Quantcast
Channel: தளிர்
Viewing all articles
Browse latest Browse all 1537

கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 56

$
0
0
கொஞ்சம் சிரியுங்க பாஸ்! பகுதி 56


1.   வெள்ளநிவாரணம் கொடுக்க போன தலைவருக்கே நிவாரணம் தேவைப்படுதாமே ஏன்?
நிவாரணப் பொருள்கள்ல கை வச்சிட்டாருன்னு மக்கள் ”ரணப்” படுத்தி அனுப்பிச்சிட்டாங்க!

2.    எங்க தலைவர் பேசினா அப்படியே தெறிக்க விடுவாரு..!
என்னது அனலா..!
இல்லை எச்சில்…?!

3.   தலைவருக்கு கொஞ்சம் கூட விவரமே பத்தலை
  ஏன்..?
பீப் சாங் கேட்டீங்களான்னு கேட்டா நமக்கு எப்பவும் மட்டன் தான் பிடிக்கும்னு சொல்றாரே!


4.   உனக்கு அறிவிருக்கா..?
அதை விற்கிறதுக்காக உங்ககிட்ட நான் வரலை!

5.   வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக கஜானாவைத் திறக்க சொன்னேனே என்ன ஆயிற்று?
உங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் திறந்து திறந்து இப்போது அது காலியாக இருக்கிறது மன்னா!


6.   அரசியல் களத்துல ஒவ்வொரு அடியா எடுத்து வச்சு முன்னேறினவரு எங்க தலைவரு..!
அடுத்தவங்களை அடிச்சி அடிச்சியே பின்னுக்கு வந்தவரு எங்க தலைவரு!

7.   அதோ போறாரே அவர் பசையான ஆளு!
பெரிய பணக்காரரா?
இல்லே கம் தயாரிச்சு விக்கிறாரு!

8.   மழைவெள்ளத்துல சரக்கெல்லாம் அடிச்சிக்கினு போயிருச்சுன்னு புலம்பறாரே பெரியவியாபாரியா?
நீ வேற அவர் வீட்டுல வாங்கி வெச்சிருந்த டாஸ்மாக் சரக்கு அடிச்சிட்டு போனதை சொல்றார்!

9.   கூட்டணியிலே சேர இத்தனை பேர் அழைப்பு விடுத்தும் தலைவர் ஏன் சும்மா இருக்கார்?
’குழம்ப’ வைச்சிட்டாங்களாம்!

10.வெள்ள நிவாரணமா புடவை கொடுத்தும் உன் மனைவிக்கு திருப்தியா இல்லையா ஏன்?
மேட்சிங் ப்ளவுஸ் கொடுக்கவே இல்லையாம்!

11. மன்னரின் வீரம் கொடிகட்டி பறக்கிறதாமே...?
     ஆம்...! போரில் மன்னரிடம் உருவிய ஆடையை எதிரி மன்னன் தன் கோட்டையில் கொடிகட்டி பறக்கவிட்டுள்ளானாம்!


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!

Viewing all articles
Browse latest Browse all 1537

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!