தளிர் ஹைக்கூ கவிதைகள்!
1.மறைந்து முத்தம்
காட்டிக்கொடுக்கின்றன கால்கள்!
ஆற்றுமீன்கள்!
2.கரையக்கரைய
வெளுக்கிறது பூமியின் அழுக்கு!
மேகம்!
3.எதிரியின் ஊடுறவல்
ஆட்டம்கண்டது உடல்!
குளிர்!
4.சலித்தது
மிஞ்சவில்லை நீர்!
மேகங்கள்!
5.குளத்தில் இறங்கி குளித்தாலும்
வாடிக்கொண்டிருந்தது
மரங்கள்!
6.நனைந்த மரங்களை
துவட்டி விட்டது காற்று!
மழை!
7.அருகில் இருந்தும்
தூர நிறுத்துகிறது!
எண்ணங்கள்!
எண்ணங்கள்!
8.ஒளிக்குப் பின்னே
ஒளிந்துகொண்டது இருட்டு!
விளக்கு!
9.ஈரத்தடங்கள்!
எளிதாய் அழித்தது
காற்று!
கழற்றிவிட்டார்கள்!
துணிக்கிளிப்புகள்!
11.காற்றுவிரட்டுகையில்
பூமியிடம் அடைக்கலமாகின்றன
பூக்கள்!
12.அழுத்தம் அதிகமானதும்
வெடித்தது மேகம்!
மழை!
13.தாயான குழந்தைமடியில்
சுகமாய் உறங்குகின்றது
பொம்மை!
14.காணாமல்போன சூரியன்!
கதறி அழுதது வானம்!
மழை!
15.பிடித்தவர்களிடம்
பிடித்துப்பார்க்கிறது குழந்தை!
அடம்!
16.படிக்காமலேயே நிறையக்
குழந்தைகள்!
17.குளிரெடுத்த பூமி!
போர்த்திக்கொண்டது
பச்சைப்போர்வை!
18.வாட்டி வதக்கினாலும்
ருசிக்கவில்லை!
மார்கழிப்பனி!
19.புதைத்துக்கொண்டன
குழந்தைகளிடம்
கற்பனை சுரங்கங்கள்!
20.சுவற்றுக்கும்
முகவரி தந்தன
குழந்தைகள்!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!