தளிர் ஹைக்கூ கவிதைகள்!
கூடு திரும்புகையில்
ஊடுருவுகின்றது
பாசம்!
கிளையில்லாமல்
கிளைத்தது உறவு!
பாசக்கிளிகள்!
பற்று விட்டதும்
உதிர்கிறது!
ஒட்டிய மணல்!
புதைந்த உயிர்களை
மீட்டுவந்தது மழை!
புற்கள்!
தோண்டத் தோண்டக்
குறைந்துபோனது நீர்!
மணல் கொள்ளை!
ஆட்டுவித்து
அடங்கிப் போகிறது!
காற்று!
படபடவென்று அடித்துக்கொண்டது!
பதட்டப்படவில்லை!
காற்றில் புத்தகம்!
உடைந்த மனது!
ஒத்தடம் கொடுத்தது
குழந்தையின் சிரிப்பு!
பொங்கிவழிந்தது!
வீணாகவில்லை!
அன்பு!
குழந்தை தவழ்கையில்
ஈரமானது
பூமி!
சாய்ந்து ஓய்வெடுக்கையில்
துரிதமானது நகரம்!
மாலைப்பொழுது!
கட்டிக்கொண்டதும்
விட்டுப்போனது கவலைகள்!
குழந்தை!
தேவதை பிறந்ததும்
தூது சொன்னது காற்று!
பூ!
கருத்தவானம்!
உதித்தது நிலா!
கூந்தலில் மல்லிகை!
கசக்கிப் பிழிந்தார்கள்!
இனித்தது!
கரும்பு!
கடத்தல் காரன்!
கட்ட முடியவில்லை!
காற்று!
கறுத்த பெண்ணை
துரத்தி அடித்தது வானம்!
மழை!
தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!