிரிக்கெட் தாகம்!
அதனால் விளைவது பிக்சிங் மோகம்!

 கிரிக்கெட்டிற்கு வீட்டில் தடை போடு!
 சரிப்படும் உன் வாழ்க்கை நேர்க்கோடு!
இனியேனும் கிரிக்கெட்டை விட்டுவிட்டு
இலட்சியத்தை அடைய உறுதிப்படு!

தங்கள் வருகைக்கு நன்றி பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


திருப்பூரில் 2500 ஆண்டுகளுக்கு முன் புதைந்த நகரம் கண்டுபிடிப்பு!

$
0
0

திருப்பூர் - ஈரோடுமாவட்டஎல்லையிலுள்ளகொடுமணல்கிராமம், இரண்டாயிரத்து 500 ஆண்டுகளுக்குமுன், வணிகபெருநகரமாகவிளங்கியதற்கானஆதாரங்கள், அகழ்வாராய்ச்சியின்மூலம்கிடைத்துள்ளன.
திருப்பூர் - ஈரோடுமாவட்டஎல்லையில், நொய்யல்ஆற்றின்கரையிலுள்ளதுகொடுமணல்கிராமம். சங்ககாலத்தில்வணிகபெருநகரமாக, பதிற்றுப்பத்தில், "கொடுமணம்பட்ட... வினைமான்அருங்கலம்' என்றபாட்டில், மிகச்சிறந்ததொழிற்கூடங்கள்அமைந்திருந்ததற்கானசான்றுகள்உள்ளன. இது, சேரமன்னர்களின்தலைநகரமாகவிளங்கியகரூரையும், வணிகதொடர்புக்குபயன்பட்டமேலைக்கடற்கரைதுறைமுகமான, முசிறிபட்டணத்தையும், இணைக்கும் "கொங்கப்பெருவழி'யில்அமைந்துள்ளது.கொடுமணல்பகுதியில், தொல்லியல்துறை, செம்மொழிஉயராய்வுமையம்மற்றும்பாண்டிச்சேரிபல்கலைஉதவியுடன், அதன்
பேராசிரியர்ராஜன்தலைமை
யிலானகுழுவினர், கடந்தஇரண்டுமாதமாகஆய்வுசெய்துள்ளனர். ஆய்வின்போது, தமிழ்பிராமிஎழுத்துபொறிக்கப்பட்டமண்பாண்டங்கள்; ஆட்பெயர்கள், குறியீடுகள்கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தமிழ்பிராமிஎழுத்துக்கள், இலக்கணபிழையின்றிஉள்ளன. இரண்டாயிரத்து 500 ஆண்டுகளுக்குமுன்பேதமிழர்கள்படிப்பறிவில்சிறந்தவர்களாகஇருந்ததற்குசான்றாக, இவைகிடைத்துள்ளன. பிறநாடுகளுடன்வணிகதொடர்புகளைவைத்திருந்ததற்குசான்றாகவெள்ளிமுத்திரைநாணயங்கள், வடக்கத்தியகருப்புவண்ணம்மெருகேற்றப்பட்டமண்பாண்டங்களும்கிடைத்துள்ளன.
விலைஉயர்ந்தகற்களைக்கொண்டுஉருவாக்கப்பட்டதொழிற்கூடங்கள், நெசவுத்தொழில், நூல்நூற்கபயன்பட்டதக்களி, தந்தத்தால்செய்யப்பட்டநூல்நூற்கபயன்படும்உபகரணம், இறந்தவர்களைபுதைக்கும்ஈமக்காட்டில், பெருங்கற்படைஈமச்சின்னங்கள், சுடுமண்தக்கலி, சுடுமண்மணிகள், தந்தத்தால்செய்யப்பட்டஅணிகலன்கள், கூரைஓடுகள், திருப்பூர்: திருப்பூர் - ஈரோடுமாவட்டஎல்லையிலுள்ளகொடுமணல்கிராமம், இரண்டாயிரத்து 500 ஆண்டுகளுக்குமுன், வணிகபெருநகரமாகவிளங்கியதற்கானஆதாரங்கள், அகழ்வாராய்ச்சியின்மூலம்கிடைத்துள்ளன.
திருப்பூர் - ஈரோடுமாவட்டஎல்லையில், நொய்யல்ஆற்றின்கரையிலுள்ளதுகொடுமணல்கிராமம். சங்ககாலத்தில்வணிகபெருநகரமாக, பதிற்றுப்பத்தில், "கொடுமணம்பட்ட... வினைமான்அருங்கலம்' என்றபாட்டில், மிகச்சிறந்ததொழிற்கூடங்கள்அமைந்திருந்ததற்கானசான்றுகள்உள்ளன. இது, சேரமன்னர்களின்தலைநகரமாகவிளங்கியகரூரையும், வணிகதொடர்புக்குபயன்பட்டமேலைக்கடற்கரைதுறைமுகமான, முசிறிபட்டணத்தையும், இணைக்கும் "கொங்கப்பெருவழி'யில்அமைந்துள்ளது.கொடுமணல்பகுதியில், தொல்லியல்துறை, செம்மொழிஉயராய்வுமையம்மற்றும்பாண்டிச்சேரிபல்கலைஉதவியுடன், அதன்பேராசிரியர்ராஜன்தலைமை
யிலானகுழுவினர், கடந்தஇரண்டுமாதமாகஆய்வுசெய்துள்ளனர். ஆய்வின்போது, தமிழ்பிராமிஎழுத்துபொறிக்கப்பட்டமண்பாண்டங்கள்; ஆட்பெயர்கள், குறியீடுகள்கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தமிழ்பிராமிஎழுத்துக்கள், இலக்கணபிழையின்றிஉள்ளன. இரண்டாயிரத்து 500 ஆண்டுகளுக்குமுன்பேதமிழர்கள்படிப்பறிவில்சிறந்தவர்களாகஇருந்ததற்குசான்றாக, இவைகிடைத்துள்ளன. பிறநாடுகளுடன்வணிகதொடர்புகளைவைத்திருந்ததற்குசான்றாகவெள்ளிமுத்திரைநாணயங்கள், வடக்கத்தியகருப்புவண்ணம்மெருகேற்றப்பட்டமண்பாண்டங்களும்கிடைத்துள்ளன.

விலைஉயர்ந்தகற்களைக்கொண்டுஉருவாக்கப்பட்டதொழிற்கூடங்கள், நெசவுத்தொழில், நூல்நூற்கபயன்பட்டதக்களி, தந்தத்தால்செய்யப்பட்டநூல்நூற்கபயன்படும்உபகரணம், இறந்தவர்களைபுதைக்கும்ஈமக்காட்டில், பெருங்கற்படைஈமச்சின்னங்கள், சுடுமண்தக்கலி, சுடுமண்மணிகள், தந்தத்தால்செய்யப்பட்டஅணிகலன்கள், கூரைஓடுகள், வணிகவீழ்ச்சிஉள்ளிட்டகாரணங்களால், நகரம்அழிந்துள்ளது. வணிகர்கள்அதிகளவுவந்துதங்கியிருந்ததும், 1912ம்ஆண்டு, ஐந்துகல்தொலைவில்உள்ளகத்தாங்கண்ணியில்கிடைத்தரோமானியநாணயகுவியலும், வணிகதொடர்புகளைஉறுதிப்படுத்துகின்றன.
தமிழ்பிராமிஎழுத்துபொறித்தமண்பாண்டங்கள்கிடைத்ததும், எழுத்துஇலக்கணபிழையில்லாமல்உள்ளதால், 2,500 ஆண்டுகளுக்குமுன்பே, தமிழர்களின்கல்விஅறிவைவிளக்குகிறது.வடக்கத்தியகருப்புவண்ணம்மெருகேற்றப்பட்டமண்பாண்டங்கள், பிராகிருதமொழியில்பெயர்பொறித்துஆட்பெயர்கள், பெருங்கற்படைசின்னங்கள், இனக்குழுசார்ந்தவாழ்வியலையும், அவர்களுக்குதேவையானஉணவுஉற்பத்திக்கு, வேளாண்தொழில்மேற்கொண்டதற்கானஉழவு, அறுவடைக்கானஉபகரணங்கள்,சேமிப்புகிடங்குகள், கால்நடைஎலும்புகள்அதிகளவுகிடைத்துள்ளதால், கால்நடைவளர்ப்பும்சிறந்துவிளங்கியுள்ளது.ஆட்பெயர்களில், மாகந்தை, குவிரன், சுமனன், ஸம்பன், ஸந்தைவேளி, பன்னன், பாகன், ஆதன்என்றபெயர்களும், பெரும்பாலும்சாத்தன், ஆதன்எனமுடிவடைகின்றன. கண்ணகியின்கணவர்பெயர்சாத்தன்; சேரஅரசர்களின்பெயர்சேரலாதன்எனமுடிவடைவதும், இந்நகரின்காலத்தைகுறிக்கிறது.
விலைஉயர்ந்தமணிகள்உற்பத்தி 
நகரமாகஇருந்ததாலும், ஆயுதங்கள், கோவில்கள்தென்படவில்லை. இதிலிருந்துபோர்முறை, கடவுள்வழிபாடு, பிந்தையகாலத்தில்உருவானதுஎனதெரியவருகிறது. 
அறிவியல்சார்ந்தகார்பன்ஆய்வு, அமெரிக்காவுக்குஅனுப்பிஆய்வுசெய்ததில், கொடுமணல்காலம்கி.மு., ஐந்தாம்நூற்றாண்டுக்குமுந்தையதுஎனதெரிந்துள்ளது.கொடுமணல்என்றநகரம், மிகச்சிறந்ததொழில்நுட்பங்களுடன்கூடியதொழிற்கூடங்களைகொண்டநகரமாகவும், உள்நாடு, வெளிநாடுவணிகஉறவுகளைகொண்டவணிகநகரமாகவும், சமூக, பொருளாதார, எழுத்தறிவுபெற்றநகரமாகவும்விளங்கியுள்ளதுஆய்வின்மூலம்தெரியவந்துள்ளது.இவ்வாறு, ராஜன்கூறினார்.               நன்றி: தினமலர்

உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 16

$
0
0

உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 16


  சென்ற வாரம் இரட்டைக் கிளவியும் ஒருபொருட் பன்மொழியும் பார்த்தோம். நிறைய பேர் நிறைவான விமர்சனங்களை தந்துள்ளீர்கள்.இந்த பகுதியில் இலக்கிய சுவையில் காளமேகப் புலவரின் சிலேடை பாட்டுக்களை படித்து ரசித்து இருப்பீர்கள்.
   ஒரு செய்யுள் எழுதுகிறோம் என்றால்  அதில் எழுத்து, அசை, சீர், தளை அடி, தொடை என அதன் உறுப்புகள் அமையப்பெற்று இருக்க வேண்டும். அமையப்பெற்று இருக்கும்.
எழுத்து என்பது முதலெழுத்துக்களையும் சார்பெழுத்துக்களையும் குறிக்கும். அதாவது உயிரெழுத்துக்கள், உயிர்மெய் எழுத்துக்களை குறிக்கும்.
எழுத்தால் ஆனது அசை, இது நேரசை, நிறையசை என்று இருவகைப் படும்.
அசையால் ஆனது சீர் எனப்படும். இது ஓரசைச் சீர், ஈரசைச் சீர் , மூவசைச் சீர், நான்கசைச் சீர் என நாலுவகைப்படு.பத்தாம் வகுப்பில் அலகிட்டு வாய்ப்பாடு படித்து இருப்பீர்கள், நேர் நேர் தேமா என்று அதுவே சீர்வாய்ப்பாடு.
சீரைக் கொண்டு வருவது தளை அதாவது அசை பிரித்து என்ன சீர் என்று கண்டுபிடித்த பின் மாச்சீர் முன் நேர் அசைவருதல், நிறையசை வருதல் அதே போல விளச் சீர் முன் நேரசைவருதல் நிறையசை வருதல் இவைகளை கொண்டு மொத்தம் ஏழுதளைகள் உள்ளன.

நேரொன்றாசிரியத்தளை, நிறையொன்றாசிரியத்தளை, இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை, கலித்தளை, ஒன்றியவஞ்சித்தளை, ஒன்றாத வஞ்சித்தளை என்பன அவை.
அதற்கடுத்து வருவது அடி, இது இருசீரடி குறளடி என்றும், முச்சீரடி, சிந்தடி என்றும், நாற்சீரடி, அளவடி அல்லது நேரடி என்றும், ஐஞ்சீரடி நெடிலடி என்றும், ஆறுசீர்முதல் எத்தனை சீர்கள் வந்தாலும் கழிநெடிலடி என்றும் அழைக்கப்படும்.
இதற்கு அடுத்து வருவது தொடை எனப்படும். இது இயைபுத்தொடை, முரண் தொடை என இரண்டு வகைப்படும்.
இதெல்லாம் முடிந்த பிறகு வருவது அணி, அணி என்றால் அழகு, செய்யுளில் உள்ள சொல்லழகையும் பொருளழகையும் வெளிப்படுத்துவது அணி ஆகும். பல அணிகள் உள்ளன. அதில் நாம் அடிக்கடி பார்க்கும் சிலேடை அணியினை இப்போது பார்ப்போம். இலக்கிய சுவையையும் ருசித்த மாதிரி இருக்கும்.
ஒரு சொல்லோ சொற்றொடரோ இருபொருள்பட வருதல் இரட்டுற மொழிதல் அணி எனப்படும். இதை சிலேடை அணி என்றும் சொல்லுவர். ஒரு சொல் பிளவு படாமல் நின்று இரண்டு பொருளைத்தருமால் அது செம்மொழி சிலேடை எனப்படும் உதாரணமாக கோ என்றால் பசுவையும் குறிக்கும் அரசனையும் குறிக்கும். இது செம்மொழி சிலேடை.
அதே போலசொல்லோ சொற்றொடரோ பலவகையாக பிரிக்கப்பட்டு பல பொருள்களை தருமானால் அதுபிரிமொழிச் சிலேடை எனப்படும்

வஞ்சியேன் என்றவன் தன் ஊருரைத்தான் யானுமவன்
வஞ்சியான் என்பதனால் வாய்நேர்ந்தேன் -வஞ்சியான்
வஞ்சியேன் வஞ்சியேன் என்றுரைத்தும் வஞ்சித்தான்
வஞ்சியாய் வஞ்சியார்  கோ.

இப்பாடலில் வஞ்சியேன் என்ற சொல் வஞ்சிமாநகரை சேர்ந்தவன் என்ற பொருளையும் வஞ்சிக்கமாட்டேன் என்ற பொருளையும் தருகிறது. வஞ்சியான் என்ற சொல்லும் வஞ்சிக்கமாட்டான் என்ற பொருளையும் வஞ்சி மாநகரை சேர்ந்தவன் என்ற பொருளையும் தருகிறது இவ்வாறு ஒரே சொல் பிரிபடாமலேயே பல பொருளை தருவதால் இது செம்மொழி சிலேடையாகும்.
 வஞ்சிக்க மாட்டேன் என்று சொன்னவன் வஞ்சி எனது ஊர் என்றான். அவனும் என் ஊர் என்பதால் நம்பி உண்மை உரைத்தேன். வஞ்சிக்க மாட்டேன் வஞ்சிக்க மாட்டேன் என்று சொல்லி பெண்களைப் போல வஞ்சித்துவிட்டான் வஞ்சி மாநகர அரசன் என்பது பாடலின் பொருள்.
பிரிமொழி சிலேடையை பார்ப்போமா?
ஆவலுடன் பாவலரும் ஆறு கால் வண்டினமும்
காவலரைச் சூழும் கலையசையே!
இப்பாடலில் உள்ள காவலர் என்ற சொல் பிரிபடாமல் நின்று மன்னரையும்  கா+அலர் என்று பிரிந்து சோலையின் கண் உள்ள மலரையும் குறிக்கிறது. எனவே இது பிரிமொழி சிலேடை ஆகும்.
 இந்த பாடல் வரிகளின் பொருளுணர முடிகிறதா? பின்னூட்டத்தில் உங்கள் கருத்துக்களை நிரப்பி எனக்கு ஊக்கம் தந்திடுங்கள்! மீண்டும் அடுத்த பகுதியில் சந்திப்போம்! நன்றி!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
Viewing all 1537 articles
Browse latest View live