Quantcast
Channel: தளிர்
Viewing all articles
Browse latest Browse all 1537

இனியவை நாற்பது! இன்று எனது பிறந்த நாள்!

$
0
0
இனியவை நாற்பது! இன்று எனது பிறந்த நாள்!


தளிர் வாசக அன்பர்களே மீண்டும் ஓர் சுயபுராணந்தேன்! கோச்சுக்காதீங்க! இன்று எனது பிறந்தநாள் நாற்பதை நிறைவு செய்கின்றேன். 3-7-75ல் ஓர் நள்ளிரவில் என் அம்மாவை மிகவும் தொந்தரவு செய்து பிறந்த நான் இன்று நாற்பதைக் கடந்துவிட்டேன் என்பது எனக்கே ஆச்சர்யமாக இருக்கின்றது. பிறந்தநாள் கொண்டாட நானெல்லாம் பெரிய ஆள் இல்லை என்றாலும் நினைவு தெரிந்தது முதல் பிறந்தநாள் கொண்டாடித்தான் வருகின்றேன். என் இருபத்தைந்தாவது வயதில் தொடங்கி ஓர் பத்துவருடம் என் டியுசன் மாணவர்களுடன் பிறந்தநாள் கொண்டாடி அவர்களுக்கு பரிசளிப்பேன். பெரியதாய் எதுவும் கிடையாது பேனா,பென்சில் ரப்பர் போன்றவைகள்தான் ஆனால் அதில் கிடைத்த மகிழ்ச்சி பெரிதானது.

    இந்த வருட பிறந்தநாள் மேலும் சிறப்பானது. என் தங்கைக்கு திருமணம் ஆகி குழந்தைப்பேறு பத்து ஆண்டுகள் தள்ளிப் போனது. தற்போது ஆண் குழந்தை பிரசவித்து அதற்கு இன்று பெயர்சூட்ட உள்ளோம். மாமனின் பிறந்தநாளன்று மருமகனுக்கு பெயர் சூட்டுவிழா! இரட்டைக் கொண்டாட்டங்கள். இதனால் இன்று இணையப்பக்கம் தலைக்காட்ட மாட்டேன். அனைவரும் பொறுத்துக் கொள்ளுங்கள்.

   அதென்ன இனியவை நாற்பது என்கிறீர்களா? இந்த நாற்பது வயதில் நமது வாழ்க்கையில் பிடித்ததும் பிடிக்காததுமாய் எத்தனையோ நடந்து இருக்கும். பிடிக்காமல் போனதை விட்டுத் தள்ளுவோம். பிடித்ததை மனதிற்கு இனியதை பிடித்துக் கொள்வோம்.  சின்னவயதில் அம்மா எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டி புது டிரெஸ் போட்டு( சில சமயம் இருக்காது) பாயசம் வைத்து சாமி கும்பிட்டது ஓர் இனிய அனுபவம். அந்த நாட்கள் மீண்டும் திரும்பாது.

   ஜூலை மாதத்தில் 93ம் வருடம்  என்று நினைக்கிறேன் எனது முதல் சிறுகதை கோகுலத்தில் வெளியானது.  ஜூலை 94 ல் பொன்னேரியில் கம்ப்யூட்டர் படித்தது மறக்க முடியாத ஒன்று. 95,ம் வருடம் நடந்த அக்காவின் திருமணம், திருப்பதி சென்றது  ஆகியவையும் இனிமையான நினைவுகள்.  96 ஆம் வருடம் ஆடிய கிரிக்கெட், 97 ல் நண்பர்கள் சங்கத்தில் விழா நடத்தியது. 99ம் வருடம் கோயிலில் நடந்த பங்குனி உத்திரத் திருவிழா,2000 ஆண்டில் டெலிபோன் பூத் வைத்தது 2001ல் நடைபெற்ற தங்கையின் திருமணம், குமுதம் பக்தியில் எங்கள் ஊர் கோயில் பற்றி எழுதியது, 2004ல் டியுசனில் படித்தவர்கள் பத்தாம் வகுப்புத்தேர்வில் பள்ளியில் முதல்மாணவர்களாக வந்தது. முதலில் வாங்கிய டிவிஎஸ் பிப்டி! 
         2005ல் தங்கையுடன் சென்ற இராமேஸ்வரம் சுற்றுலா, மீண்டும் கம்ப்யூட்டர் டீச்சர் கோர்ஸ் படித்தது, 2006-07களில் சில பள்ளிகளில் ஆசிரியர் வேலை செய்தது, 2008ல் திருமணம், 2009ல் வேதஜனனி பிறந்தது என்று எத்தனை எத்தனை நல்ல நினைவுகள்! 2011 ல் முதல் முதலாய் தளிர் வலைப்பூ தொடங்கியது, வலைச்சரத்தில் திரு மேலையூர் ராஜாவால் அறிமுகம் ஆனது. தமிழ்தோட்டம் என்ற கருத்துகளத்தில் நானூறுக்கும் மேல் ஹைக்கூ கவிதைகள் எழுதி நண்பர்களை பெற்றது.2012ல் எங்கள் ஊர் கோவில் கும்பாபிஷேகம் முன் நின்று நடத்தியது, மாலைமலரில் வெளிவந்த கட்டுரை, 2013ல் பதிவர் சந்திப்பில் கலந்துகொண்டது, பாக்யா வார இதழில் வந்த  என் படைப்புக்கள் புதிதாக வாங்கிய ஹீரோ ஹோண்டா பைக் 

  இப்படி இந்த நாற்பது வருடங்களில் நிறைய இனிமையான நினைவுகள் சேர்ந்திருக்கும் அந்த நினைவுகளோடு சென்றவருடம் ஒன்று சொல்லியிருந்தேன்.சொந்தமாக ஓர் வீட்டு மனை வாங்க வேண்டும் என்று. உங்களின் ஆசியினால் அது நிறைவேறிவிட்டது.  இனி வீடு கட்ட வேண்டும்.

குறைந்த பட்சம் எனது சில படைப்புக்களையாவது மின் நூலாகவாது வெளியிட வேண்டும். இது இரண்டும் இந்த வருட ஆசைகள். வலைச்சரத்தின் ஆசிரியராக இரண்டாவது முறை பணியாற்ற உள்ளது இந்த வருடத்தின் நிறைவேறிய ஆசை!

     அச்சு ஊடகங்களில் என்னுடைய படைப்புக்கள் சிலவற்றை இந்த வருடம் அரங்கேற்றிவிட வேண்டும் என்பது ஓர் தீராத ஆவல். நிறைவேறும் என்று நினைக்கின்றேன்.

   மற்றபடி தளிர் தளம் இன்னும் மெருகேற்றி வெளியிட ஆவல் உள்ளது. வலைதளத்தில் எழுதி எழுதாமல் உள்ள அனைத்து நண்பர்களும் மீண்டும் எழுதவேண்டும் வலையுலகம் செழிக்க வேண்டும் என்பதும் விருப்பம்.

  இவையெல்லாம் நிறைவேறவேண்டும்! அதோடு கொன்றைவனத் தம்பிரான் மீண்டும் வந்து தளிரின் மாறுதல் பற்றி ஓர் கருத்து வைக்க வேண்டும் என்பதும் விருப்பம். இதெல்லாம் நிறைவேற இறைவனை பிரார்த்தித்துக் கொள்கின்றேன்.

   மருமகனுக்கு பெயர் சூட்ட சென்னை செல்கின்றேன்! மாலையில் முடிந்தால் வலையில் சந்திக்கின்றேன்! மருமகனுக்கும் உங்களின் வாழ்த்துக்களை சேர்த்து சொல்லுங்கள்! நன்றி!



Viewing all articles
Browse latest Browse all 1537

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!