Quantcast
Channel: தளிர்
Viewing all 1537 articles
Browse latest View live

புகைப்பட ஹைக்கூ 28

$
0
0

புகைப்பட ஹைக்கூ 28

மழை மேகம் அல்ல
மலை
மேகம்!

 மலைநடுவே பாலம்!
 கட்டியது
மேகம்!

வெண்பஞ்சுகள்
மிதந்தன!
வெள்ளை மேகம்!

காற்றில் தவழ்ந்தன
இயற்கையின் எழில்கள்!
வெண் மேகங்கள்!

வெள்ளை பெண்ணுக்கு
வறவேற்பில்லை!
மேகம்!

உருவங்கள் ஊர்ந்தன
வானில்!
மேகக்கூட்டம்!

மலையில் மோதியதும்
உடைந்தது பஞ்சுபொதி!
வெண் மேகம்!

காற்றில் கலைந்தன
வாணப்பெண்ணின் ஆடை!
மேகம்!

தூரிகை இன்றி
ஓவியம் தீட்டின
வானில் மேகங்கள்!

காற்றடித்ததும்
கலைந்து ஓடின
மேகங்கள்!

ஆவி ஆனதால்
வெள்ளுடை தரித்தது
மேகம்!

குளிரவில்லை குளிர்ச்சி
தந்தது
மேகம்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

மாநெல்லூரில் ஒரு மஞ்சிப் பொழுது!

$
0
0

மாநெல்லூரில் ஒரு மஞ்சிப் பொழுது!


மாநெல்லூர் ஆந்திர எல்லையோரம் சத்தியவேடு அருகே உள்ள ஒரு பெரிய கிராமம். இங்கேதான் எனது தாத்தா சிவஸ்ரீ சுப்ரமண்ய குருக்கள் சுமார் எழுபது ஆண்டுகாலம் வாழ்ந்தார். எங்களது பூர்வீகம் ஆரணி அருகே உள்ள அகரம் கிராமம். அங்கிருந்து தனது பதினெட்டு அல்லது இருபது வயதில் திருமணமானவுடன் எங்கள் பாட்டியுடன் மாநெல்லூருக்கு குடிபுகுந்தார் எங்கள் தாத்தா.
    இந்த ஊரில் இருந்தால் உன் குடும்பம் தழைக்காது. இந்த மண் சாபம் பெற்ற பூமி! நீ வேறு எங்காவது சென்று பிழைத்துக் கொள் என்று அப்போது தாத்தாவிற்கு அவர்களது பெரியோர்கள் யாரோ சொல்லி இருக்கிறார்கள். அதனால் தந்தையின் எதிர்ப்பையும் மீறி எங்கள் தாத்தா மாநெல்லூர் சென்றார். அங்கு சந்தப் பேட்டை பிள்ளையார் கோயில் பூஜை. சொற்ப வருமானம். கோயில் மடப்பள்ளியிலேயே வசிப்பிடம் என்று சில மாதங்கள் கழிந்த பின் மாநெல்லூர் சாமூண்டீஸ்வரி அம்மன் கோயில் பூஜையை ஒத்துக் கொண்டுள்ளார்.
   அவர்கள் தங்க வீடும் தந்துள்ளார்கள். அங்கு தங்கி வரிசையாக  ஒன்பது பிள்ளைகள் பெற்று இரண்டு இறந்து போக மற்றவர்களை வளர்த்து ஆளாக்கி திருமணம் செய்து வைத்து என கிட்டத்தட்ட தனது 90வது வயதில் இறக்கும் வரை மாநெல்லூரை விட வில்லை எங்கள் தாத்தா.
   அவர் 2008ல் இறந்தபின் நாங்கள் அந்த ஊருக்கு செல்லவில்லை! தாத்தா இருக்கும் போது கூட எப்போதோ வருடம் ஒன்றிரண்டு முறை செல்வோம். இறப்பதற்கு ஒரு மாதம் முன் வரை மாநெல்லூரில் ஐந்து கோயில்களுக்கு பூஜை செய்து கொண்டு பஞ்சாங்கம் பார்த்துக் கொண்டு ஊர் புரோகிதமும் செய்து கொண்டிருந்தார் எங்கள் தாத்தா.

      பிள்ளைகளை திருமணம் ஆனதும் வேறு எங்காவது போய் பிழைத்துக் கொள் என்று அனுப்பி வைத்து விட்டார். என் அப்பாவும் சித்தப்பாக்கள் மூவரும் வெவ்வேறு இடங்களில் செட்டில் ஆகி விட்டனர். பெண்களுக்கும் திருமணம் முடிந்து வெளியூர்களில் செட்டில் ஆகிவிட்டனர். இறுதிக் காலத்தில் மனைவியோடு வேறு கருத்து வேறுபாடு. ஒரே ஊரில் வெவ்வேறு இடத்தில் வசித்தனர். தனிமை அவரை மிகவும் வாட்டியிருக்க கூடும். உடல் உபாதைகள் வேறு. முதலில் எரிந்து விழுவார். கொஞ்ச நேரம் நாம் அமைதியாக இருப்பின் அவரும் அமைதியாகி பாசமாக பேசத்துவங்குவார். அவரிடம் எல்லோருக்கும் ஒரு பயம் இருந்தது. அதனால் நெருங்கி பழக வில்லை! எங்கள் கடைசி அத்தை மட்டும் ரொம்ப நெருக்கமாக இருப்பார். இறுதிக் காலத்திலும் அவர்தான் உடன் இருந்தார்.
    சரி விசயத்திற்கு வருவோம்! எங்கள் தாத்தா இறந்த பின் அந்த ஊர் பூஜைகளை நாங்கள் விட்டுவிட்டோம். சுமார் எழுபது ஆண்டுகாலம் எங்கள் தாத்தா பூஜை செய்த சாமூண்டீஸ்வரி ஆலயத்திற்கு கும்பாபிஷேகம் நடந்தது என்று கேள்விப் பட்டோம். வேலூரில் இருந்து வந்த எங்கள் அத்தை மாநெல்லூர் சென்று வருவோம். அம்மனை தரிசித்து வருவோம் என்றார்.
   கடந்த 9ம் தேதி ஒரு வேனில் மாலை 5 மணிக்கு புறப்பட்டு மாநெல்லூர் அடைந்தோம். சாமுண்டீஸ்வரி ஆலயத்தில் அன்று கத்திரி பூஜையாம். மக்கள் திரளாக கூடியிருந்தனர். எங்களை கண்டதும் பாசத்துடன் வறவேற்றனர். கூல்டிரிங்ஸ் காபி என கொடுத்து உபசரித்தனர். எங்கள் தாத்தா வசித்த வீட்டில் இப்போது வேறு ஒரு குடும்பம் வாடகைக்கு தங்கியிருந்தது. என் அப்பா ஆவலுடன் அந்த வீட்டிற்கு சென்று பார்த்து வந்தார்.
  பின்னர்  மீண்டும் சாமூண்டீஸ்வரி ஆலயம் வந்தோம். ஆலயம் புணரமைப்பு செய்யப்பட்டு இருந்தது. மஞ்சள் காப்பில் அம்மன் அருளாட்சி புரிந்தாள். வழிபாடு செய்து இரவு வீடு திரும்பினோம். அங்கு வசிப்பவர்கள் தெலுங்கு மொழி பேசுபவர்கள். என் தந்தை, அத்தை தெலுங்கு பேசுவார்கள் ஆனால் எங்களுக்கு எல்லாம் தெலுங்கு தெரியாது. அவர்கள் தெலுங்கில் உரையாடியபோது திருதிருவென முழித்துக் கொண்டிருந்தோம்.
  எங்கள் அத்தை எங்களை அறிமுகம் செய்யும் போது  என்னை இது ம அண்ண கொடுக்கு! இது அண்ண கோடாளூ! என்று என் மனைவியையும் அறிமுகம் செய்தார். ஏய் நீ கோடாலியாண்டி! என்று என் மனைவியை கிண்டல் செய்து மகிழ்ந்தோம்!
  எங்கள் தாத்தா வாழ்ந்த வீட்டையும்  கோயிலையும் கொஞ்சம் புகைப்படங்கள் எடுத்தேன்! பின்னர் அங்கிருந்து திரும்பினோம். அன்றைய மாலைப் பொழுது இனிமையாக கழிந்தது. அதைத்தான் மாநெல்லூரில் ஒரு மஞ்சிப் பொழுது! என்று எனக்கு தெரிந்த தெலுங்கில் எழுதினேன்! பாக உன்னாரா?! செப்புங்க கமெண்ட் பாக்சில்!

தங்கள் வருகைக்கு நன்றி!  பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!



மாற்றுத்திறனாளி அல்ல பலரை மாற்றும் திறனாளி கோவை ஜெகதீஷ்..

$
0
0

"வணக்கம் அண்ணா''

அன்பும், பாசமும் இழைந்தோட இனிய குரலுடன் அழைத்த அந்த இருபத்தொரு வயது இளைஞரை, பார்த்த மாத்திரத்தில் மனதிற்குள் வேதனையும்,கண்ணீரும் குபுக்கென்று பொங்குகிறது.

காரணம்


சக்கர நாற்காலியில் பத்து வயது சிறுவனை போல, உடல் சூம்பிய நிலையில் காணப்பட்ட அவருக்கு, கழுத்துக்கு கீழே உள்ள பாகங்களில் கைவிரல்களில் மட்டுமே அசைவு உண்டு, அதுவும் லேசாக.
அந்த லேசான அசைவுகளையும், தனக்குள்ளான ஆர்வத்தையும், கம்ப்யூட்டர் அறிவையும் வைத்துக் கொண்டு இன்றைக்கு உலகம் முழுவதும் இரண்டாயிரத்துக்கும் அதிகமான நண்பர்களை பெற்றுள்ளார்.
ட்வீட்டரும், பேஸ்புக்கும், பிளாக்கிலும் புழங்குகிறவர்களுக்கு "ஜகூ' என்ற வார்த்தை பிரபலம், "ஜகூ' என்ற வார்தைக்கு பின் இருப்பவர்தான் இந்த கட்டுரையின் நாயகன் கோவை ஜெகதீஷ்.
எல்லோரும்தான் எழுதுகிறார்கள் ஆனால் ஜெகதீஷின் தனித்துவம் அவரது எழுத்தில் இருக்கிறது.
வெட்டி அரட்டை எல்லாம் இல்லை, எந்த ஓரு விஷயத்தையும் தீர்க்கமாகவும், தீவீரமாகவும் விமர்சிக்கிறார்.
இந்திய பொருளை வாங்கு இந்தியனாக இரு என்பதை தீவிரமாக சொல்கிறார்.
தமிழின் மீதான அதீதமான காதலால் நள்ளிரவு நேரம் என்றால் கூட தயங்காது வெளிநாட்டு வாழ் நண்பர்களுக்கு "ஆன் லைனில்' தமிழ் சொல்லிக் கொடுக்கிறார்.
கோவையில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக நடைபெற்ற உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டு அனைத்து மாணவர்கள் அபிமானத்தையும் பெற்றவர்.அன்று முதல் இன்று வரை மாணவர் கூட்டமைப்பின் அறிவிக்கப்படாத ஆலோசகராக இருந்துவருகிறார்.
தமிழ் சினிமாவின் தன்மையையே மாற்ற வேண்டும் என்ற துடிப்புடன் அதற்கான நண்பர்களுடன் திரைக்கதை பற்றிய ஆலோசனை ஒரு பக்கம், அரசியல் சாக்கடை என்றால் அதில் இறங்கித்தான் சுத்தம் செய்யவேண்டும் நான் இறங்கத்தயார் அதுவும் உத்தமமான மாணவர் அமைப்போடு என்று அதற்கான தளத்தில் ஒடுவது ஒரு பக்கம், இன்றைய உலகம் இளைஞர்கள் கையில், ஆனால் இளைஞர்கள் கையிலோ கம்ப்யூட்டர், ஐபேடு, ஸ்மார்ட் போன் என்று சுழலுகிறது, நாம் அதற்குள் நுழைந்து தமிழை வளர்க்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் அதற்கான உழைப்போடும், உலகோடும் ஒரு பக்கம், நான் கப்பல் என்ஜீனியர் எனக்கான புராஜக்டை என்னால் முடிக்க முடியவில்லை நீங்கள் உதவமுடியுமா?என்று கேட்ட என்ஜீனியருக்கு ஓ...தாரளமாக என்று முடித்துக்கொடுத்த அறிவு ஜீவிதம் ஓரு பக்கம் என்று மனதால் ஒரு நாளைக்கு 24 மணி நேரம் போதவில்லை என்று ஒடிக்கொண்டிருக்கும் ஜெகதீஷ், உண்மையில் இதை எல்லாம் இயலாமை காரணமாக படுத்த படுக்கையில் இருந்தபடிதான் செய்கிறார், செயல்படுகிறார் என்றால் நம்பமுடிகிறதா ஆனால் நம்பித்தான் ஆகவேண்டும்.
வலியும்,வேதனையும் நிறைந்ததுதான் இவரது வாழ்க்கை,
வெங்கட்ரமணன், கிரிஜா தம்பதியினரின் ஒரே மகனான ஜெகதீஷ் பிறந்த போது அவனை தூக்கிக் கொஞ்சாதவர்களே இல்லை அத்தனை அழகு, ஆனால் கண்பட்டது போல நடக்க வேண்டிய வயதில் ஜெகதீஷால் நிற்கவே முடியாமல் போனது. மூன்று வயதில் உயரத்தில் இருந்து குழந்தைகள் விளையாட்டாக தள்ளியதில் முகத்தின் பற்கள் சேதமடைந்தது, ஏழு வயதில் நிற்கவைப்பதற்காக செய்யப்பட்ட அறுவை சிகிச்சை தவறாக முடிந்ததில் உட்காரவும் முடியாமல் போனது, மின்சார சிகிச்சை என்ற பெயரில் செய்யப்பட்டது எல்லாம் உயிரை விட்டுவிட்டு உதிரத்தை உறிஞ்சியதில் உடம்பு பாழானது, இப்படி ஆளாளுக்கு செய்த சிகிச்சையால் பசிபோனது, சேமித்த பணம் போனது கடைசியில் பத்தாம் வகுப்போடு படிப்பும் போனது...
தந்தை தனது தொழிலைவிட்டுவிட்டு மகனுக்கு நாள் முழுவதும் தொண்டு செய்யும் தாயுமானவராயிருக்கிறார், ஜெகதீஷ்க்கு உதவுவதற்காக கோவை இந்துஸ்தான் ஹார்டுவேர் நிறுவனம், அந்தக்கால பிகாம் படிப்பாளியான ஜெகதீஷின் தாயாருக்கு அக்கவுண்டன்ட் வேலை கொடுத்து ஜெகதீஷின் குடும்பம் பசி, தாகம் அறியாது காத்து வருகிறது.
இந்த நிலையில் ஜெகதீஷ் தனது ஒரே துணையாக இருந்த மொபைல் போனில் தனது தேடுதலை ஆரம்பித்தவர், நான்கு வருடங்களில் லேப்-டாப், இண்டர்நெட் உதவியுடன் உதவியுடன், மெத்த படித்த கம்ப்யூட்டர் அறிவாளிகளுக்கே கற்றுக்கொடுக்குமளவு அதில் தனது அறிவை பெருக்கிக் கொண்டுள்ளார். கம்ப்யூட்டர் அல்லாத பிற துறைகளிலும் தனது அறிவை வளர்த்துக்கொண்டு வருகிறார்.
யாராவது பார்க்க வருகிறார்கள் என்றால் சிறிது நேரம் விசேஷமாக வடிவமைக்கப்பட்ட நாற்காலியில் உட்கார்ந்து இருப்பார், எங்காவது போவது என்றால் பாட்டி சுப்புலட்சுமி துணையோடு அந்த நாற்காலியில் போய்வருவார், மற்றபடி படுக்கையில் படுத்துக்கொண்டு காதில் இயர் போனை செருகிக்கொண்டு இடது கையின் நடுவிரலை
அசைத்து,அசைத்தே, நம்மில் பலராலும் முடியாத பலவித வேலைகளை கம்ப்யூட்டரில் செய்கிறார், இல்லையில்லை செதுக்குகிறார்.

இன்னும் நிறைய விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார், இதைவிட மேலானாது, தான் கற்றதையும், பெற்றதையும் அனைவருக்கும் சொல்லிக்கொடுக்க விரும்புகிறார். தனக்கு அறிவு புகட்டி ஆளாக்கிய கோவை அம்ருத் சிறப்பு பள்ளிக்கு பெருமை சேர்க்க எண்ணுகிறார், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் இவரது தலையில் கைவைத்து நீ மாற்றுத்திறனாளியல்ல, பலரை மாற்றும் திறனாளி என்று சொல்லி ஆசீர்வதித்ததை நிஜமாக்க விரும்புகிறார்.
இவரிடம் கம்ப்யூட்டர் திறமை நிறைய இருக்கிறது, தமிழில் வளமையான அறிவு இருக்கிறது, எதற்காகவும் நியாயத்தை விட்டுக் கொடுக்காத கம்பீரமும் இருக்கிறது, எந்த சூழ்நிலையிலும் நேர்மையை கைவிடாத மனத்துணிவு இருக்கிறது.
இல்லாதது, நிரந்தர வருமானம். என்னைப்பெற்ற அவர்களது மனதிலும்,கண்ணிலும் மகிழ்ச்சியை பார்க்க விரும்புகிறேன்,அதற்காக உழைத்து சம்பாதிக்க விரும்புகிறேன், இனியும் இவன் சுமை அல்ல, சுகமானவனே என என்னைச் சார்ந்தவர்களை அனைவரும் எண்ணும்படி மாறவேண்டும், அதற்கு உழைக்க தயராக இருக்கிறேன். ஆனால் என் தகுதி அறிந்து வேலை தருபவர் யாரும் உண்டா? என்பதை தினமலர் இணையதளம் மூலம் அறிய விரும்புகிறேன்.
வறுமையும், திறமையும் ஒன்றாகத்தான் இருக்கவேண்டுமா வாசகர்களே
உங்களது தகுதிக்கும், திறமைக்கும் ஏற்ற வேலையை,தொழிலை தர எங்கள் வாசகர்கள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள், அவர்கள் உங்கள் எண்ணில் தொடர்பு (9791497906) கொள்வார்கள் என்ற நம்பிக்கையை அவருள் விதைத்துவிட்டு விடைபெற்றேன்.
(வேலை தருவதற்காக இல்லாவிட்டாலும் பராவாயில்லை இவருடன் நேரம் கிடைக்கும் போது பேசிப்பாருங்கள், கொங்கு மண்ணின் மரியாதை என்றால் என்ன என்பது தெரியவரும், இவரது ஆளுமை புரியவரும்.)
விடைபெறும் போது பாசமும், அன்பும் இழையோட ஜெகதீஷிடம் இருந்து குரல் வந்தது
"நன்றி!அண்ணா''!                                                                                                                           நன்றி: தினமலர்

பிறரை நம்பி வாழ்பவரிடம் இருப்பது எது? பொன்மொழிகள்!

$
0
0

ஆன்றோர் பொன்மொழிகள்!


உள்ளதை சொன்னால் பொல்லாதவன்: சொல்லாமல் இருந்தால் அறிவில்லாதவன்.
                                                         -வால்டேர்
மனிதன் சுதந்திரமாக பிறக்கிறான் எங்கும் விலங்கு பூட்டப்பட்டு காணப்படுகிறான்
                                                           -ரூசோ
சரித்திரத்தை உண்டாக்கும் மனிதர்களுக்கு அதை எழுத நேரம் கிடைப்பது இல்லை!
                                                    -மெட்டர்னிக்
முதலில் நீங்கள் நல்லவனாய் இருங்கள்: கெடுதல்கள் பறந்துபோய்விடும்: உலகம் முழுவதும் மாறிவிடும்
                                                     -விவேகானந்தர்.

வெற்றி பெறுபவர்களின் முக்கிய பண்புகளில் தன்னம்பிக்கையும் ஒன்று.
                                                      கார்ல் மார்க்ஸ்
தீமைகள் உங்களை அணுகாதிருக்க உங்களது எண்ணங்களில் தீமைகள் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.
                                                 -சாக்ரடீஸ்
உங்களால் நம்பிக்கையுடன் கனவு காணமுடியும் என்றால் கனவில் கண்டதை நிஜத்திலும் செயல் வடிவில் செய்து முடிக்க முடியும்.
                                                       -ஜாண்டுவே
எதையும் செய்யாதிருப்பதை விட ஏதாவது ஒன்றை நாள்தோறும் செய்து கொண்டிருப்பது மேல்.
                                                   வில்லியம் ஜேம்ஸ்
வெற்றியை காண்பதற்கு நம்பிக்கையும் முயற்சியுமே சிறந்த வழிகள் வேறு குறுக்குவழிகள் இல்லை!
                                                        எட்மண்ட்பர்க்
வெற்றியை விட முக்கியமானது நல்ல பண்பு. வெற்றி மீது உள்ள தாகத்தால் அதை இழந்துவிடக்கூடாது.
                                                  ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.
சின்னஞ்சிறு செலவானாலும் கவனமாக இரு. அடித்தளத்தில் உள்ள சிறிய ஓட்டை கூட கப்பலையே கவிழ்த்து விடும்.
                                             ப்ராங்க்ளின்.
ஆணவம் கொண்டோருக்கு ஆபத்து எப்போது வருமோ அது ஆண்டவனுக்கே தெரியாது.
                                                   வால்டேர்.
பிறரை நம்பி வாழ்பவனிடம் வறுமை இருந்து கொண்டே இருக்கும்.
                                            வில்லியம் டெம்பிள்.
இந்த நிமிடத்தை முறையாக பயன்படுத்தும்போது இன்றைய நாளை முறையாக பயன்படுத்திக்கொள்கிறோம்.
                                                      வால்டேர்.
உழைப்பு, மூன்று பெருந்தீமைகளை நம்மிடம் இருந்து நீக்குகிறது. அது, தொந்தரவு, தீயஒழுக்கம், தரித்திரம்.
                                               வால்டேர்.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்!  நன்றி!

ஒரு காலை இழந்த கைப்பந்து வீராங்கணை அருணிமா : எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை

$
0
0
காத்மாண்டு: ஓடும் ரயிலில் இருந்து தூக்கி எறியப்பட்டதால், ஒரு காலை இழந்த இளம் பெண், அருணிமா சின்கா, உலகின் மிக உயரமான சிகரம், எவரெஸ்டில் ஏறி, சாதனை படைத்துள்ளார்.உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர், அருணிமா சின்கா, 25. தேசிய அளவில், கைப்பந்து போட்டிகளில் பங்கேற்றவர். 2011ம் ஆண்டு, லக்னோவிலிருந்து, டில்லிக்கு ரயிலில் சென்று கொண்டிருந்தார்.ரயிலில் நுழைந்த கொள்ளையர்கள், பயணிகளிடம் இருந்து உடமைகளை திருடினர். அவர்களை தீரத்துடன் எதிர்த்து போராடிய அருணிமாவை தாக்கிய கொள்ளையர்கள், ஓடும் ரயிலில் இருந்து வெளியே தூக்கி எறிந்தனர்.அடுத்த தண்டவாளத்தில் சென்ற ரயில் மோதி, பலத்த காயமடைந்த அருணிமா, ஒரு காலை இழந்தார்.
முழங்காலுக்கு கீழே, அவரின் ஒரு கால் வெட்டி எடுக்கப்பட்டது. இடுப்புப் பகுதியில் படுகாயமடைந்த அவர், பல மாதங்கள், படுத்த படுக்கையாக சிகிச்சை பெற்றார்.பிறர் தன்னை பரிதாபமாக பார்ப்பதை தவிர்க்க, மிகப் பெரிய சாதனையை செய்ய வேண்டும் என நினைத்த அவர், உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள, மலையேற்றக் குழுவில் சேர்ந்து, பயிற்சி பெற்றார்.எவரெஸ்ட் சிகரம் மீது ஏறிய, உலகின் முதல் இந்தியப் பெண் என போற்றப்பட்ட, பச்சேந்திரி பால், காலை இழந்த அருணிமாவுக்கு பயிற்சி அளித்தார்.உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட் உச்சியை, நேற்று காலை, 10:55 மணிக்கு அடைந்த அருணிமா, அந்த சாதனையை படைத்த, ஒரு காலை இழந்த, முதல் இந்தியப்பெண் என்ற சாதனையைப் படைத்தார்.

சிரிக்க வைத்த சிரிப்புக்கள்! பகுதி 5

$
0
0

   சிரிக்க வைத்த சிரிப்புக்கள்! பகுதி 5


1.நம்ம தலைவரு ரொம்ப புத்திசாலின்னு எப்படி சொல்றே?
 அவர் கட்சிக்கு ஆளும்கட்சின்னு பெயர் வெச்சிருக்காரே!
                                        எம். மேகநாதன்.
2. சட்டம் ஒழுங்கு கெட்டுப் போச்சுன்னு சொன்னதுக்கு தலைவர் என்ன சொல்றார்?
  நல்லா மோந்து பார்த்துட்டு சொல்ல சொல்லுங்கன்னு சொல்றார்.
                                எம். செல்லையா.
3.இதை ரொம்ப நல்ல பாம்புன்னு எப்படி அடிச்சி சொல்ற?
சட்டையை உரிச்ச பிறகும் பனியன் தெரியுது பார்!
                                              பி. கருப்பையா.
4.மாப்பிள்ளைக்கு ஏற்கனவே கல்யாணமாகி ஒரு பையன் இருக்கற விஷயத்தை நீங்க ஏன் சொல்லலை?
மாப்பிள்ளை பையன் அழகா இருப்பான்னு முதல்லயே சொன்னேனே கவனிக்கலையா?
                                               அ. பேச்சியப்பன்.
5.வேலூர் ஜெயில்ல இருக்கற தலைவர் பழமொழியை மாத்தி சொல்றாரா? எப்படி?
  புழலின் அருமை வேலூரில் தெரியுதுங்கிறாரு!
                                ராம் ஆதிநாராயணன்.
6.கல்யாண வீடுகளில் கொடுக்கப்படும் சீர்வரிசைக்கு வரிவிதித்து இருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்னு தலைவர் பேசியிருக்காரே!
  சமச்சீர் கல்வியை தலைவர் தப்பா புரிஞ்சிகிட்டு இருக்காருன்னு நினைக்கிறேன்!
                              எஸ். எஸ். பூங்கதிர்.
7.என்ன சார் வீட்டு வாடகை ரொம்ப அதிகமா சொல்றீங்க?
  பின்னே அம்மி, ஆட்டுக்கல் எல்லாம் வாங்கிப் போட்டிருக்கேன் தம்பி!
                                     ம.பாலகிருஷ்ணன்.

8.தலைவர் எதுக்கு கம்யூனிஸ்ட் கட்சிக்கு தாவிட்டாரு?
 வேற வழி.. ஜோசியர் சிவப்பு துண்டு போடச்சொன்னாராம்!
                                 ஆனந்த சீனிவாசன்.
9.சின்ன வயசுல இருந்தே என் பையனுக்கு புளிப்பு மாங்காய் கொடுத்துவரேன்!
எதுக்கு?
அவன் ஒரு அரசியல்வாதி ஆகி வாய் கூசாம பொய் பேசனுமே!
                           சி.பி செந்தில்குமார்.
10இந்த டாக்டர் மட்டும் ஆபரேஷனுக்கு கம்மியா பீஸ் வாங்கிறாரே!
   மயக்க மருந்துக்கு பதிலா, மயக்க பிஸ்கெட்தானே உபயோகிக்கிறார்!
                                  பர்வீன்யூனூஸ்.
11. நீங்க இந்திய குடிமகனா?
   மற்ற மாநிலங்களுக்கு போய் குடியிருக்கற அளவுக்கு வசதி இல்லீங்க... அதனாலே இங்கேயே தமிழ்நாட்டு குடிமகனா இருக்கேன்.
                                       சீத்தா தம்பி.
12.என்னது மாப்பிள்ளை சீடை காண்பிக்கிறாரா?
  பின்னே எத்தனை காலந்தான் மாப்பிள்ளை முறுக்கை காண்பிக்கிறார்னு சொல்றதாம்!
                                       ரிஷிவந்தியா.
13.தாலுகா ஆபிஸ்ல பட்டா வாங்குற இடத்துல என்ன தகறாரு?
  தலைவர் ஆரிய ‘பட்டா’ வேணும்னு கேட்டாராம்!
                              பெ. பாண்டியன்.
14.என்ன அமைச்சரே! இந்த புலவர் வாழ்த்தி பாடியதில் ஒரு வரி கூட புரியவில்லையே!
  அவர் புலவர் இல்லை மன்னா! அர்ச்சகர்!
                                      சி. சாமிநாதன்.
15 உன் கணவர் ஏன் அலுத்துக்கிறார்?
   முகூர்த்த நாள் இல்லாத சமயத்தில் பையன் செருப்பு வாங்கித்தரச் சொல்லி கேக்கறான்.
                               பர்வீன் யூனூஸ்.
16.என்னப்பா சர்வர் எல்லா ஓட்டல் குப்பைத்தொட்டியிலும் நாய்கள்தான் நிற்கும் இங்க கழுதை நிற்குதே!
 அது பேப்பர் ரோஸ்ட்டுக்கு நிற்குது சார்!
                             பெ. பொன்ராஜாபாண்டி.
17. அந்த ரவுடி தொழிலுக்கு புதுசுன்னு எப்படி சொல்றீங்க?
    என் எதிரியைக் காட்டி அவரை தூக்கணும்னு சொன்னேன். முடியாதுங்க... அவரு ரொம்ப குண்டா இருக்காருன்னு சொல்றானே!
                                        அனார்கலி.
18.என்னப்பா இது அப்ளிகேசன் பார்ம்ல சாமி போட்டோவை ஒட்டி வச்சிருக்கே!
அது நான் தான் சார்! ஸ்கூல் டிராமாவுல பரமசிவன் வேஷம் போட்டப்ப எடுத்த படம்!
                                       கி. திவ்ய ஜோதி.

19.நீதான் டெய்லராச்சே.. அப்புறம் எதுக்கு கார்ப்பெண்டர் வேலை கத்துக்கணும்னு ஆசைப்படறே?
 வெயில் காலம் வந்தாலே சன்னல் வச்ச ஜாக்கெட்தான் வேணும்னு நிறைய ஆர்டர் வந்துடுதே!
                                        விஜயநிர்மலன்.
20 டாக்டர் அந்த லேடிக்கு நம்ம கிளினிக் வாசல்லேயே குழந்தை பிறந்துடுச்சி!
 அப்படின்னா மறக்காம டோர் டெலிவரி சார்ஜ் சேர்த்துப் போடுங்க!
                                   பி.. கவிதா
நன்றி: தினமலர்- வாரமலர்.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


வைகாசி விசாகத் திருநாள்!

$
0
0

வைகாசி விசாகத் திருநாள்!



உமா கோமள ஹஸ்தாப்ஜ ஸம்பாவித லலாடகம்
ஹிரண்ய குண்டலம் வந்தே குமாரம் புஷ்கரஸ்ரஜம்!


முருகன் குமரன் குகனென்று மொழிந்து
உருகும் செயல் தந்து உணர்வு என்றருள்வாய்!
பொரு புங்கவரும் புவியும் பரவும்
குருபுங்கவ எண்குண பஞ்சரனே.

இன்று வைகாசி விசாகத்திருநாள் முருகன் ஆலயங்களில் சிறப்பாக கொண்டாடப்படும். பால்குடம், காவடி எடுத்து தமிழ் கடவுள் முருகனை பக்தர்கள் வழிபடும் சிறப்பான நாள் வைகாசி விசாக நன்னாள்!
   
   சூரபத்மன் தேவர்களை கொடுமைப் படுத்தி இந்திர லோகத்தை தன் ஆட்சியின் கீழ் கொண்டுவந்தான். தேவர்கள் அனைவரும் தங்களின் துன்பத்தை போக்கும் படி படைப்புக் கடவுள் பிரம்மனை நாடினர். வேதங்களின் பிறப்பிடமான பிரம்மன் அவர்களுக்கு அபயம் தந்து, தேவர்களே! உங்களாலோ என்னாலோ சூரபத்மனை அழிக்க முடியாது. ஆனால் நான் சொல்லும் ஆலோசனைப் படி நடந்தால் உங்களுக்கு நிம்மதி கிடைக்கும் என்றார்.
   அது என்ன? என்று அவரை ஆவலோடு நோக்கினர் தேவர்கள்.
சிவகுமாரனால்தான் சூரபத்மனுக்கு அழிவு என்பது எழுதப்பட்ட விதி! நீங்கள் மன்மதனை நாடுங்கள்! அவனது மன்மத பாணம் நிஷ்டையில் இருக்கும் சிவனை எழுப்பட்டும். என்றார் பிரம்மா.
   தேவர்களும் மன்மதனை நாடி தங்களை காக்க சிவனை எழுப்பும் படி கூறினர். தன்னுடைய இனத்தவரின் அழிவை தடுக்க தான் இறந்தாலும் பரவாயில்லை என்று மன்மதனும் சிவன் மீது மன்மத பாணம் பொழிய ஒத்துக் கொண்டான்.
    மன்மதனின் ஆற்றல் மிக்க பாணங்கள் சிவனை எழுப்பியது. சிவனின் சுட்டெறிக்கும் பார்வையில் மன்மதன் மாண்டு போனான். அதே சமயம் சிவனின் கண்களில் இருந்து தோன்றிய ஆறு சுடர்கள் கங்கை நதியில் உள்ள சரவணப் பொய்கையை அடைந்தன. அங்கிருந்த ஆறு தாமரைகளில் ஆறு குழந்தைகளாக அவதரித்தன. அந்த  நாளே வைகாசி விசாக நன்னாள்.
   பின்னர் கார்த்திகேயன் ஆனதும் சூரபத்மனை அழித்து தேவயானை, வள்ளியை மணந்து ஆறுபடை வீடுகளில் அருளாட்சி புரிவதும் நாம் அறிந்ததே!


   வைகாசி விசாகத்தன்று, அதிகாலையில் நீராடி சுத்தமான ஆடை உடுத்தி பால் பழம் மட்டும் அருந்தி அல்லது முழு விரதமாக இருந்து விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.
  முருகனுக்குரிய ஆறெழுத்து மந்திரமான ஓம் சரவண பவ! என்னும் மந்திரம் உச்சரித்து நாள் முழுதும் ஜெபிக்க வேண்டும்.
  திருப்புகழ், கந்தசஷ்டிகவசம், போன்ற முருகர் பாடல்களை பாராயணம் செய்தல் வேண்டும்.
முருகன் ஆலயங்களுக்கு சென்று விளக்கேற்றி அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.
மலைக்கோயில்களில் மலையை வலம் வருதல் சிறப்பாகும்.
வைகாசி விசாக விரதம் மேற்கொள்பவர்களுக்கு புத்திர தோஷம் நீங்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு மழலைச் செல்வம் கிடைக்கும்.

   ஆறிரு தடந்தோள் வாழ்க! அறுமுகம் வாழ்க வெற்பை
   கூறுசெய் தனிவேல் வாழ்க! குக்குடம் வாழ்க செவ்வேள்
   ஏறிய மஞ்ஞை வாழ்க யானை தன் அணங்கு வாழ்க
   மாறிய வள்ளி வாழ்க வாழ்க சீர் அடியார் எல்லாம்!

ஆறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவில் ஒரு குடைவரைக் கோயில். இங்கு முருகன் குடைவரை சிற்பமாக இருப்பதால் அபிஷேகம் கிடையாது. புனுகு மட்டும் சார்த்தி வழிபடுவார்கள். அங்குள்ள வேலுக்குத்தான் அபிஷேகங்கள் நடைபெறும்.

ஆறுபடை வீடுகள் அறிவீர்கள்! ஏழாம்படை வீடு தெரியுமா?
   கோவை அருகே உள்ள மருதமலை முருகன் ஆலயம் ஏழாம் படை வீடு என்று சிறப்புடன் அழைக்கப்படுகிறது. பாம்பாட்டி சித்தர் வழிபட்ட முருகர் இவர். இரண்டு கரங்களுடன் பழநி முருகனை போல கையில் தண்டத்துடன் இடது கையை இடுப்பில் வைத்தபடி தண்டபாணியாக காட்சி தரும் இவருக்கு தலைக்கு பின் புறம் குடுமி உள்ளது. காலில் தண்டை அணிந்துள்ளார். தினமும் ராஜ அலங்காரம், விபூதி காப்பு, சந்தன காப்பு அலங்காரத்துடன் காட்சி தருவார் மருதமலை முருகன்.


வைகாசி விசாக நன்னாள் முருகர் ஆலயங்களில் விசேசமாக கொண்டாடப் படுகிறது. இந்த நன்னாளில் முருகர் ஆலயங்களுக்கு சென்று வழிபட்டு இறையருள் பெறுவோமாக!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


அரக்கனை வென்ற குள்ளன்! பாப்பா மலர்!

$
0
0

அரக்கனை வென்ற குள்ளன்! பாப்பா மலர்!


விஜயபுரம் என்ற நாட்டில் ஓர் அடர்ந்த காடு இருந்தது. அந்த காலத்தில் காடுகளை பராமரித்து வந்தனர். அதில் விலங்குகளும் பறவைகளும் ஏராளமான தாவரங்களும் ஜீவித்து வந்தன. மன்னர்கள் பொழுது போக்கிற்காக கானகம் சென்று வேட்டையாடுதல் மீன் பிடித்தல் போன்றவற்றில் ஈடுபடுவர். மன்னர்களுடன் அவரது பரிவாரங்களும் கானகம் செல்லும். ஆனாலும்  காடு வளர்ந்து கொண்டுதான் இருந்தது.
   விஜய புரம் காட்டில் திடீரென அரக்கன் ஒருவன் புகுந்துவிட்டான். அவன் முதலில் விலங்குகளை பிடித்து உண்டு கொண்டிருந்தான். பின்னர் மனிதர்களையும் பிடித்து உண்ண ஆரம்பித்துவிட்டான். இதனால் யாரும் காட்டிற்கு செல்லவே அஞ்சினர். மாதம் ஒரு முறை கானகம் சென்று வேட்டையில் ஈடுபடும் மன்னரும் வேட்டைக்கு செல்வது தடைபட்டது.
   அரக்கன் மிகுந்த பலசாலியாகவும் மனிதர்களையே உண்பவனாக இருந்ததாலும் அவனை வெற்றி பெறுவது எளிதான காரியமாக இல்லை! அரக்கனுடன் போரிட்ட பலர் மாண்டு போயினர்.நாளுக்கு நாள் அரக்கனின் அட்டகாசம் அதிகமாகி காட்டு எல்லையோரம் இருந்தவர்களையும் பிடித்து உண்ண ஆரம்பித்து விட்டான். இதனால் மன்னர் மனம் வேதனை அடைந்தார். மக்களை காக்காமல் மன்னனாக இருந்து என்ன பயன்? என்று அரசன் அரக்கனுடன் மோதுவதற்கு கிளம்பினார்.
    அந்த சமயத்தில் அந்த ஊரில் வசித்த குள்ளன் ஒருவன் அரசனை காண வந்தான். அரசே! நான் அந்த அரக்கனை எப்படியும் வென்று வருகிறேன். எனக்கு உதவியாக பத்தே பத்து வீரர்களை மட்டும் அனுப்புங்கள் என்றான். சபையில் இருந்தோர் எல்லோரும் எள்ளி நகையாடினார்கள்! இந்த சபையில் மாபெரும் வீரர்கள் எல்லாம் அரக்கனுடன் மோதி மரணத்தை தழுவி விட்டார்கள். நீ எப்படி அரக்கனை வெல்லப் போகிறாய்? என்று கேலி பேசினார்கள்.
    குள்ளன் மிகவும் அமைதியாக எவ்வளவு பெரிய வீரன் என்றாலும் அவனுக்கு ஒரு பலவீனம் இருக்கும். அதை நாம் ஆயுதமாக கொள்ள வேண்டும். என்னுடைய உருவத்தை கண்டு எடை போடாதீர்கள்! என் திறமையை கண்டு எடை போடுங்கள்! என்று கூறினான்.
     மன்னரும் குள்ளனின் பேச்சை ஆமோதித்து, குள்ளனே! நீ சொல்வது உண்மைதான்! ஆளைக் கண்டு எடை போடுவது தவறுதான்! சரி உனக்கும் ஒரு வாய்ப்பு வழங்குகிறேன்! நீ அந்த அரக்கனை வென்று வந்தால் நீ என்ன கேட்டாலும் கொடுக்கிறேன்! உனக்கு உதவியாக பத்து வீரர்களை அனுப்புகிறேன்! என்றான்.
    மறுநாள் குள்ளன் பத்து வீரர்களுடன் கானகம் நோக்கி புறப்பட்டான். போயும் போயும் இந்த குள்ளனுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டியுள்ளதே! இவனோடு செல்லா விட்டால் அரச தண்டனை கிடைக்கும் இவனோடு சென்றாலோ அரக்கனிடம் சாவு நிச்சயம்! என்ன கொடுமை இது என்று வீரர்கள் பேசி கொண்டனர்.
   குள்ளன் அவர்களின் அவநம்பிக்கையான பேச்சைக் கேட்டு மிகவும் வருத்தம் அடைந்தான். வீரர்களே! முதலில் உங்களை நம்புங்கள்! அரக்கனை வெல்ல முடியும் என்ற நம்பிக்கை குள்ளனாகிய எனக்கே இருக்கிறது! வாள் வேல், வில் வீச்சுக்களில் திறமைப் பெற்ற உங்களுக்கு இருக்க வேண்டாமா? என் மீது நம்பிக்கை இருந்தால் என்னோடு வாருங்கள்! இல்லையேல் நீங்கள் தங்கி விடுங்கள்! நான் அரசனிடம் காட்டிக் கொடுக்க மாட்டேன்! என்றான்.
      அடேய் குள்ளா! உனக்கு ரொம்பவும் அதீத நம்பிக்கைதான்! நீ என்ன எங்களை காட்டிக் கொடுப்பது! நீ எப்படியும் அரக்கனால் சாகடிக்கப் படுவாய்! நாங்கள் தப்பித்து வந்ததாக மன்னரிடம் கூறிக் கொள்கிறோம்! உன்னுடன் எங்களால் வர முடியாது என்று வீரர்கள் கலைந்து சென்றனர்.
   அட கோழைகளே! என்று நினைத்து விட்டு குள்ளன் கானகம் நோக்கி நடந்தான். அப்போது தாகம் மேலிட குளக்கரையில் நீர் அருந்த சென்றான். அங்கு ஒரு எறும்பு நீரில் தத்தளித்துக் கொண்டு இருந்தது. குள்ளன் ஒரு இலையில் அதை எடுத்து மேலே விட்டான். அந்த எறும்பு பேசியது மிக்க நன்றி நண்பரே! என்னை காப்பாற்றியமைக்கு! நீங்கள் என்ன காரியமாய் இந்த வழியே செல்கிறீர்கள் என்று கேட்டது.
   அரக்கனை கொல்ல செல்வதாக குள்ளன் கூறினான். நண்பரே! நானும் உங்களுடன் வருகிறேன்! என்று எறும்பு அவனது தோள் மீது ஏறிக் கொண்டது. இன்னும் சற்று தூரம் சென்ற போது ஒரு கழுகு ஒன்று வழியில் அடிபட்டு கிடந்தது. குள்ளன் அதை எடுத்து பச்சிலை பறித்து கட்டி பறக்க விட்டான். அந்த கழுகும் மிக்க நன்றி நண்பா! நீ எங்கே செல்கிறாய்? என்று கேட்டது. குள்ளன் விபரம் சொல்ல நானும் உன் உதவிக்கு வருகிறேன் என்றுஅவனுடன் புறப்பட்டது.

    குள்ளன் கானகத்தை நோக்கி  முன்னேறுகையில் வழியில் சங்கு ஒன்று கிடந்தது. அதை எடுத்து ஊதுகையில் அந்த சங்கு பேசியது, நண்பா! நான் உனக்கு உதவுவேன் எடுத்துக் கொள் என்றது. குள்ளன் அதை எடுத்து பையில் போட்டுக் கொண்டான். அங்கிருந்து கிளம்பி மேலும் சில மைல்கள் கடந்தான். அப்போது கண்ணிழந்த குருடன் ஒருவன் வழியில் மரத்தடியில் இருப்பதைக் கண்டான். அவனிடம் சென்று நண்பரே! ஏன் இந்த கானகத்தில் தனியாக இருக்கிறீர்கள்!  என்று கேட்டான் குள்ளன்.
      நண்பா! நான் பெரிய வில்லாளி! ஒரு போரில் என் கண்களை இழந்து விட்டேன்! ஆனாலும் சத்தம் வரும் திசை அறிந்து வில் எறிவதில் நான் கில்லாடி! ஆனாலும் என் வீட்டில் என்னை துரத்திவிட்டனர். அதனால் நாடோடியாகத் திரிகிறேன்! ஆமாம் நீ எங்கு செல்கிறாய் என்று கேட்டான் வில்லாளி.
    குள்ளனும் தான் அரக்கனை கொல்ல போகும் செய்தியை சொல்ல, நானும் உங்களுடன் இணைந்து கொல்கிறேன் என்று வில்லாளி இணைந்து கொண்டான்.
   இப்படி இவர்கள் ஐவரும் அரக்கன் வசிக்கும் இடம் சென்றனர். சங்கு சொல்லியது! நண்பா! என்னை எடுத்து ஊது! அரக்கனுக்கு சத்தம் என்றால் ஆகாது என்றது. எறும்பு சொன்னது என்னுடைய உத்தரவுப் படி என் வீரர்கள் இங்கு குழுமி உள்ளனர். அவர்கள் அரக்கனை கடிக்கத் தயராக உள்ளனர் என்றது. கழுகு சொன்னது நண்பா! நான் அரக்கனின் கண்களை குத்திவிடுகிறேன்! என்றது.
     குள்ளன் சொன்னான்! அதோ பாருங்கள்! அந்த அரக்கன் சிறு குன்று போல படுத்து உறங்கிக் கொண்டு இருக்கிறான். மனித வாடை பட்டால் விழித்து எழுந்து விடுவான். நானும் வில்லாளியும் இங்கே ஒளிந்து நின்றுதான் அவனை தாக்க வேண்டும். எறும்புகளே நீங்கள் முன்னேறுங்கள்! அரக்கனின் உடலில் ஏறி ஆங்காங்கே கடியுங்கள்! நவதுவாரங்களில் புகுந்து தொல்லை பண்ணுங்கள்! நான் சங்கெடுத்து ஊதுகிறேன்! சத்தமும் வலியும் தாளாமல் அரக்கன் எழுந்து என்னைத் தேடுவான்! அந்த சமயம் கழுகாரே! நீங்கள் கண்ணிமைப்பதற்குள் அவனது கண்களை குத்தி விடுங்கள்!  அவன் பார்வை இழந்ததும் நான் அவனருகே சென்று ஒளி எழுப்புகிறேன்! வில்லாளரே! நீங்கள் சரமாரியாக அம்புகளை விடுங்கள்! அரக்கன் மாண்டுவிடுவான் என்று சொல்லி விட்டு சங்கெடுத்து ஊதத் துவங்கினான்.
    சங்கோசை சத்தத்தில் எரிச்சல் அடைந்து அரக்கன் விழித்து கொண்டு சுற்றும் முற்றும் தேடினான். அதே சமயம் எறும்புக் கூட்டம் அவன் உடலில் பல இடங்களில் புகுந்து கடிக்க அவன் தவிக்கும் சமயம் கழுகு பாய்ந்துவந்து அவன் கண்களை கொத்தியது. அரக்கன் ஆ! ஐயோ! என்று கத்த வில்லாளி சத்தம் வந்த திசை நோக்கி அம்புகளை பறக்க விட்டான். அம்புகள் உடலில் தைக்க மாண்டு விழுந்தான் அரக்கன்.
   குள்ளன் அரக்கன் இறந்ததை அருகில் சென்று உறுதி செய்து கொண்டான். பின்னர் அவர்கள் அனைவரும் அரசனிடம் சென்றனர். அரக்கனை கொன்ற விதத்தை கூறினான் குள்ளன். அரசன் மகிழ்ந்து போனான்.குள்ளனே! உருவத்தில் சிறியவனாய் இருந்தாலும் பெரிய காரியத்தை சாதித்து விட்டாய்! உனக்கு என்ன வேண்டும் கேள்! என்றான் அரசன்.
  மன்னா! நான் ஒருவனாக இதை சாதிக்க வில்லை! எனக்கு எறும்பு முதல் கண்ணிழந்த வில்லாளி வரை அனைவரும் உதவினார்கள்! எங்கள் அனைவருக்கும் இந்த சாதனை உரியது என்றான் குள்ளன்.
அவனது சுயநலமற்ற பேச்சை கண்டு வியந்த அரசன் அவனை தனது மெய்க்காப்பாளனாகவும் வில்லாளியை பாதுகாவலனாகவும் நியமித்து கழுகு மற்றும் எறும்புகளுக்கு சரணாலயம் அமைத்துக் கொடுத்து கவுரவித்தார்.
  
நீதி: உருவு கண்டு எள்ளாமை வேண்டும்!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

டி.எம்.எஸ் மறைவு! அஞ்சலி!

$
0
0
தமிழ் திரையிசையில் தனக்கென  ஒரு தன்னிகர் இல்லாத இடத்தை பிடித்து அரை நூற்றாண்டு காலம் திரையிசையின் ஜாம்பவானாகத் திகழ்ந்த பிரபல பின்னனி பாடகர் டி.எம்.எஸ். இவரது  குரல்வளம் இனிமை அருமை, சிவாஜி, எம்.ஜி.ஆர். ஜெமினி என பல நடிகர்களுக்கு ஏற்றவாறு தன் குரலை வேறுபடுத்தி பாடி அந்த நடிகர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தார் என்றால் மிகையாகாது.                                                                                                                 91வயது நிரம்பிய பாடகர் டி.எம்.எஸ் சில நாட்களுக்கு முன் வீட்டில் வழுக்கி விழுந்ததில் அடிபட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பிய அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. தொடர்ந்து மூச்சுத் திணறல் அவரது உயிரை பறித்துவிட்டது. காலன் அவரது உயிரை பறித்தாலும் அவரது கானங்கள் என்றும் நம்மிடையே நிறைந்திருக்கும். அவரது காதல் ரசம் பாடும் டூயட்களும் தத்துவம் பாடும் பாடல்களும் பக்தி பாடல்களும் என்றும் அழியா இசைக் காவியங்கள்.                   அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதல்களை தெரிவித்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுவோம்!
                                   இந்த பாடலை யு டியூபில் தேடி பார்த்த போது என் மகள் ஜனனி  ஐ! பாட்டும் நானே பாவமும் நானே! ஜேஜா பாட்டு! என்றது! டி.எம். எஸ்  பாட்டும் அவரே! பாவமும் அவரே! 

புகைப்பட ஹைக்கூ 29

$
0
0
 புகைப்பட ஹைக்கூ  29


நீர்ச் சிதறலில்
நிறைந்து வந்தது
மகிழ்ச்சி!

குளிர்ச்சி
தந்தது
குழந்தைக்கு
மகிழ்ச்சி!

அக்னி வெயிலை
அசைத்துப் பார்த்தது
ஊற்று நீர்!

கொளுத்தும் வெயிலில்
கொண்டாட்டம்
குழாய்குளியல்!

புல்லுக்கு கொஞ்சம்
பிள்ளைக்கு கொஞ்சம்
பங்கிட்டு மகிந்தது குழாய்!

எல்லையில்லா மகிழ்ச்சி!
அள்ளித்தந்தது
ஊற்றுநீர்!

பீய்ச்சும் நீரில்
பிணைந்தது
பிஞ்சு!

உடலைத் தழுவிய நீர்
உருவாக்கியது
உள்ளம் நிறைந்த மகிழ்ச்சி!

மலையருவியில்லை!
மழையுமில்லை! குழாயில்
குளியல்!

புல்லோடு சேர்ந்து
குளித்தது
இந்த பூ!

சில்லென்ற தண்ணீரில்
சிலிர்ந்து கொண்டு வந்தது
சிரிப்பு!

கோடை வெப்பம்
குளித்து தணித்தது
குழந்தை!

வெயிலோடு விளையாடி
நீரோடு நீராடும்
குழந்தை!

நீராடுகையில்
நீராட்டம்!
குழந்தை!

நீர்த்திவலைகள்
கிச்சுகிச்சு மூட்டின!
சிரித்தது குழந்தை!

சிக்கன குளியல்
பாடம் சொல்லியது
பாப்பா!

தங்கள் வருகைக்கு நன்றி !பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


யார் இந்த குயிலி?!

$
0
0
இலட்சியத்திற்கான பயணத்தில் எதிரிகளை வீழ்த்துவதற்காகவோ, அல்லது சுரணையற்ற சமூகத்தில் ஒரு எழுச்சியை ஏற்படுத்துவதற்காகவோ, ஒருவர் தம் உயிரையே அர்ப்பணிப்பாரெனில் அவரைத் தற்கொலைப்படைப் போராளி என்கிறோம்.
தற்கொலைப் போராளிகளின் தொடக்கம் இரண்டாம் உலகப் போரில்தான் என்கிறது எழுதப்பட்ட வரலாறு. ஜெர்மனிக்கும், ஜப்பானுக்கும் இடையே நீர்மூழ்கிக் கப்பலில் நடைபெற்ற யுத்தத்தில் ஜப்பானிய வீரர்களின் தற்கொலைப் போராட்டமே இதற்கான தொடக்கமாகக் கருதப்படுகிறது.
ஆனால் இரண்டாம் உலகப்போர் நடைபெறுவதற்கு 150 ஆண்டுகளுக்கு முன்னரே, பிரிட்டிஷாரை எதிர்த்துத் தமிழ் மண்ணில் நடைபெற்ற போர்க்களத்தில்தான் முதன்முதலாக 'தற்கொலைப் போராளி' உருவானார் என்பது நாம் அறியாதது.
அந்த போராளி வீரமங்கை யின் பெயர்தான் குயிலி.
1776ம் ஆண்டு
வேலுநாச்சியார், வெள்ளையர் எதிர்ப்பில் தம் கணவர், சிவகங்கைச் சீமையின் மன்னர் முத்து வடுகநாதரைப் பறிகொடுத்து, எட்டாண்டுகள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்த காலம். அப்போது வேலுநாச்சியார் விருப்பாட்சி என்ற ஊரில் தங்கியிருந்தார்.
குயிலி. அதுதான் அவள் பெயர்.
வயது பதினெட்டு. பிறந்த மண்ணையும், வீரத்தாய் வேலு நாச்சியாரையும் உயிரென மதிப்பவள்.
வேலுநாச்சியாரின் சிலம்பு வாத்தியார் வெற்றிவேல்..ஒருநாள். குயிலியிடம் வந்தார்,
"குயிலி! எனக்கொரு உதவி செய்வாயா?"
"சொல்லுங்கள் ஐயா!''
"நீ உன் ஊரான பாசாங்கரைக்கு செல்லும்போது இந்தக் கடிதத்தை, சிவகங்கை அரண்மனைக்கருகில் இருக்கும் வீட்டில், மல்லாரிராயன் என்பவனிடம் சேர்ப்பிக்க வேண்டும். சேர்த்து விடுவாயா...?''
"சரி.'' என்றபடி, குயிலி வாங்கிக் கொண்டாள்.
அன்றிரவு.
குயிலி. குத்தீட்டியைக் கையில் எடுத்துக்கொண்டு சிலம்பு வாத்தியாரின் இருப்பிடம் விரைந்தார். அடுத்த நிமிடம் சிலம்பு வாத்தியாரின் குடிசையிலிருந்து அலறல் சத்தம். இரத்த வெள்ளத்தில் மிதந்துகிடந்த சிலம்புவாத்தியாரின் உடலையும் அருகே ஒரு கையில் குத்தீட்டியோடும் மறு கையில் சிலம்பு வாத்தியாரின் கடிதத்தோடும் கண்கள் சிவக்க தலைவிரி கோலமாக நின்ற குயிலியையும் வேலு நாச்சியார் உள்ளிட்ட அனைவரும் கண்டார்கள்.
குயிலி ஓடிவந்து அவர் காலில் விழுந்து கதறியழுதாள். கடிதத்தை நீட்டினாள். கடிதத்தை வாங்கிப் படித்த வேலுநாச்சியாரின் முகம் உணர்ச்சியில் துடித்தது. கடிதத்தில், வெற்றிவேல் வாத்தியார் மல்லாரிராயன் என்பவனுக்கு வேலு நாச்சியார் குறித்த சில விஷயங்களை எழுதியிருந்தார்.
நம்பிக்கைக்குரியவராக இருந்த சிலம்பு வாத்தியார் தன் காலைச் சுற்றியிருந்த நச்சுப்பாம்பு என அறிந்து வேலுநாச்சியார் அதிர்ச்சியுற்றார். தன் மீதும் நாட்டின் மீதும் கொண்ட பற்றின் காரணமாக ஒரு பெண் துணிச்சலாக மேற்கொண்ட செயலைக் கண்டு அகமகிழ்ந்தார். கூட்டத்தில் பத்தோடு பதினொன்றாகப் பார்க்கப்பட்ட குயிலி அன்றிலிருந்து இராணி வேலுநாச்சியாரின் மெய்க் காப்பாளரானார்.
குயிலி தாழ்த்தப்பட்ட அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்தவள். இதைக் காரணம் காட்டி ஒரு கும்பல், குயிலியின் மேல் துவேஷத்தை வளர்க்க முனைந்தது. வேலு நாச்சியாரோ குயிலிக்கு தம் ஆதரவுக் கரத்தை இரும்பு அரணாக வைத்து காத்து வந்தார்.
ஒருநாள். நள்ளிரவு.
வேலு நாச்சியார் மஞ்சத்தில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தார். குயிலி தூக்கம் வராமல் அங்குமிங்கும் நடைபயின்று கொண்டிருந்தாள். வெளியே காலடிச் சத்தம் கேட்டு உஷாரானாள். மறைந்து நின்று கொண்டாள். ஒரு உருவம் சாளரத்தின் வழியே குதித்து இறங்கியது. அங்குமிங்கும் பார்த்தபடி வேலுநாச்சியாரின் மஞ்சத்தினருகே மெதுவாகப் போனது. கையை ஓங்கி, கத்தியால் வேலு நாச்சியாரை குத்த முனைய மறைந்திருந்த குயிலி ஓடி வந்து தன் கைகளால் அந்தக் கத்தியை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டாள். அந்த உருவம் திமிற, கத்தியில் வெட்டுப்பட்ட குயிலியின் கரங்களில் ரத்தம் ஆறாக ஓடியது. சத்தம் கேட்டு வேலு நாச்சியார் எழுந்து கொண்டார். அந்தக் கயவன் சடாரெனத் துள்ளி, சாளரத்தின் வழியே குதித்து ஓடிப் போனான். மயங்கிச்சரிய இருந்த குயிலியை தாங்கிப் பிடித்துக் கொண்டார் வேலுநாச்சியார்.
அன்று முதல் குயிலி, வேலுநாச்சியாரின் நெஞ்சில் பன்மடங்கு உயர்ந்தார். மெய்க்காப்பாளராக விளங்கிய குயிலி பெண்கள் படைக்குத் தளபதியாக்கப்பட்டார்.
நாட்கள் கடந்தன. 8 ஆண்டுகளுக்குப் பிறகு போருக்குத் தேவையான தளவாடங்கள் வந்து சேர்ந்தன. பன்னிரண்டு பீரங்கி வண்டிகள், நூற்றுக் கணக்கான துப்பாக்கிகள் திப்பு சுல்தானால் வேலு நாச்சியாரிடம் ஒப்படைக்கப்பட்டன. 1780ம் ஆண்டு ஐப்பசி மாதம் 5ம் நாள் விருப்பாச்சி பாளையத்திலிருந்து சிவகங்கையை நோக்கி வேலு நாச்சியாரின் படை புறப்பட்டது. உடையாள் பெண்கள் படைக்குத் தலைமையேற்று குயிலி கம்பீரமாக வந்து கொண்டிருந்தார்.
முத்துவடுகநாதரின் படுகொலையில் பெரும்பங்கு வகித்த மல்லாரி ராயன், முதலாவதாக வேலுநாச்சியாரின் படையை மதுரை கோச்சடையில் எதிர்த்து நின்றான். ஒரு மணிநேரப் போரிலேயே மல்லாரி ராயன் குத்திக் கொலை செய்யப்பட்டான். ஆங்கிலத் தளபதி ஜோசப் சுமித் காளையார் கோவிலில் வேலுநாச்சியாரின் படையை எதிர்கொண்டான். அங்கும் தமிழர் படை வெற்றிக்கொடி நாட்டியது. ஆங்கிலப் படைகள் புறமுதுகிட்டு ஓடின.
வேலுநாச்சியாரின் படைகள் சிவகங்கைச் சீமையில் வெற்றி முழக்கத்துடன் நுழைந்தன. ஆனால் அங்குதான் யாரும் எதிர்பாராத ஆபத்து காத்துக்கொண்டிருந்தது.
தனது நயவஞ்சகத்தால் மறைந்திருந்து வேலு நாச்சியாரின் கணவரது உயிரைப் பறித்த கொடுங்கோலன் ஆங்கிலத் தளபதி பாஞ்சோர் காளையார் கோவிலிலிருந்து சிவகங்கை அரண்மனை வரையிலும் அடிக்கு ஒரு போர் வீரனை நிறுத்தி யிருந்தான். அனைவரது கைகளும் துப்பாக்கி ஏந்தி யிருந்தன. பீரங்கிகளும் அரண்மனையைச் சுற்றி நிறுத்தப்பட்டிருந்தன. ஆயிரக் கணக்கான துப்பாக்கிகளும் வெடிபொருட்களும் அரண்மனைக் கிட்டங்கியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன.
என்னதான் வீரமறவர்கள் வேலுநாச்சியாரின் படையில் இடம்பெற்றிருந்தாலும் ஆங்கிலேயரின் நவீன ஆயுதங்கள் மிகப்பெரிய சவாலாக இருந்தன. விருப்பாச்சியிலிருந்து தொடர் வெற்றிகளைக் குவித்து வந்த வேலுநாச்சியாருக்கு இறுதிப் போரில் தோற்றுவிட்டால் என்ன ஆவது என நினைப்பதற்கே அச்சமாக இருந்தது. இருப்பினும் நம்பிக்கையைக் கைவிடவில்லை.
அந்த நேரம் அங்கே ஒரு தள்ளாத கிழவி ஒருத்தி வந்து கொண்டிருந்தாள்.
சபையின் நடுவே தடுமாறி நடந்து வந்த அவள், வேலுநாச்சியாரை வணங்கிவிட்டு, பேசத் தொடங்கினாள்.
"தளவாய் பெரிய மருது அவர்களே, இப்போது நவராத்திரி விழா நடந்து வருகிறது. நாளை மறுநாள் விஜயதசமி. அன்று சிவகங்கைக் கோட்டையில் உள்ள ராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலில் கொலு வைக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்காக அன்று ஒருநாள் காலை மட்டும் மக்களுக்கு, அதுவும் பெண்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதைப் பயன்படுத்தி ராணியாரின் தலைமையில் பெண்கள் படை உள்ளே கோட்டைக்குள் புகுந்துவிடும். பிறகு என்ன? வெற்றி, நமது பக்கம்தான்.''
அவள் மூச்சுவிடாமல் சொல்ல, அத்தனை பேரின் கண்களும் வியப்பில் விரிந்தன.
பெரிய மருதுவின் சந்தேகப் பார்வையைக் கண்டதும் அந்தப் பெண் கடகடவென நகைத்தாள். "பேராண்டி பெரிய மருது, இப்போது என்னைத் தெரிகிறதா?'' என்றபடியே மெல்ல தனது தலையில் கை வைத்து வெள்ளை முடியை விலக்கினாள். அந்த முடி, கையோடு வந்தது. குயிலி புன்னகை மின்ன நின்றிருந்தாள்.
ஆம், சிவகங்கைக் கோட்டையை உளவு பார்க்க ராணியின் உயிர்த்தோழி குயிலி மாறுவேடத்தில் சென்றாள் என்ற உண்மை வெளிச்சமிட்டு நின்றது.
"என்ன பெரிய மருது, உங்கள் சந்தேகம் தீர்ந்ததா? நாளை மறுநாள் நமது படைகள் போர்முரசு கொட்டட்டும், இந்த முறை ஒலிக்கும் முரசு, வெள்ளையரின் அடிமை விலங்கை ஒடித்து, விடுதலை வெளிச்சத்தைக் கொண்டுவரும் முரசாக ஒலிக்கட்டும்!'' ஆணையிட்டுவிட்டு சென்றார் வேலுநாச்சியார்.
ராணி குறித்தது போல படைகள் இரண்டு பிரிவாகப் பிரிந்து, முரசறைந்து போர் முழக்கமிட்டுப் புறப்பட, ராணி வேலுநாச்சியாரின் தலைமையில் பெண்கள்படை சிவகங்கை நகருக்குள் புகுந்தது. அம்மனுக்கு சாத்தி வழிபட அவர்கள் கையில் பூமாலைகளோடு அணிவகுத்தனர்.
பூமாலைக்குள் கத்தியும், வளரியும் பதுங்கி இருந்தது பரங்கியருக்குத் தெரியாது. வேலுநாச்சியாரும் தனது ஆபரணங்களை எல்லாம் களைந்துவிட்டு சாதாரணப் பெண்போல மாறுவேடத்தில் கோயிலுக்குள் புகுந்தார். எட்டு ஆண்டுகளுக்கு முன்பு கணவரோடு கோட்டைக்குள் இருந்து வெளியேறிய பிறகு, இன்று தான் மட்டும் தனியே மாறுவேடத்தில் வரவேண்டி வந்துவிட்டதே என்றி எண்ணி வேலு நாச்சியார் ஒரு கணம் கலங்கினார். ஆனால், ஒரே நொடியில் அந்தக் கலக்கம் காலாவதியானது. "எனது கணவரை மாய்த்து நாட்டை அடிமைப்படுத்திய நயவஞ்சகரை ஒழிப்பேன். விடுதலைச் சுடரை நாடு முழுக்க விதைப்பேன்!'' என்ற வீரசபதம் நினைவில் புகுந்தது.
அவரது கண்கள் கோட்டையின் ஒவ்வொரு பகுதியையும் அலச ஆரம்பித்தது. விஜயதசமி என்பதால் ஆயுதங்கள் அனைத்தையும் கோட்டையின் நில முற்றத்தில் வழிபாடு நடத்த குவித்து வைத்திருந்தனர். ஒரு சில வீரர்களின் கையில் மட்டுமே ஆயுதங்கள் இருந்தன.
ராணி கோட்டையை அளவெடுத்தது போலவே குயிலியின் கண்களும் அளவெடுத்தன. நிலா முற்றத்தில் குவிக்கப்பட்டிருந்த ஆயுதங்களைக் கண்டதும், அவளது மனதில் ஒரு மின்னல் யோசனை தோன்றி மறைந்தது.
ஆனால், அந்த யோசனையை வெளியே சொன்னால் செயல்படுத்த அனுமதி கிடைக்காது என்பதை அறிந்திருந்த குயிலி, மெதுவாக ராணி வேலுநாச்சியாரைப் பிரிந்து கூட்டத்தோடு கலந்துகொண்டாள்.
அதே நேரத்தில் கோட்டையில் பூஜை முடிந்தது. அனைவரும் கோட்டையை விட்டு வெளியேற ஆரம்பித்தனர். பொதுமக்கள் கூட்டமும் மெதுவாக கலையத் தொடங்கியது. வேலுநாச்சியார் தனது போரைத் தொடங்க இதுவே தருணம் என்பதை உணர்ந்தார். அவரது கை மெல்ல தலைக்குமேல் உயர்ந்தது. மனத்திற்குள் ராஜராஜேஸ்வரியை வணங்கியபடியே, "வீரவேல்! வெற்றிவேல்!!'' என்று விண்ணதிர முழங்கினாள்.
அந்த இடிக்குரல் அரண்மனையே கிடுகிடுக்கும் அளவிற்கு முழங்கியது. ராணியின் குரலோசையைக் கேட்டதும் பெண்கள் படை புயலாய்ச் சீறியது. புது வெள்ளமாய்ப் பாய்ந்தது. மந்திர வித்தைபோல பெண்களின் கைகளில் வாளும் வேலும் தோன்றின.
ஆயுதங்கள் அனைத்தையும் மின்னலெனச் சுழற்றி வெள்ளையர்களை சிவகங்கைப் பெண்கள் படை வெட்டிச்சாய்த்தது. இந்தக் காட்சியை மேல்மாடியில் நின்று பார்த்துக் கொண்டிருந்த ஆங்கிலேயன் பான்சோருக்கு இடிவிழுந்தது போலாயிற்று.
"சார்ஜ்!..'' என்று பான்சோர் தொண்டை கிழியக் கத்தியபடியே, தனது இடுப்பில் இருந்த 2 கைத்துப்பாக்கிகளை எடுத்து சரமாரியாகச் சுட ஆரம்பித்தான். வெள்ளைச் சிப்பாய்கள் ஆயுதக் குவியலை நோக்கி ஓடிவர ஆரம்பித்தார்கள்.
வேலு நாச்சியார் பான்சோரைப் பிடிக்க மேல்மாடத்திற்குச் செல்வதற்குள் அங்கிருந்த யாரோ ஒரு பெண் தனது உடல் முழுக்க கொளுந்துவிட்டு எரியும் தீயோடு, "வீரவேல், வெற்றிவேல்'' என்று, அண்டம் பொடிபடக் கத்தியபடியே ஆயுதக்கிடங்கை நோக்கி கீழே குதித்தாள்.
நிலா முற்றத்தில் இருந்த ஆயுதங்கள் அனைத்தும் வெடித்தும், தீ பிடித்தும் எரிந்தன.
ஆயுதக் குவியலில் பற்றிய தீயைக் கண்டதும் பான்சோரும், அவனது வீரர்களும் நிராயுதபாணியாகி பயந்து நின்றனர்.
பான்சோர் தப்பி ஓட முயன்றான். ஆனால் வேலுநாச்சியாரின் வீரவாள் அவனை வளைத்துப் பிடித்தது. தளபதி சரணடைந்தான். கோட்டை மீண்டும் ராணியின் கைக்கு வந்தது.
இதே நேரத்தில் பெரிய மருது வெற்றியோடு வந்தார். திருப்பத்தூர் கோட்டையை வென்ற சின்ன மருதுவும் தனது படைகளோடு வந்து சேர்ந்தார். வெற்றி முழக்கம் எங்கும் ஒலித்தது. ஆனால் வேலுநாச்சியாரின் கண்களோ தன் உயிரான தோழியும், இந்த வெற்றிக்கு வித்திட்ட பெண்கள் படை தளபதியுமான குயிலியைத் தேடியது.
குயிலி என்ன ஆனார்.
போர் தொடங்கிய போது குயிலின் எண்ணம் ஆயுதக் கிடங்கின் மேல் நின்றது. அப்போது அவள் எண்ணினாள், "நமது விடுதலைக்கான இறுதிப்போர் இது. இதில் நாம் தோல்வி அடைந்தால் இனி எத்தனை ஜென்மம் எடுத்தாலும் வெற்றி பெற முடியாது. நான் வெற்றிக்கு வழிகாட்ட ஒளியூட்டப் போகிறேன். என்று கூறியபடியே உடல் முழுவதும் நெய்யை ஊற்றிக்கொண்டு, கோயிலில் இருந்த எரியும் பந்தத்தோடு அரண்மனையின் உப்பரிகையை நோக்கிப் பறந்தாள்.
அரண்மனை உப்பரிகையை அடைந்ததும் தீப்பந்தத்தால் தனது உடலில் தனக்குத்தானே தீவைத்துக்கொண்டு, அந்த ஆயுதக் குவியலில் குதித்து விட்டாள். வெள்ளையர்களை ஆயுதம் அற்றவர்களாக்கி தன் தலைவிக்கு வெற்றியை அள்ளித்தர, தன்னையே பலியிட்டுக்கொண்டாள்.
மானம் காக்கும் மறவர் சீமையின் விடுதலைக்காக குயிலி தன்னையே பலி கொடுத்தார் என்பதை அறிந்ததும் அந்தத் தியாக மறத்திக்காக வேலுநாச்சியாரின் வீர விழிகள் அருவியாய் மாறின. கண்ணீர் வெள்ளம் அவரது உடலை நனைத்தது.
அவர் மட்டுமா அழுதார்? குயிலிக்காக சிவகங்கைச் சீமையே அழுதது. குயிலி போன்ற தியாகச்சுடர்கள் தந்த ஒளியின் ஒட்டுமொத்தக் கூட்டுத்தொகைதான் இந்தியாவிற்கு விடுதலை வழிகாண வைத்தது. தங்கள் உடலையே எரிபொருளாக்கிய எத்தனையோ குயிலிகள் இன்னும் சரித்திரம் ஏறாமலேயே சருகாய்ப் போனார்கள். அவர்களது உன்னத தியாகத்திற்குத் தலைவணங்குவோமாக!
(நடந்து முடிந்த சட்டசசபையில் உறுப்பினர்கள் வேண்டுகோளுக்கிணங்க வேலு நாச்சியாருக்கு மணி மண்டபம் கட்டும் போது அதில் குயிலிக்கும் மண்டபம் கட்டப்படும் என்று முதல்வர் அறிவித்தார், யார் அந்த குயிலி என்ற தேடுதலின் அடிப்படையில் சுருக்கமாக எழுதப்பட்டதே இந்த கட்டுரை, நன்றி- விஜயபாரதம், தமிழ்தேசசம், மகளிர் வரலாறு கட்டுரையாளர்களுக்கு)

- எல்.முருகராஜ்                                                                                                                                                                                       நன்றி: தினமலர்.

புகைப்பட ஹைக்கூ 30

$
0
0
புகைப்பட ஹைக்கூ 30


பூவோடு சேர்ந்து
குளித்தது
பூ!

வாடினால்
வதங்கும் மனசு
பூ!

பூ வியாபாரம்
கூடவே குழந்தைக்கு
உபசாரம்!

கொளுத்தும் வெயிலிலும்
குளிர்விக்கிறது அன்னையின்
அன்பு!

வெயிலுக்கு
கவசமானது
தண்ணீர் குளியல்!

வாட்டும் வெயிலில்
வாடாமல் சிரித்தது
குழந்தை!

வாசமுடன்
பாசமும் சேர்ந்தது
பூக்காரியின் குழந்தை!

குடும்பச் சுமையை
குறைத்து வைத்தது
குழந்தை!

பாச ஊற்றீல்
மூழ்கியது
குழந்தை!

உருக்கும் வெயிலில்
பெருக்கெடுத்தது தாயின்
பாசம்!

பூக்கடையில் ஒரு
விலையில்லா
பூ!

குழந்தை குளிப்பது
நீரில்மட்டுமல்ல
தாய்ப்பாசத்திலும்!

வாசம் மணத்தது மல்லியில்!
பாசம் மணத்தது
பிள்ளையில்!

வாடாமல் இருக்க
ஈரமானது
பூ!

ஈரமான மனம்
ஈரமானது
பூ!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!


புகைப்பட ஹைக்கூ 31

$
0
0
புகைப்பட ஹைக்கூ 31


பாலோடு
நிழலும் தந்தது
தாய்ப்பசு!

பால் வளர்ச்சிக்கு
நிழல் குளிர்ச்சிக்கும்
ஈந்தது தாய்ப்பசு!

தாயின் நிழலில்
களைப்பாறியது
கன்று!

ஊட்டி மட்டுமல்ல
போர்த்தியும் வளர்த்தது
பசு!

பெற்றவள் நிழலில்
வளர்ந்தது
கன்று!

 வறண்ட பூமியில்
 மிரண்ட கன்று
அரவணைத்தது தாய்ப்பசு!

 நீரும் இல்லை!
 நிழலும் இல்லை!
 பாசம் உண்டு  பசு மடியில் கன்று!

  நிழல்குடையானது
  பசு!
  மடியில் கன்று!

  தாயின் மடியில்
  தவழும்
  கன்று!

  ஊற்றெடுத்தது
  பால் அல்ல பாசம்!
  தாய் மடியில் கன்று!

   அச்சத்தில் கன்று
   அரணானது
   பசு!
டிஸ்கி:  கரூர் திருமுக்கூடலூர் (மாமனார் இல்லம்)சென்று இருந்தமையால் ஒரு வாரமாக பதிவுகள் இடவில்லை! பதிவுகள் படிக்கவில்லை! இனி தொடர்ந்து  பதிவுகள் வெளிவரும்! நன்றி!
  தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

  

சிரிக்க வைத்த சிரிப்புக்கள்! பகுதி 6

$
0
0
சிரிக்க வைத்த சிரிப்புக்கள்! பகுதி 6

1.   டாக்டர் என் ஆயுள் ரேகை ரொம்ப கெட்டியா இருக்கு!
நீங்க என்கிட்ட வந்த பிறகு போய் பார்த்தீங்களா?
                             வி. சாரதி டேச்சு.
2.   நகர்வலம் போகும் போது எவனோ மன்னர் மீது செருப்பை வீசிவிட்டான்.
அடடா மன்னர் என்ன செய்தார்?
ஓடுவதற்கு பயன்படுமே என்று பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டார்!
                              க. கலைவாணன்
3. யுத்தத்திற்கு தேவையான அளவு ஈட்டி கேடயம் கத்தி நம்மிடம் இல்லை என்ற ரகசியத்தை வெளியிட்டது யார்?
பேரிச்சம்பழ வியாபாரிதான் அரசே!
                        எஸ் மோகன்.
3.   தலைவர் எப்பவும் கைல ஒரு ஸ்கேல் வச்சி இருக்காரே ஏன்?
4.    எல்லாத்திலேயும் ஒரு அளவு கோலோடு செயல்படுங்கண்னு கட்சி மேலிடம் சொல்லியிருக்காம்!
                         இரா.வசந்தராசன்.
5.   ஒரு காம்பவுண்ட் செண்டன்ஸ் சொல்லு பார்க்கலாம்?
இங்கு நோட்டீஸ் ஒட்டக்கூடாது சார்!
                   வி.சி. கிருஷ்ணரத்தினம்.
6.   மாப்பிள்ளை ஆத்தோட போயிட்டார்!
ஐயையோ!
என்ன ஐயையோங்கிற.. ஆத்தோட மாப்பிள்ளையாயிட்டாருன்னு சொன்னேன்!
                                  ஆர்.நரசிம்மன்.
7.   ஏண்டா இண்டர்வியுவிற்கு போக மாட்டேன்னு அடம் பிடிக்கிற?
நீங்கதானப்பா நாலு பேரு கேள்வி கேக்கற மாதிரி வச்சுக்காதேன்னு சொன்னீங்க!
                           எப். ஷர்புதீன்.
8.   உங்களை கல்யாணம் செய்துகிட்டதுக்கு பதிலா ஒரு நாயைக் கல்யாணம் செய்து இருந்தா கூட நான் சந்தோஷமா இருந்திருப்பேன்!
நான் கூட நாயைத்தான் கல்யாணம் செய்துகிட்டேன்! நான் என்ன சந்தோஷமாவா இருக்கேன்?
         எஸ். மோஹன் குமார்.
9.   அவசரத்துல கால் மாத்தி ஆபரேசன் பண்ணிட்டேன்!
ஆள் மாத்தியும் பண்ணீட்டீங்க டாக்டர்!
                            அண்டனூர் சுரா.
10.திருடன் உங்க வாயைத்தானே கட்டிப்போட்டான்! பக்கத்துல இருந்த உங்க கணவர் ஏன் திருடன் திருடன் னு கத்தலை?
என் பக்கத்துல அவரு இருக்கும்போது அவரு வாயே திறக்கமாட்டார் சார்!
                                       வி. சாரதிடேச்சு.
11.என் மருமகன் கரண்ட் மாதிரி!
எந்த விஷயத்திலே?
கொஞ்ச நேரம் வீட்டில இருக்க மாட்டார்!
                அண்டனூர் சுரா.
12.நாங்க உங்க வீட்டுக்கு ரெய்டுக்கு வரப்போறதா சம்மன் அனுப்பினோமே?
அதை நான் மனுன்னு நினைச்சி வாங்கி கிழிச்சி போட்டுட்டேன்!
        
                      வி. சாரதி டேச்சு.
13.டாக்டர் வர வர உங்க கம்பவுண்டர் கொடுக்கிற மாத்திரை ரொம்ப பெரிசா இருக்கு!
யோவ்! அது டோக்கன்யா!
                     பே. சௌரி.
14.நம் மன்னரை வீரத்துல சிங்கம் னு சொன்னதுக்கு ஏன் இப்படி ஓடுகிறார்!
அவர் காதுல தூரத்துல சிங்கம்னு விழுந்திருக்கும்!
                               எஸ் விஜயராணி.
15.சென்ற ஞாயிறன்று நள்ளிரவில் வந்த கயவன் என்னை கெடுக்க முயற்சித்தான் மன்னா!
நீதான் அவனை துடைப்பத்தால் அடித்து துரத்திவிட்டாயே கண்மணி!
                                 சீர்காழி வி. ரேவதி.
16.தலைவரை எதுக்கு கைது பண்ணிகிட்டு போறாங்க?
  எதிர் கட்சிக்காரங்க மோர் பந்தல் வச்சா இவர் போட்டியா பீர் பந்தல் வைச்சாராம்!
                                       வி.சகிதா முருகன்.
17.தலைவரை கடத்திகிட்டு போன மாவோயிஸ்டுகள் எந்த நிபந்தனையும் இல்லாம தலைவரை விடுதலை பண்ணிட்டாங்களே எப்படி?
  எல்லா மாவோயிஸ்டுங்க கிட்டேயும் கைமாத்தா பணம் கேட்டு குடைச்சல் கொடுத்தாராம்!
                           வி. சகிதா முருகன்.
18.பேங்க் திறப்பு விழாவுல பேசுன தலைவர் ரொம்ப சொதப்பிட்டாரு!
  அப்படி என்னதான் பேசினாரு?
  மின்வெட்டு நிலவுற இந்த சூழல்ல எல்லோரும் இந்த வங்கியில கரண்ட் அக்கவுண்ட் தொடங்கி மின்சாரத்த சேமிக்கணும்னு பேசிட்டாரு!
                                          திருமாளத்து அம்பி.

நன்றி: குமுதம் வார இதழ்.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!.



சர்வம் சக்தி மயம்! பாப்பா மலர்!

$
0
0
சர்வம் சக்தி மயம்! பாப்பா மலர்!


தும்பிக்கை ஆண்டவன் விநாயகரை அறிந்திராத குழந்தைகளே இருக்க முடியாது. பால பருவத்தில் பிள்ளைகளுக்கு மிகவும் பிடித்த கடவுள் பிள்ளையாரும் கண்ணனும் தான். இருவருமே குறும்பு செய்வதில் வல்லவர்கள்!
கண்ணன் கோகுலத்தில் செய்யாத குறும்புகளே இல்லை எனலாம். மண்ணைத்தின்று வாயைத்திறந்து உலகத்தையே அதனுள் காட்டியவன் அல்லவா கண்ணன். விநாயகரும் அம்மை அப்பனே உலகம் என்று உண்மையை உலகினுக்கு தந்தவர்.
   இந்த பிள்ளையார் சின்ன பிள்ளையாக இருக்கும் போது நிகழ்ந்த ஒரு நிகழ்வைத்தான் இப்போது நாம் பார்க்க போகிறோம். சின்ன பிள்ளையாக இருக்கும் நீங்கள் எல்லோரும் ஏதாவது ஒரு பிராணியை வளர்ப்பீர்கள். அது நாய், பூனை, முயல், கிளி ,அல்லது மீன் போன்ற ஏதாவது ஒன்றாக இருக்கலாம். ஓய்வு நேரத்தில் அதனுடன் விளையாடுவதில் உங்களின் பொழுது கரைந்து போகும் அல்லவா? அப்படி விளையாடும்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? பூனையின் காதை பிடித்து திருகுவீர்கள் நாயின் வாலைப் பிடித்து இழுப்பீர்கள் இப்படி ஏதாவது குறும்பு பண்ணி விளையாடுவது ஒரு பொழுது போக்கு
   பிள்ளையாரும் அப்படித்தான் ஒரு நாள் விளையாடச் சென்றார். அப்போது அந்த வழியே பூனையொன்று வந்துகொண்டிருந்தது. உடனே பிள்ளையார் அந்த பூனையை பிடித்து வைத்துக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்தார். அப்படி விளையாடும்போது விநாயகரின் கை நகங்கள் அந்த பூனையின் முகத்தில் பட்டு இரண்டு மூன்று நகக் கீறல்கள் உண்டாகி விட்டது. பொழுது சாய்ந்ததும் பிள்ளையார் பூனையை விட்டுவிட்டு வீட்டுக்கு திரும்பினார்.
    அம்மா! அம்மா! எனக்கு பசிக்கிறது! உணவு தருகிறாயா? என்றபடி வீட்டினுள் நுழைந்த பிள்ளையாருக்கு அதிர்ச்சியாகிவிட்டது. அவரது அன்னையின் முகத்தில் இரண்டு மூன்று நகக்கீறல்கள் இருப்பதை பார்த்தால் அதிர்ச்சியாக இருக்காதா பின்னே! உலகிற்கே அன்னையான தன் அம்மாவின் முகத்தில் இப்படி நகக்கீறல்களை உண்டாக்கியது யாராக இருக்கும்? அந்த அளவுக்கு தைரியம் உடையவர் யார்? என்று நினைத்துக் கொண்டே அன்னையிடம் கேட்டார்.
   அம்மா! முகத்தில் என்ன காயம்? இது எதனால் ஏற்பட்டது? யார் ஏற்படுத்தியது? என்று கோபமாக கேட்டார்.
  அன்னை பார்வதி தேவி சிரித்துக் கொண்டே! மகனே விநாயகா இது நீ ஏற்படுத்தியதுதான் என்றார்.
  பிள்ளையாருக்கு கோபம் அதிகமாகிவிட்டது! அம்மா! நான் வெளியே விளையாடிவிட்டு இப்போதுதான் வருகிறேன்! அதுவும் இல்லாமல் அன்னையின் முகத்தில் நான் இப்படி கீறுவேனா? உண்மையைக் கூறுங்கள் தாயே! விளையாடாதீர்கள் என்று கேட்டார்.
  உண்மையைத்தான் கூறுகிறேன் மகனே!
  இது எப்படி உண்மையாகும்? செய்யாத ஒன்றை செய்ததாக கூறுகிறீர்களே?
மகனே! இன்று காலையில் நீ பூனை ஒன்றை பிடித்து விளையாடினாய் அல்லவா? அதன் முகத்தில் உன் நகங்கள் பட்டு கீறல்கள் ஏற்பட்டது அல்லவா?
  ஆமாம் அம்மா! ஆனால் நான் பூனையின் முகத்தில்தானே கீறீனேன் அது எப்படி தங்கள் முகத்தில் கீறியதாக ஆகும்?
  மகனே! விநாயகா! இந்த உலகமே சக்திமயம்தான்! அனைத்து உயிர்களிலும் நான் இருக்கிறேன்!இந்த உலகமே நான்! நானே உலகம்! உலகில் உள்ள எல்லா பொருள்களிலும் நான் உள்ளேன். உலகில் யாரை துன்புறுத்தினாலும் அது என்னை துன்புறுத்துவதே ஆகும். அதனால்தான் நீ பூனையின் முகத்தில் கீறிய கீறல்கள் என் முகத்திலும் விழுந்தன. அதனால் தான் உன்னால் ஏற்பட்டது என்றேன்  என்று சொன்னாள்.
  அன்னையின் பதில் பிள்ளையாரை சிந்திக்க வைத்தது. சர்வம் சக்தி மயம்! எல்லா உயிர்களிலும் இறைவன் இருக்கிறான் என்பதை உணர்ந்து கொண்டார். அன்று முதல் அவர் எந்த உயிரையும் துன்புறுத்துவதையும் விட்டுவிட்டார்.
   நாமும் அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்துவோம்! அன்பே சிவம்! உயிர்களை துன்புறுத்துவதை நிறுத்துவோம்!

அன்பே சிவம்.

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!




உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 17

$
0
0
உங்களின் தமிழ் அறிவு எப்படி? பகுதி 17



வணக்கம் அன்பர்களே! வெளியூர் சென்றிருந்தமையால் இரண்டு வாரங்களாக இந்த பகுதியை பதிவிட இயலவில்லை! தமிழ்மொழியாயினும் வேறு எந்த மொழியாயினும் அதை எழுதும் போது தேவைப்படுவது நிறுத்தற்குறிகள்! ஒரு வாக்கியம் முற்றுபெற முற்றுப்புள்ளி அவசியம் அன்றோ? அதே போல் வாக்கியத்தை அர்த்தமுள்ளதாக ஆக்க பயன்படுபவையே நிறுத்தல் குறிகள்.
   ஒரு பிரபல ஆங்கில எழுத்தாளர் (பெயர் நினைவில் இல்லை) ஒரு பெரிய நாவலை எழுதி பதிப்பகத்திற்கு அனுப்பி வைத்தாராம். பதிப்பகத்தார் படித்துவிட்டு நாவல் அருமையாக உள்ளது. ஆனால் இதில் காற்புள்ளி அரைப்புள்ளி, போன்ற நிறுத்தல் குறிகள் இல்லை! அதை இட்டு அனுப்பிவையுங்கள் பிரசுரிக்கலாம் என்று குறிப்புடன் நாவலாசிரியருக்கு நாவலை திருப்பி அனுப்பினார்களாம். நாவலாசிரியருக்கு கோபம் ஒரு தனித்தாளில் நிறுத்தல் குறிகளை நிரப்பி இதோ நிறுத்தல் குறிகளை அனுப்பி உள்ளேன் உங்களுக்கு தேவைப்படும் இடத்தில் நிரப்பிக் கொள்ளுங்கள் என்று அனுப்பி விட்டாராம். பதிப்பகத்தார் அசந்து விட்டார்களாம்.
   ஆனால் நாம் அப்படியா? தெள்ளுத் தமிழ் சிறக்க நிறுத்தல் குறிகள் அவசியம் அதில் சிலவற்றை இந்த பதிவில் பார்ப்போமா?

  காற்புள்ளி (,)
   பொருள்களை எண்ணும் நிலை, விளி, வினையெச்சம், மேற்கோள் குறிக்குமுன், ஆதலால்,ஆகவே முதலிய சொற்களின் பின் முகவரியில் இறுதி வரி தவிர்த்த பிற இடங்களில் காற்புள்ளி இடுதல் வேண்டும்.
  எ.கா நிலம்,நீர், காற்று,தீ, வான் என்பன ஐம்பூதங்கள்.
       வளவா, சொல்வதைக் கேள்.
அரைப்புள்ளி(;)
  ஒரே எழுவாயில் பல தொடர்கள் தொடர்ந்து வருகின்ற இடங்களிலும் ஒரே எழுவாய்க்குரிய உடன்பாட்டுக் கருத்தும் எதிர்மறைக் கருத்தும் தொடர்ந்து வருகின்ற இடங்களிலும் அரைப்புள்ளி இடுதல் வேண்டும்.
(எ.கா) சிலப்பதிகாரம்,செந்தமிழ்க் காப்பியம்;முத்தமிழ்க் காப்பியம்; மூவேந்தரையும் பாடும் காப்பியம்.
       இளமுருகு என்பானிடம் நிறைய அறிவுண்டு; பொறுமை இல்லை.
முக்காற்புள்ளி(:)
          ஒருவர் கூற்றை விளக்குதல், சிறு தலைப்பு, நூற்பகுதி எண் முதலிய விவரங்களை பட்டியல் முறையில் ஒன்றன் பின் ஒன்றாகத் தரும்போது முக்காற்புள்ளி இடுதல் வேண்டும்.
எ.கா  முப்பால் என்பன பின்வருமாறு: அறம்,பொருள், இன்பம்.
       பெயர்: அரங்கநாதன்
முற்றுப்புள்ளி(.)
     சொற்றொடர் இறுதி, முகவரி இறுதி, நாள் இறுதி, சொற்குறுக்கம், பெயர் தலைப்பெழுத்து முதலிய இடங்களில் முற்றுப்புள்ளி இட வேண்டும்.
  (எ.கா) உருவு கண்டு எள்ளாமை வேண்டும்.
        வைத்தியநாதன்,த/பெ சுந்தரேசன்,பூரிவாக்கம்கிராமம், ஊத்துக்கோட்டைவட்டம்,திருவள்ளூர்மாவட்டம்.
3.8.2012
வி. இளவரசன்.

வினாக்குறி(?)
    ஒருவினாத்தொடர் முற்றுத்தொடராகவும் நேர்கூற்றுத்தொடராகவும் இருப்பின் இறுதியில் வினாக்குறி இடுதல் வேண்டும்.
   அங்கே வருவது யார்?
நீ வருவாயா?

உணர்ச்சிக் குறி(!)
    வியப்பு, அவலம், வாழ்த்து, வரவேற்றல், வைதல் ஆகிய உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் தொடர்களின் பின் (!)உணர்ச்சிக்குறி இடுதல் வேண்டும்.
    என்னே அருமை!
    தீ!தீ!
வருக! வருக!
வாழ்கவாழ்க!
உணர்ச்சிக்குறி ஒன்றுக்கு மேற்பட்டு இடுதல் கூடாது

ஒற்றை மேற்கோள்குறி (‘)
    இக்குறி ஒர் எழுத்தேனும் சொல்லேனும் தன்னையே குறித்தாலும் பிறர் கூற்றாக வரும் இடத்தும் கட்டுரைப் பெயரும், நூற்பெயரும் வருமிடத்தும் ஒற்றை மேற்கோள் குறி வரும்.
   ‘ஏ’ என்று சொன்னான்.
   ‘செய்யும்’ என்பது பெயரெச்ச வாய்ப்பாடுகளுல் ஒன்று.
   வள்ளுவர், ‘திருக்குறள்’ என்னும் நீதிநூல் படைத்தார்.

இரட்டை மேற்கோள் குறி (“)
    நேர்க் கூற்றுத் தொடர்களிலும் மேற்கோள் தொடர்களிலும் இரட்டை மேற்கோள் குறி இடப்படும்.
   இராமன், “நாளை வருகிறேன்” என்றான்.
   “ஒழுக்கமுடைமை குடிமை” என்றார் திருவள்ளுவர்.

என்ன வாசகர்களே!இதுவரை எப்படியோ எழுதி இருப்போம்! இனி, நிறுத்தற் குறிகளுடன் எழுதி பழகுவோம். இனி இலக்கிய சுவை! காளமேகப் புலவர் பாடிய ஒரு இரட்டுற மொழிதல் பாடலை பார்ப்போமா?

நாகபட்டினத்தில்உள்ளகாத்தான்என்பவரதுசத்திரத்திற்குஉணவுஅருந்துவதற்காககாளமேகம்ஒரு முறைசென்றிருந்தார். நீண்டநேரம்காத்திருந்தும்உணவுவந்தபாடில்லை. காளமேகம்பொறுமையைமுற்றாகஇழந்துபோனபின்னர்தான்உணவுஅருந்தஅழைப்புவந்தது. பசியின்உச்சத்துக்குப்போயிருந்தகாளமேகம்அப்பொழுதுஉதிர்த்தகவிதை,

கத்துக்கடல்நாகைக்
காத்தான்தன்சத்திரத்தில்
அத்தமிக்கும்போதில்
அரிசிவரும் - குத்தி
உலையில்இடஊர்அடங்கும்;
ஓரகப்பைஅன்னம்
இலையில்இடவெள்ளிஎழும்.

பாடலைக்கேட்டதன்பின்னர்தான்உரிமையாளருக்குவந்திருப்பதுகாளமேகம்என்பதுதெரிந்திருக்கிறது. இந்தப்பாடலினால்எங்கேதனதுசத்திரத்திற்குஅவப்பெயர்வந்துவிடுமோஎன்றுபயந்தகாத்தான்; காளமேகத்திடம்மன்னிப்புக்கேட்டுக்கொண்டார். காளமேகம்நிலமையைச்சரிசெய்யபாடலுக்கானவிளக்கத்தைஇவ்வாறுசொல்லிக்கொண்டார்.

'
காத்தானதுசத்திரத்தில், அத்தமிக்கும்நேரத்தில்அதாவதுநாட்டில்உணவின்றிபஞ்சம்தலைவிரித்தாடும்காலத்தில்அரிசிமூட்டைமூட்டையாய்வந்திறங்கும். அங்குபரிமாறும்உணவைஉண்டுஅந்தஊரேபசிஅடங்கும். இலையில்விழும்ஒருஅகப்பைஅன்னம்வெள்ளிநட்சத்திரம்போலபிரகாசமாகஇருக்கும்'.

என்றுபதில்சொன்னார். ஆனால்உண்மையானகருத்துவேறுவிதமானதுஎன்பதுகவிதையைப்பார்த்ததும்புரிந்திருக்கும்.


பதிவு குறித்த உங்களின் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

5 பைசாவுக்கு சுத்தமான குடிநீர்!

$
0
0
5 பைசாவுக்கு சுத்தமான குடிநீர்!
"நானோ' தொழில்நுட்ப முறையில், 500 ரூபாய்க்கே குடிநீரை சுத்திகரிக்கும் இயந் திரத்தை கண்டுபிடித்த, பிரதீப்:

நான், மெட்ராஸ் ஐ.ஐ.டி.,யில், வேதியியல் துறை பேராசிரியராக பணியாற்றுகிறேன். சுத்தமான நீரை குடிக்க, ஒவ்வொரு மாதமும், 1,000 ரூபாய்க்கும் மேல் செலவாகும் சூழ்நிலை உள்ளது. மனிதனின் அடிப்படை தேவையான குடிநீர், குறைந்த விலையில் கிடைக்க, ஐந்து ஆண்டுகளாக மேற் கொண்ட முயற்சியில், "நானோ' தொழில்நுட்ப முறையில், ஒரு இயந்திரம் கண்டுபிடித்தேன். முதலில் வைரஸ், பாக்டீரியா போன்ற நுண்கிருமிகளை அழித்த பின், இரண்டாம் கட்டமாக ஆர்சானிக், ஈயம், இரும்பு போன்ற, தேவையற்ற உலோகங்களை நீக்கினேன். சில்வர் நானோ துகள்களிலிருந்து கிடைக்கும், "வெள்ளி அயனிகள்' நீரில் உள்ள நுண்கிருமிகளை அழித்து, நீரை சுத்தப்படுத்தும் தன்மை கொண்டவை. வெள்ளி அயனிகளை நேரடியாக நீரில் சேர்ப்பதால், நுண்கிருமிகள், கனிமங்கள், தாதுக்கள் போன்றவை, அதன் சுத்தப்படுத்தும் செயல்திறனை குறைத்துவிடும் என்பதால், அதற்கான மாற்று முறையை கண்டுபிடித்தேன்.

அலுமினியம் ஆக்சிஹைட்ராக்சைடு என்ற, களிமண் போன்ற பொருளால், 50 நானோ மீட்டர் நீளமும், 30 நானோ மீ., அகலமுள்ள கூண்டு செய்து, அதனுள் வெள்ளி அயனியை வைத்து, "உயிரி பாலிமர்' பொருளால் மூடினேன். இதனால், வெள்ளி அயனியை, நீரில் உள்ள நச்சு பொருட்கள் நேரடியாக தாக்க முடியாததால், வெள்ளி அயனி விரைந்து செயல்பட்டு, நீரின் நுண்கிருமிகளை அழிக்கிறது. இதே முறையில், மற்ற அயனிகளை பயன்படுத்தி, தேவையற்ற உலோகங்களை நீக்கினேன்.

இச்சுத்திகரிப்பு இயந்திரத்தை, வீட்டில் பயன்படுத்தி, நீரை சுத்திகரித்து குடிக்கலாம். ஆண்டிற்கு ஒரு முறை கூண்டை மாற்றினால் போதும்; தொடர்ந்து பயன்படுத்தலாம். இதன் விலை, 120 ரூபாய். கிராமப்புற பெண்களுக்கு இத்தொழில் நுட்ப பயிற்சி கொடுத்தால், வேலைவாய்ப்பு அதிகரிப்பதுடன், சுத்தமான குடிநீரை, லிட்டருக்கு, 5 பைசாவிற்கே தரமுடியும்.

via : விஜய பாரதம்                                                                                                 நன்றி: முகநூல்

புகைப்பட ஹைக்கூ 32

$
0
0
புகைப்பட ஹைக்கூ


அழகான பூ
அழுதது!
பள்ளிகள் திறப்பு!

இனிப்பு தந்து
அழுதது குழந்தை!
பள்ளிகள் திறப்பு!

பிள்ளைகள் அழுகையில்
தாயின் தவிப்பு
 பிரித்தது பள்ளிகள் திறப்பு!

பிடுங்கி நடுகையில்
வாடியது மலர்
பள்ளிகள் திறப்பு!

கசந்தது பள்ளி
கற்கண்டு
குழந்தைக்கு!

நர்சரி பள்ளியில்
நடப்பட்டது
வீட்டு ரோஜா!

அறிவுக் கண் திறக்கையில்
உடைபட்டது
கண்ணீர்!

உறவுகள் பிரிந்து
உறவுகள் உருவாக்கியது
பள்ளி!

 புது மண்ணில்
 வாடிப்போனது ரோஜா!
 பள்ளிப்பிள்ளைகள்!

 கல்வி சுமையானதால்
 கலங்கியது
பிஞ்சு!

நடை பயிலும் வயதில்
எடை கூட்டிய கல்வி!
கலங்கியது கன்று!

கலங்கி நின்று
காட்சிப்பொருளானது
பள்ளியில் குழந்தை!

குளிரூட்டம் செய்த பள்ளி
குமைந்து போனது
பிள்ளைக்கு!

விடுமுறை தீர்ந்ததும்
விதிமுறை நியாபகம்!
கலங்கும் குழந்தை!


தங்கள்வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

போளி விற்கும் நிஜ மனிதர்!

$
0
0
சுட்டெரிக்கும் பகல் 12 மணியின் போது தஞ்சாவூர் கடைத்தெரு வழியாக, ஒரு பெரியவர் வெயிலில் இருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள தலையில் ஒரு துண்டோ அல்லது தொப்பியோ கூட அணியாமல் சைக்கிளில் போளி வியாபாரம் செய்தபடி சென்று கொண்டிருந்தார்.
அவரைப்பார்த்த மாத்திரத்திலேயே, அவருக்கு பின்னால் ஒரு சுவராசியமான தகவல் இருக்கும் என்று தஞ்சாவூர் தினமலர் புகைப்படக்காரர் மணிகண்டனின் மனதில் பட, அதற்கான தேடலை தொடங்கினார்.
57 வருடங்களாக தெருவில் போளி வியாபாரம் செய்தே பத்து வீடு வாங்கி, தனது ஏழு பிள்ளைகளையும் திருமணம் செய்து கொடுத்த அந்த பெரியவரைப் பற்றி சுருக்கமான கதை இது.
விருதுநகரைச் சேர்ந்த பாண்டிக்கு இப்போது 76 வயதாகிறது. மூன்றாம் வகுப்பிற்கு மேல் படிப்பு ஏறவில்லை, பதிலுக்கு இவரது அப்பாவிடம் இருந்து போளி போடும் வித்தையை தனது 12 வயதிலேயே கற்றுக்கொண்டவர், தனியாகவே பிழைத்துக் கொள்ளும் நோக்குடன் விருதுநகரில் இருந்து தஞ்சாவூருக்கு குடிபெயர்ந்தார்.
சுவையாக இவர் தயார் செய்யும் போளிக்கு தஞ்சாவூர் மக்கள் நல்ல வரவேற்பு தரவே இங்கேயே தங்கிவிட்டார். 25 வயதில் செல்லபாக்கியம் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு மூன்று பையன்கள், நான்கு பெண்கள்.
அதிகாலையில் தயார் செய்யும் போளியை கண்ணாடி பெட்டியில் அடுக்கிக்கொண்டு தலைச் சுமையாக (சமீப நாட்களாகத்தான் சைக்கிள்) விற்பனைக்கு கிளம்பிவிடுவார். கடுமையான உழைப்பாளி ஆனால் அதே நேரம் அதிகம் ஆசைப்படாதவர். ஒரு நாளைக்கு இரண்டு தெருக்களில் இரண்டு மணி நேரம் மட்டுமே தலைச்சுமையாக விற்கும் அளவிற்குதான் போளிகள் தயார் செய்வார், அது விற்று முடித்ததும் வீட்டிற்கு திரும்பிவிடுவார். பெரிதாக ஆர்டர் கிடைத்தாலும் வேண்டாம். இதில் கிடைக்கும் வருமானமே போதும் என்று இருந்தவர், இருப்பவர்.
கிடைத்த வருமானத்தை சிறுகச் சிறுகச் சேர்த்து தான் குடியிருந்த தெருவில் இருந்த லயன் வீடுகள் என்று சொல்லப்படும் வரிசையாக அமைந்த பத்து சின்ன, சின்ன வீடுகளை ஒன்று, ஒன்றாக விலைக்கு வாங்கினார்.
தன்னுடைய பிள்ளைகளை படிக்க விரும்பினால் படிக்க வைத்தார், படிக்காத பிள்ளைகளை வியாபாரம் செய்ய வைத்தார், பெண் குழந்தைகளை திருமணம் செய்துவைத்தார். அந்த வகையில் பிள்ளைகள் அனைவரையும் நல்லபடியாக கரைசேர்ப்பதற்காக, அனைத்து வீடுகளையும் விற்றவர், தற்போது குடியிருப்பது பஞ்சசவர்ணம் காலனி,அல்லாகோயில் சந்தில் உள்ள ஐநூறு சதுரஅடியில் அமைந்த வாடகை வீட்டில்தான்.

ஒரு பிள்ளை என்ஜினியர் மற்ற பிள்ளைகள் மளிகை கடை வியாபாரம், பெண் பிள்ளைகள் நல்லபடியாக அவரவர் குடும்பத்துடன் பல்வேறு ஊர்களில் வாழ்கின்றனர், 22 பேரக்குழந்தைகள் இருக்கின்றனர். இவ்வளவு பேர் இருந்தாலும் யாரையும் சிரமப்படுத்த விரும்பாமல், எவருடைய உதவியையும் எதிர்பாராமல், திருமணமான புதிதில் எப்படி வாழ்க்கையை துவங்கினாரோ, அதே போல தற்போது இவரும் இவரது மனைவியும் மட்டும் போளி வியாபாரம் செய்து வாழ்க்கையை மகிழ்ச்சியோடு நடத்திக் கொண்டுள்ளனர். இவரது குடும்பத்தில் இவரைத் தவிர யாரும் இந்த போளி வியாபாரம் பக்கம் திரும்பவில்லை, அதைப்பற்றி இவருக்கு கவலையும் இல்லை, அவரவர் வாழ்க்கை அவரவர் கையில் என்பது இவரது கொள்கை.
மழை, வெயில், காற்று என்று எதுவும் இவரது போளி வியாபாரத்தை பாதித்தது இல்லை. வாரத்தில் ஏழு நாள், வருடத்தில் 365 நாளும் இவரது போளி வியாபாரம் உண்டு. ஒரு நாளைக்கு சராசரியாக 900 ரூபாய்க்கு போளி வியாபாரம் செய்து வருகிறார். ஆரம்பத்தில் ஒரு போளி காலணாவிற்கு விற்றவர், தற்போது பத்து ரூபாய்க்கு மூன்று என்று விற்கிறார்.
தினமும் பசியோடு எதிர்படும் ஓருவருக்கு இரண்டு போளிகள் இலவசமாக கொடுப்பதையும், கர்ப்பினி பெண்கள், ஏழைக்குழந்தைகள் என்றால் விலையில் சலுகைகாட்டுவதையும் அன்றாட வழக்கமாக கொண்டுள்ளார்.
எதைப்பற்றியும் கவலை இல்லை, யாரையும் சார்ந்து இல்லை, யாருடைய உதவியையும் எதிர்பார்ப்பதும் இல்லை, தன் உழைப்பை மட்டுமே நம்பி மகிழ்வுடனும், திருப்தியுடனும் வாழும் இவரைப் போன்றவர்கள் பலருக்கு உதாரணமானவர்களே.
- எல்.முருகராஜ்
நன்றி: தினமலர்

பாலியல் பலாத்காரம்! பலியாடாகும் அப்பாவி சிறுமிகள்!

$
0
0

சமீப காலமாக எந்த ஊடகத்தை பார்த்தாலும் அடிபடும் செய்தி பாலியல் பலாத்காரம்! அதுவும் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த கொடுமை அதிகரித்து வருவது அதிர்ச்சி அளிக்கிறது. அறிவை புகட்ட வேண்டிய ஆசிரியர்கள் கூட தங்கள் மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு கையும் களவுமாக பிடிபட்டு சிறையில் இருக்கிறார்கள்.
   காந்தியடிகள் அப்போது சொன்னார். நள்ளிரவில் எந்த பயமும் இன்றி ஒரு பெண் தனியாக நடமாட முடியும் என்றால் அப்போது இந்தியா பூரண சுதந்திரம் அடைந்து விட்டது என்று. ஆனால் இன்று பகலிலேயே கூட பெண்கள் நடமாட முடியவில்லை! தீடிரென இந்த காம நோய் வெறியாக மாறி இந்தியாவையே அழித்துக் கொண்டு இருக்கிறது.
   ஊடகங்கள், சினிமாக்கள், இணையங்கள் என்று இதற்கு எத்தனையோ சப்பைக்கட்டுக்கள் காரணங்களாக கூறப்பட்டாலும் உண்மை அதுவன்று. மக்களின் மனோபாவம் மாறிப் போனதே காரணமாகும். சிலர் கூறுகிறார்கள் பெண்கள் கண்ணியமாக உடையணிந்தால் ஆண்கள் ஏன் பார்க்கப் போகிறார்கள் கிண்டல் செய்ய போகிறார்கள்? என்று கேட்கிறார்கள். ஆனால் பெண்களை விட்டுவிடுங்கள் சின்னஞ்சிறிய சிறுமிகளிடம் கூட அல்லவா இந்த வெறிநாய்கள் விளையாடி விடுகின்றன. ஆண்களே உங்கள் கண்ணியம் எங்கே போனது. நீங்களும் ஒரு பெண்ணுக்கு பிள்ளை ஒரு பெண்ணுக்கு கணவன், ஒரு பெண்ணுக்கு தகப்பன் என்பதை ஏன் நினைவில் கொள்ள மாட்டேன் என்கிறீர்கள்!
    சின்னஞ்சிறு குழந்தைகள் என்ன செய்தார்கள்! உங்களின் காமவெறிக்கு அந்த குழந்தைகள்தான் பலிகடாக்களா? உங்களுக்கு கொஞ்சமும் ஈவு இரக்கம் இல்லையா? இணையமும் சினிமாவும்தான் இத்தகைய சீர்கேடுகளுக்கு காரணம் என்று கூறுபவர்களே! படித்தவர்கள் வேண்டுமானால் இணையத்தில் பார்த்து கெட்டுப் போய் இருக்கலாம். ஆனால் இந்த செயல்களில் ஈடுபடும் நிறைய பேர் படிக்காத பாமரர்கள். கூலி வேலை செய்பவர்கள் வேற்று மாநில மக்கள்,  இப்படி பலர் இவர்களை கெடுத்தது எது?
   சின்ன குழந்தைகளை இவர்களிடம் பழக விடுவது சரியா? இதை பெற்றோர்கள் யோசிக்கவேண்டும். வீட்டு வேலை அலுவலகம் என்று குழந்தைகள் பராமரிப்பில் கோட்டை விடக்கூடாது. குழந்தைகளுக்காகவும் கொஞ்சம் நேரம் செலவிட வேண்டும். அவர்களுக்கு நல்லது எது கெட்டது எது. பேட் டச், குட் டச் பற்றி சொல்லிக் கொடுக்க வேண்டும். முன் பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் குழந்தைகளை பழகவிடக்கூடாது. குறிப்பாக ஸ்கூல் வேன் டிரைவர், வாட்ச் மேன், அக்கம் பக்கம் உள்ளவர்கள் பற்றி நன்கு அறிந்து பழக விட வேண்டும். அவ்வப்போது கண்காணிக்க வேண்டும்.
   இணையங்களோ ஊடகங்களோ விஷத்தை பரப்பி வருகின்றன என்பது உண்மைதான்! ஆனால் இது மட்டும் இன்றி மக்களின் உணவுப் பழக்க வழக்கங்களும் கலாசார சீரழிவுகளும் மதமாற்றங்களும் கூட இந்த மாதிரி சம்பவங்களுக்கு காரணம் என்று எனக்குத் தோன்றுகிறது. தேவையற்ற அன்னிய ஆக்ரமிப்புக்களால் நமது கலாச்சாரம் சீரழிவு பட்டுள்ளது.
     நமது பாரம்பரியம்! நமது கலாச்சாரத்தை பின்பற்றினாலே பாதி நன்மை கிடைக்கும். நம்முடைய உணவு நம்முடைய ஆடை! நம்முடைய பழக்கவழக்கங்கள்! நம்மை காக்கும். இதை விடுத்து அன்னிய பழக்கங்களை ஏன் பின்பற்ற வேண்டும்.
  நமது வழக்கம் விருந்தினரை கைகூப்பி வரவேற்பது! அன்னிய பழக்கம் கட்டிப்பிடித்து அணைப்பது. முத்தமிடுவது. இதை நமது கலாசாரத்தில் கலப்பது தகுமா? இது போன்ற தேவையற்ற செயல்களும் இந்த பலாத்கார சம்பவங்களுக்கு காரணமாகிவிடும்.
    நமது குழந்தைகளை நாம் கண்காணித்து வளர்க்க வேண்டும். அதே சமயம் இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க அரசு கடுமையான தண்டனை விதிக்க வேண்டும். நமது முதல்வர் துணிச்சலுக்கு பெயர் போனவர். பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிராக நடக்கும் இந்த வன்முறைக்கு தீர்வு காண அவர் கடுமையான சட்டம் இயற்ற வேண்டும். குறிப்பாக இது மாதிரி நடப்பவர்களின் “பீஸை” பிடுங்க வேண்டும். அது ஒன்றே இந்த குற்றங்கள் குறைய வழியாகும்.

   கலாசார சீரழிவு உண்டாக்கும் டிஸ்கொதே கிளப்புகள், விளம்பர பேனர்கள், வெளிநாட்டு சேனல்கள், நமது சேனல் நிகழ்ச்சிகள் இணைய தளங்கள் அனைத்தையும் தடை செய்ய வேண்டும். அப்போது ஓரளவு தீர்வு கிடைக்கும். குறிப்பாக பல்வேறு சேனல்களில் வரும் ரியாலிட்டி ஷோக்கள் என்ற பெயரில் வரும் நடன நிகழ்ச்சிகள் முகம் சுளிக்க வைக்கின்றன. இவை ஆபாசத்தை அள்ளித்தெளிக்கின்றன. நம் நடுவீட்டிலேயே இந்த அலங்கோலம் அரங்கேறுவது நமது பிள்ளைகளை பாதிக்கச் செய்யும். ஆனால் நாம் இதை ரசித்து பார்த்துக் கொண்டு இருக்கிறோம். இதை பார்க்கும் அறைகுறைகள் இன்னும் வேகமாக சீரழிகின்றனர்.
    பொதுவாக தனிமையில் இருக்கும் அல்லது வேலையற்ற அல்லது மணம் புரியாத வயது முதிர்ந்தவர்கள் துணை இழந்தவர்கள்தான் இந்த மாதிரி வன்கொடுமையில் இறங்குகிறார்கள். இப்போது இந்த வரிசையில் பாடம் புகட்டும் ஆசிரியர்களும் இறங்குவது நமது சமூகம் மிகவும் சீரழியத்தொடங்குவதைத்தான் உணர்த்துகிறது. கலாசார சீரழிவுகள்தான் இதற்கு முக்கிய காரணம் என்றால் மிகையில்லை! இந்த கொடுமையில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனைகள் அளித்தால் ஓரளவு வன்கொடுமைகள் குறைய வாய்ப்புள்ளது. அத்துடன் அவர்களுக்கு மன ரீதியான பயிற்சிகளும் வழங்கலாம்.  
    சிறுமிகள் மீது வன்புணரும் இந்த வெறிநாய்களை உறுப்பு துண்டித்தால் கூட பரவாயில்லை! அந்த அளவுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப் படவேண்டும்.
இதை அரசு கவனத்தில் கொள்ளுமா? பொறுத்திருந்து பார்ப்போம்!


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
Viewing all 1537 articles
Browse latest View live